ஒரு துக்கமான கதை
வலியோடு ஏற்படுகின்ற தீமையானது மூடி மறைக்கப்பட்ட நிலையிலிருந்து, வெளியரங்கமாயிருக்கிறது. அது ஆதிக்கத்திலிருக்கிற ஆண்மக்களின் பாலியல் வன்கொடுமை அநேக பெண்களை பாதித்த விஷயம் தான். ஒவ்வொரு முறை தலைப்புச் செய்தியாக இவைகளை வாசிக்கும்போது, இரண்டு ஆண்களின் பாலியல் கொடுமைகள் நிரூபிக்கப்பட்டதைக் கேட்டபொழுது என் இருதயம் துக்கத்தில் மூழ்கியது. திருச்சபைகளும் இவ்வித பிரச்சனைகளால் பாதிக்கப் பட்டுத்தான் இருக்கின்றன. தாவீது இராஜா, இவ்விதமான அவருடைய சொந்த பிரச்சனைகளை சந்தித்தார். ஒரு நாள் மாலை, ஒரு பெண் குளிப்பதை தாவீது கண்டார் (2 சாமு. 11:2). தாவீதுக்கு அவள் தேவைப்பட்டாள். பத்சேபாள், தாவீதின் உண்மையுள்ள வேலைக்காரனின் (உரியா) மனைவியாக இருந்த
போதிலும் தாவீது அவளை எடுத்துக்கொண்டான். பத்சேபாள் தான் கர்ப் பவதியானத்தைக் குறித்து தாவீதுக்கு சொல்லியனுப்பினபோது, தாவீது குழப்பமடைந்தார். இந்த இழிவான துரோகத்தினை, யோவாபை வைத்து உரியாவை போர்முனையில் கொலை செய்ய ஒழுங்கு செய்தான்.
பத்சேபாளுக்கும் உரியாவுக்கும் எதிரான தாவீதின் அதிகார துஷ்பிரயோகமானது மறைக்கப்படவில்லை. இது வெளிப்படையாகத் தெரிந்தது. நாம் பார்க்கும்படியாக சாமுவேல் இதைத் திட்டவட்டமாக வெளிப்படுத்தினார். நம்முடைய தீமைகளை நாம் சரியான முறையில் தீர்க்க வேண்டும்.
மேலும், இவ்வகையான கதைகளை நாம் கேட்கும்பொழுது, அவைகள் நம்மை நம்முடைய நாட்களில் ஏற்படும் துஷ்பிரயோகத்தைக் குறித்து நம்மை எச்சரிக்கை செய்யும். 'தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவன்" (அப். 13:22) என்ற பெயர் பெற்ற தாவீது தன் செயல்களுக்கான கணக்கினை ஒப்புவிக்கக் கூடியவராகவும் இருந்தார். நாமும் ஜெபத்தோடு நம் தலைவர்கள் அதிகார துஷ்பிரயோகத்திற்கான கணக்கினை ஒப்படைக்கும்படி செய்யவேண்டும். தேவனுடைய கிருபையால், மீட்பானது கிடைக்கும். நாம் தொடர்ந்து வாசிக்கும்பொழுது, தாவீதின் உண்மையான மனந்திரும்புதலை சந்திக்கிறோம் (2 சாமு. 12:13). நல்லவேளை, கடின இருதயங்களெல்லாம் மரணத்திலிருந்து, ஜீவனுக்குத் திரும்பக்கூடிய வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

லிங்கனின் பாக்கெட்
1865ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தலைவர் ஆபிரகாம் லிங்கன் ஃபோர்ட்; தியேட்டரில் சுடப்பட்ட இரவு, அவருடைய பாக்கெட்டில் கீழ்க்கண்டவைகள் இருந்தன. இரண்டு மூக்குக் கண்ணாடிகள், லென்ஸ்ஸை சுத்தம் செய்யும் திரவம், ஒரு பாக்கெட் கத்தி, ஒரு கடிகாரம், ஒரு கைக்குட்டை, ஒரு தோல் பர்ஸ் அதனுள்ளே 5 டாலர்கள். சங்கத்தின் பணம், 8 செய்தித்தாள்களின் கத்தரிப்புகள். அதோடு அவரையும் அவர் கொள்கைகளையும் பாராட்டுகிற பல பாராட்டுதல்களும் இருந்தன.
