வகை  |  odb

கர்த்தரைத் தேடல்

மக்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்றும்படி, அர்ப்பணத்தோடு, தீவிரமாக செயல் படுவதைக் கவனிப்பது எனக்கு ஆர்வமான ஒன்று. எனக்குத் தெரிந்த ஒரு பெண் சமீபத்தில் ஓர் ஆண்டில் தனது முனைவர் படிப்பை முடித்தாள் – முழு அர்ப்பணத்தோடு உழைத்தாள். நண்பர் ஒருவர் ஒருவகை கார் வாங்க எண்ணினார், எனவே அவர் தன்னுடைய இலக்கை அடையும் மட்டும் கேக்குகளைச் செய்து விற்றார், மற்றொரு விற்பனை துறையில் பணிபுரியும் மனிதன், ஒவ்வொரு வாரமும் நூறு புதிய நபர்களைச் சந்திக்க வேண்டும் என்று தேடிக் கொண்டிருக்கின்றார்.

உலகக் காரியங்களை உண்மையாய் தேடுவது நல்லது தான், ஆனால் இதையும் விட முக்கியமாகத் தேட வேண்டியது ஒன்றுள்ளது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

விரக்தியோடு, வனாந்திரத்தில் போராடிக் கொண்டிருந்த தாவீது அரசன், “தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்” (சங். 63:1) என்கின்றார். தாவீது தேவனை நோக்கி கதறும் போது, தேவன் அந்த சோர்வடைந்த அரசனின் அருகில் இருக்கின்றார், தேவன் மீது, தாவீதிற்கு இருந்த ஆழ்ந்த ஆன்ம தாகத்தை அவருடைய பிரசன்னத்தால் மட்டுமே திருப்தியாக்க முடியும். தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தில் அவரைப் பார்க்க ஆசையாயிருக்கின்றார் (வச. 2). அவரின் அன்பிற்காக ஆவலாய் காத்திருக்கின்றார் (வ.3), அவரில் உண்மையான ஆன்ம திருப்தியைக் கண்டு கொண்ட தாவீது, அவரை நாள் தோறும் போற்றுகின்றார், ஒரு திருப்தியான உணவை உண்பதைக் காட்டிலும் உண்மையான திருப்தியை அவரில் கண்டு கொண்டார் (வச. 4-5). அவர் இராச்சாமங்களிலும் தேவனுடைய வல்லமையை தியானிக்கின்றார், அவர் தரும் பாதுகாப்பையும் உதவியையும் நினைத்துப் பார்க்கின்றார் (வச. 6-7).

 நாம் தேவனை உண்மையாய் தேடும் படி, பரிசுத்த ஆவியானவர் நம்மைத் தூண்டுகின்றார். நாம் அவரின் வல்லமையையும், அன்பையும் பற்றிக் கொண்டால், அவரது உறுதியான வலது கரம் நம்மைத் தாங்கிக் கொள்ளும். ஆவியானவர் நம்மை வழிநடத்த, எல்லா நன்மைக்கும் காரணராகிய நம் தேவனை நெருங்கிப் பற்றிக் கொள்வோம்.

துக்கம் தலைகீழாக மாறியது

ஓர் ஆங்கில திரைப் படம், ஓநாய்களின் உணர்வுகளையும், செயல் பாடுகளையும் குறித்து காட்டுகின்றது. அவை மகிழ்ச்சியாக இருக்கும் போது தங்களின் வாலை ஆட்டும், முரட்டுத் தனமாக விளையாடும். ஆனால் அதன் கூட்டத்தில் ஓர் ஓநாய் மரித்தால் அவை தங்கள் வாலைத் தொங்கவிட்டுக் கொண்டு, கவலை தோய் ந்த குரலில் ஊளையிடும்.

