எக்காள சத்தம்
‘டப்ஸ் ‘என்கிற எக்காள சத்தம் ஆனது அமெரிக்க ராணுவ தளத்தில் தினமும் நாள் முடியும்போதும் இறுதிச் சடங்குகளிலும் பாடப்படும் அழைப்பானது நான் அந்த பாடல் அழைப்பின் வசனங்களை வாசிக்கும் போது ஆச்சரியப்பட்டுப் போனேன் அதில் உள்ள அநேக வரிகள் தேவன் நம் அருகே என்கிற சொற்களோடு முடிந்தது.ராணுவ வீரர்கள் இருட்டு நிறைந்த காட்டில் இருந்தாலும் அல்லது தன் நெருங்கிய நண்பரின் இழப்பை குறித்து துக்கப்படும்போதும் ‘ தேவன் நம் அருகே’ என்கிற தான இந்த வார்த்தை அவர்களுக்கு நிச்சயமாக நம்பிக்கை தரும் .
பழைய ஏற்பாட்டிலும் இஸ்ரவேல் மக்களுக்கு தேவன் தம் அருகே இருக்கிறார் என்பதை நினைவூட்டும் படி இதேபோல் எக்காலம் ஊதப்படும் தேவனுக்கும் இஸ்ரவேல் மக்களுக்கும் உள்ள உடன்படிக்கையின் ஒப்பந்தத்தின்படி பண்டிகை நாட்களில் எக்காளம் ஊதவேண்டும் எக்காலம் ஊதினால் தேவ பிரசன்னத்தை நினைவுபடுத்துவது மாத்திரமல்லாமல் தேவன் அவர்களின் எக் காலங்களையும்எதிர்பார்ப்புகளையும் கேட்க வல்லவராயிருக்கிறார் என்று கேட்பவர்களுக்கு உதவ வாஞ்சையாய் இருக்கிறார் என்பதையும் உணர்த்தும் படி இந்த ஒப்பந்தம் .
இன்றைக்கும் டேவன் நம் அருகில் இருக்கிறார் என்பதை நாம் நினைவு கூறுவோம் ஒருவேளை நம் ஜெபமும் தேவனுக்கு எக்காளம் போல் தொனி த்து அதைக் கேட்டு பதில் அளிப்பார் என்பதை குறித்து நாம் ஊக்குவிக்கப்படுவோம்( 1 பேதுரு 3:12 ) .நம் வருத்தங்களும் கஷ்டங்களும் தீரும் படி அவர் பெலப்படுத்தும் பிரசனத்தினால் நாம் வேண்டுதலுக்கு பதிலளிக்கிறார்.

அன்பின் ஆழங்கள்
சமீபத்தில் நீச்சல் கற்றுக்கொண்ட 3 வயது டில்லன் தன் தாத்தாவின் வீட்டின் பின் உள்ள ஒரு 40 அடி ஆழமுள்ள தண்ணீர் நிறைந்த குழியில் விழுந்து விட்டான். தன்னால் முயன்ற மட்டும் மேலே மிதந்து கொண்டிருந்தான். தீயணைப்பு வீரர்கள் தங்கள் சாதனங்களை எடுத்து கொண்டு விரைந்து வந்தார்கள்ஆனால் அந்த சிறுவனின் தந்தை யார் வருவது காத்திருக்காமல் அந்தக் கிணற்றில் இறங்க தொடங்கிவிட்டார்.
ஓ! பெற்றவரின் அன்பு! நம் பிள்ளைகளுக்காக நாம் போகும் ஆழங்களும் அகலங்களும் !
“நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்கு பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்” என்று அப்போஸ்தலனாகிய யோவான் ஆதித் திருச்சபையின் விசுவாசிகள் கள்ள போதகங்களினால் அலைக்கழிக்கப்பட்டு தங்கள் விசுவாசத்தின் வேர்களை தேடிக்கொண்டு இருக்கும்போது உயிர் காப்பானாக இதை எழுதுகிறார். கிறிஸ்துவை விசுவாசிக்கிற அவர்கள் தேவனுடைய ‘பிள்ளைகள்’ என்று அழைக்கப்படுவதால் அவரை நம்பும் யாவருக்கும் அது ஒரு நெருக்கமான உறவை ஏற்படுத்தியது.
ஓ, தம் பிள்ளைகளுக்காக தேவன் போகும் ஆழங்களும் அகலங்களும் !
அந்த கிணற்றுக்குள் இறங்கி தன் குழந்தையை காப்பாற்றும்படி சென்ற அந்த தந்தையைப் போன்று பெற்றோராய் தம் குழந்தைகளுக்காக மாத்திரம் எடுக்கும் சில முயற்சிகள் உண்டு. அதே போன்று தான் தம்முடைய சொந்த குமாரனை அனுப்பி நம்மை அவர் இருதயதிற்கு சேர்த்து நமக்கு ஜீவனை திரும்ப கொடுக்கவும் பிதாவானவர் செய்த உச்சகட்ட செயலும் (வச 5-6)

