
வாழு, ஜெபி, நேசி
இயேசுவின்மேல் தன் பெற்றோர் கொண்ட ஆழமான விசுவாச வாழ்க்கையின் பலனாக, விளையாட்டு வீரரான ஜெஸ்ஸி ஓவன்ஸ் சிறந்த ஒரு விசுவாச வீரராக வளர்ந்தார். 1936ல் பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுகளில், ஆப்பிரிக்க அமெரிக்க ஓவன்ஸ் அமெரிக்க அணியிலிருந்து விளையாடி தங்கள் இனத்திற்கு எதிரிகளான நாசிகளுக்கும், அவர்களின் தலைவனான ஹிட்லருக்கும் முன்பாக நான்கு தங்கப்பதக்கங்களை பெற்றார். அவர் தன்னோடு விளையாடிய விளையாட்டு வீரரான லஸ்லாங்க் என்ற ஜெர்மானியரை நண்பராக்கிக்கொண்டார். நாசிக்களின் பிரச்சாரங்களில் மூழ்கிப்போயிருந்த லஸ்லாங்க், ஓவனின் விசுவாச வாழ்க்கையினாலே பிற்காலத்தில் தொடப்பட்டார். இந்த லஸ்லாங்க் பிற்காலத்தில் ஓவன்ஸிற்கு இவ்வாறு எழுதினார், பெர்லினில் நான் முதன்முதலில் உங்களை சந்தித்து பேசும்பொழுது உங்கள் முழங்கால்கள் தரையில் முடங்கியிருந்தன. நீங்கள் ஜெபத்தில் இருந்தீர்களென நான் அறிந்தேன். நானும் அந்த தேவனை விசுவாசிக்க விரும்புகிறேன்.
ஓவன்ஸ், பவுலின், 'தீமையை வெறுக்கின்ற" அனுபவத்தை எவ்வாறு வெளிப்படுத்திக்காட்டுவது என்பதை நன்றாக அறிந்திருந்தார். 'அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியம் செய்யுங்கள்" என்கின்ற பவுலின் அறிவுரைகளையும் (ரோம. 12:9-10) அறிந்திருந்தார். அவர் தன்னைச் சுற்றியுள்ள தீமைகளுக்கு தீமை செய்ய வாய்ப்பிருந்தும், ஓவன்ஸ் தன்னுடைய விசுவாசத்தையும் அன்பையும் காட்டுவதை தெரிந்துகொண்டு, தன் நண்பனிடத்தில் அதைக்காட்டினபடியால், அவர் (லஸ்) பிற்காலத்தில் ஒரு பெரிய விசுவாசியாக மாறினார்.
தேவனுடைய பிள்ளைகள் ஜெபத்திற்கு தங்களை ஒப்புக்கொடுக்கும்போது (வச. 12) அவர் நம்மை 'மற்றவர்களோடு ஐக்கியமாய்" வாழ வல்லமையளிக்கிறார் (வச. 16). நாம் ஜெபத்தினை சார்ந்திருக்கும்பொழுது, நாம் நம்மை விசுவாசத்திற்கும், தேவசாயலில் உருவாக்கப்பட்ட எல்லாரையும் நேசிப்பதற்கும் ஒப்புக்கொடுத்து வாழ முடியும். நாம் கர்த்தரிடத்தில் கதறி அழும்போது, எல்லாத்தடைகளையும் உடைத்து, நம்முடைய அயலகத்தாரிடமும் சமாதான பாலத்தை அமைத்து அவர்களை நேசிக்க தேவன் நம்மை பெலப்படுத்துவார்.

