
மிகப்பெரிய மர்மம்
இயேசுவின் பேரில் விசுவாசத்திற்குள் வருவதற்கு முன்பு, நான் சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டதைக் கேட்டிருக்கின்றேன். ஆனால் அவர் யாரென்று அறிய போராடினேன் தேவன் ஒருவரே பாவத்தை மன்னிக்கிறவர் என்று வேதாகமம் கூறுகின்றது. அப்படியிருக்க, எப்படி இயேசுவால் என்னுடைய பாவங்களை மன்னிக்க முடியும்? என்று நம்பத் தடுமாறினேன். ஜெ.ஐ.பாக்கர் எழுதிய “தேவனை அறிந்து கொள்ளல்” (Knowing God) என்ற புத்தகத்தைப் படித்த பின்பு தான், என்னுடைய போராட்டங்களில் நான் மட்டும் தனிமையாக இல்லை என்பதை நான் கண்டுபிடித்தேன். “நசரேயனாகிய இயேசு, மனிதனாகப் பிறந்த தேவன்………..அது உண்மை, ஆனால் அவர் மனிதனாக வாழ்ந்த போது, முழுவதும் தேவத்தன்மையில் தான் இருந்தார் என கூறும் தடுமாற்றமுள்ள கிறிஸ்தவர்களுக்கும்”, அவிசுவாசிகளுக்கும் அவர் எழுதுவது, இதுதான் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள தேவையான உண்மை.
அப்போஸ்தலனாகிய பவுல் இயேசு கிறிஸ்துவை “அதரிசனமான தேவனுடைய தற்சுரூபம்” என்று குறிப்பிடும் போது, அவர் இயேசுவை முற்றிலுமாக, பரிபூரணமான தேவன், படைப்பின் காரணர், பூமியிலும் வானத்திலுமுள்ள சகலத்தையும் தாங்குபவர், ஆனால் பூரண மனிதன் என்கின்றார் கொலோ.1:15-17). இந்த உண்மைதான், இயேசு கிறிஸ்துவின் சாவு மற்றும் உயிர்ப்பின் மூலம், அவர் நம்முடைய பாவத்தின் விளைவுகளைச் சுமந்ததோடு, மனுக்குலம் முழுமையையும் மீட்டார் என்பதைக் காட்டுகின்றது. அனைவரும், அனைத்து படைப்புகளும் மீண்டும் தேவனோடு ஒப்புரவாகும் படிச் செய்தார் என்ற நம்பிக்கையை நமக்குத் தருகின்றது (வ.20-22).
இந்த வியத்தகு அன்பின் செயல் வெளிப்பட்ட நாளில் இருந்து, தேவனாகிய பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினாலும், குமாரனாகிய இயேசுவின் வாழ்வின் மூலமாகவும் எழுதப்பட்ட வேதவார்த்தையின் மூலம், பிதாவாகிய தேவன் தம்மை வெளிப்படுத்தினார். இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் இரட்சிக்கப்படுகிறார்கள், ஏனெனில் அவர் இம்மானுவேல்-
தேவன் நம்மோடிருக்கிறார். அல்லேலூயா!

அன்பினைப்பெற வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை
சிலவேளைகளில் என்னுடைய நாய், என்னுடைய கவனத்தை ஈர்ப்பதற்காக, எனக்குச் சொந்தமான எதையாகிலும், தன்னுடைய வாயில் கவ்விக்கொண்டு, எனக்கு முன்பாக நடந்துவரும். ஒரு நாள், நான் என்னுடைய அறையில் எழுதிக் கொண்டிருந்த போது, எனக்குப் பின் புறமாக வந்த மாக்ஸ் என்ற என்னுடைய நாய், என்னுடைய பணப்பையை கவ்விக் கொண்டு வெளியேறியது. ஆனால் நான் அந்தக் காரியத்தை கவனிக்கவில்லை என்று மாக்ஸ் தெரிந்து கொண்டபோது, அது, பணப்பையைக் கவ்வியபடியே திரும்பி வந்து தன் மூக்கினால் என்னைத்தொட்டது, உற்சாகத்தில் அதன் கண்கள் உருண்டன, வாலை ஆட்டியது, அதனோடு விளையாட வரும்படி என்னைக் கடிந்து கொண்டது.
