என்னுடைய  பிள்ளைகள் சிறுவர்களாயிருக்கும்பொழுது “ஹெலிகாப்டர்” விதைகளைப் பிடிக்க ஆசைப்படுவார்கள். அவை எங்கள் பக்கத்து வீட்டிலுள்ள மேப்பிள் மரத்திலிருந்து விழும் விதைகள். அவை ஒவ்வொன்றும் ஒரு ஹெலிகாப்டரின் சுழலும் இறக்கைகள் போலவே சுழன்று கொண்டே கீழே விழும். விதைகளின் நோக்கம் பறப்பதல்ல, கீழே மண்ணில் விழுந்து முளைத்து மரங்களாக வளர்வதேயாகும்.

சிலுவையிலறையப்படும் முன் இயேசு தம்முடைய சீஷர்களை பார்த்து, “மனுஷகுமாரன் மகிமைப்படும்படியான வேளை வந்தது… கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்தேயிருக்கும். செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும்” (யோவா. 12:23-24) என்று கூறினார்.

இயேசுவின் சீஷர்கள் அவரை மேசியாவாகக் கனம் பண்ணப்பட வேண்டுமென்று விரும்பியபொழுது, அவரோ, நாம் அவர்மேல் வைக்கும் விசுவாசத்தினால் பாவமன்னிப்புப் பெற்று மறுரூபமாவதற்காக, தம்முடைய ஜீவனைக் கொடுக்க வந்தார். இயேசுவைப் பின்பற்றுகிறவர்களாகிய நாம், “தன் ஜீவனை சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய காலமாய்க் காத்துக்கொள்ளுவான் என்ற அவருடைய வார்த்தையைக் கேட்கிறோம். ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன்; நான் எங்கேயிருக்கிறனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம் பண்ணுவார் (வச. 25-26) என்பதை உணர்ந்து அவரைப் பின் பற்ற வேண்டும்.

ஹேலிகாப்டர் விதைகள்; நாம் அவருக்காக வாழ்வதற்காக, மரித்த இரட்சகர் இயேசுவின், அற்புதத்தைச் சுட்டிக்காட்டுகிறது.