சமீபத்தில் நீச்சல் கற்றுக்கொண்ட 3 வயது டில்லன் தன் தாத்தாவின் வீட்டின் பின் உள்ள ஒரு 40 அடி ஆழமுள்ள தண்ணீர் நிறைந்த குழியில் விழுந்து விட்டான். தன்னால் முயன்ற மட்டும் மேலே மிதந்து கொண்டிருந்தான். தீயணைப்பு வீரர்கள் தங்கள் சாதனங்களை எடுத்து கொண்டு விரைந்து வந்தார்கள்ஆனால் அந்த சிறுவனின் தந்தை யார் வருவது காத்திருக்காமல் அந்தக் கிணற்றில் இறங்க தொடங்கிவிட்டார்.
ஓ! பெற்றவரின் அன்பு! நம் பிள்ளைகளுக்காக நாம் போகும் ஆழங்களும் அகலங்களும் !
“நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்கு பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்” என்று அப்போஸ்தலனாகிய யோவான் ஆதித் திருச்சபையின் விசுவாசிகள் கள்ள போதகங்களினால் அலைக்கழிக்கப்பட்டு தங்கள் விசுவாசத்தின் வேர்களை தேடிக்கொண்டு இருக்கும்போது உயிர் காப்பானாக இதை எழுதுகிறார். கிறிஸ்துவை விசுவாசிக்கிற அவர்கள் தேவனுடைய ‘பிள்ளைகள்’ என்று அழைக்கப்படுவதால் அவரை நம்பும் யாவருக்கும் அது ஒரு நெருக்கமான உறவை ஏற்படுத்தியது.
ஓ, தம் பிள்ளைகளுக்காக தேவன் போகும் ஆழங்களும் அகலங்களும் !
அந்த கிணற்றுக்குள் இறங்கி தன் குழந்தையை காப்பாற்றும்படி சென்ற அந்த தந்தையைப் போன்று பெற்றோராய் தம் குழந்தைகளுக்காக மாத்திரம் எடுக்கும் சில முயற்சிகள் உண்டு. அதே போன்று தான் தம்முடைய சொந்த குமாரனை அனுப்பி நம்மை அவர் இருதயதிற்கு சேர்த்து நமக்கு ஜீவனை திரும்ப கொடுக்கவும் பிதாவானவர் செய்த உச்சகட்ட செயலும் (வச 5-6)