இதற்காகவே நான் இயேசுவை உடையவனாக இருக்கிறேன்
நமது வாழ்க்கையில் பிரச்சனைகள் இல்லாத காலங்களே கிடையாது. ஆனால் சில சமயங்களில் அதன் விளைவு மிகவும் பயங்கரமாக இருக்கும்.
1994ல் ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலையின் போது ரோஸ் என்ற பெண்ணையும் அவளது இரு சிறு மகள்களையும் தவிர, அனைத்து குடும்ப அங்கத்தினர்களும் கொலை செய்யப்படுவதைப்பார்த்தாள். இப்பொழுது அங்கு இருக்கும் பல விதவைகள் மத்தியில் இவளும் ஒரு விதவையாகக் குறைந்த வருமானத்தில் வாழ்க்கையை நடத்தி வருகிறாள். ஆனால் தோற்கடிக்கப்படுவதற்கு அவள் இடம் கொடுக்கவில்லை. மேலும் இரு அனாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்தாள். 5 பேருள்ள அவளது குடும்பத்தினரைப்…
உமது பிரசன்னத்தின் மகிழ்ச்சி
“மனித வாழ்வின் மிக முக்கிய முடிவு, தேவனை மகிமைப்படுத்தி அவரோடு என்றென்றும் மகிழ்ச்சியாக இருப்பதே” என்று வெஸ்ட் மினிஸ்டர் நற்போதகம் கூறுகிறது. வேதாகமத்தின் அதிகமான பகுதிகள் மகிழ்ச்சியுடன் கூடிய நன்றியுணர்வுடன் ஜீவனுள்ள தேவன் மீது ஆழமான அன்பு செலுத்தி அவரைப் பணிந்து கொள்வதைப் பற்றிக் கூறுகிறது. தேவனை நாம் கனப்படுத்தும் பொழுது நன்மையான எந்த ஈவிற்கும் மூலகாரணர் அவரே என்று அவரைப் போற்றுகிறோம்.
நாம், நமது உள்ளத்திலிருந்து தேவனைத் துதிக்கும் பொழுது, நாம் என்ன நோக்கத்திற்காக சிருஷ்டிக்கப்பட்டோமோ அதற்கான மகிழ்ச்சியின் உன்னத நிலைமைக்குக் கொண்டு…
உள்ளத்தில் பெருமை
“அவன் தன்னைத்தானே மிகவும் பெரியவனாக எண்ணுகிறான்.” அது, நாங்கள் அறிந்துள்ள ஓர் உடன் கிறிஸ்தவனைப் பற்றிய எனது சிநேகிதனின் கருத்தாகும். அவன் பெருமையின் கூடிய ஆவியை உடையவனாக அவனைக் காண்கிறோம் என்று நாங்கள் எண்ணினோம். வெகு சீக்கிரத்தில் அவன் தவறான சில செயல்களுக்காக பிடிபட்டான் என்பதை அறிந்த பொழுது மிகவும் மன வருத்தம் அடைந்தோம். அவன் தன்னைத்தானே உயர்த்தினபடியினால் உபத்திரவத்தைத்தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்ளவில்லை. அதே நிலைமை நம் அனைவருக்குமே ஏற்படலாம் என்பதை உணர்ந்து கொண்டோம்.
நமது இருதயங்களிலுள்ள பெருமை என்ற பயங்கரமான…
உட்புறக் காட்சி
ஓய்வு பெற்ற இயற்பியல் வல்லுநராகிய ஏரி வான்ட் ரயட் வித்தியாசமான முறையில் கலைப் பொருட்களை செய்து வருகிறார். அவர் தாவரங்களையும், இறந்த போன விலங்குகளையும் வரிசையாக அடுக்கி அவற்றின் எக்ஸ்ரே எடுக்கிறார். பின்பு மேம்படுத்தப்பட்ட x-ரேக்களை கணிணியின் நினைவகத்தில் இடுவதற்காக அவற்றை மின் செய்தியாக மாற்றுகிறார். பின்பு அவரது படங்களின் சில பகுதிகளுக்கு வண்ணமேற்றுகிறார். அவரது கலைத்திறன், பூக்கள், மீன் பறவைகள், ஊர்வன, குரங்குகள் போன்றவற்றின் சிக்கலான உள் அமைப்பை தெளிவாக விளக்குகின்றன.
