ஜெபத்தோடே போராடுவது
யாரோ ஒரு புதிய ஏற்பாட்டுப் புத்தகத்தை கொடுத்தப் பிறகு டென்னிஸின் வாழ்க்கை மாற்றப்பட்டது. அதை வாசித்தல் அவரை கவர்ந்தது. அது அவருடைய நிலையான துணையாக மாறியது. ஆறு மாதங்களுக்குள், அவரது வாழ்க்கையில் இரண்டு வாழ்வை மாற்றும் நிகழ்வுகள் நிகழ்ந்தன. அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட அவர் இயேசுவின்மேல் நம்பிக்கை வைத்தார் மற்றும் கடுமையான தலைவலியினிமித்தம் அவருக்கு மூளையில் கட்டியிருப்பது கண்டறியப்பட்டது. தாங்கமுடியாத வலியின் காரணமாக அவர் படுக்கையிலேயே இருந்து வேலை செய்ய முடியாமல் கிடந்தார். தூக்கமில்லாத ஒரு இரவில் அவர் தேவனை நோக்கி கூப்பிட்டார். இறுதியாக காலை 4.30 மணிக்கு தூக்கம் வந்தது.
உடல் ரீதியான வலிகள் நம்மை தேவனிடம் கூக்குரலிடச் செய்யலாம், ஆனால் மற்ற துன்பகரமான வாழ்க்கை சூழ்நிலைகளும் அவரிடம் ஓட நம்மைத் தூண்டுகின்றன. டென்னிஸின் போராட்ட இரவுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம்பிக்கை இழந்த யாக்கோபு தேவனை எதிர்கொண்டார் (ஆதி. 32:24). யுhக்கோபுக்கு அது ஒரு தொடர்ந்து கொண்டிருக்கும் குடும்ப பிரச்சனை. தன் சகோதரன் ஏசாவுக்கு எதிராக அநீதி இழைத்தார். (ஆதி. 27) ஏசா உடனடியாக பழிவாங்கக்கூடும் என்று பயந்தார். இந்தக் கடினமான சூழ்நிலையில் தேவனுடைய உதவியை நாடின யாக்கோபு தேவனை நேருக்கு நேர் சந்தித்த (32:30) பிறகு ஒரு மாற்றப்பட்ட மனிதனாக வெளிப்பட்டார்.
டென்னிஸ{ம் அவ்வாறே செய்தார். ஜெபத்தில் தேவனோடு மன்றாடின பிறகு, படுத்த படுக்கையில் கிடந்த டென்னிஸ் எழுந்து நிற்க முடிந்தது மற்றும் மருத்துவரின் பரிசோதனையில் கட்டியின் அறிகுறிகள் காணப்படவில்லை.
தேவன் எப்போதும் நம்மை அற்புதமாக குணப்படுத்த தெரிந்தெடுப்பதில்லை என்றாலும், அவர் நம்முடைய ஜெபத்தைக் கேட்டு நம்முடைய சூழ்நிலைக்கு தக்கதாக நம்முடைய தேவைகளை சந்திப்பார் என்று நம்புகிறோம். நம்முடைய விரக்தியில் நாம் உண்மையான ஜெபங்களை ஏறெடுக்கிறோம். அதன் முடிவுகளை அவரிடம் விட்டுவிடுகிறோம்.

காலை மூடுபனி
ஒரு நாள் காலையில் என் வீட்டின் அருகிலுள்ள குளத்தைப் பார்வையிட்டேன். நான் ஒரு தலைகீழான படகிண்மேல் உட்கார்ந்து, ஒரு மென்மையான மேற்கு காற்று நீரின் மேற்பரப்பு முழுவதிலும் காணப்பட்ட மூடுபனியை துரத்துவதைப் பார்த்து யோசித்துக்கொண்டிருந்தேன். மூடுபனி வட்டமிட்டுச் சுழன்றது. சிறிய சூறாவளிகள் எழுந்து அடங்கின. அதற்குப் பின்னர் சூரிய ஓளி மேகங்களின் வழியாக சென்றதினால் மூடுபனி மறைந்தது.
