அன்டோனியோ ஸ்ட்ராடிவேரி (1644-1737) இசையுலகில் ஒரு சரித்திரம் படைத்தவர். அவருடைய வயலின்களும், செல்லோக்களும், வயோலாக்களும் பொக்கிஷங்களாகக் கருதப் பட்டன. அவற்றின் நுணுக்கமான அமைப்பும், தெளிவான இசையும் அவருக்குப் பல புனை பெயர்களைக் கொடுத்தன. அவற்றுள் ஒன்று – மேசியா சலேபு ஸ்ட்ராடிவேரியஸ். வயலின் மேதையான ஜோசப் ஜோக்கிம் (1831-1907) இப்பாடலை வாசித்த போது  அவர், “ஸ்ட்ராடின் ஒலியின் தனித்துவம் நிறைந்த “மெசையா” என்ற பாடலின் இனிமையும், சிறப்பும் மீண்டும் மீண்டும் என் மனதில் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றது” என்றார்.

இத்தகைய புகழ் பெற்ற ஸ்ட்ராடிவேரியஸின் பெயர் கூட மற்றொரு பெரியவரின் செயலுக்கு அருகில் வைக்கத் தகுந்ததல்ல. மோசேயிலிருந்து இயேசு வரை தேவாதி தேவன் தன்னை எல்லா நாமத்திற்கும் மேலான நாமமாக  வெளிப் படுத்துகின்றார். அவருடைய ஞானத்தையும், கரத்தின் கிரியைகளையும் நாம் கண்டுணர்ந்து அவரைக் கனப் படுத்தி இசையோடு அவரைப் போற்றும் படி விரும்புகின்றார் (யாத். 6:1; 15:1-2)

துயரத்திலிருந்து கூப்பிடும் ஜனங்களின் கூக்குரலுக்கு பதில் கொடுத்து அவர்களை விடுவிக்கும்படி தனது வல்லமையான செயல்களைக் காண்பிக்கின்றார். இது ஓர் ஆரம்பம் மட்டுமே. சிலுவையில் அடிக்கப்பட்டு பெலவீனமான அவருடைய கரங்களினால், முடிவில்லாத நித்திய மகிமையை நிலை நாட்டுவார் என யார் தான் முன்னறிந்திருக்க முடியும்? நம்மீதுள்ள  மிகப்பெரிய அன்பினால், நம்முடைய பாவங்களால் ஏற்பட்ட அவமானத்தையும், தள்ளப் படுதலையும் சகித்து, மரித்து உயிர்த்த ஒரு நாமத்தின் அதிசயத்தையும், மகத்துவத்தையும் குறித்து நாம் போற்றி இசையோடு பாடுவோம் என்று யாரேனும் நினைத்திருப்பார்களா?