பொருட்களை வெளியே பார்க்கும் காட்சியை விட உள் அமைப்பைப் பார்க்கும்…
மறுமொழிக்காகக் காத்திருத்தல்
எங்களது மகள் 15 வயதாக இருந்தபொழுது வீட்டை விட்டு ஓடிவிட்டாள். 3 வாரங்களுக்கு மேலாக அவள் வரவே இல்லை. எல்லா இடங்களிலும் அவளைத் தேடிப்பார்த்தோம். பின்பு, காவல்துறையினரின் உதவியை சிநேகிதர்கள் ஆகியவர்களின் உதவியை நாடினோம். நம்பிக்கை இழந்து நின்ற அந்த நாட்களில், நானும் எனது மனைவியும் ஜெபத்தில் தேவனுக்கு காத்திருப்பதின் முக்கியத்துவத்தைப் பற்றிக் கற்றுக் கொண்டோம். எங்களது பெலனும் முயற்சிகளும் பயனற்று ஓர் நிலைக்கு வந்து விட்டோம். நாங்கள் தேவனையே நம்பி இருக்க வேண்டியிருந்தது.
ஒரு தந்தையர் நாளன்று அவளைக் கண்டு பிடித்தோம். இரவு…
சிலுவையும் கிரீடமும்
லண்டனிலுள்ள வெஸ்ட் மினிஸ்டர் ஆபி என்ற ஆலயம் மிகவும் சரித்திரப் புகழ் வாய்ந்தது. பத்தாம் நூற்றாண்டில் பெனிடிக்டைன் குழுவைச் சேர்ந்த சமயத்துறவிகள் அனுதினம் வழக்கமாக அங்கு கூடி ஆராதித்து வந்தார்கள். இன்றும் கூட அந்த ஆராதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆபி என்ற அந்த இடம் அநேக புகழ்பெற்ற மனிதர்களை அடக்கம் செய்யும் இடமாகவும் உள்ளது. 1066ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆங்கிலேய மன்னரும் இங்கு தான் முடி சூட்டப்பட்டு வருகிறார்கள். அதில் 17 மன்னர்கள் அங்கேயே அடக்கம் பண்ணப்பட்டுள்ளார்கள். எங்கு அவர்களது ஆட்சி துவங்கினதோ…
கரடுமுரடான பாதை
இடாகோவிலுள்ள ஜக்ஹேன்டில் என்ற மலையின் வட பகுதியின் உச்சியிலிருந்த ஓர் ஏரியைப் பற்றி மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த எனது சிநேகிதன் என்னிடம் கூறினான். கட்துரோட் வகையைச் சார்ந்த பெரிய டிரவுட் மீன்கள் மிக அதிகமாகக் அங்கு காணப்படுகின்றன என்ற வதந்தி உள்ளது. என்னுடைய சிநேகிதன் ஒரு பென்சிலையும் பேப்பரையும் எடுத்து அந்த ஏரிக்குச் செல்ல வேண்டிய வழியை வரைபடமாக அதில் வரைந்து காண்பித்தான். அநேக வாரங்கள் கழித்து எனது டிரக் வண்டியில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டு எனது சிநேகிதன் கூறியிருந்த திசையை பின்…
பரலோகத்தில் பொக்கிஷம்
புதிதாகக் கட்டப்பட்ட எங்களது வீட்டில் கொடுக்கப்பட்ட மோசமான மின் இணைப்பினால், எங்களது புதிய வீடு தீப்பிடித்து எரிந்து போனது. ஒரு மணி நேரத்திற்குள்ளாக நெருப்பின் சுவாலை எங்கள் வீடு முழுவதையும் எரித்து சாம்பலாக்கி விட்டது மிஞ்சினது கட்டிடத்தின் இடிபாடுகள் தான். முன்னொரு முறை ஒரு ஞாயிற்றுக்கிழமை ஆராதனை முடிந்து வீடு திரும்பின பொழுது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டிலுள்ள சில பொருட்கள் திருடப்பட்டிருந்தன.
குறைபாடுள்ள இவ்வுலகில் உலகப்பிரகாரமான ஆஸ்திகளை இழப்பது மிகவும் சாதாரணகாரியம். உதாரணமாக வாகனங்கள் திருடப்படுகின்றன, அல்லது மோதி விபத்திற்குள்ளாகின்றன, கப்பல்கள் மூழ்குகின்றன,…
தேவனுடைய வழி
100 ஆண்டுகளுக்கு முன்பு முதலாம் உலகப் போரின்போது, Y.M.C.A. சார்பாக பிரிட்டனின் நேச நாடுகளின் படைவீரர்களுக்கு போதகராகப் பணியாற்ற 41 வயதுடைய ஆஸ்வால்டு சேம்பர்ஸ் எகிப்திற்கு சென்றார். கெய்ரோவிற்கு 6 மைல் தூரம் வடக்கே இருந்த செய்டூன் முகாமில் பணி செய்ய அவருக்கு உத்தரவிடப்பட்டது. அங்கு தங்கி இருந்து முதல் நாள் இரவு, அதாவது 1915, அக்டோபர் 27ம் தேதி அன்று “இங்குள்ள படைவீரர்கள் உள்ள பகுதி பாலைவனம் போன்று உள்ளது. தேவனுக்கென்று பணிசெய்ய மிகச்சிறந்த சந்தர்ப்பம். இது போன்ற சூழ்நிலையில் நான் ஒருபொழுதும்…