இந்தக் காட்சி எனக்கு ஆறுதல் அளித்தது, ஏனென்றால் நான் சற்று முன் வாசித்த 'உன் மீறுதல்களை மேகத்தைப் போலவும், உன் பாவங்களை கார்மேகத்தைப் போலவும் அகற்றிவிட்டேன்" (ஏசா. 44:22) என்ற வசனத்துடன் இணைத்துப் பார்த்தேன். தொடர்ச்சியான பாவ எண்ணங்களிலிருந்து என்னை திசைதிருப்ப வேண்டி, நான் அந்த இடத்திற்கு சென்றேன். அந்த பாவங்களை நான் அறிக்கை செய்தாலும், நான் மீண்டும் அந்தப் பாவத்தை செய்யும்போது தேவன் என்னை மன்னிப்பாரா என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
அன்று காலையில், ஆம் என்ற பதில் எனக்குத் தெரிந்தது. இஸ்ரவேலர் விக்கிரக ஆராதனை பிரச்சனையுடன் போராடிக்கொண்டிருக்கும்போது, தேவன் தம்முடைய தீர்க்கதரிசியான ஏசாயாவின் மூலம் அவர்களுக்கு கிருபை பாராட்டினார். பொய்யான தெய்வங்களை பின்பற்றி போவதை நிறுத்தும்படி கூறினபோதும், 'நான் உன்னை உருவாக்கினேன். நீ என் தாசன்... நீ என்னால் மறக்கப்படுவதில்லை" (வச. 21) என்று சொல்லி தேவன் அவர்களை மீண்டும் தம்மிடம் அழைத்தார்.
நான் அப்படி முழுமையாக மன்னிப்பை புரிந்துக்கொள்ளவில்லை, ஆனால் தேவனின் கிருபை மட்டுமே நம் பாவத்தை முழுவதுமாக நீக்கி, அதிலிருந்து நம்மை குணமாக்கும் என்பதை புரிந்துக்கொண்டேன். அவருடைய கிருபை முடிவில்லாதது, அவரைப்போல தெய்வீகமானதும், நமக்கு தேவையான போதெல்லாம் அது கிடைக்கிறது. இதற்காக அவருக்கு நன்றியுள்ள வனாயிருக்கிறேன்.

உத்தம ஊழியக்காரன்
கி.மு. 27 ல், ரோமானிய ஆட்சியாளரான ஆக்டேவியன், தனது அதிகாரங்களை ஒப்படைக்க செனட் முன் வந்தார். அவர் ஒரு உள்நாட்டுப் போரை வென்று, உலகின் அந்த பிராந்தியத்தின் ஒரே ஆட்சியாளராகி ஒரு பேரரசரைப் போல செயல்பட்டு வந்தார். ஆயினும், அப்படிப்பட்ட அதிகாரம் சந்தேகத்துக்குரியதாக பார்க்கப்பட்டதாக அவர் அறிந்திருந்தார். அதனால், ஆக்டேவியன் தனது அதிகாரங்களை செனட்டுக்கு முன்பாக ஒப்படைத்து, நியமிக்கப்பட்ட ஒரு அதிகாரியாக செயல்பட சாபதமெடுத்தார். அவர்களின் பதில் ? ரோமானிய செனட், ஆட்சியாளரை ஒரு குடிமைக் கிரீடத்தால் முடிசூட்டி, ரோமானிய மக்களின் சேவைக்காரன் என்று பெயரிட்டு கௌரவித்தது. அவருக்கு அகஸ்டஸ் - “மகா பெரியவர்” – என்ற பெயரும் வழங்கப்பட்டது.
