வகை  |  odb

இதுவரை பயணம் செய்யாத சாலை வழியே

ஐந்து வருடத் திட்டம் வைத்திருக்கின்றாயா? என மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். நான் அறியாத ஒரு பாதை வழியே ஐந்து ஆண்டுகள் செல்ல, நான் எப்படி திட்டமிடமுடியும்?

1960 ல் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைகழகத்தில், நான் மாணவர்களின் ஜெபக்குழு தலைவனாக இருந்தேன். நான் அங்கு உடற்பயிற்சி பாடத்தைக் கற்றுக்கொண்டிருந்ததால், அநேக விளையாட்டுகள் இருந்தன. நான் விளையாட்டில் மகிழ்ந்தேன். ஆனால், ஒரு நல்ல போதகனுக்குக் தேவையானதொன்றும் எனக்குப் போதுமானதாக இல்லை. அநேக நாட்கள், அந்த வளாகத்தினுள் ஒரு குருடனைப் போல அலைந்தேன், தேவனிடம், நான் என்ன செய்ய வேண்டும் என கேட்டேன். ஒரு நாள், எதிர்பாராத விதமாக, ஒரு மாணவன் என்னிடம் வந்து, அவனுடைய நண்பர்களுக்கு ஒரு வேத பாட பயிற்சியை நடத்தித் தருமாறு என்னை அழைத்தான். அது தான் என் பணி வாழ்வின் ஆரம்பம்.

தேவன் ஒரு சந்தியில் நின்றுகொண்டு வழிகாட்டுபவரல்ல, அவர் வழி நடத்துபவர். அவர் நம்மோடு நடந்து வருபவர், இதுவரை நடக்காத, நினைத்துப் பார்க்காத, பாதை வழியே நம்மை நடத்திச் செல்பவர். நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவரோடு கூட நடப்பதே.

நாம் நடக்கும் பாதை எளிதானதாக இருக்காது. சில இடங்கள் கரடு முரடாக இருக்கும், “அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன்” என்றும், “அவர்களைக் கைவிடா திருப்பேன்” எனவும் தேவன் வாக்களிக்கின்றார் (ஏசா. 42:16) அவர் எப்போதும் நம்மோடிருக்கும் தேவன்.

“நாம் வேண்டிக்கொள்கிறதற்கும், நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற தேவன்” (எபே. 3:20). என பவுல் குறிப்பிடுகின்றார். நாம் நமக்கென்று திட்டங்களையும், தரிசனங்களையும் காணலாம். ஆனால், தேவனுடைய திட்டங்கள் நாம் நினைப்பதற்கு மேலானவை. எனவே நாம் நம்முடைய திட்டங்களைப் பற்றிக் கொள்வதை விட்டுவிட்டு, தேவன் நமக்கு வைத்திருக்கும் திட்டத்தை காணும்படி அவரை நோக்குவோம்.

 

போர் வீரனைப் போல நட

பதினெட்டே வயது நிரம்பிய எம்மா, சமுதாய ஊடகங்களில் இயேசுவைப் பற்றி பேசி வந்தாள். வம்பர்கள், அவள் கிறிஸ்துவின் மீது வைத்துள்ள ஆழ்ந்த அன்பினையும், மகிழ்ச்சியையும் விமர்சித்த போதிலும், சிலர் அவளுடைய புறத் தோற்றத்தைக் குறித்துக் கடுமையாகச் சாடியபோதும், அவள் உண்மையாய் இருந்தாள். வேறு சிலர், அவள் தன்னுடைய நேரத்தையெல்லாம் தேவனுக்கென்று அர்ப்பணித்திருப்பது, ஒரு அறிவில்லாத செயல் என்றனர். இந்த இரக்கமில்லாத வார்த்தைகள் எம்மாவின் இருதயத்தை ஆழமாக காயப்படுத்தியிருந்த போதிலும், இயேசுவின் மீதும், பிறர் மீதுமுள்ள அன்பினால், விசுவாசத்தின் தைரியத்தோடு சுவிசேஷத்தைப் பரப்புவதை விடவில்லை. பிறர் தரும் விமர்சனங்களின் மூலம் அவளுக்குக் கிடைத்த அடையாளத்தையும், அவமதிப்பையும் நம்பும்படி தூண்டப்படும் போது, அவள் தேவனுடைய உதவியை நாடினாள், தன்னை துன்புறுத்துபவர்களுக்காக ஜெபித்தாள், வேத வசனங்களைத் தியானித்தாள். பரிசுத்த ஆவியானவர் தந்த தைரியத் தோடும், பெலத்தோடும் தொடர்ந்து பணி செய்தாள்.

கிதியோன், மீதியானியரின் கையினால் மிகுந்த உபத்திரவத்தைச் சந்தித்தான் (நியா. 6:1-10) தேவன் அவனை “பராக்கிரமசாலி” என்று அழைத்தபோதும் அவன் தனக்குள்ளாக ஏற்படுத்திக்கொண்ட சந்தேகங்களையும், தாழ்வு மனப்பான்மையையும், பாதுகாப்பின்மையையும் விட்டு வெளிவரப் போராடினான் (வச. 11-15). தேவனுடைய பிரசன்னம் அவனோடிருக்கின்றதை பல முறை சந்தேகித்தான். தேவனுடைய பிரசன்னத்தைக் குறித்தும், தன்னுடைய தகுதியைக் குறித்தும் கேள்விகள் கேட்டான். கடைசியாக விசுவாசத்தில் தன்னை அர்ப்பணித்தான்.

