என் தந்தை வாலிபனாக இருந்தபோது, வெளியூரில் நடக்கும் ஒரு விளையாட்டு நிகழ்ச்சியைக் காண தன் நண்பர்களுடன் காரிலே சென்றார். அப்பொழுது, மழையினால் நனைந்திருந்த சாலையிலே கார் டயர் சறுக்கி  விபத்திற்குள்ளானது. மிக மோசமான அவ்விபத்திலே என் தந்தையின் ஒரு நண்பர் இறந்து போனார், மற்றொருவருக்கு கைகால்கள் செயலிழந்து போயிற்று. என் தந்தையும் இறந்துவிட்டதாக கருதி சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டார். அப்பொழுது அவரை அடையாளம் காட்டும்படி, மிகுந்த அதிர்ச்சியோடும் துயரத்தோடும் அவருடைய பெற்றோர் அங்கு சென்றபோது, ஆழ்ந்த கோமாவிலிருந்து என் தந்தை சுயநினைவிற்கு திரும்பினார். அவர்களுடைய துக்கம் சந்தோஷமாக மாறியது.

நாம் “கிறிஸ்து அன்றி அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாய் இருந்தோம்,” என்று அப்போஸ்தலனாகிய பவுல் எபேசியர் 2ஆம் அதிகாரத்தில் நமக்கு நினைவூட்டுகிறார் (வச. 1). ஆனால், “தேவனோ இரக்கத்தில் ஐஸ்வரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாய் இருந்த நம்மைக் கிறிஸ்துவுடனே கூட உயிர்ப்பித்தார்” (வச. 4-5). இயேசு கிறிஸ்துவின் மூலம் மரணத்திலிருந்து நாம் உயிர்ப்பிக்கப்பட்டோம். அப்படியென்றால், ஒருவகையில் நம் அனைவருடைய வாழ்வும் பரம பிதாவிற்கு சொந்தமானதே. பாவத்தில் மரித்துப்போயிருந்த நமக்கு, தேவன் தம் அளவற்ற அன்பினால், தம்முடைய குமாரன் மூலம் நாம் ஜீவனையும் வாழ்வளிக்கும் நோக்கத்தையும் பெற்றுக்கொள்ள கிருபை அளித்துள்ளார்.