பாடுவதற்கு ஒரு காரணம்
ஒரு சட்டத்திட்டத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மனிதனின் நிலையானது, உண்மையைச்சொல்லப் போனால், மிகவும் பரிதாபமான நிலையாகும். நான் என்ன செய்ய முடியும்? நான் தூங்கித்தான் போனேன். ஆனால், என்னுடைய பிள்ளைகள் சாயங்காலத்தில் வெளியே சென்றபோது, திடீரென ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அவர்கள் மிகவும் நல்ல பிள்ளைகள். ஆனால், அவர்கள் தங்கள் கைகளை வைத்து எங்கள் வீட்டின் முன் கதவினைத் திறக்கும் வரையில், நான் காத்திருப்பது என் வழக்கம். அவர்கள் வீட்டிற்கு பத்திரமாக வந்து சேர்ந்து விட்டதை அறிந்தபிறகே, நிம்மதியாக தூங்குவேன். நான் இப்படி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், நான் அதைத் தெரிந்துகொண்டேன். ஆனால் அன்று இரவு நான் திடீரென விழித்தபோது என்னுடைய மகள் புன்முறுவலோடு , 'அப்பா நான் பத்திரமாக இருக்கிறேன். நீங்கள் தூங்குங்கள்", எனக்கூறினாள். உயரிய நோக்கங்களையுடைய தகப்பன்மார்கூட சில சமயங்களில் தூங்கிவிடுவதுண்டு. அது தான் மனுஷீகம்.
ஆனால் இது ஆண்டவரிடத்தில் நடக்காது. தம்முடைய பிள்ளைகளுக்குரிய காப்பாளராக, பாதுகாப்பாளராக அவரைக் காட்டுவதில் (சங். 121) மறுஉறுதி அளிக்கிறது. சங்கீதக்காரன் நம்மைக் காக்கிற தேவன், 'உறங்குவதுமில்லை" என எழுதுகிறார். (வச. 3) அதை மீண்டும் வலியுறுத்த வசனம் 4ல் குறிப்பிடுகிறார். அவர் உறங்குவதுமில்லை, தூங்குவதுமில்லை என திரும்பவும் பாடுகிறார்.
உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அவர் வேலையில் தேவன் தூங்குகிறதுமில்லை, அவர் எப்பொழுதும் நம்மை விழிப்புடன் காக்கிறவராயிருக்கிறார். மகன்கள், மகள்கள், அத்தைகள், மாமாக்கள், தாய்மார்கள் ஏன் தகப்பன்மார்கள் எல்லாரையும் அவர் கண்விழித்து பாதுகாக்கிறார். இதை அவர் செய்யவேண்டியதில்லை. ஆனால், அவருடைய அதிகப்படியான அன்பினால், அவர் அந்த வாக்குத்தத்தைத் தெரிந்து கொண்டு இருக்கிறபடியால், அது பாடப்படவேண்டிய வாக்குத்தத்தமாக இருக்கிறது.

மற்றொரு வாய்ப்பு
பழைய இருசக்கர வாகனங்களின் கடையானது எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கிறது. அதில் சில தன்னார்வலர்கள், பழைய சைக்கிள்களைப் புதுப்பித்து அவைகளைத் தேவையுள்ளவர்களுக்கு வழங்குவார்கள். இந்த கடையின் உரிமையாளரான எர்னி கிளார்க் அவர்களும் பழைய இருசக்கர வாகனங்களை பழுது நீக்கி பல பெரியவர்களுக்கு இலவசமாக வழங்குவார். அதில் தங்கள் வாழ்க்கையை நடத்த கஷ்டப்படும் வீடற்றோர், ஊனமுற்றோர், இராணுவ ஓய்வுபெற்ற வீரர்களும் அடங்குவர். இருசக்கர வாகனங்கள் மட்டுமல்ல, பல சமயங்களில் அவைகளைப் பயன்படுத்துகிறவர்களும் இரண்டாவது வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளுகிறார்கள். ஒரு சமயம் ஒரு வீரன் தன்னுடைய நேர்முகத்தேர்விற்கு செல்ல அத்தகைய ஒரு வாகனத்தை பயன்படுத்தினார்.
இரண்டாவது வாய்ப்புகள் அதுவும் தேவனிடத்திலிருந்து வரும்பொழுது ஒரு மனிதனை முற்றிலும் மாற்றக்கூடிய வலிமையுடையது. இஸ்ரவேல் தேசமானது, லஞ்சம் மோசடி மற்றும் பல வகையான பெரும் பாவங்களில் நிறைந்திருக்கும்பொழுது, தேவன் கொடுத்த கிருபையினை மீகா கண்டு கொள்ளுகிறார். மீகா, 'தேசத்தில் பக்தியுள்ளவன் அற்றுப்போனான்; மனுஷரில் செம்மையானவன் இல்லை", எனப் புலம்புகிறார் (மீகா 7:2).