நாம் தேவனை நம்பும் போது, நம்மைக் குறித்து அவர் சொல்வது உண்மையென விசுவாசித்து வாழ வேண்டும். துன்பங்கள், நமக்குள் சந்தேகங்களைக் கொண்டு வரலாம், நம் அன்புத் தந்தை நம்மோடிருந்து, நமக்காக யுத்தம் செய்வதாக உறுதியளித்துள்ளார். எனவே நாம் வலிமையான போர் வீரனாக ,தேவனுடைய அன்பை ,ஆயுதமாகவும், அவருடைய முடிவில்லா கிருபை நம்மைப் பாதுகாக்க, அவருடைய உண்மையைப் பற்றிக் கொண்டு வாழ்வோம்

 

தெருப் பணியாளர்களோடு சேர்ந்து கொள்

சான் பிரான்ஸிஸ்கோ நகரின் சுகாதார பணியாளர்கள், போதை மருந்துக்கு அடிமையாகி, வீடற்று, தெருக்களில் வசிப்போருக்கு, மருத்துவ உதவியளித்து அவர்கள், தங்கள் போதை பழக்கத்திலிருந்து விடுபட உதவினர். வீடற்றோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இது ஆரம்பிக்கப்பட்டது. சாதாரணமாக நோயாளிகளைச் சந்திக்கும்படி, மருத்துவர்கள், தங்கள் மருத்துவ மனையில் காத்திருப்பர். ஆனால் இங்கு, நோயாளிகள் மருத்துவரைத் தேடிச் செல்லத் தேவையில்லை, அவரைச் சந்திக்கும் நேரத்தை ஏற்கனவே பெற்றிருக்க வேண்டிய அவசியமுமில்லை. மருத்துவ உதவி, பாதிக்கப்பட்டவர்களைத் தேடி வரும். 

இந்த சுகாதார பணியாளர்கள், விருப்பத்தோடு பாதிக்கப்பட்டவர்களைத் தேடி வரும் காட்சி, இயேசு கிறிஸ்துவும் நம்முடைய தேவைகளில் நம்மைத் தேடி வந்ததை நினைவுப்படுத்துகின்றது. அந்நாட்களில் மதத் தலைவர்கள் யாரைப் புறக்கணித்தார்களோ, அவர்களையே, இயேசு தம் பணிக்காலத்தில் தேடி வந்தார், “அவர் ஆயக்காரரோடும், பாவிகளோடும்’’ உணவருந்தினார், (வச. 16) அவர் ஏன் இப்படிச் செய்கிறாரெனக் கேட்டபோது, “பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ள வர்களுக்கு வேண்டியதில்லை” என்றார். (வச. 17) மேலும் அவர், நீதிமான் களையல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன், என்றார்

நாம் சுகவீனராக, நமக்கொரு மருத்துவர் தேவையென உணரும்போது, (ரோம. 3:10) இயேசு விருப்பத்தோடு “ஆயக்காரோடும், பாவிகளோடும்” போஜனம் பண்ணினதையும், அவர் நம்மையும் சந்திக்க ஆர்வமாயிருப்பதையும் ஏற்றுக்கொள்வோம். அந்த சான் பிரான்சிஸ்கோ நகரின் சுகாதாரப் பணியாளர்களைப் போன்று, தேவன் நம்மையும் தெரு பணியாளர்களாக நியமித்துள்ளார். நாம், அவர் தரும் மீட்பின் செய்தியை தேவையிருப்போருக்கு எடுத்துச்செல்வோம்.

 

கிருபையின் விதைகள்

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, நம்தேசசத்தில் ஒரு மனிதன் கடினமாக உழைத்து, வறண்டு, வெடித்துக் கிடந்த, பயனற்ற ஒரு நிலத்தை செழிப்பான இடமாக மாற்றினார். நதியால் சூழப்பட்ட அந்த இடம், நில அரிப்பாலும், சுற்றுச்சூழலின் பாதிப்பாலும், அழிக்கப்பட்டுக் கிடந்ததைக் கண்ட அம்மனிதன், அதனை நேசித்து, அதில் மரங்களை நட ஆரம்பித்தான். ஒரு முறை மூங்கில், அடுத்து பருத்தி என மாற்றி மாற்றி பயிரிட்டான். இப்பொழுது, அடர்ந்த காடும், நிறைய காட்டு உயிரினங்களும் 1,300 ஏக்கர் நிலத்தை நிரப்பியுள்ளன. அந்த நிலத்திற்கு கிடைத்த இந்த மறுவாழ்வு தன்னால் நடந்ததல்ல என்று அம்மனிதன் வலியுறுத்திக் கூறுகின்றான். அற்புதமாக வடிவமைக்கப்பட்ட இவ்வுலகில், எத்தனை அற்புதமாக விதைகள் காற்றில் சுமந்து செல்லப்பட்டு, விளை நிலங்களில் விதைக்கப்படுகின்றன, பறவைகளும், விலங்குகளும் விதைத்தலில் பங்கு பெறுகின்றன, மரங்களும், செடிகளும் செழித்து வளர நதிகள் தங்கள் உதவியைச் செய்கின்றன என்று அம்மனிதன் வியந்து கூறுகின்றான்.

