நம்மில் அநேகர் புகழ்ச்சியின் மேல் தீரா ஆசை கொண்டுள்ளோம். அதாவது, ஒன்று நம்முடைய புகழ்ச்சியை குறித்த ஆசை அல்லது புகழ்ச்சிமிக்க நபர்களின் அன்றாட வாழ்வின் காரியங்களை அப்படியே பின்பற்ற தீரா ஆசை. சர்வதேச புத்தகம் அல்லது சினிமா நட்சத்திர சுற்றுப்பயணம், இரவு நேர நட்சத்திர நிகழ்ச்சிகள், டிவிட்டரில் லட்சக்கணக்கில் தங்களை பின்தொடர்பவர்கள் என பலவித ஆசைகள்.

அண்மையில் அமெரிக்காவில் இணையதளத்தை அலசி ஆராய்ந்து பார்த்து, புகழ்மிக்க நபர்களை வரிசைப்படுத்தும் ஒரு கணக்கு வழிமுறை (algorithm) ஆய்வாளர்களால் இதற்கென்று சிறப்பாக வடிவமைக்கப்பட்டது. இந்த தரவரிசையில், வரலாற்றில் மிகவும் புகழ்வாய்ந்த மனிதராக இயேசுவே முன்னிலை வகித்தார்.

ஆனால் புகழ்ச்சியை இயேசு ஒருநாளும் விரும்பியதே இல்லை. அவர் இந்த பூமியில் இருந்த பொழுது அதை நாடித் தேடவும் இல்லை (மத். 9:30; யோவா. 6:15). ஆனால், அவரைப் பற்றிய செய்தி கலிலேயா எங்கும் விரைந்து பரவிய பொழுது புகழ்ச்சி அவரைத் தேடி வந்தது (மாற். 1:28; லூக். 4:37).

இயேசு சென்ற இடமெல்லாம், கூட்டம் கூடியது. அவர் செய்த அற்புதங்கள் மக்களை அவரிடம் கொண்டு வந்தது. ஆனால் அவர்கள் அவரை பலவந்தமாய் ராஜாவாக்க நினைத்தபொழுது, அவர் அவர்களிடமிருந்து நழுவிக் கொண்டார் (யோவா. 6:15). தன் பிதாவின் நோக்கத்திற்குள்ளாக தன்னை இணைத்துக் கொண்டு ஒவ்வொரு முறையும் அவருடைய சித்தத்திற்கும், நேரத்திற்கும் தன்னை ஒப்புக்கொடுத்தார் (4:34; 8:29; 12:23). “மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்” (பிலி. 2:8).

புகழ் எப்பொழுதும் இயேசுவின் இலக்கு அல்ல. அவருடைய நோக்கம் மிக எளிமையானது. தேவனுடைய குமாரனாக, அவருக்கு கீழ்படிந்து, தாழ்மையோடு தாமாகவே தன்னைத்தானே நம்முடைய பாவங்களுக்காக ஜீவபலியாக ஒப்புக்கொடுத்தார்.