தேவன் தீமையை சரியான வகையில் நியாயம் தீர்ப்பார். என்பது மீகாவிற்கு நன்றாகத் தெரியும். ஆனால் அவருடைய அன்பின் நிமித்தமாக, மனந்திரும்புகிற எல்லாருக்கும் அவர் மறு வாய்ப்பினை அளிக்கிறார். அந்த அன்பினாலே ஆட்கொள்ளப்பட்டவராய், மீகா, 'தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பானவர் யார்?"(வச. 18).
நாம் அவரிடத்தில் மன்னிப்பு கேட்டால், நம்முடைய பாவங்களினிமித்தம் நாம் ஒதுக்கப்படாதபடி, தேவனுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசிக்கக்கூடும். மீகா கூறின விதமாக, 'அவர் திரும்ப நம்மேல் இரங்குவார். நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிட்டார்" (வச. 19). அவரைத் தேடுகிற யாவருக்கும் தேவனுடைய அன்பானது இரண்டாவது வாய்ப்பினை அருளுகிறது.

ஞானத்தினால் ஆச்சரியம்
'நான் அதிகமாக முதிர்வடையும்போது மிகவும் ஞானமுள்ளவளாகிறேன். சில சமயங்களில் நான் என் மகனிடத்தில் பேசும்பொழுது, உம்முடைய வார்த்தைகளே என் வாயிலிருந்து வருகிறது", என என் மகள் கூறினாள்.
என் மகளின் கள்ளங்கபடமற்ற இந்த பேச்சு என்னை சிரிக்க வைத்தது. இதேபோல என் பிள்ளைகளை வளர்க்கும்போதும், என் பெற்றோர்கள் என்னிடத்தில் உபயோகித்த வார்த்தைகளையே நானும் உபயோகித்தேன். நான் ஒரு தகப்பனாக மாறினபொழுது, என் பெற்றோர்களின் ஞானத்தைக்குறித்த எனது கருத்துக்கள் மாறியது. ஒரு சமயத்தில் 'முட்டாள்தனமானது", என்று நான் ஒதுக்கித் தள்ளினவைகள் எல்லாம் நான் நினைப்பதற்கும் மேலான ஞானமுள்ளது என்பதை இப்பொழுது அறிந்து கொண்டேன். இவைகளை நான் முதலில் அறிந்து கொள்ள முடியவில்லை.
வேதாகமம், 'தேவனுடைய பைத்தியமானது உலகில் மிகப்பெரிய ஞானமாயிருக்கிறது", என போதிக்கிறது (1 கொரி. 1:25)." தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிக்கிறவர்களை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று (வச. 21).
நம்மை ஆச்சரியப்பட வைக்கும் வழிகளை தேவன் நமக்காக எப்பொழுதும் வைத்திருக்கிறார். ஒரு வெற்றியுள்ள ராஜா இந்த உலகத்திற்கு வருவதற்கு பதிலாக, தேவனுடைய குமாரன் ஒரு பாடுகளுள்ள வேலையாளாக வந்து, தன்னை மிகவும் தாழ்மையான சிலுவைமரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார். அவர் மகிமைக்குள் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன் இவை நடந்தன.
தேவனுடைய ஞானத்தில், தாழ்மையானது பெருமைக்கும் மேல் மதிப்பிடப்படுகிறது. அன்பானது தகுதியில்லாத இரக்கம் மற்றும் கனிவிற்க்கு மேலாக மதிப்பிடப்படுகிறது. சிலுவையின் மூலமாக, நம்முடைய ஜெயிக்க முடியாத மேசியா, நம்மை மீட்கும்படி பிரதானமான பலியாக மாறினார் (எபி. 7:25).
இதனால், இரட்சிக்கப்படுகிறவர்கள் அவருக்குள்ளாக தங்கள் விசுவாசத்தை வைக்கக்கூடும்.