படைப்பு நடைபெறும் விதத்தை நம்மால் கிரகிக்கவும், கட்டுப் படுத்தவும் முடியாது. தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்த காரியங்களும் இதே போன்றது என்று இயேசு கூறுகின்றார். “தேவனுடைய ராஜ்யமானது, ஒரு மனுஷன் நிலத்தில் விதையை விதைத்து, இரவில் தூங்கி, பகலில் விழித்திருக்க, அவனுக்குத் தெரியாத விதமாய், விதை முளைத்துப் பயிராகிறதற்கு ஒப்பாயிருக்கிறது” என்றார். (மாற். 4:26-27) இவ்வுலகிற்கு வாழ்வையும், சுகத்தையும் தேவன் ஈவாகக் கொடுத்துள்ளார், இது நம்முடைய கரத்தின் திறமையினால் கிடைப்பதல்ல. தேவன் நம்மிடம் எதை சொல்கின்றாரோ அதை நாம் செய்யும் போது நம்முடைய வாழ்வு துளிர்க்கும். அவருடைய கிருபையினாலேயே எல்லாம் கிடைக்கின்றன.

ஒருவருடைய இருதயத்தை மாற்றியது நான் தான் என நினைக்கும்படி நமக்குத் தோன்றலாம், அல்லது நம்முடைய உண்மையான முயற்சியால் அது நடைபெற்றது என்று எண்ணலாம், நம்மை பலமுறை சோர்வடையச் செய்யும் அத்தகைய எண்ணம் தேவையில்லை. எல்லாவற்றையும் விளையச் செய்கிறவர் அவரே. எல்லாம் அவருடைய கிருபை.

 

ஒன்றாகப் பின்னப்பட்டது

தன்னுடைய வீட்டில், சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக வளர்த்த செடியை, என் சிநேகிதி என்னிடம் கொடுத்தாள். அந்தச் செடி என்னுடைய உயரத்திற்கு இருந்தது. அதில் மூன்று நீண்ட, மெல்லிய கிளைகளிலிருந்து பெரிய இலைகள் வளர்ந்திருந்தன. அந்த இலைகளின் சுமையைத் தாங்க முடியாத அந்த கிளைகள் தரையை நோக்கி வளைந்து காணப்பட்டன. அந்த கிளைகளை நேராக்க, நான் அந்த தொட்டியின் அடிப்பக்கம் ஒரு கட்டையை தாங்கியாகக் கொடுத்து, அச்செடியின் மீது சூரிய வெளிச்சம் படும் படி ஜன்னலின் அருகில் வைத்தேன். சூரிய வெளிச்சம் பட்டு, இலைகளும், வளைந்த கிளையும் நேராக வளர்ந்து அதன் மோசமான நிலையை மாற்ற முயற்சித்தேன் .

இந்தச் செடியைப் பெற்ற சில நாட்களில், இதே போன்ற மற்றொரு செடியை அருகிலுள்ள ஒரு அலுவலகத்தின் முன் அறையில் பார்த்தேன். அதுவும் மூன்று மெல்லிய கிளைகளிலிருந்து வளர்ந்திருந்தது. ஆனால், அக்கிளைகள் மூன்றும் பின்னப்பட்டு, பெரிய ,உறுதியான கொப்பாக செயல்பட்டது. எந்த உதவியுமின்றி இச்செடி நேராக நின்றது.

ஒரே தொட்டியில் வைக்கப்பட்ட இரு செடிகள், அநேக ஆண்டுகளாக இருந்தும் அவை தனித்தனியே வளர்ந்து வந்தால், தேவன் அவர்கள் மகிழ்ந்திருக்கும் படி கொடுக்கும் நன்மைகளில் சிலவற்றை மட்டுமே அவர்களால் அநுபவிக்கமுடியும். ஆனால், அவர்களுடைய வாழ்வு தேவனோடு பின்னப்படும் போது, அதிக உறுதியையும், நெருங்கியிருத்தலையும் பெற்றுக்கொள்வர். அவர்களுடைய வாழ்வு உறுதியாக வளரும். முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது (பிர. 4:12).

வீட்டில் வளரும் செடியைப் போன்று, திருமணங்களையும், நட்புறவுகளையும் கவனிக்க வேண்டியுள்ளது. இந்த உறவுகள் பரிசுத்த ஆவியானவரைத் தங்களோடு இணைத்துக் கொண்டு வாழும்போது, தேவன் அவர்களின் பிணைப்பின் மையத்தில் இருப்பார். அன்பையும், கிருபையையும் முடிவில்லாமல் வழங்கும் அவர், நாம் ஒருவரோடொருவர் இணைந்து