மாக்ஸின் இந்தச் செயல் எனக்கு சிரிப்பை உண்டாக்கினாலும், எல்லா நேரங்களிலும், முக்கியமாக நான் மற்றவர்களோடு நேரம் செலவிடும் போது, அது அவ்வாறு இருப்பதில்லை. நான் அதிக நேரத்தை என்னுடைய குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் செலவிட வேண்டுமென விரும்புவதாலும், மற்றும் சிலவேலைகள் என்னுடைய மனதில் இடம் பிடித்திருப்பதாலும், எப்படியாகிலும் அந்த நாள் முடிவதற்குள் என்னுடைய அன்பு நாயிடம் சிறிது நேரம் செலவிட வேண்டும் என்ற விழிப்புணர்வு எனக்குள் இருந்து கொண்டேயிருக்கும்.
நம்முடைய பரலோகத் தந்தை, சர்வ வல்லவர், நம் ஒவ்வொருவரையும் மிக நெருக்கமாகச் சந்தித்து வருகின்றார். நம்முடைய நுரையீரலுக்குள் செல்லும் ஒவ்வொரு மூச்சையும், நம்முடைய வாழ் நாள் முடியும் மட்டும் தாங்கிப் பிடிக்கின்றார் என்பதைத் தெரிந்து கொள்ளும் போது, எத்தனை ஆறுதலாகவுள்ளது. அவர் தம் பிள்ளைகளுக்கு, “உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயது மட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்து வந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், சுமப்பேன், தப்புவிப்பேன்” (ஏசா.46:4) என்று வாக்களிக்கின்றார்.
தேவன் நமக்கென்று எப்பொழுதும் நேரம் செலவிடுகின்றார். நம்முடைய ஒவ்வொரு சூழ்நிலைகளையும் அவர் புரி ந்துகொள்கின்றார். அது எத்தனை கடினமானதாயினும், சிக்கலானதாயினும், நாம் ஜெபத்தில் கூப்பிடும் போது அவர் அங்கேயிருக்கிறார். நமது இரட்சகரின் எல்லையில்லா அன்பினைப்பெற நாம் வரிசையில் காத்திருக்க அவசியமில்லை.

ஆமையோடு சேர்ந்து காத்திருப்போம்
வர்ணம் பூசப்பட்ட அந்த ஆமை, ஒவ்வொரு முறையும் குளிர் காலம் வருவதை அறிந்ததும், தான் வசிக்கும் குளத்தின் அடிப்பக்கத்திற்குச் சென்று, சகதி நிரம்பிய பகுதியில் தன்னைப் புதைத்துக் கொள்ளும். தன்னுடைய உடல் முழுவதையும் ஓட்டிற்குள் அடக்கி, அமைதியாகிவிடும், அதனுடைய இருதயத் துடிப்பு குறைந்து, ஏறத்தாள நின்றுவிடும் நிலையை அடையும். அதன் உடல் வெப்பநிலையும் குறை ந்து, உறைதலுக்கு சற்று மேலே நிற்கும். அது மூச்சு எடுப்பதையும் நிறுத்திக்கொண்டு, காத்திருக்கும். ஆறு மாதங்கள், தன்னை புதைத்துக் கொண்டிருக்கும் நாட்களில், அதன் எலும்புகளிலுள்ள கால்சியம் உறிஞ்சப்பட்டு அதன் இரத்தத்தோடு கலக்கும், எனவே அதன் உருவமும் மெதுவாக குலைய ஆரம்பிக்கும்.
குளத்தின் நீர் உருக ஆரம்பித்ததும், அது மிதந்து மேலே வந்து, மீண்டும் சுவாசிக்க ஆரம்பிக்கும். அதன் ஓடு, சூரிய கதிர் வீச்சின் வெப்பத்தை உணர ஆரம்பித்ததும், அதன் எலும்புகள் மீண்டும் புதிப்பிக்கப்படும்.
