வகை  |  odb

நிலவைப் படைத்தவர்

விண்வெளி வீரர்கள், தங்களின் விண்வெளிக்கலத்தின் ஈஹிள் என்ற பகுதியை நிலவின் அமைதி கடல் பகுதியில் இறக்கிய போது, நீல் ஆம்ஸ்ராங், “மனிதன் எடுத்து வைக்கும் ஒரு சிறிய எட்டு, மனிதகுலத்திற்கு ஓர் இராட்சத எட்டு ஆகும்” என்றார். அவர் தான், நிலவில் நடந்த முதல் மனிதன் ஆவார்.  இவரைத் தொடர்ந்து மற்ற விண்வெளி வீரர்கள் நிலவில் காலடிவைத்தனர், அவர்களில் அப்பொல்லோவின் கமாண்டர் ஜெனி செர்னன் என்பவரும் ஒருவர். “நான் அங்கேயிரு   ந்தேன், பூமியே நீ அங்கே இயங்கிக் கொண்டிருக்கின்றாய், நான் வியப்பில் மூழ்கின்றேன், ……இது ஏதோ ஒரு விபத்தில் ஏற்பட்டதாக இருக்க முடியாது, அது எத்தனை அழகாக இருக்கின்றது!” என்று செர்னன் கூறினார். மேலும், “ உன்னையும், என்னையும் காட்டிலும் பெரியவர் ஒருவர் இருக்க வேண்டும்” என்றார். ஆழமான வழிமண்டலத்திலிருந்து அவர்கள் கண்ட விசித்திரமான காட்சி, அவர்களைச் சிந்திக்க வைத்தது, பரந்து விரிந்த அண்டத்தின் அளவைப் பார்க்கும் போது, தாங்கள் எத்தனை சிறியவர்கள் என்பதை உணர்ந்தனர்.

இந்த பூமியையும் அதற்கும் மேலானவற்றையும் படைத்து, அவற்றைக் காத்து வருகின்ற தேவனுடைய மிகப் பெரிய தன்மையை வியந்து காண்கின்றார் எரேமியா தீர்க்க தரிசி. இவையெல்லாவற்றையும் படைத்தவர், தன்னுடைய ஜனங்களுக்கு அன்பையும், மன்னிப்பையும், நம்பிக்கையையும் வழங்கி, தன்னுடைய நெருக்கத்தை நமக்கு காண்பிக்கின்றார் (எரே.31:33-34). “சூரியனைப் பகல் வெளிச்சத்துக்காகவும், சந்திர நட்சத்திர நியமங்களை இராவெளிச்சத்துக்காகவும் கட்டளையிட்டவர்” (வ.35), நம்மைப் படைத்தவர், சர்வ வல்ல தேவன், தம்முடைய படைப்புகள் எல்லாவற்றையும் ஆளுகை செய்கின்றார், அவர் தன்னுடைய ஜனங்களை மீட்டுக் கொள்ள கிரியை செய்கின்றார் (வச. 36-37).

மேலே இருக்கின்ற வானங்களை அளக்கவும், கீழே இருக்கின்ற பூமியின் அஸ்திபாரங்களை ஆராயவும் நம்மால் ஒரு போதும் கூடாது. ஆனால் நாம் இந்த உலகத்தின் விரிந்த தன்மையை பார்த்து வியந்து, இவை எல்லாவற்றையும், நிலவையும் படைத்த தேவனை வியப்போடு பார்ப்போம்.

நன்கு அளக்கப் பட்டது

ஸ்டெல்லா, ஒரு நாள், ஒரு பெட்ரோல் நிரப்பும் மையத்தில் ஒரு பெண்ணைச் சந்திக்கின்றாள், அவள் தன்னுடைய வீட்டில் வங்கி அட்டையை விட்டு விட்டு வந்திருந்தாள். தன்னுடைய குழந்தையோடு, தனித்து விடப்பட்டவளாய், அங்கு வருபவர்களிடம் உதவி கேட்டாள். அந்நேரத்தில் வேலையில் இல்லாதிருந்தும், ஸ்டெல்லா அவளுக்கு ரூபாய் 500 செலவளித்தாள், அறிமுகமில்லாத அப்பெண்ணுடைய வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்ப உதவினாள். அநேக நாட்களுக்குப் பின், அவள் வீட்டிற்குத் திரும்பிய போது, ஒரு பரிசுக் கூடையில் சிறுவருக்கான விளையாட்டுப் பொருட்களும், மற்றும் சில பொருட்களும் அவளுடைய வீட்டின் தாள்வாரத்தில் காத்திருந்தது. அந்த அறியாத நபரின் நண்பர்கள், ஸ்டெல்லாவின் இரக்கத்தை, மறக்கமுடியாத கிறிஸ்மஸ் பரிசுகளின் மூலம், அவளுடைய 500 ரூபாயை ஆசிர்வாதமாக மாற்றியுள்ளனர்.