இயேசு தன்னை வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்ததைக் குறித்து பவுல் எழுதுகிறார். அகஸ்டஸ் தனது அதிகாரங்களை ஒப்படைப்பதைப் போலவே செயல்பட்டார். ஆனால் அதை தனது சொந்த லாபத்திற்காக செய்துக் கொண்டிருந்தார். இயேசு “ மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரயபரியந்தமும் கீழ்படிந்தவராகித், தம்மைத் தாமே தாழ்த்தினார். (பிலிப்பியர் 2:8). ரோமானிய சிலுவையில் மரணம் என்பது அவமானம் மற்றும் அவமானத்தின் மோசமான வடிவமாகும்.
இன்று மக்கள் “ஊழியத் தலைமையை” ஒரு நல்லொழுக்கமாகப் புகழ்வதற்கு காரணம் இயேசுவே. தாழ்மை ஒரு கிரேக்க மற்றும் ரோமானிய நல்லொழுக்கம் அல்ல. இயேசு நமக்காக சிலுவையில்
மரித்ததால், அவரே உண்மையான ஊழியக்காரன். அவரே உண்மையான இரட்சகர்.
நம்மை இரட்சிக்கும்படியாக கிறிஸ்து ஒரு அடிமையானார். உண்மையிலேயே மிகப்பெரிய பரிசாகிய, இரட்சிப்பு மற்றும் நித்திய ஜீவன், இவைகளை நாம் பெற்றுக்கொள்ளும்படியாக அவர் “தம்மைத் தாமே வெறுமையாக்கினார்”.

தேவனின் வழிகாட்டுதல்
அவர்களது வங்கி தற்செயலாக 90 லட்சம் ரூபாயை தங்கள் கணக்கில் டெபாசிட் செய்த போது, அந்த தம்பதியினர் பொருட்கள் வாங்குவதற்கு தீவிரமாகிவிட்டனர். அவர்கள் கடன்களை அடைத்தது மட்டுமல்லாமல் ஒரு சொகுசு கார், ஒரு புதிய வீடு, இரண்டு நான்கு சக்கர வாகனங்களையும் வாங்கினர். டெபாசிட் பிழையைக் கண்டறிந்த வங்கி, தம்பதியரிடம் பணத்தை திருப்பித்தருமாறு கேட்டனர். துரதிர்ஷ்;டவசமாக அந்த கணவனும் மனைவியும் ஏற்கனவே பணத்தை செலவழித்து விட்டனர். பின்னர் அவர்கள் மீது மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. தம்பதியினர் உள்ளூர் நீதிமன்றத்திற்கு வந்தபோது ஒரு நிருபரிடம் 'நாங்கள் சில மோசமான சட்ட ஆலோசனைகளை எடுத்தோம்" என்று கூறினார். மோசமான ஆலோசனைகளை பின்பற்றுவதும் (தங்களுடையது அல்லாதவைகளை செலவிடுவதும்) தங்களுடைய வாழ்க்கையில் குழப்பத்தை உண்டுபண்ணும் என்று கற்றுக்கொண்டனர்.
இதற்கு நேர்மாறாக, சங்கீதக்காரன், வாழ்க்கையில் குழப்பத்தை தவிர்க்க உதவும் புத்திசாலித்தனமான ஆலோசனைகளை பகிர்ந்துக்கொண்டார். நேர்மையான நிறைவேற்றத்தைக் கண்டவர்கள் - ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்- தேவனை சேவிக்காத மக்களின் ஆலோசனைகளின்படி செல்ல மறுக்கின்றனர் (சங்கீதம் 1:1). விவேகமற்ற, தேவபக்தியற்ற ஆலோசனைகள் நாம் எதிர்பாராத ஆபத்துகளையும் மிகப்பெரிய விளைவுகளையும் ஏற்படுத்தும் என்று அறிவார்கள். மேலும், அவர்கள் வேதாகமத்தின் மாறாத மற்றும் அசைக்கமுடியாத சத்தியத்தில் பிரியமாயிருப்பதும், ஆர்வமாய் தியானிப்பதிலும் உந்தப்படுகிறார்கள் (வச. 2). தேவனுடைய வழிகாட்டுதலுக்கு ஒப்புக்கொடுப்பது ஸ்திரத்தன்மை மற்றும் பலனளிப்பதற்கு வழிவகுக்கிறது என்பதை கண்டறிந்துள்ளனர் (வச. 3).
