ஜோசப் மோஹரும், ஃபிரான்ஸ் குரூபரும் “அமைதியான இரவு” (SILENT NIGHT, HOLY NIGHT) என்ற கிறிஸ்துமஸ் கீதத்தை இயற்றுவதற்கு முன்பே, ஏஞ்சலஸ் சைலேஷியஸ் என்பவர் எழுதியிருந்த பாடல் “இதோ, அமைதி இரவில் தேவனுக்கோர் குழந்தை பிறந்தது, தொலைந்தது கைவிடப்பட்டது எல்லாம் திரும்பக் கொண்டுவரப்பட்டது, ஓ மனிதனே; உன் ஆத்துமா மட்டும் அமைதி இரவாக மாறுமென்றால் தேவன் உன்னில் பிறந்து எல்லாவற்றையும் சரிசெய்வார்.

சைலேஷியஸ் என்ற போலந்து நாட்டுத் துறவி, இந்தக் கவிதையை “திசெரூபிக் பில்கிரிம்” எனும் பாடல் தொகுப்பில், 1657ல் வெளியிட்டார். எங்கள் சபை கிறிஸ்துமஸின் மாலை கீத ஆராதனையில், இந்தப்பாடலுக்கு அருமையான இசையமைத்து, “உன் ஆத்துமா மட்டும் அமைதி இரவாகக் கூடுமானால்” என்ற தலைப்பில் பாடகர் குழுவினர் பாடினார்கள்.

கிறிஸ்துமஸின் இரண்டத்தனையான ரகசியங்கள் என்னவென்றால், ஒன்று  நாம் தேவனோடு ஒன்றாவதற்காக அவர் நம்மில் ஒருவரானார். நாம் நீதிமான்களாவதற்காக இயேசு எல்லா அநியாயத்தையும் சகித்தார். அதனால்தான் பவுல் அப்போஸ்தலனால், “ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புது சிருஷ்டியாயிருக்கிறான் பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின!” என்று எழுத முடிந்தது. இவையனைத்தும் இயேசுவின் மூலம் நம்மைத் தன்னோடு ஒப்புரவாக்கின தேவனிடத்திலிருந்தே பெறுகிறோம் (2 கொரி. 5:17-18).

நம்முடைய கிறிஸ்துமஸைக் குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் செலவிடலாம் அல்லது தனிமையிலே கொண்டாடலாம். ஆனால், நாம் வாஞ்சிப்பது என்னவென்றால், இயேசு நமக்குள் பிறக்கவே வந்தார் என்பதே.

ஆ! உன் இருதயம் இயேசு பிறப்பதற்கேற்ற முன்னணையாயிருக்குமென்றால், தேவன் மறுபடியும் உன்னிலே பிறப்பார்.