தலைவருடைய பாக்கெட்டிலுள்ள சங்கப்பணம் அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறது என்று நான் ஆச்சரியப்பட்டேன். ஆனால், அவரைக்குறித்த நல்ல செய்திகளைக் குறித்து நான் அறிந்தவனாதலால் சந்தேகப்படவில்லை. எல்லாருக்கும் உற்சாகப்படுத்துதல் அவசியம், அதுவும் ஆபிரகாம் லிங்கன் போன்ற பெருந்தலைவர்களுக்கும். ஒரு வேளை தன்னுடைய மரணத்திற்கு சற்று முன்பு அந்த பாராட்டு செய்திகளைத் தன் மனைவிக்கு அவர் வாசித்துக் காண்பித்திருக்கக் கூடும்.
யாருக்கெல்லாம் உற்சாகம் தேவைப்படுகிறது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? எல்லாருக்குமே! உங்களைச் சுற்றிப்பாருங்கள். உங்கள் கண்ணுக்கெட்டும் வரை உள்ளவர்கள் அவர்கள் தோற்றத்திலிருப்பதை விட நம்பிக்கையற்றவர்களாகவே இருக்கின்றார்கள். நாம் எல்லாருமே தோற்றுப்போனவர்கள், பல குறைபாடுகளைக் கொண்டவர்கள்.
நாம் எல்லாரும் கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, 'நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்" (ரோம. 15:2) என்ற வசனத்தைப் போலவும் நல்ல வார்த்தைகளை பேசதீர்மானித்து, 'இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஒளஷதமுமாகும்." (நீதி. 16:24) என்ற வசனத்தைப் போலவும் வாழ்ந்தால் எப்படி இருக்கும்? இப்படிப்பட்ட வசனங்களை ஒரு தாளிலோ அல்லது கைப்பேசியிலோ மற்றவர்கள் வாசித்துத் தெரிந்து கொள்ளும்படி நாம் முயல்வோமா? அவ்வாறு செய்வோமாயின், நாம் இயேசுவைப்போல மாறி தன்னைத்தானே பிரியப்படுத்திக்கொள்ளாமல் மற்றவர்களுக்காக வாழ்பவராக மாறிவிடுவோம் (ரோம. 15:3).

கட்டுப்பாட்டின் மாயை
எலன் லாங்கர் என்ற பெண்மணி 1975ம் ஆண்டு 'கட்டுப்பாட்டின் மாயை" என்ற தலைப்பின் கீழே நம்முடைய வாழ்க்கையின் பலதரப்பட்ட சூழ்நிலையில், நம்முடைய அதிகாரத்தை நாம் பயன்படுத்துவதைக் குறித்த ஒரு ஆராய்ச்சியினை மேற்கொண்டார். அதில் அவர் கண்டுகொண்ட உண்மை என்னவெனில், பல சூழ்நிலைகளில் நம்முடைய ஆதிக்கத்தை உயர்த்தி மதிப்பிட்டுக் கொள்ளுகிறோம். இந்த ஆராய்ச்சியானது, மாயையான தோற்றத்தினை எவ்வாறு உடைத்துப் போடுகிறது என்பதையும் வெளிப்படுத்திக் காட்டுகிறது.
லாங்கரின் இந்த ஆராய்ச்சியானது, பல மக்களால் செய்து பார்க்கப்பட்ட பரிசோதனைகளை உள்ளடக்கியதாக இருந்தது. அது புத்தக வடிவில் வெளியிடப்பட ஆயத்தமாக இருந்தது. ஆனால், யாக்கோபு இந்தக் கருத்தினை, லாங்கர் கண்டுபிடிப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே இதைக் கண்டுபிடித்தார். யாக்கோபு 4ம் அதிகாரத்தில், 'மேலும், நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப் போய், அங்கே ஒரு வருஷம் தங்கி, வியாபாரஞ்செய்து, சம்பாத்தியம்பண்ணுவோம் என்கிறவர்களே, கேளுங்கள். நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே." (யாக். 4:13-14) என்று எழுதியுள்ளார்.
