இனிமையான அறுவடை
நாங்கள் எங்கள் புதிய வீட்டை வாங்கும்போது நிறுவப்பட்ட ஒரு திராட்சை தோட்டத்தையும் அதினோடு சுதந்தரித்துக்கொண்டோம். போதுமான அளவு குடும்பமாக நேரம் செலவளித்து தோட்டத்தை பண்படுத்தவும், நீர்பாய்ச்சவும், அதை பண்படுத்த ஆரம்பித்தோம். இறுதியில் எங்கள் முதல் அறுவடை வந்ததும் ஆர்வத்துடன் ஒரு திராட்சையை பறித்து புசித்தேன். ஏமாற்றமடையும் விதமாய் யாரும் விரும்பாத புளிப்பு நிறைந்த சுவையை உடையதாக இருந்தது. மிகவும் பிரயாசப்பட்டு பராமரித்த தோட்டத்தின் புளிப்பான அறுவடையைக்குறித்து மிகவும் எரிச்சலடைந்தேன்.
ஏசாயா 5ல் தேவனும் இதைபோல் எரிச்சலடைவதை பார்க்கிறோம். இஸ்ரவேல் தேசத்தோடே அவருடைய உறவைக்குறித்து இங்கு விவரிக்கிறது. திராட்சை தோட்டக்காரராக, "அவர் அதை வேலியடைத்து, அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, அதிலே நற்குல திராட்சச்செடிகளை நட்டு, அதின் நடுவில் ஒரு கோபுரத்தைக்கட்டி, அதில் ஆலையையும் உண்டுபண்ணி, அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று காத்திருந்தார்"
(ஏசா. 5:2). ஆனால் அவருக்கு திகைப்பூட்டும்படி, அவர் திராட்சை தோட்டமாகிய இஸ்ரவேல் தனது அநீதியும், சுயநலமுமான புளிப்பான பழங்களை தந்தது. தேவன் அந்த தோட்டத்தை அளித்து அதிலே சிலவற்றை மாத்திரம் பிரித்தெடுத்து அவைகளை வெவ்வேறு திசைகளில் சிதரப்பண்ணி, அவைகள் ஒரு நாள் நல்ல கனிகளை தருமென்று எண்ணினர்.
திராட்சைத்தோட்டத்தை மறுபடியும் இயேசு யோவான் சுவிசேஷத்தில் உவமையாக்குவதை பார்க்கிறோம். "நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்" (யோவான் 15:5). இதிலே இயேசு, விசுவாசிகளாகிய நாம் கொடியாகவும், திராட்சச்செடியாகிய அவரில் இணைந்திருக்கும்படி நம்மை அழைக்கிறார். நாம் ஜெபத்துடன் ஆவிக்குள்ளவர்களாய் இயேசுவுக்குள் இணைந்திருந்தால் ஆவியின் கனிகளில் முதன்மையும் இனிமையுமான அன்பை நாம் சுலபமாக அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

இந்த வீட்டை இடித்து போடுங்கள்
அமெரிக்காவில், இடிமான பணியிலுள்ள நபர்கள் ஒரு தவறான வீட்டை இடித்துப்போட்டார்கள். விசாரணையில் அருகிலுள்ள வீட்டின் சொந்தக்காரர் தனது வீடு இடிக்கப்படாமல் காப்பாற்றுவதற்காக தன் முகவரியை பக்கத்து வீட்டில் மாற்றிவிட்டார் என்பது தெரியவந்தது.
ஆனால் இதற்கு எதிர்மாறாக இயேசு தன் சொந்த வீடு இடிக்கப்படும்படியான பணியில் தம்மை அர்பணித்தவராய் இருந்தார். “இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள்; மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார்” (வ. 19). இயேசு இந்த வார்த்தைகளை சொன்னதும் அதை கேட்டவர்கள் எவ்வளவு குழப்பம் அடைந்திருப்பார்கள் என்று சிந்தித்து பாருங்கள், குறிப்பாக அவரின் சிஷர்கள். அதை கேட்ட அந்த தலைவர்கள் கோபத்துடன் "இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம் சென்றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள்" (வச. 20). ஆனால் இயேசுகிறிஸ்து தம் சரீரமாகிய சபையை குறிப்பிடுகிறார் என்று அவர்கள் யாரும் அறியவில்லை.
நாம் நமக்கும் மற்றவர்களுக்கும் செய்யும் அக்கிரமங்களுக்காக, அவர் பரிகாரியாகும்பொருட்டு இவ்வுலகத்திற்கு வந்திருந்தார் என்று யாருக்கும் புரியவில்லை.
"மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால்" (வச. 25) என்கிற வசனத்தின் நிமித்தமாக நம்மைவிட தனிப்பட்டமுறையில் அவர் நம்மை நன்றாக அறிந்திருந்தார். அவர் அற்புதங்களை பார்த்து அவரை விசுவாசித்த மனிதர்களை அவர் நம்பி இணங்கவில்லை. அன்று முதல் இன்று வரை அவர் அன்பும் நன்மைகளும் நமக்கு புரியும்படியாக பொறுமையாக வெளிப்படுத்திவருகிறார். சிலநேரங்களில் நாமும் அவர் சொல்லும்போது அவரை புரிந்து கொள்வதில்லை.

நோக்கத்துடன் இளைப்பாறுவது
ரமேஷுக்கு இயேசுகிறிஸ்துவைப்பற்றி மற்றவர்களிடம் பகிருவது மிகவும் பிடித்த ஒரு காரியம். தன்னுடன் வேலை செய்பவர்களிடம் தைரியமாக பேசுவார். ஒவ்வொரு மாதமும், ஒரு வார கடைசியில் தன்னுடைய கிராமத்துக்கு சென்று வீடுவீடாக சுவிசேஷ ஊழியம் செய்து வந்தார். அவருடைய உற்சாகம் மற்றவர்களையும் உற்சாக படுத்தியது.
ரமேஷ் தன்னுடைய எல்லா வார விடுமுறைகளிலும் மற்றும் அநேக மாலை வேளைகளிலும் சுவிசேஷத்தை பிரசங்கித்து வந்தார். தன் மனைவியும் குழந்தைகளும் அவர் இல்லாத சமயங்களில் அவரை தேடினார்கள். ரமேஷ் தன் குடும்பத்துடன் நேரம் செலவழிக்கும் போது தேவையில்லாமல் நேரத்தை வீணாக்குகிறார் என்று நினைத்து சோர்வடைந்தார்.அவர் நேரத்தை வீணாய் செலவளிக்காதபடி எப்போதும் முயற்சி செய்தார். அவருக்கு விளையாடவோ அல்லது சிறிய பேச்சுகளுக்கோ இடமில்லை.
மற்றவர்களுக்கு ஏற்பட்ட இந்த இடையூறு காலப்போக்கில் தம்முடைய மனைவியின் உண்மையுள்ள வார்த்தைகள் மூலமாகவும், தன் நண்பர்களின் ஆலோசனையினாலும் மற்றும் சில வித்தியாசமான வசனங்கள் மூலமாய் அவருக்கு உணர்த்தப்பட்டது. நீதிமொழிகள் 30: 24 கூறப்படுகிற அற்பமாக எண்ணப்படுகிற எறும்பு,வெட்டுக்கிளிகள், குழிமுசல்கள் மற்றும் பிரமிப்பூட்டும் விதமாக "தன் கைகளினால் வலையைப் பின்னி, அரசர் அரமனைகளிலிருக்கிற சிலந்திப் பூச்சியுமே" (வச. 28)
இப்படிப்பட்ட சாதாரணமான காரியங்கள் ஏன் வேதாகமத்தில் குறிப்பிட வேண்டும் என ரமேஷ் சிந்தித்தான். அரண்மனையின் சிலந்தியை கவனித்து பார்க்கும் அளவுக்கு நேரம் யாருக்கு இருந்தது?, ஒருவேளை தனது வேலை நேரத்தையும் அதன் இளைப்பாறும் நேரத்தின் முக்கியத்துவத்தை தேவன் உணர்த்தும்படி இதை குறிப்பிட்டு இருக்கலாம் என்று நினைத்தார். சில நேரங்களில் நாம் சிலந்திகளை கவனிப்பதிலும், நம் குழந்தைகளுடன், குடும்பத்துடன் செலவழிப்பதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். தேவன் தாமே நமக்கு வேலை செய்வதற்கும், அவருக்கு பணிவிடை செய்வதற்கும், இளைப்பாறுவதற்கும் நேரம் சரியாக ஒதுக்கும்படி ஞானம் தருவராக.

மரங்களுடன் மெல்ல பேசுபவர்
டோனி ரிநாயுடோ வேர்ல்ட் விஷன் ஆஸ்திரேலியாவின் "மரங்களுடன் மெல்ல பேசுபவர்" அழைக்கப்பட்டார். அவர் ஒரு மிஷனரியாகவும், வேளாண்மை விஞ்ஞானியாகவும் பணியாற்றி வந்தார். 30 வருடமாக இயேசுகிறிஸ்துவை பற்றி பகிருவதிலும், அழிந்துவரும் காடுகளான ஆப்பிரிக்காவின் சாஹில் என்கிற சஹாராவின் தெற்கே உள்ளவைகளை காப்பதில் தம்மை ஈடுபடுத்திவந்தார்.