நம்முடைய தொழில், பணம், உறவுகள், மற்றும் அனேக காரியங்களில், சிறிதாயிருந்தாலும் பெரிதாயிருந்தாலும் நாம் முடிவுகளை எடுக்கும்போது, வேதாகமத்திலுள்ள தேவனுடைய ஞானத்தையும், தெய்வீக ஆலோசனைகளையும், பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலையும் நாடுவோமாக. நாம் குழப்பமில்லாமல், நிறைவான வாழ்க்கை வாழ அவருடைய வழிநடத்துதல் நமக்கு அவசியமும், நம்பகமானதுமாயிருக்கிறது.

அதே அணியில்
கடுமையான காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் கால்பந்து மைதானத்திற்கு திரும்பும்போது, அதே நிலையில் விளையாடும் தன் அணியில் இருக்கும் ஒருவர் இன்முகத்துடன் இருக்கைக்குத் திரும்பினார். இந்த கால்பந்து வீரரும் அதே இடத்திற்காக போட்டியிட்டாலும், அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க தேர்ந்தெடுத்தனர். ஆனாலும் தங்களுடைய பொறுப்புகளில் நம்பிக்கையாயிருந்தனர். ஒரு நிருபர் அந்த இரு விளையாட்டு வீரர்களும் ‘கிறிஸ்துவில் அவர்களுக்கிருந்த விசுவாசத்தில் வேரூன்றிய தனித்துவம் வாய்ந்த உறவாக” இருப்பதை தாங்கள் ஒருவருக்கொருவர் செய்த ஜெபத்தின் மூலம் கவனித்தார். மற்றவர்கள் கவனித்தப்படி அவர்கள் இருவரும் ஒரே அணியில் இருக்கும் விளையாட்டு வீரர்கள் மட்டுமல்ல, அவர்கள் இயேசுவை விசுவாசிக்கும் பிரதிநிதிகளாக தேவனை மகிமைப்படுத்தினர்.
இயேசுவின் வருகைக்காக காத்திருக்கும் ‘ஒளியின் பிள்ளைகளாக” வாழ விசுவாசிகளை அப்போஸ்தலனாகிய பவுல் நினைவுபடுத்துகிறார் (1 தெசலோனிக்கேயர் 5:5-6). கிறிஸ்து வழங்கின இரட்சிப்பில் நம்முடைய நம்பிக்கை உறுதியாக இருப்பதால், பொறாமை, பாதுகாப்பின்மை, பயம் அல்லது பகை – இவைகளை செய்யத் தூண்டும் சோதனைகளைத் தவிர்க்கலாம். மாறாக, நாம் ‘ஒருவரையொருவர் ஊக்குவித்து, ஒருவரையொருவர் கட்டி எழுப்ப” முடியும் (வச. 11). மக்களுக்கு சுவிஷேத்தை அறிவிக்கவும், அவர்களை இயேசுவுக்காக வாழ ஊக்குவிப்பதுமான நம்முடைய குறிக்கோளை நாம் பகிர்ந்து செய்யும்போது நாம் தேவனை மகிமைப்படுத்தும் ஆவிக்குரிய தலைவர்களை மதிக்கவும் ‘சமாதமானமாய் வாழவும்” முடியும் (வச. 12-15).
நாம் ஒரே குழுவில் பணியாற்றும்போது, ‘எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள், இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள், எல்லவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள், அப்படி செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்த தேவனுடைய சித்தமாயிருக்கிறது” (வச. 16-18) என்ற பவுலின் கட்டளைக்கு நாம் எப்போதும் கீழ்படியலாம்.