இந்த மாயமான தோற்றத்திற்கு, யாக்கோபு ஒரு தீர்வினை கொடுக்கிறார். அவர் முழுமையான ஆதிக்கத்தை உடையவருக்கு நேராகக் குறிப்பிட்டுக் காட்டுகிறார்: 'ஆதலால்: ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்."
(யாக். 4:15). இந்த ஒருசில வசனங்களிலே யாக்கோபு, மனிதனின் நிலையற்ற தன்மையையும், அதற்கான மாற்று வழியையும் குறிப்பிடுகிறார்.
நாமும் நம்முடைய விதியானது நம் கைகளில் இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், தேவன் தம்முடைய வல்லமையான கரங்களில் வைத்துத் தாங்குகிறபடியால், நாம் அவருடையத் திட்டங்களை விசுவாசிக்கலாம்.

துன்பத்தில் இயேசு
என்னுடைய மகன் ஜெஃப் ஒரு 'வீடில்லாத ஏழைகளின்" செயல்முறைத் திட்டத்தில் பங்கேற்றான். அவன் அந்த நகரத்தில் உள்ள தெருக்களில் மூன்று பகல் மற்றும் இரண்டு இரவுகளைக் கழித்தான். உறைந்த குளிரின் நடுவில் வெட்டவெளியில் தூங்கினான். உணவு இல்லாமல், பணமும், பாதுகாப்பான உறைவிடமும் இல்லாமல், புதிய மனிதர்களின் இரக்கத்தைச் சார்ந்து ஒரு நாள் தன் அடிப்படைத் தேவைகளை சந்திக்கும்படி வாழ்ந்தான். அவனுடைய ஆகாரமானது ஒரு பிரட் சாண்ட்விச் மட்டும் தான். அதுவும், அவன் ஒரு உணவு விடுதியில் மீதமுள்ள ரொட்டித்துண்டுகளைக் கேட்டுக்கொண்டிருக்கும் போது, அதைக் கேட்ட ஒரு மனிதன் அந்த சாண்ட்விச்சை வாங்கி கொடுத்தார்.
பிற்பாடு, ஜெஃப் என்னிடத்தில் இதைப்போன்ற கஷ்டமான காரியம் வேறொன்றுமில்லை என்று கூறினான். ஆனால், இது அவனுடைய வாழ்க்கையில் மற்றவர்கள் மேலிருக்கும அபிப்பிராயத்தினை அதிகப்படுத்தியது. இந்த வீடில்லாத ஏழைகளின் செயல் முறைத் திட்டத்திற்குப் பிறகு அவன் வீடில்லாத ஏழைகளைத் தேடிச்சென்று அவர்களை சந்தித்தான். யாரெல்லாம் தான் தெருவில் வாழ்ந்த போது தனக்கு உதவி செய்தனரோ, அவர்களுக்குத் தன்னாலான சில உதவிகளைச் செய்தான். அந்த ஏழைகள், அவன் உண்மையான ஏழை இல்லை என்றும், அந்த ஏழைகளின் பார்வையின் மூலம் வாழ்க்கையைப் பார்க்க விரும்பின அவனுடைய நல்ல எண்ணங்களுக்கு நன்றியுள்ளவர்களாய் மாறினார்கள்.
என் மகனின் அனுபவமானது, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை என் மனதிற்குள் கொண்டு வந்தது. 'வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள் மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" (மத். 25:36,40) என்பார்.
அது ஒரு உற்சாகப்படுத்துதலின் வார்த்தையாகவோ, அல்லது ஒரு மூட்டை தானியமாகவோ இருக்கலாம். தேவன் நம்மை மற்றவர்களின் தேவைகளை சந்திக்கும்படி அன்புடன் அழைக்கிறார். நாம் மற்றவர்களின் மேல் காட்டக்கூடிய கனிவானது தேவனுக்குக் காட்டக்கூடிய கனிவாகும்.

