நான் தேவனைத் தவறாமல் ஆராதிக்க ஒரு ஆலயத்தைத் தேடிக்கொண்டிருந்தபொழுது என் சிநேகிதி தன் ஆலய ஆராதனைக்கு வருமாறு அழைத்தாள். ஆராதனை நடத்தினவர்கள், எனக்குப் பிரியமான ஓர் குறிப்பிட்ட பாடலொன்றைப்பாடினதால், நான்  என் கல்லூரி நாட்களில் பாடல் குழுவை நடத்துபவர் “இதை ஓர் ஆராய்ச்சியாக எடுத்துக்கொள்” என்று கூறிய ஆலோசனையை மனதில்கொண்டு, மிகவும் உற்சாகத்துடன் உரத்த சத்தத்துடன் தேவனை ஆராதித்துத் பாடினேன்.

அந்தப் பாட்டு முடிந்தவுடன், என் சிநேகிதியின் கணவர் என்னைப் பார்த்து “நீ நல்ல உரத்த சத்தமாய் பாடினாய்” என்றார். அவர் கூறியது புகழ்ச்சியாயல்ல, ஏளனமாகச் சொன்னார். அதன்பின் நான் என் சத்தத்தை குறைத்து என்னைச் சுற்றியுள்ளவர்களைவிட மெல்லிய குரலில், என் பாடலை விமரிசிப்பார்களோ என்ற பயத்துடன் பாடினேன்.

ஒரு ஞாயிறன்று, ஆலயத்தில் எனக்கடுத்திருந்த ஒரு பெண் பாடக்கேட்டேன். அவள் தன்னையே அறியாமல் மிகவும் உற்சாகமாய் தேவனைத் துதித்துப்பாடினாள். அது, தாவீது தன் வாழ்க்கையில் உற்சாகமாய்த் தன் உள்ளத்திலிருந்து பாடி ஆராதித்ததை நினைவு படுத்தியது. சங்கீதம் 98ல் பூமியின் குடிகளே, நீங்களெல்லாரும் கர்த்தரை நோக்கி ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள் என்றான் (வச. 4).

சங்கீதம் 98:1,  நாம் ஏன் தேவனை ஆராதிக்க வேண்டும் என்று கூறுகிறது. அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறபடியால், ஆனந்தமாய் ஆர்ப்பரிக்க வேண்டும் என்று கூறுகிறது. ஜாதிகளுக்கு அவருடைய உண்மையையும் நீதியையும், அவருடய இரக்கத்தையும், இரட்சிப்புமாகிய அதிசயங்களை இச்சங்கீதம் முழுவதிலும் தாவீது நினைவு கூருகிறான். தேவன் யாறென்பதைக்குறித்தும், அவர் செய்ததைக்குறித்தும் தியானித்தால், நம் உள்ளம் துதியினால் பொங்கிவழியும்.

உங்களுடைய வாழ்க்கையில் அவர் செய்த “மாபெரும் அற்புதங்களென்ன? ” நன்றி பலி செலுத்தும் நேரமே அவருடைய அதிசயமான கிரியைகளை நினைவுகூர ஏற்ற வேளை. ஆர்ப்பரித்துப் பாடுங்கள்!