இருதயத்தை மகிழ்விக்கும் இந்த கதை, இயேசு கூறிய, “கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப் படும்” (லூக். 6:38) என்ற வார்த்தைகளை நினைவு படுத்துகின்றது.

இதைக் கேட்கும் போது, நமக்கும் கொடுக்கும் போது என்ன கிடைக்கும் என்பதில் கவனம் செலுத்த தோன்றும், ஆனால் அப்படிச் செய்யும் போது, நாம் கொடுத்தலின் உண்மையை இழந்து விடுவோம். இயேசு இந்த வார்த்தைகளைக் கூறுவதற்கு முன்பு, “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மை செய்யுங்கள், கைம்மாறு கருதாமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாய் இருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே” (வ.35) என்று கூறியுள்ளார்.

நாம் பொருட்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக கொடுப்பதில்லை; நாம் கொடுக்கின்றோம், ஏனெனில், தேவன் நம்முடைய தாராள ஈகையில் பிரியமாயிருக்கின்றார். நாம் பிறர்மேல் செலுத்தும் அன்பு, தேவன் நம்மீது வைத்திருக்கும் அன்பைக் காட்டுகின்றது.

ஏன் என்னை?

வித்தியாசமானவைகளைப் பற்றிக் கூறும் புத்தகத்தில், பத்து லட்சம் மக்களுக்கு ஒருவர் மின்னலால் தாக்கப் படுகின்றனர் என்றும், 25,000 பேருக்கு ஒருவர், தாங்கமுடியாத அதிர்ச்சி அல்லது இழப்பின் காரணமாக ஏற்படும் “உடைக்கப் பட்ட இருதயம்” என்று மருத்துவர்களால் குறிப்பிடப்படும் நோயால் பாதிக்கப் படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் வித்தியாசமான பிரச்சனைகளால் ஏற்படும் அ     நுபவங்களைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதப் பட்டுள்ளன. ஆனால் இதில் சம்பந்தப்பட்டவர் நாமாக இருந்தால், அதற்கான தீர்வு என்ன என்பதை குறித்து எதுவும் எழுதப் படவில்லை.

யோபு வித்தியாசமான யாவற்றிற்கும் சவாலாக காணப்படுகின்றான். தேவன் அவனைக் குறித்து, “உத்தமனும், சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப் போல பூமியில் ஒருவனும் இல்லை” (யோபு 1:8) என்றார். ஆனாலும் தொடர்ச்சியான, சவாலான இழப்புகளைச் சந்திக்கும்படி, யோபு தெரிந்து கொள்ளப் பட்டான் பூமியிலுள்ள அனைத்து ஜனங்களிலும், யோபுவுக்கு பதிலைத் தெரிந்து கொள்ளும்படி கெஞ்சிக் கேட்பதற்கு காரணமிருக்கின்றது. “ஏன் என்னை” என்று புரிந்து கொள்ள முடியாமல், அவல நிலையில் போராடுவதை யோபு புத்தகத்தில் அதிகாரம், அதிகாரமாகக் காண்கின்றோம்.