காலப்போக்கில் புதர் செடிகள் உறங்கும் மரங்கள் என்று ரிநாயுடோ கண்டுபிடித்தபின்பு, அப்புதர்களை பயன்படுத்தவும், அதை சுத்தம்பணி நீர்பாய்ச்ச ஆரம்பித்தார். இவரின் இச்செயல் மூலம் பல்லாயிரம் விவசாயிகள் ஊக்குவிக்கப்பட்டார்கள். அந்த புதர்களை காப்பதின் மூலம் மணல் அரிப்பினால் அவர்களின் அழியும் விவசாய நிலங்கள் காக்கப்பட்டன. இதன் விளைவாக நைகரிலுள்ள விவசாயிகள் தங்கள் வருமானத்தை இரு மடங்கு அதிகரித்தார்கள். அதுமாத்திரம் அல்ல ஒரு வருடத்தில் 23 லட்சம் மக்களுக்கு அதிகமாக ஆகாரம் அளிக்க முடிந்தது.
இந்த விவசாயத்தை சிருஷ்டித்த இயேசு, இதே போன்ற விவசாய தந்திரோபாயங்களை பற்றி யோவான் 15ல் " நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத் தோட்டக்காரர். என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்" என்றுகூறுகிறார்
நம் ஆத்துமா உலர்ந்து போகாத படி தேவன் அனுதினமும் சுத்திகரிக்கிறார். வசனம் சொல்லுகிறதுபோல் அவருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருந்தாள் "அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்" (சங். 1: 3). அவருக்குள் நாம் ஆழமாய் நடப்பட்டால் நம் வாழ்வு புதுப்பிக்கப்பட்டு பசுமையாயிருக்கும்.

எல்லாவற்றையும் கேட்கும் தேவன்
உலகத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்ட அதிக நேரமெடுத்து போய் சேர்ந்தடைந்த அஞ்சல் 89 வருடம் கழித்து பெறுநரிடம் போய் சேர்ந்தது. 2008ஆம் ஆண்டில் யுகேவை சேர்ந்த ஒருவருக்கு, அவர் முகவரியில் குடியிருந்தவருக்கு, 1918ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட ஒரு விருந்து அழைப்பிதல் வந்தது. "ராயல் மெயில்" முழுமையாக அனுப்பப்பட்ட இந்த அஞ்சல் இத்தனை வருடம் தாமதமான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
உலகத்தின் தலைசிறந்த தொடர்புகொள்ளும் முறைகள் கூட நம்மை சில நேரங்களில் கைவிடலாம். ஆனால் வசனம் நமக்கு தெளிவாக கூறுவது என்னவென்றால் விசுவாசிகளின் ஜெபத்தை தேவன் கேட்காமல் போவதில்லை. யெகோவா தேவனுக்கும், பாகாலுக்குமுள்ள வித்யாசத்தை தெளிவாக எலியா 1 இராஜாக்கள் 18'ல் நிரூபித்தான். அங்கு உண்மையான தேவன் யார் என்று நிரூபிக்கும் பாகால் தீர்க்கதரிசிகளின் நீண்ட நேர ஜெபத்தை பார்த்து எலியா கேலி செய்தான். "உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள்; அவன் தேவனாமே, அவன் தியானத்தில் இருப்பான்; அல்லது அலுவலாயிருப்பான்; அல்லது பிரயாணம்போயிருப்பான்; அல்லது தூங்கினாலும் தூங்குவான்; அவனை எழுப்பவேண்டியதாக்கும் என்றான்" (வச. 27). அதன் பிறகு எலியா, அந்த மக்கள் விசுவாசத்திற்கு திரும்பும்படியாக தேவன் அவனுக்கு பதிலளிக்கும்படியாக ஜெபித்தான். அவர் வல்லமை மிகவும் தெளிவாக அங்கு விளங்கினது.
நம் ஜெபங்கள் எலியாவின் ஜெபத்தைபோல் உடனடியாக பதிலளிக்கப்படவில்லை என்றாலும், அவைகளை தேவன் கேட்டுகொண்டியிருக்கிறார் என்று நிட்சயித்துகொள்வோம் (சங். 34:17). பரிசுத்தவான்களுடைய ஜெபங்களை, பொற்கலசங்களிலுள்ள தூபவர்கங்களைப் போல அவர் நம் ஜெபங்களை பொக்கிஷிமாக கருதுகிறார் (வெளி. 5:8) என்று வாசிக்கிறோம். தேவன் நம் ஜெபங்களை தம்முடைய சொந்த வழியிலும், விலைமதிப்பற்ற ஞானத்தினாலும் தகுந்த சமயத்தில் பதிலளிக்கிறார். பரலோகத்துக்கு அனுப்பின எந்த கடிதமும் தொலைந்துபோவதில்லை.