ஆலயத்திலிருந்து வீட்டிற்குத் திரும்பும் போது என்னுடைய மகள் பின் இருக்கையில் அமர்ந்தபடி பிஸ்கட்டுகளைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். மற்ற குழந்தைகள் அவளிடம் பகிர்ந்தளிக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தன. நான் அவர்களின் எண்ணத்தை திசை திருப்பும்படி. சிற்றுண்டிகளைச் சேமித்து வைப்பவளிடம், இன்றைய வகுப்பில் என்ன செய்தீர்கள்? என்று கேட்டேன். அவர்கள் ஒரு கூடை நிறைய ரொட்டிகளையும் மீனையும் தயாரித்ததாகவும், ஏனெனில் ஒரு குழந்தை இயேசுவுக்கு ஐந்து ரொட்டிகளையும் இரண்டு மீனையும் கொடுத்தது. இயேசு அதைக் கொண்டு 5000 பேருக்கு மேலான ஜனங்களை போஷித்தார் (யோவா. 6:1-13) எனக் கூறினாள்.

இது அச்சிறுவனின் பகிர்ந்தளிக்கும் குணத்தைக் காட்டுகிறது. தேவன் உன்னுடைய மீனையும் பகிர்ந்து கொள்ளும்படி கேட்கிறாரென நினைக்கிறாயா? எனக் கேட்டேன். இல்லை சும்மா என பதிலளித்தாள்.

நான் அவள் அத்தனை பிஸ்கட்டுகளையும் அவளே வைத்துக் கொள்வதை ஊக்குவிக்கக் கூடாதென முயற்சித்தேன். அவள் ஒத்துக் கொள்ளவில்லை. அனைவருக்கும் கொடுக்கும்படி போதுமானதாக இல்லை என்றாள்.

பகிர்தல் என்பது கடினமானதுதான். நம் கையில் உள்ளதைப் பற்றிக் கொள்வது எளிதுதான். ஒரு வேளை நாம் கணக்குப் போட்டு, அனைவருக்கும் போதியதாக இல்லை எனக் காரணம் கூறலாம். நம் கணிப்பு என்னவெனின் நாம் இப்பொழுது கொடுத்து விட்டால் பின்னர் நமது தேவைக்கு ஒன்றுமிராது என்பதே.

நாம் அனைவரும் தேவனிடத்திலிருந்து வந்தவர்கள். நாம் உதாரண குணமுள்ளவர்களாயிருக்கும்படி, தேவன் நம்மை எல்லா வகைகளிலும் வளப்படுத்தியுள்ளார் (2 கொரி. 9:10-11) என பவுல் நினைப்பூட்டுகின்றார். பரலோகம் என்பது பற்றாக்குறையை கணக்கிடும் இடம் அல்ல, ஏராளமானவற்றையே கொண்டது. நாம் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்ளலாம். ஏனெனில் நாம் மற்றவர்களிடம் உதாரத்துவமாயிருக்கும்போது தேவன் நம்மை கவனித்துக் கொள்வார் என வாக்களித்துள்ளார்.