மக்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்றும்படி, அர்ப்பணத்தோடு, தீவிரமாக செயல் படுவதைக் கவனிப்பது எனக்கு ஆர்வமான ஒன்று. எனக்குத் தெரிந்த ஒரு பெண் சமீபத்தில் ஓர் ஆண்டில் தனது முனைவர் படிப்பை முடித்தாள் – முழு அர்ப்பணத்தோடு உழைத்தாள். நண்பர் ஒருவர் ஒருவகை கார் வாங்க எண்ணினார், எனவே அவர் தன்னுடைய இலக்கை அடையும் மட்டும் கேக்குகளைச் செய்து விற்றார், மற்றொரு விற்பனை துறையில் பணிபுரியும் மனிதன், ஒவ்வொரு வாரமும் நூறு புதிய நபர்களைச் சந்திக்க வேண்டும் என்று தேடிக் கொண்டிருக்கின்றார்.

உலகக் காரியங்களை உண்மையாய் தேடுவது நல்லது தான், ஆனால் இதையும் விட முக்கியமாகத் தேட வேண்டியது ஒன்றுள்ளது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

விரக்தியோடு, வனாந்திரத்தில் போராடிக் கொண்டிருந்த தாவீது அரசன், “தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்” (சங். 63:1) என்கின்றார். தாவீது தேவனை நோக்கி கதறும் போது, தேவன் அந்த சோர்வடைந்த அரசனின் அருகில் இருக்கின்றார், தேவன் மீது, தாவீதிற்கு இருந்த ஆழ்ந்த ஆன்ம தாகத்தை அவருடைய பிரசன்னத்தால் மட்டுமே திருப்தியாக்க முடியும். தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தில் அவரைப் பார்க்க ஆசையாயிருக்கின்றார் (வச. 2). அவரின் அன்பிற்காக ஆவலாய் காத்திருக்கின்றார் (வ.3), அவரில் உண்மையான ஆன்ம திருப்தியைக் கண்டு கொண்ட தாவீது, அவரை நாள் தோறும் போற்றுகின்றார், ஒரு திருப்தியான உணவை உண்பதைக் காட்டிலும் உண்மையான திருப்தியை அவரில் கண்டு கொண்டார் (வச. 4-5). அவர் இராச்சாமங்களிலும் தேவனுடைய வல்லமையை தியானிக்கின்றார், அவர் தரும் பாதுகாப்பையும் உதவியையும் நினைத்துப் பார்க்கின்றார் (வச. 6-7).

 நாம் தேவனை உண்மையாய் தேடும் படி, பரிசுத்த ஆவியானவர் நம்மைத் தூண்டுகின்றார். நாம் அவரின் வல்லமையையும், அன்பையும் பற்றிக் கொண்டால், அவரது உறுதியான வலது கரம் நம்மைத் தாங்கிக் கொள்ளும். ஆவியானவர் நம்மை வழிநடத்த, எல்லா நன்மைக்கும் காரணராகிய நம் தேவனை நெருங்கிப் பற்றிக் கொள்வோம்.