
துணிச்சலான முடிவு
ஜான் ஹார்ப்பரும் தனது ஆறு வயது மகளும் டைட்டானிக் கப்பலில் அடி எடுத்து வைக்கும் போது என்ன நிகழப்போகிறது என்று அவர்களுக்கு தெரியவில்லை. ஹார்ப்பர் இயேசுவில் அன்புகூருவதிலும், மற்றவர்களுக்கு அவர் அன்பை அறிவிப்பதிலும் ஆர்வமாயிருந்தார். கப்பல் பனிப்பாறையை மோதியவுடன் தனது மகளை ஒரு உயிர்காப்பு படகின் மீது ஏற்றி விட்டு தம்மால் முடிந்தவறை மற்றவர்களை காப்பாற்ற சென்றார். மிதவைச்சட்டையை (லைப் ஜாக்கெட்) மற்றவர்களுக்கு கொடுக்கும் போது "பெண்களையும், குழந்தைகளையும், இரட்சிக்க படாதவர்களையும் படகில் ஏற்றுங்கள் " என்று கூச்சலிட்டுக் கொண்டே சென்றார். ஹார்ப்பர் தம் கடைசி மூச்சு வரை இயேசுவை பற்றி பகிர்ந்து தம் மூச்சை விட்டார்.
இதே போல் இரண்டாயிரம் வருடத்திற்கு முன் ஒருவர் நாம் நித்தியமாய் வாழும்படி தம் ஜீவனை ஒப்புக்கொடுத்தார். இது அவர் ஒரு நாளில் எடுத்த முடிவல்ல. அவர் நம் பாவங்களுக்கு பரிகாரமாக மரிப்பது அவரது லட்சியமாக இருந்தது. யூத தலைவர்களிடம் அவர் பேசும்போது "ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்" (வச. 10:11,15,17,18) என்று பலமுறை கூறினார். இவைகளை அவர் சொன்னது மாத்திரம் அல்லாமல் அதன்படி வாழ்ந்து சிலுவையில் கொடூரமான மரணத்தை ஏற்றுக் கொண்டார். பரிசேயருக்கும், ஜான் ஹர்பெர்க்கும், நமக்கும் "ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்" (வ.10) என்றார்.

தவறான நம்பிக்கை
சில வருடங்களுக்கு முன்பு எனது மருத்துவர் என்னுடைய உடலின் நிலையை பார்த்து நான் அனுதினமும் உடற்பயிற்சி செய்து எனது உணவு முறையை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். அவரது வார்த்தைகளின்படி நான் தொடர்ந்து பின்பற்றி வந்தேன். அதின் பலனாக எனது இடையும் கொழுப்புச்சத்தும் நன்றாக குறைந்து வந்தது. ஆனால் அதோடு கூட எனது சுய பெருமையும் அதிகரித்தது. மற்றவர்களுடைய சாப்பாடு குறைபாடுகளை பார்த்து அவர்களை தாழ்வாக எண்ணத் தொடங்கினேன்.
நற்பலனை தரும் ஒரு காரியத்தை நாம் கற்றுக் கொண்டதின் நிமித்தம் நம்மை அறியாமலே மற்றவர்களை குறைவாக சிந்திக்க தொடங்குகிறோம். இதினிமித்தம் நம்மை குறித்து பெருமை படுகிறோம். மனித இயல்பானது நாம் நினைத்ததை நன்மையென்றும், அதை நியாயப்படுத்துவதும் வழக்கம் என்று தோன்றுகிறது .
பிலிபியர்களுக்கு பவுல் இந்த செயலை குறித்து எச்சரித்திருக்கிறார். அங்குள்ள பலர் தங்கள் கலாச்சாரத்தை குறித்தும், அவர்கள் மதத்தை குறித்தும், ஜாதியை குறித்தும் பெருமை பாராட்டி கொண்டிருந்தார்கள். பவுலோ தனக்கு பெருமை பாராட்ட பல விஷயங்கள் உண்டென்று "மாம்சத்தின் மேல் நம்பிக்கை வைக்க வேண்டுமானால் நானும் வைக்கலாம் "(வ. 4). எனினும் தேவனை அறிகிற அறிவுக்கு ஒப்பாக குடும்ப பெருமைகளையும் பாரம்பரியத்தையும் அவர் குப்பை என்று எண்ணினார். இயேசுவே நமக்கு விடுதலையும், மீட்பும் அவரைப்போல் மாறவும் பெலன் தருகிறார். எந்த பெருமையும் நமக்கு தேவையில்லை.
பெருமை தவறானது, அதிலும் பொய்யான காரியத்தின் மேல் பெருமை கொள்வதும், நம்பிக்கை வைப்பது அதை விட பரிதபிக்கக்கூடியது. தவறான நம்பிக்கையிலிருந்து வெளியே வந்து நமக்காய் தம்மை கொடுத்த தேவனிடம் நாம் ஐக்கியம் கொள்வோம்.

