செம்மரங்களின் மூன்று வகைகளில் ஒன்றான சிக்கோயாமரம் உலகத்திலுள்ள அனைத்து மரங்களிலும், மிகவும் பெரியதும், எந்த விதமான சூழ்நிலைகளையும் தாங்க கூடியதுமான மர வகையாகும். அது 300 அடி உயரத்திற்கு வளரக் கூடியதாகவும், 1.1 மில்லியன் டன் எடையுள்ளதாகவும், 3000 ஆண்டுகள் உயிர் வாழக்கூடியதாகவும் இருக்கும். அதனுடைய பெரிய உருவத்திற்கும், நீண்ட ஆயுசு நாட்களுக்கான காரணம், பூமிக்கு கீழுள்ள அந்த மரத்தின் வேர்ப்பாகமே ஆகும். ஒன்றோடொன்று பின்னிய அந்த மரத்தின் வேர்கள் ஒர் ஏக்கருக்கும்மேல் பரவியிருப்பதால், நம்ப இயலாத உயரமும், ஆச்சரியப்படத்தக்கதான எடையையும் உடைய அந்த மரத்தைத் தாங்கி, பூமியிலே இறுக்கமாக ஊன்றுகின்றது.

யூத தேசத்தின் சரித்திரம், அவர்களது மதம், அவர்களது எதிர்பார்ப்பு இவைகளெல்லாம் இயேசுவின் வாழ்க்கையைப்பற்றி மறைமுகமாக கூறுகின்றன. அவற்றை ஒரு செம்மரத்தின் பரந்து விரிந்த ஆழமான வேர்களோடு ஒப்பிடும்பொழுது, அது மிகவும் சிறியதாகவே உள்ளது. ஒரு முறை யூத மதத் தலைவரிடம், அவர்கள் நேசித்து வாசித்த வேத வசனங்கள் தன்னைப்பற்றி பற்றித்தான் கூறுகிறதென்று இயேசு கூறினார் (யோவா. 5:3). நாசரேத்திலுள்ள ஜெப ஆலயத்தில் அவர் ஏசாயா புத்தகத்தின் சுருளைத் திறந்து இஸ்ரவேலின் மேசியாவைப்பற்றிய விபரங்களை வாசித்து, “உங்கள் காதுகள் கேட்க இந்த வேத வாக்கியம் இன்றையத் தினம் நிறைவேறிற்று என்றார்” (லூக். 4:21).

இயேசு அவர் பாடுபடவும், மரிக்கவும், உயிர்த்தெழவும் வேண்டும் என்பதை மோசே, தீர்க்கத்தரிசிகள், இஸ்ரவேலின் பாடல்கள் அனைத்தும் தெளிவாக கூறியுள்ளதை சீஷர்கள் புரிந்து கொள்ளத்தக்கதாக அவரது உயிர்த்தெழுதலுக்குப் பின்பு அவர்களுக்கு விளக்கிக் கூறினார் (வச. 24,46).

யூத சரித்திரத்திலும் அந்த தேசத்தின் வேதத்திலும், இயேசுவின் வாழ்க்கைச் சரித்திரம் ஆழமாக வேர்விட்டு பதிந்துள்ளதைப் பார்க்கும் பொழுது, அது மிகவும் சிறந்ததாகவும், மகிமை பொருந்தியதாயும் உள்ளது. அதோடுகூட நமது சொந்த வாழ்க்கைக்கும், இயேசு எவ்வளவு அதிகமாகத் தேவை என்ற உண்மையை உணரும் பொழுதும் அது சிறந்ததாக உள்ளது.