துக்கம் என்பது ஒரு வலிமையான உணர்வு. அதை நம்முடைய உறவினரின் மரணத்தின் போதோ அல்லது நம்பிக்கையை இழந்த வேளைகளிலோ நாம் அனைவருமே அநுபவித்திருப்போம். மகதலேனா மரியாள் இதை அநுபவித்தாள். அவள் கிறிஸ்துவின் ஆதரவாளர்களின் கூட்டத்தில் இருந்தாள், அவள் இயேசுவோடும், அவருடைய சீஷர்களோடும் பிரயாணம் பண்ணினாள் (லூக்.8:1-3). ஆனால் அவருடைய கொடிய சிலுவை மரணம், அவர்களை இயேசுவிடமிருந்து பிரித்து விட்டது. இப்பொழுது மரியாள் இயேசுவிற்கு கடைசியாகச் செய்யக் கூடியது, அவருடைய உடலுக்கு சுகந்தவர்க்கங்கள் பூசுவது ஒன்றுதான், ஆனால் ஓய்வு நாள் குறுக்கிட்டது, வாரத்தின் முதல் நாளில் சுகந்த வர்க்கங்களோடு கல்லறையினிடத்தில் வந்த மரியாள், உயிரற்ற, நொறுக்கப் பட்ட உடலைப் பார்ப்பதற்குப் பதிலாக, உயிருள்ள இரட்சகரைப் பார்த்தாள் என்பது எப்படியிருந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பார்! அவள் தனக்கு முன்பாக நின்ற மனிதனை முதலில் அடையாளம் கண்டு கொள்ள முடிய வில்லை, ஆனால் அவர் அவளுடைய பெயரைச் சொல்லி அழைத்த போது, அவர் இயேசு என்று அறிந்துகொண்டாள். அந்த நிமிடமே அவளுடைய துக்கம் சந்தோஷமாக மாறியது. இப்பொழுது மரியாள் பகிர்ந்துகொள்ளும்படி மகிழ்ச்சியான செய்தியை வைத்திருக்கின்றாள், “நான் கர்த்தரைக் கண்டேன்!” (யோவா. 20:18) என்பதே அச்செய்தி.

இருள் சூழ்ந்த இவ்வுலகினுள் இயேசு விடுதலையையும், வாழ்வையும் கொண்டு வந்தார், அவர் எதற்காக இவ்வுலகிற்கு வந்தாரோ, அதை உயிர்த்தெழுந்ததன் மூலம் நிறைவேற்றினார், இந்த உண்மை கொண்டாடத் தகுந்தது. மரியாளைப் போன்று, நாமும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் கொண்டாடுவோம், அவர் உயிரோடிருக்கிறார் என்ற நற்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்வோம்! அல்லேலூயா!

திரையிட்டு மறைக்கப்பட்டது

என்னுடைய ஆகாய விமானம் நிற்பதற்கு சற்று முன்பு, விமானப் பணியாளர் முதல் வகுப்பைப் பிரிக்கும் திரையை நீக்கினார், நான் விமானங்களின் வெவ்வேறு பிரிவுகளுக்கிடையே இருந்த மிகப் பெரிய வேறுபாட்டை ஆச்சரியத்துடன் பார்த்தேன். முதல் வகுப்பில் பிரயாணம் செய்யும் பிரயாணிகள், அதிக காப்பீட்டுத் தொகையோடு கூடிய வசதியான இருக்கைகளையும், சற்று அகலமான கால்களை வைத்துக் கொள்ளும் இடைவெளியையும், தனிப்பட்ட சேவை வசதியையும் அநுபவிக்கின்றனர். அந்த அதிகப்படியான வசதிகளிலிருந்து நான் பிரிக்கப் பட்டிருக்கின்றேன் என்பதை அந்த திரை காண்பித்தது. வெவ்வேறு கூட்ட மக்களிடையே பிரத்தியேக பாகுபாடு காண்பித்தலை சரித்திரத்தில் அநேக இடங்களில் காண்கின்றோம். எருசலேமின் தேவாலயத்திலும் அத்தகைய ஒரு பாகுபாட்டைக் காணமுடிகின்றது, அது ஒருவரின் கொடுக்கும் திறனைச் சார்ந்ததல்ல. யூதர்கள் அல்லாத ஜனங்கள், ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் தான் ஆராதிக்க அனுமதிக்கப் படுகின்றனர். இதற்கு அடுத்து வருவது பெண்களுக்கான பிரகாரம், அதில் மிக அருகில் இருப்பது ஆண்களுக்கான பகுதி. கடைசியாக மகா பரிசுத்த ஸ்தலம் என்றழைக்கப்படும் இடம், தேவன் தம்மை எப்பொழுதாகிலும் வெளிப்படுத்தும் இப்பகுதி ஒரு திரையினால் மறைக்கப்பட்டிருக்கும், இப்பகுதியினுள் அபிஷேகிக்கப் பட்ட ஆசாரியர்கள் மட்டும் ஆண்டிற்கு ஒரு முறை செல்வர் (எபி. 9:1-10).