சொல்ல முடியாத வேதனையும், தீமையும் நம்மைத்தாக்கும் போது, எப்படி பதிலளிக்க வேண்டும் என்பதற்கான வழியை, யோபின் கதை நமக்கு காட்டுகின்றது. தேவன், நற்குணத்திற்கும், இரக்கத்திற்கும் (அதி.25) மிகச் சிறந்த எடுத்துக் காட்டாகக் கூறும் ஒருவருடைய கஷ்டங்களையும் குழப்பங்களையும் விளக்கும் போது, விதைப்பையும் அறுப்பையும் (4:7-8) குறித்து நாம் கருதுகின்ற மாற்றமுடியாத சட்டத்திற்கும் ஒரு மாற்றுக் கருத்து இருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்கின்றோம். சாத்தான் கொண்டு வருகின்ற குழப்பங்களுக்கெல்லாம் பின்கதையைத் தெரிந்து கொண்ட பின்பு (அதி.1), அதற்கு தேவன் தரும் பதிலையும் தெரிந்து கொண்ட பின்னர் (42:7-17), தேவன் ஒரு நாள் தன்னுடைய குமாரனை நம்முடைய பாவங்களை சுமக்கும்படி செய்வார் என்பதையும் தெரிந்து கொள்ளச் செய்கின்றார். யோபுவின் கதை, நமக்கு காண்பவைகளையல்ல, காணாதவற்றை விசுவாசித்து வாழும்படி கற்றுக் கொடுக்கின்றது.

தேனைக் காட்டிலும் இனிமையானது

அவருடைய பேச்சின் தலைப்பு இன அழுத்தம். ஆயினும் அவர் அமைதியாகவும், தன் உணர்வுகளைக் கட்டுப் படுத்திக் கொண்டும் இருந்தார். மிகப் பெரிய கூட்டத்திற்கு முன்பாக, மேடையில் நின்றவராய் தைரியமாகப் பேசினார், தாழ்மையோடும், கிருபையும் இரக்கமும் நிறை    ந்த வார்த்தைகளை நகைச் சுவையோடும் பேசினார். இறுக்கத்தில் இருந்த கூட்டத்தினர் தளர்ச்சியடைந்ததைக் காணமுடிந்தது. விவாதத்திற்கு உரிய இந்தப் பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று குழப்பத்தில் இருந்த மக்கள், பேச்சாளரோடு சேர்ந்து சிரித்தனர், தங்களின் உணர்வுகளையும், வார்த்தைகளையும் அமைதிப் படுத்தினர். விரும்பத்தகாத ஒரு தலைப்பையும் எப்படி சமாளிப்பது என்பதைச் செயலில் காட்டினார்.

சாலமோன் ராஜாவும் இத்தகைய ஒரு அணுகு முறையையே ஆலோசனையாகத் தருகின்றார். “இனிய சொற்கள் தேன்கூடு போல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஒளஷதமுமாகும்” (நீதி. 16:24) என்கின்றார். மேலும், “ஞானியின் இருதயம் அவன் வாய்க்கு அறிவை ஊட்டும்; அவன் உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும்” என்றும் கூறுகின்றார் (வ.23).

சாலமோனைப் போன்ற ஒரு வல்லமையுள்ள அரசன், ஏன், எவ்வாறு பேசவேண்டும் என்பதை கூறத் தன் நேரத்தைச் செலவளிக்க வேண்டும்? ஏனெனில் வார்த்தை கொல்லக் கூடியது. மேலும் சாலமோன் அரசனின் காலத்தில், தங்களின் தேசத்தைப் பற்றிய செய்தியைத் தெரிந்து கொள்ள, அரசன் செய்தியாளர்களையே சார்ந்திருக்க வேண்டியதாய் இருந்தது, ஆதலால், அமைதியும், நம்பகத்தன்மையும் உள்ள செய்தியாளர்களுக்கு அதிக மதிப்பு இருந்தது. அவர்கள் விவேகமும் ஞானமும் நிறைந்த வார்த்கைகளை  உபயோகித்தனர், எத்தகைய காரியமாக இருந்தாலும் அதிக அலட்டலும், கடுமையான வார்த்தைகளும் அவர்களிடம் காணப்படவில்லை.

நம்முடைய கருத்துக்கள் கருணையோடும், நமது சிந்தனைகள் தேவனோடு இசைந்ததாகவும் விவேகமும், இனிமையும் நிறைந்ததாகவும் இருப்பின், அது நமக்கு நன்மையே பயக்கும். இதனையே சாலமோன் “மனதின் யோசனைகள் மனுஷனுடையது; நாவின் பிரதியுத்திரம் கர்த்தரால் வரும்” என்பதாகக் கூறுகின்றார் (வச. 1).