நம்மால் முடியுமா?
ரெஜியின் வீட்டு தோட்டத்தில் பெரிய மரம் ஒன்று இருந்தது. அது அவர்களுக்கு வெயில் காலத்தில் நிழலாகவும் தங்கள் வீட்டுக்கு அடைக்களமாகவும் இருந்ததால் குடும்பத்தார் அனைவருக்கும் மிகவும் பிடித்த மரம் அது. ஒரு முறை அங்கு வந்த பெரும் புயலால் அங்கும் இங்கும் அசைந்து வேரோடே விழும் நிலையில் இருந்தது. புயலையும் பாராமல் ரெஜியும் தன் மகனும் மரத்தை காப்பாற்றும்படி விரைந்து சென்று, நாற்பது கிலோ எடை கொண்ட ஒரு இரும்பை வைத்து அதை தாங்கி பிடிக்க செய்தார்கள் அது மட்டும் அல்லாமல் தங்கள் பெலன் கொண்டும் அதை விழாதபடி தாங்கி பிடித்தார்கள். ஆனால் அந்த புயல் அவர்களை விட மிகவும் பலமாய் இருந்தது.
தாவீதுக்கு இதே போன்ற ஒரு புயல் வந்த போது தேவனே அவருடைய பெலனாயிருந்தார் (வ. 2). தாவீது இந்த சங்கீதத்தை தன் வாழ்க்கை உடைந்து போகும் நிலையில் எழுதினார் என்று நம்பப்படுகிறது. தன்னுடைய சொந்த மகனே சிங்காசனத்திற்காக அவரை எதிர்த்து நின்ற பொது அந்த மரத்தை போல அவரும் மிகவும் பெலவீன நிலையில் காணப்பட்டார் (2 சாமுவேல் 15). தேவன் அமைதியாய் இருந்ததால் மரித்து விடுவோமோ என்ற பயம் அவருக்குள் இருந்தது (சங். 28:1). "என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும் (வச. 2)". தன் மகனோடு தாவீது ஒப்புரவாகவில்லை, ஆனாலும் தேவன் தாவீதின் பெலனாய் இருந்தார்.
நமக்கு மோசமான சம்பவங்கள் நடந்து விட கூடாதென்று நாம் எவ்வளவு பிரயாசப்பட்டாலும், ஒரு கட்டத்தில் நாம் தவறிவிடுகிறோம். நம் கன்மலையான கர்த்தரை நாம் எப்போதும் நோக்கி கூப்பிடலாம் என்று வசனம் நம்மை ஊக்குவிக்கிறது. நாம் பெலவீனர்களாய் இருக்கு பொது அவர் நம் மேய்ப்பராயிருந்து நம்மை உயர்த்துவார் (வச. 8-9).

கொடுக்கப்பட்ட காலணி
ஒரு இளம் பள்ளி மாணவன் தனது ஓட்ட பந்தயத்திற்கு தன்னை தயார் படுத்தி கொண்டிருக்கும் வேளையில். அவனது வீடு தீவிபத்தினால் நாசமானது. அதினிமித்தம் அவனால் அந்த பந்தயத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. அவன் இந்த பந்தயத்தில் பங்கு பெறாததினால் அவனுடைய நாலு வருடபயிற்சி வீணாக போய்விட்டது. அதுமட்டுமல்ல இதில் பங்கு பெறவில்லையென்றால் அடுத்த கட்டமான மாநில அளவில் நடைபெறும் போட்டியிலும் பங்குபெற முடியாது.
மாவட்ட உடற்பயிற்சி கழகம் அந்த மாணவனின் நிலைமையை கேள்விப்பட்டு, ஆலோசனை செய்து அவனுக்கென்று தனியாக ஒரு தேர்ச்சி ஒட்டப்பந்தயத்தை ஏற்படுத்தினார்கள். ஆனால் இந்த தேர்ச்சியானது சற்று கடினமான மைதானத்தில் ஓடவேண்டியதாய் இருந்தது. அதுமாத்திரமல்ல தன்னுடைய ஓட்டப்பந்தய காலணி தீயில் அழிந்துபோனதால் சாதாரண காலணிகளை கொண்டு ஓடவேண்டியதாய் இருந்தது. ஆச்சரியப்படும் விதமாய் பந்தயநாளிலே அவனோடுகூட ஓடும் நபர்கள் ஒரு புதிய ஓட்டப்பந்தய காலணிகளை அவங்கென்று கொடுத்தார்கள்.
அந்த போட்டியாளர்களுக்கு காலணிகளை எடுத்துக்கொண்டு வர வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. அவனுக்கு காலனி இல்லாததை அவர்களுக்கு ஆதாயமாக எடுத்திறுக்கலாம். ஆனால் அவர்களோ அன்போடு உதவிசெய்தார்கள். பவுல் நம்மையும் அதைபோல் தயவென்னும் நற்குணம் உடையவர்களாய் "அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள்" (கலா 5:13) என்று வலியுறுத்துகிறார். நாம் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல் இருக்கும்படி பரிசுத்த ஆவியை சார்ந்திருப்போமானால் நம்மை சுற்றியிருப்பவர்களிடம் அன்பாய் இருக்கலாம்.
