1962ஆம் ஆண்டு ஜூன் மாதம், புளோரிடா மாநில சிறைச்சாலையில் இருந்த கிளாரன்ஸ் ஏர்ல் கிடியன் (Calarence Earl Gideon) என்பவர் தான் செய்யாத குற்றத்திற்காக தண்டனை அனுபவிப்பதாகவும் தனக்காக வாதாட வழக்கறிஞர் வைத்துக்கொள்ளும் அளவிற்கு தன்னிடம் வசதி இல்லை என்றும் அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு கடிதம் ஒன்று எழுதியனுப்பினார்.

ஓர் ஆண்டு கழித்து, வரலாற்று புகழ்பெற்ற இந்த கிடியன் மற்றும் வெயின்ரைட் (Gidoeon Vs. Wainright) வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதாவது தனக்கென வழக்கறிஞர் வைத்துகொள்ளும் அளவிற்கு வசதி இல்லாதவர்களுக்கு, அவர்களுக்காக வாதாட அரசாங்கமே பொது வழக்கறிஞர் ஒருவரை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த தீர்ப்பின் மூலம் நீதிமன்றம் நியமித்த வழக்கறிஞரின் உதவியோடு, கிளாரன்ஸ் கிடியோன் மீண்டும் விசாரிக்கப் பட்டு விடுதலையானார்.

ஆனால், நாம் குற்றவாளிகளாய் இருப்பின், நம் நிலை என்ன? அப்போஸ்தலனாகிய பவுலைப் பொறுத்தவரையில் நாம் அனைவருமே குற்றவாளிகள்தான். ஆனால் பரலோக நீதிமன்றம் தேவனுடைய செலவில் நம்முடைய ஆத்துமாவைப் பாதுகாத்து காக்கும்படியாய், நமக்காக பரிந்து பேசும்படியாய் ஒரு வழக்கறிஞரை நியமித்துள்ளது (1 யோவா. 2:2). சிறைச்சாலைகளுக்கு வெளியேயும் கூட தாங்கள் அனுபவித்திராத சுதந்திரத்தை பிதாவின் சார்பில் இயேசு கிறிஸ்து நமக்காக வழங்குகிறார். அது நம்முடைய இருதயத்திலும், மனதிலும் நாம் அடையும் சுதந்திரமே.

நாம் செய்த குற்றங்களுக்காகவோ அல்லது பிறர் நமக்கெதிராய் செய்த குற்றங்களினாலோ நாம் பாடுகள் பல அனுபவித்தாலும், நமக்காக பரிந்து பேச இயேசு உண்டு. தனக்கு கொடுக்கப்பட்ட மேலான அதிகாரத்தினாலே அவர் நம்முடைய ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும், இரக்கத்தையும், மன்னிப்பையும், ஆறுதலையும் அளிக்கிறார்.

நமக்காகப் பரிந்து பேசுகிற நம்முடைய வழக்கறிஞராகிய இயேசு நாம் நம்பிக்கையின்மை என்னும் சிறையில் இருந்தாலும், பயம் என்னும் சிறையில் இருந்தாலும் அல்லது வருத்தங்கள் என்னும் சிறையில் இருந்தாலும் அச்சிறைகளை தம்முடைய பிரசன்னத்தினால் நிறைத்து ஆசீர்வாதமாக மாற்றிடுவார்.