ஆனால் இதில் ஆச்சரியம் என்னவெனில், இந்த பிரிவினைகள் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. தேவனைச் சேரும்படி தேடுபவர்களுக்கு இடையூறாக இருக்கும் எந்த தடையையும் இயேசு முற்றிலுமாக அகற்றினார் – நம்முடைய பாவங்களையும் நீக்கினார் (10:17). கிறிஸ்து மரித்தபோது தேவாலயத்தின் திரைச் சீலை இரண்டாகக் கிழிந்தது போல (மத். 27:50-51), சிலுவையில் அறையப்பட்ட அவருடைய சரீரத்தின் மூலம், தேவனுக்கும் நமக்கும் இடையேயுள்ள தடையை கிழித்தெரிந்தார். எந்த ஒரு தடையும் உயிரோடிருக்கும் நம்முடைய தேவனின் அன்பையும், மகிமையையும், விசுவாசிகள் அநுபவிக்கக் கூடாதபடிக்கு பிரிக்கவில்லை.

உறுதியாயிருத்தல்

ஏட்ரியனும், அவனுடைய குடும்பமும் வாழ் ந்த நாட்டில், இயேசு கிறிஸ்துவின் மீது அவர்களுக்கு இருந்த விசுவாசத்தின் நிமித்தம் அவர்கள் துன்பங்களைச் சகித்தனர். ஆனால் இவற்றின் மத்தியிலும் அவர்கள் கிறிஸ்துவின் அன்பைக் காட்டினர். தீவிரவாதிகள் தங்களின் பயிற்சி மையமாக பயன்படுத்தி, நொருக்கிய அந்த ஆலய வளாகத்தில் நின்றவாறு அவர், “இன்று பெரிய வெள்ளிக் கிழமை, இயேசு நமக்காகச் சிலுவையில் பாடுகளைச் சகித்தார் என்பதை நினைவு கூருகின்றோம்” என்றார், பாடுகள் என்பது விசுவாசிகள் புரிந்து கொண்ட ஒன்று. அவருடைய குடும்பம் அவ்விடத்திலேயே இருக்கும்படி தெரிந்து கொண்டது, “நாங்கள் இவ்விடத்திலேயே இன்னும் நின்று கொண்டிருக்கிறோம்” என்றார். இயேசு சிலுவையில் மரித்தபோது அருகிலிருந்த பெண்களை, இந்த விசுவாசிகளும் பின்பற்றுகின்றனர் (மாற்.15:40). அங்கு மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும் தைரியமாக அங்கிருந்தனர். ஒரு தேச துரோகி எனக் குற்றம் சாட்டப்பட்ட இயேசுவின் நண்பர்களையும், குடும்ப நபர்களையும் கூட அவர்கள் தரக்குறைவாக பேசவும், தண்டிக்கவும் கூடும். ஆயினும் அந்த பெண்கள் இயேசுவின் மீதுள்ள அன்பை அவரோடு கூட இருப்பதன் மூலம் வெளிப்படுத்தினர். “அவர் கலிலேயாவிலிருந்த போது, அவருக்குப் பின் சென்று ஊழியம் செய்துவந்த” (வ.40) அந்த பெண்கள் அவருடைய கடைசி நேர ஆழ்ந்த வேதனையின் போது, அவரோடேயிருந்தனர்.

