இரண்டு மணிநேர பயணம் செய்து எங்கள் உறவினரின் திருமணதிற்கு சென்று திரும்பும் பொழுது, மூன்றாவது முறையாக என்னுடைய தாய் என் வேலையைக் குறித்து விசாரித்தார். நான் கூறும் வார்த்தைகள் விசேஷவிதமாக அவர்கள் மனதில் எவ்வாறு பதியவைப்பது என எண்ணியவாறு, முதல் முறை பதிலளிப்பதுபோல நான் சில விவரங்களை மறுபடியும் அவரிடம் கூறினேன். என் தாயார் அல்ஸைமர் (alzheimer) வியாதியினால் தாக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக ஞாபக சக்தியை இழந்து கொண்டிருந்தார். அவ்வியாதி ஒருவருடைய செயல்பாட்டுத் திறனை பாதித்து, இறுதியில் பேச்சுத்திறன் முற்றிலும் அற்று போகவும் இன்னும் அநேக பாதிப்புகள் ஏற்படவும் செய்கிறது.

என் தாயாருக்கு ஏற்பட்ட வியாதியினால் எனக்கு மிகுந்த மனவேதனை இருந்தாலும், அவரோடு நான் நேரம் செலவிடவும், அவரோடு பேசவும் அவர் இன்னும் உயிரோடு இருப்பதை எண்ணி, நான் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். நான் அவர்களை காணச் செல்லும்பொழுதெல்லாம், மகிழ்ச்சி நிறைந்த முகத்தோடு, “அலிசன்(alyson) என்னவொரு இன்ப அதிர்ச்சி,” என்று கூறுவார். நாங்கள் ஒன்றாக சேர்ந்து செலவிடும் நேரங்கள் எங்கள் இருவருக்குமே பிடிக்கும் சில சமயம் என்ன கூறுவதென்று தெரியாமல் அவர் மவுனமாயிருக்கும் பொழுதும் நாங்கள் உரையாடிக்கொள்வோம்.

தேவனோடுள்ள நம் உறவை விவரிப்பதற்கு, இது ஒரு சிறிய, சாதாரண உருவகம் தான். “தமக்குப் பயந்து, தமது கிருபைக்காகக் காத்திருக்கிறவர்கள் மேல் கர்த்தர் பிரியாமாயிருக்கிறார்”, என வேதம் கூறுகிறது (சங். 147:11). இயேசுவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட அனைவரையும், தேவன் தம்முடைய பிள்ளைகள் எனக் கூறுகிறார் (யோ. 1:12). ஒரு வேளை நாம் திரும்பத்திரும்ப அதே விண்ணப்பங்களை எறெடுத்தாலும், அல்லது அவரிடம் என்ன கூறுவது என தெரியாமல் விழித்தாலும், அவர் நம்மிடம் பொறுமையாகவே இருப்பார். ஜெபத்திலே அவரிடம் நாம் என்ன பேசுவது என தெரியாமல் மவுனமாயிருக்கும் பொழுதும் அவர் நம்மைக்குறித்து மகிழ்ந்திருக்கிறார்.