எனது சிநேகிதிகளில் ஒருவர் சுகவீனத்தால் வீட்டைவிட்டு வெளியேற இயலாத, அவளது மாமியாரை வீ ட்டிலே வைத்து பராமரித்து வந்தாள். அவள், அவளது மாமியாரிடம், அவர்கள் அதிகமாக விரும்புவது என்ன என்று கேட்டாள். அவளது மாமியார் ‘’எனது கால்கள் கழுவப்பட வேண்டும்” என்று விரும்புகிறேன் என்று கூறினார்கள். “ஒவ்வொரு முறையும் அவர்களது கால்களைக் கழுவும்படி கூறும்பொழுது அந்த வேலையை செய்ய மனமில்லாமல், அதைச் செய்வதை வெறுத்தேன். அவ்வேலையைச் செய்யும் பொழுதெல்லாம் எனக்குள்ளே இருந்த வெறுப்பு உணர்வை எனது மாமியார் அறிந்து கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று தேவனிடம் கேட்டேன் என்று அவளது உணர்வை எனது சிநேகிதி ஒத்துக் கொண்டாள்.

ஆனால், ஒரு நாள் அவளது முறுமுறுக்கும் தன்மை தீடீரென ஒரு நொடிப் பொழுதிலே மாறிவிட்டது. அவள் தண்ணீருள்ள பாத்திரத்தையும் துண்டையும் எடுத்துக் கொண்டு. அவளது மாமியாரின் பாதத்தண்டையால் அமர்ந்த பொழுது, என் மாமியாரை நோக்கிப் பார்த்தேன். உடனே நான் இயேசுவின் பாதங்களைக் கழுவுவதாக உணர்ந்தேன். இயேசுவே மாறுவேடத்தில் என் மாமியாராக இருப்பது போல் உணர்ந்தேன் என்று கூறினாள். அந்த நிகழ்ச்சிக்குப் பின், மாமியாரின் பாதங்களை கழுவுவது எனக்குத் கிடைத்த ஒரு சிலாக்கியம் என்று உணர்ந்தேன் என்று கூறினாள்.

மனதைத் தொடக்கூடிய இந்த காரியத்தைக் குறித்து நான் கேள்விப்பட்ட பொழுது, இயேசு கிறிஸ்து அவரது உலக வாழ்க்கையின் இறுதி நாட்களில் ஒலிவ மலைச் சரிவில் போதித்தது நினைவிற்கு வந்தது.

அவருடைய பிள்ளைகள் பசியாயிருப்பவர்களுக்கு ஆகாரம் கொடுத்து, வியாதியாயிருப்பவர்களை விசாரிக்கும்பொழுது “மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று ராஜா தன்னுடைய குமாரர்களையும், குமாரத்திகளையும், அவரது இராஜியத்திற்குள் வரும்படி அழைப்பார். காவலில் இருக்கும் மக்களைப் போய்ப் பார்த்து வரும்பொழுது, வஸ்திரம் இல்லாதவர்களுக்கு வஸ்திரம் அளிக்கும் பொழுதும், நாம் இயேசுவிற்கு ஊழியம் செய்கிறோம்.

எனது சிநேகிதி புதியதாக யாரையாவது, சந்திக்கும்பொழுது, “நீங்கள் மாறுவேடத்தில் வந்துள்ள இயேசுவா? என்று தனக்குள்ளாக கேட்டுக் கொள்வது போலவே நீங்களும் அவளது எண்ணத்தை
எதிரொலிக்கலாம்.