சங்கீதக்காரன் தரும், தேவனுக்குக் காத்திருத்தல் என்பதற்கான விளக்கத்தை நான் வாசிக்கும் போது, இந்த வர்ணம் பூசப்பட்ட ஆமையின் கதை என் நினைவில் வந்தது. ஓர் “உளையான சேறு” நிரம்பிய “பயங்கரமான குழியில்” இருக்கின்ற சங்கீதக்காரனின் கூப்பிடுதலை தேவன் கேட்கின்றார் (சங். 40:2). தேவன் அவரை வெளியே தூக்கி எடுத்து, அவனுடைய கால்கள் உறுதியாக நிற்கும் படி, ஒரு இடத்தையும் காட்டினார். எனவே, அவன், ”தேவரீர் என் துணையும், என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர்” என்று பாடுகின்றான் (வ.17).
ஒருவேளை நீயும், ஏதோ ஒரு காரியத்தின் மாற்றத்திற்காக நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருக்கலாம், உன்னுடைய வேலையில் ஒரு புதிய திருப்பம், முறி ந்த உறவைப் புதிப்பித்தல், ஒரு கெட்ட பழக்கத்திலிருந்து விடுபட தேவையான மனவலிமை அல்லது ஒரு மோசமான சூழலிலிருந்து விடுதலை போன்று ஏதோ ஒன்றிற்காக காத்துக் கொண்டிருக்கலாம். அந்த வண்ணம் பூசப்பட்ட ஆமையும், சங்கீதக்காரனும், நாம் தேவன் பேரில் நம்பிக்கையோடிருக்குமாறு நினைவு படுத்துகின்றனர். தேவன் கேட்கின்றார், அவர் நம்மை விடுவிப்பார்.

கிருபையை செயலில் காட்டல்
“விபத்துகள் மரணத்தைக் கொண்டுவரும் போது, அல்லது காயங்களை ஏற்படுத்தும் போது, கிருபையைக் காட்டவும் அல்லது பழிவாங்கவும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது, ஆனால் நான் கிருபையைக் காட்ட விரும்புகின்றேன்” என்றார், சமீபத்தில் பாதிக்கப்பட்ட ஒரு நபர். போதகர் எரிக் ஃபிட்ஸ்ஜெரால்ட்டின் மனைவி, ஒரு கார் விபத்தில் கொல்லப்பட்டாள். மிகவும் களைப்படைந்தவராய் வீடு திரும்பிய ஒரு தீயணைப்பு வீரர், வாகனத்தை ஓட்டிய போது உறங்கி விட்டதால், இந்த விபத்து ஏற்பட்டது. வழக்கறிஞர்கள் சட்டப்படி, அவருக்கு மிக அதிகமான சிறைத்தண்டனையை வழங்கலாமா என போதகரைக் கேட்டனர். அந்த போதகரோ, தான் அதிகமாகப் பிரசங்கித்துவரும் மன்னிப்பை, அவருக்கு வழங்க தீர்மானித்தார். அதிலிருந்து, ஆச்சரியப்படும்படியாக, அந்த இருவரும் நண்பர்களாயினர்.
போதகர் எரிக், தன்னுடைய பாவங்கள் யாவற்றையும் மன்னித்த தேவனிடமிருந்து, தான் பெற்ற கிருபையை, பிறருக்கு வழங்கி, வாழ்ந்து காட்டினார். அவருடைய செயலின் மூலம், தீர்க்கதரிசி மீகாவின் வார்த்தைகளைப் பிரதிபலித்தார். மீகா, நம்முடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவனைப் போற்றுகிறார். (மீகா 7:18) தேவன் தன்னுடைய ஜனங்களின் பாவங்களை எவ்வளவு தூரம் மன்னிக்கிறார் என்பதை, மீகா தீர்க்கதரிசி, பார்க்கக் கூடிய அடையாளங்களால் காட்டுகின்றார். தேவன் “நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களை எல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டு விடுவார்” (வ.19) என்கின்றார். அந்த தீ அணைப்பாளர், அன்றைய தினம், விடுதலையை ஈவாகப் பெற்றார், அது அவரைத் தேவனிடம் கொண்டு வந்தது.
