வில் வித்தைகாரர்கள் தங்கள் அம்புகளை எடுத்துச் செல்வதற்கான அம்பாரத்துனிகளை (அம்புகளை வைக்கும் தோல்பை) என் தந்தை வடிவமைப்பார்கள். சிறந்த தோல் துண்டுகளில் வனவிலங்குகளின் விரிவான வாழ்க்கைச் சித்திரங்களை நேர்த்தியாகச் செதுக்கி, அவற்றை ஒன்றாக இணைத்துத் தைப்பார்கள். ஒருமுறை நான் அங்கு சென்றபோது அவர் கலைப்படைப்பொன்றை செதுக்குவதைப் பார்த்தேன். தன் கைகளினால், கவனமாக கூர்மையான கத்தியைக்கொண்டு, மென்மையான அந்தத்தோலிலே, தேவையான அழுத்தம் கொடுத்து வெவ்வேறு தன்மையில் அழகிய டிசைன்கள் செதுக்குவதைப் பார்த்தேன். அதன்பின் ஒரு துண்டுத் துணியை, சிவப்பு நிறத் சாயமோன்றில் முக்கி எடுத்து அந்தத் தோலின் மேல் பல தடவைகள் ஒரே சீராகப் பூசினார். அது அவருடைய படைப்பின் அழகிற்கு மேலும் அழகு சேர்த்தது.

நான் என் தகப்பனின் திறமைமிக்க கலைநயத்தை வியந்துகொண்டிருக்கையில், என்னிடத்திலும் மற்றவர்களிடத்திலும், என் பரம தகப்பனின் வியத்தகு படைப்பின் கலைத்திறனை இதுவரை பாராட்டாமல் இருந்ததை உணர்ந்தேன். “தேவரீர் என் உள்ளந்திரியங்களையும் உருவாக்குகிறீர். நான் பிரமிக்கத் தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால் உம்மைத் துதிப்பேன்” என்று தாவீது தேவனின் மகத்துவமான சிருஷ்டிப்பின் கைவண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் எழுதியுள்ளதை நினைவு கூர்ந்தேன் (சங். 139:13,14).

நாம் நமது சிருஷ்டிகரை மனஉறுதியுடன் துதிக்கலாம், ஏனென்றால் “அவருடைய கிரியைகள் அதிசயமானவைகள்” நாம் நம்மையும் மற்றவர்களையும் மேன்மையாகக் கருதலாம்; ஏனென்றால் சர்வலோக சிருஷ்டிகர், நம்மை உள்ளும் புறமும் அறிந்திருப்பதோடு நாம் உருவாகும் முன்னரே நமது வாழ்நாளைத் திட்டம்பண்ணி உள்ளார் (வச. 15-16).

என் தகப்பனாரின் திறமைமிக்க காலங்களில் உருவான தனித்தன்மை வாய்ந்த தோல்களைப் போலவே நாமும் விலையுயர்ந்த அழகான படைப்புகள். ஏனென்றால் நம்மைப்போல் இன்னொருவன் கிடையாது! நாம் தேவனின் அற்புதப் படைப்புகளாயிருக்கும்படி, நம் ஒவ்வொருவரையும் தனித்தன்மை உடையவர்களாக உருவாக்கப்பட்டுள்ளோம். இது தேவனுடைய மகத்துவத்தை வெளிப்படுத்துகிறது.