தேவனுடைய சிருஷ்டிப்பினைக் கொண்டாடுதல்
அந்தத் திருச்சபையில் இசை முழுவதுமாக நிரப்பின போது, நிறக் குருடரான லான்ஸ் ப்ரௌன் என்கின்ற ஓவியர், ஆலயத்தின் மேடையில் ஏறி அவருக்கு முன்னிருந்த ஒரு பெரிய வெண்ணிறத் துணிக்கு முன்பாகவும், திருச்சபையாருக்குத் தன் முதுகைக் காட்டியும் நின்று கொண்டு, தன்னுடைய பிரஷ்ஷினை கருப்பு நிற வண்ணத்தில் தோய்த்து எடுத்தார். அழகான முறையில் அவர் ஒரு சிலுவையை வரைந்து முடித்தார். படிப்படியாக அவர் பிரஷ்ஷைக் கொண்டும், கைகளை உபயோகித்தும் இந்த காட்சி சொல்லுபவர் கிறிஸ்துவின் சிலுவையிலறைதலையும், உயிர்த்தெழுதலையும் வரைந்து முடித்தார். அந்தத் துணியின் மற்ற பகுதியினை கருப்பு வண்ணமிட்டு பூர்த்திசெய்தார். மேலும், நீலம் மற்றும் வெள்ளை வண்ணங்களை உபயோகித்து, மீதமுள்ள மொத்த படத்தினையும் 6 நிமிடங்களுக்குள்ளாக வரைந்து முடித்தார். அவர் அந்தத் துணி பேனரைத் தலைகீழாகத்திருப்பி, அதில் மறைந்துள்ள ஒரு தோற்றத்தை சபையாருக்குக் காட்டினார். அது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மனதுருக்கம் நிறைந்த முகம்.
ஆலய ஆராதனையில் துரிதமான ஓவியத்தை வரைவதைக் குறித்து தனது நண்பர் கொடுத்த ஆலோசனையை ஏற்க ப்ரௌன் முதலில் தயங்கினார். ஆனால், இப்பொழுதோ அவர் உலகம் முழுவதும் பயணம் செய்து, தன்னுடைய ஓவியத்தின் மூலம் கிறிஸ்துவைப் பகிர்ந்து கொண்டு, மக்களை ஆராதனைக்குள் வழிநடத்திக் கொண்டிருக்கிறார். தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு விதவிதமாகக் கொடுத்த வரங்களைக் குறித்த தரத்தினையும், நோக்கத்தையும் குறித்து பவுல் அப்போஸ்தலன் உறுதிப் படுத்துகிறார். அவருடைய குடும்பத்தைச் சார்ந்த ஒவ்வொருவரும் தேவனுடைய நாம மகிமைக்காக, ஒவ்வொருவரையும் அன்பிலே கட்டி எழுப்ப உருவாக்கப்பட்டு இருக்கிறோம் எனவும் கூறுகிறார் (ரோம. 12:3-5). பவுல் மேலும் நம்மை நம் வரங்களைக் கண்டு பிடிக்கவும், அவைகளைப் பயன்படுத்தவும், அவற்றின் மூலம் மற்றவர்களை உருவாக்கி அவர்களை இயேசுவிற்கு நேராக வழிநடத்தவும், கருத்தோடும், சந்தோஷத்தோடும் ஊழியம் செய்ய நம்மை உற்சாகப்படுத்துகிறார் (வச. 6-8). தேவன் நம் ஒவ்வொருவருக்கும் ஆவிக்குரிய வரங்கள், தாலந்துகள், திறமைகள் மற்றும் அனுபவங்களைக் கொடுத்து முழு இருதயத்தோடே அவருக்கு, திரை மறைவிலோ அல்லது எல்லாருக்கும் முன்பாகவோ ஊழியம் செய்யும்படியாக அழைத்திருக்கிறார். நாம் அவருடைய சிருஷ்டிப்பினைக் கொண்டாடும்போது, அவர் நம்முடைய தனித்தன்மையை உபயோகித்து, சுவிசேஷத்தினை பரப்பவும், மற்ற விசுவாசிகளை அன்பிலே கட்டவும் நம்மைப் பயன்படுத்துகிறார்.