டோகோ (togo) நாட்டில் மோனோ (mono) நதியில் ஞானஸ்நானம் எடுக்க காத்திருந்த கொஸ்ஸி(kossi), கீழே கிடந்த பழைய மரச்சிற்பம் ஒன்றை குனிந்து எடுத்தான். பல தலைமுறைகளாக அவனுடைய குடும்பத்தில் அச்சிற்பத்தை வணங்கி வந்துள்ளனர். இப்பொழுதோ, அக்கோரமான உருவப் பொம்மையை இத்தருணத்திற்கென்று  ஆயத்தப்படுத்தியிருந்த நெருப்பில் கொஸ்ஸி தூக்கி எறிவதை அவனுடைய குடும்பத்தினர் உடனிருந்து கண்டனர். இனி ஒருபொழுதும் அவர்களுடைய கோழிகள் இக்கோரக் கடவுளுக்கு பலியாக படைக்கப்படபோவதில்லை.

மேற்கத்திய நாட்டிலுள்ள கிறிஸ்தவர்கள் தேவனுடைய ஸ்தானத்தில் வைக்கப்படும் அனைத்தையும் விக்கிரகமாக உருவகப்படுத்திக் கொள்வார்கள். ஆனால் மேற்கு ஆப்பிரிக்கா பகுதியிலுள்ள டோகோ தேசத்தில், பலியிட்டு திருப்திப்படுத்த வேண்டிய கடவுள்களாகவே இவ்விக்கிரகங்களை காண்கிறார்கள். ஆகவே, ஒன்றான மெய் தேவனுக்கு தன்னுடைய விசுவாசத்தைக் காண்பிக்க விரும்பும் ஒரு புதிய விசுவாசி, விக்கிரகத்தை எரித்து ஞானஸ்நானம் எடுப்பது மிகத்தைரியமான ஒரு பிரகடனமாகும்.

விக்கிரக ஆராதனையிலும் வேசித்தனத்திலும் மூழ்கியிருந்த ஒருகலாச்சார சூழ்நிலையில், எட்டு வயது யோசியா அரசனானான். யூதா தேசத்தின் மிக இழிவான வரலாற்றின் மிக மோசமான இரண்டு ராஜாக்கள் யோசியாவின் தகப்பனும் தாத்தாவுமே. ஆனால் யோசியா ராஜாவானபொழுது, பிரதான ஆசாரியர் ஆலயத்திலே நியாயப்பிரமானமாண புஸ்தகத்தை கண்டுபிடித்தான். அதை வாசித்த யோசியா அவ்வார்த்தைகளை தன் இருதயத்திலே பதித்துக்கொண்டான் (2 இரா. 22:8-13). பின்பு பாகாலுடைய பலிபீடங்களையும், விக்கிரக தோப்புகளையும் அங்கு படைக்கப்பட்ட சகலவிதமான அருவருப்பான பொருட்களையும் அழித்து, விபச்சாரச் சடங்குகளை நடப்பிக்கும் இலச்சையான புணர்ச்சிக்காரரின் வீடுகளையும் இடித்துப்போட்டான் (23ஆம் அதிகாரம்). இவ்வாறான எல்லா வழக்கங்களையும் ஒழித்துவிட்டு அவ்விடத்திலே பஸ்கா பண்டிகையை கொண்டாடினான் (23:21-23).

அறிந்தோ அறியாமலோ தேவனைச் சாராமல் பதில்களை எதிர்பார்ப்போமானால், நாம் பொய்யானதொரு கடவுளைப் பின்தொடர நேரிடும். ஆகவே, நாம் யாதொரு விக்கிரகத்தையாவது, உருவகங்கள் உட்பட, நெருப்பில் வீசவேண்டுவன எதுவோ என நம்மை நாமே கேட்டுக் கொள்வது ஞானமாக இருக்கும்.