நாம் எவ்வகையான துன்பங்களைச் சகித்தாலும், தேவன் அன்போடு, தம்முடைய கரங்களை விரித்தபடி, தம்முடைய பாதுகாப்பிற்குள் அரவணைக்கும் படி, நம்மை வரவேற்கிறார். “அவர் கிருபை செய்ய விரும்புகிறார்” (வ.18). போதகர் எரிக் செய்ததைப் போல, அவருடைய கிருபையையும், அன்பையும் நாம் பெறும் போது, நம்மைக் காயப்படுத்தினவர்களையும் மன்னிக்க பெலன் தருகின்றார்.
எதை நோக்கிச் செல்கின்றாய்?
வடக்குத் தாய்லாந்திலுள்ள ஓர் இளைஞர் கால்பந்து அணியினர், ஒரு குகையை ஆராயத் திட்டமிட்டனர். குகைக்குள் ஒரு மணி நேரம் செலவிட்ட பின், திரும்பினர். அவர்கள் நுழைவாயிலை அடைந்த போது, அங்கு வெள்ள நீர் நிரம்பியிருந்ததைக் கண்டனர். வெள்ள நீர் உயர, உயர அவர்களும் குகைக்குள்ளே இன்னும் வெகு தூரம் சென்றனர். நாட்கள் கடந்தன, கடைசியாக, அவர்கள் குகைக்குள்ளே இரண்டு மைல்களுக்கப்பால் (நான்கு கிலோமீட்டர்) சிக்கிக் கொண்டனர். இரண்டு வாரங்களுக்குப் பின், அவர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர். எப்படி அவர்கள் இந்த நம்பிக்கையற்ற இடத்தில் மாட்டிக்கொண்டனர் என்று அநேகர் ஆச்சரியப்பட்டனர். பதில்: ஒவ்வொரு அடியாக பின் தள்ளப்பட்டனர்.
தாவீது, தனக்கு உண்மையாயிருந்த போர்வீரனான உரியாவைக் கொன்ற போது, இஸ்ரவேலின் தீர்க்கதரிசியாகிய நாத்தான், அவனை எதிர்கொள்கின்றான். “கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற மனுஷனாகக்” (1 சாமு. 13:14) கண்ட ஒரு மனுஷன் எப்படி கொலைகாரனானான்? ஒவ்வொரு அடியாக, நடந்தது. தாவீது, ஒரே நாளில், ஒன்றுமில்லாமையிலிருந்து கொலைகாரனாகிவிடவில்லை. அவன் கொஞ்சம் கொஞ்சமாகத் தள்ளப்பட்டான். கொஞ்சக்காலமாக, அவனுடைய ஒவ்வொரு தவறான தீர்மானமும், அவனை ஒரு தவறிலிருந்து, மற்றொரு தவறுக்குள் தள்ளியது. அது இரண்டாம் முறை பார்த்ததில் ஆரம்பித்தது. பின்னர் அது காமப்பார்வையாக மாறியது. அவன் தன்னுடைய அரச அதிகாரத்தை பயன் படுத்தி, பத்சேபாளை அழைக்கின்றான், அவள் கர்ப்பம் தரித்ததை மறைப்பதற்காக, யுத்தத்தில் முன்னணியிலிருக்கும் அவளுடைய கணவனை அழைத்தனுப்புகின்றான். தன்னுடைய படைகளெல்லாம் யுத்தத்திலிருக்கும் போது, தான் மட்டும் தன்னுடைய மனைவியைச் சந்திக்க விரும்பவில்லை, தாவீது அவனைக் கொலை செய்யத் திட்டமிடுகிறான்.
நாம் கொலை குற்றத்திற்கு ஆளாவதும், குகைக்குள் அகப்பட்டுக்கொள்வதும் நம்முடைய சொந்த திட்டமில்லை. நாம் இயேசுவை நோக்கி செல்கின்றோமா அல்லது பிரச்சனையை நோக்கி செல்கின்றோமா என்பதே காரணம். பெரிய பிரச்சனைகள் ஒரே நாள் இரவில் உருவாவதில்லை. அவை நமக்குள் படிப் படியாக, ஒவ்வொரு அடியாக நுழைகின்றது.