“உன்னால் என்னைப் பார்க்க முடியாது!”

சிறு பிள்ளைகள் ஒளிந்து பிடித்து விளையாடும்பொழுது, தங்கள் கண்களை மூடிக்கொண்டு, தாங்கள் ஒளிந்திருப்பதாக நினைத்துக்கொள்வார்கள். அவர்களால் உங்களைக்காண முடியாததினாலே, நீங்களும் அவர்களைக் காண முடியாதென்று நினைத்துக்கொள்வார்கள்.

பெரியவர்களுக்கு, அது ஞானமற்றதாகத் தோன்றினாலும், நாமும் இதைப்போன்ற செயலையே தேவனிடமும் செய்கிறோம். தகாததொன்றைச் செய்ய நாம் விருப்பப்படும்பொழுது, நாம் தேவன் இதைப்பார்க்கமாட்டாரென்று நினைத்துக் கொண்டு, நம் விருப்பத்தை நிறைவேற்றுகிறோம்.

பாபிலோனில் அடிமைகளாக இருந்த தமது ஜனத்திற்கு சொல்லும்படி, எசேக்கியேலுக்குத் தேவன் கொடுத்த தரிசனத்திலிருந்து இந்த உண்மையை எசேக்கியேல் அறிந்து கொண்டான். “அப்பொழுது அவர் என்னை நோக்கி மனு புத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பர்கள் அந்தகாரத்தில் அவரவர் தங்கள் விக்கிரகங்களின் விசித்திரவிநோத அறைகளில் செய்கிறதை நீ கண்டாயா? கர்த்தர் எங்களைப் பார்க்கிறதில்லை; கர்த்தர் தேசத்தைக் கைவிட்டார் என்று சொல்லுகிறார்களே என்றார்” (எசே. 8:12).

 ஆனால், தேவன் ஒன்றையும் கவனியாமல் விடுவதில்லை. எசேக்கியாவின் தரிசனம் இதற்கு ஓர் சிறந்த உதாரணம். அவர்கள் பாவம் செய்திருந்தாலும், பாவ அறிக்கை செய்தவர்களுக்கு ஒரு புது வாக்குத்தத்தம் கொடுத்தார். “உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிடுவேன்” என்றார் (எசே. 36:25).

நாம் பாவத்தினால் சிதைக்கப்பட்டு, அவருக்கு விரோதமாகக் கலகம் பண்ணினாலும் நமது பாவத்திற்கான தண்டனையை தமது மனதுருக்கத்தாலே, சிலுவையில் ஏற்றுக்கொண்டு, இறுதியாக விலைக்கிரயம் செய்து முடித்தார். இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நமக்கு புதுவாழ்வு தந்ததுமன்றி, நமக்குள்ளே கிரியை செய்து அவரைப் பின்பற்றும் பொழுது நமது இருதயத்தை மாற்றுகிறார். தேவன் எவ்வளவு நல்லவர்  நாம் வழிவிலகி பாவத்தில் மறைந்துகிடந்தபோது, தேவன் கிறிஸ்து மூலம் தம்மண்டை நம்மை சேர்த்துக்கொண்டார்.  “இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்” (லூக். 19:10; ரோமர் 5:8).