இந்த நாளிலும் நமது இரட்சகர் நமக்காகச் செய்துள்ள மிகப் பெரிய ஈவை நாம் நினைத்துப் பார்ப்போம், அவர் சிலுவை மரணம் வரை சென்று, நமக்காக செய்த தியாகத்திற்காக, நாமும் பலவகையான சோதனைகளைச் சந்திக்கும் போது, இயேசுவுக்காக எப்படி உறுதியாய் நிற்கலாம் என்பதை மனதில் இறுத்திக் கொள்வோம் (யாக்.1:2-4). உலகெங்கும் விசுவாசிகள் கிறிஸ்துவின் பேரிலுள்ள விசுவாசத்திற்காக பாடுகளைச் சகித்ததை நினைத்துக் கொள்வோம். ஏட்ரியன் கேட்டுக் கொண்டது போல, “நீங்களும் எங்களோடு கூட ஜெபத்தில் இணைந்து கொள்ள முடியுமா?”

நீ செல்லும் பாதையில் நிலைத்திரு

மத்திய சீனாவில், நான் லீ போ வைப் பின்தொடர்ந்து, மலைகளுக்கிடையே போடப்பட்டிருந்த தளத்தின் வழியே நடந்து செல்கையில் பொழுது சாய்ந்து விட்டது. இதற்கு முன்பாக நான் இந்தப் பாதை வழியே சென்றதில்லை, எனக்கு முன்பாக ஒரு அடி தொலைவு தான் என்னால் பார்க்க முடிந்தது, என்னுடைய இடது புறத்தில் எவ்வளவு ஆழத்திற்கு பள்ளம் உள்ளது என்பதையும் என்னால் காணமுடியவில்லை. நான் மூச்சு வாங்கியவனாய், லீயோடு ஒட்டிக்கொண்டேன். நாங்கள் எங்கு செல்கின்றோம், அல்லது எவ்வளவு நேரம் ஆகும் என்பதையெல்லாம் அறியாதவனாய், என்னுடைய நண்பனையே நம்பிச் சென்றேன்.

எதிலும் சந்தேகப்படும் சீஷனான தோமாவின் நிலைமையில் நான் இருந்தேன். இயேசு தன்னுடைய சீஷர்களிடம், தான் அவர்களுக்கு ஓர் இடத்தை ஆயத்தப்படுத்தப் போவதாகத் தெரிவித்தார். “நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள்” (யோவா. 14:4) என்பதாகத் தெரிவித்தார். உடனே தோமா விவாதத்துக்குரிய ஒரு கேள்வியை எழுப்பினான். “ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை எப்படி நாங்கள் அறிவோம்?” என்றான்.

இயேசு உடனடியாக அவர்களை எங்கு அழைத்துச் செல்கின்றார் என்பதை அவனுக்கு விளக்கி, அவனுடைய சந்தேகத்தைத் தீர்க்க முற்படவில்லை. ஆனால் அவர் தன் சீஷர்களிடம், அவரே அவர்களுக்கு வழியாக இருப்பதாக உறுதியளித்தார். அதுவே அவர்களுக்குப் போதுமானது.

நமக்குள்ளும் எதிர்காலத்தைக் குறித்து கேள்விகள் எழலாம். நமது பிற்காலத்தில் என்ன நடக்கும் என்பதை ஒருவரும் அறியோம். வாழ்க்கை முழுவதும் நெழிவுகளாகத்தான் உள்ளது, நமக்கு எதிரே வருவதை நம்மால் காணமுடியவில்லை. அது சரிதான், ஆனால் நாம் இயேசுவை அறிந்துகொண்டோமேயானால், அவரே நமக்கு “வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்”(வ.6) என்கின்றார்.

அடுத்து என்ன வரும் என்பதை இயேசு அறிவார், அவர் நம்மிடம் கேட்பதெல்லாம் நாம் அவருக்கு மிக நெருக்கமாக நடக்க வேண்டும் என்பதே.