பழுக்க வைக்கும் செயல் முறை
இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ஜ் நகரத்தில் தன்னுடைய 50 ஆண்டுகால ஊழியத்தின் ஆரம்ப காலத்தில் சார்லஸ் சிமியோன் (1759 -1836) தன் அருகில் வாழ்ந்த போதக நண்பரான ஹென்றி வென்னையும் அவருடைய மகள்களையும் சந்தித்தார். பார்த்து முடித்து செல்லும் போது அவருடைய மகள்கள் இருவரும் சிமியோனின் கடுமையான நடக்கை குறித்தும் சுய உறுதிப்பாடான குணத்தை குறித்தும் தங்கள் தந்தையிடம் குறிப்பிட்டார்கள். அதற்கு பதிலளிக்கும் படி அவருடைய மகள்களிடம் அருகில் இருந்த மரத்தில் இருந்து இன்னும் கனியாகாத பழத்தை ஒன்று பறிக்க சொன்னார். அதை ஏன் அவர் சொன்னார் என்று அவர்கள் இருவரும் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் “ இப்பொழுது இது பச்சையாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் வெயிலுக்கு பின்னரும் மறைக்க பின்னரும் அது பழமாகும். இதே போல் தான் சிமியோனும்” என்று கூறினார்.
வருட போக்கில் தேவனுடைய உருமாற்றும் கிருபையால் சிமியோன் மென்மையானார். அதற்கு ஒரு காரணம் தினமும் வேதம் வாசித்து ஜெபிப்பதற்கு அவர் அர்ப்பணித்தது. “ இதுதான் அவருக்கு இருக்கும் பெரிய கிருபைக்கும் ஆவிக்குரிய பெலத்திற்கான ரகசியம்” என்று அவருடன் சில மாதங்கள் தங்கி இருந்த நண்பர் அவரை குறித்து சாட்சி கொடுத்தார். எரேமியா தீர்க்கதரிசியை போல விசுவாசத்துடன் தேவ வார்த்தையை கைப்பற்றி வந்தார் சிமியோன். “‘ உம்முடைய வார்த்தைகள் கிடைத்த உடனே அவைகளை உட் கொண்டேன்” (எரேமியா 15:16) என்று எரேமியா கூறுகிறார். தேவனுடைய வார்த்தைகளை உட்கொள்ளுவது அவருக்கு ஆனந்தமும் அவர் இருதயத்துக்கு களிப்புமாக இருந்தது.
நாமும் கூட பச்சையாக புளிக்கும் பழமாக இருக்கலாம் ஆனால் தேவ ஆவியால் அவருடைய வார்த்தையை நாம் அதிகம் அறிந்து கொண்டு நாம் மென்மை பட தேவனை நாம் விசுவாசிக்கலாம்.

ஆராதிக்கிற வாழ்க்கைமுறை
ஒருமுறை ஒரு கிறிஸ்துவ மாநாட்டிற்கு சென்றிருந்தபோது ஒரு பெண் என்னிடம் வந்து “நான் உங்களை எங்கேயோ பார்த்து இருக்கிறேன்” என்று கூறினாள். ஆனால் எங்கே என்று தெரியவில்லை. அந்த பெண்ணை இதற்கு முன்பு பார்த்ததாக எனக்கும் ஞாபகமில்லை.
சிறிது நேரத்துக்கு பிறகு என்னிடம் வந்து “ நீ வெள்ளை நிற கார் வைத்திருக்கிறீர்களா?” என்று அந்த அந்த பெண் என்னை கேட்டார். “ஆம் சில வருடங்களுக்கு முன்பு வைத்திருந்தேன்” வைத்து இருந்தேன் என்று கூறினேன்.
அந்தப் பெண் சிரித்துக்கொண்டே” நான் பள்ளிக்கு செல்லும் வழியில் தினமும் அங்கு இருந்த போக்குவரத்து விளக்கண்டையில் (traffic light) உங்களை பார்ப்பேன். நீங்கள் எப்பொழுதும் சந்தோஷத்துடன் கைகளை உயர்த்தி பாடிக் கொண்டு இருப்பீர்கள். நீங்கள் தேவனை துதித்து பாடுகிறீர்கள் என்று எண்ணிக் கொள்வேன். சில கஷ்டமான நாட்களில் அது என்னை உற்சாகப்படுத்தியது” என்று கூறினார்.
நாங்கள் இருவரும் தேவனுக்கு நன்றி செலுத்தி சந்தோஷத்துடன் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம்.
யாரும் நம்மை பார்க்கவில்லை என்று நாம் நினைத்துக் கொண்டாலும் மற்றவர்கள் இயேசுவை பின்பற்றுகிறவர்களை கவனிக்கிறார்கள் என்பதை என்னுடைய புதிய நண்பர் எனக்கு ஊர்ஜிதப் படுத்தினார். முழு மனதுடன் ஆராதிக்கிற வாழ்க்கை முறையை நாம் பின்பற்றும் போது நம் சிருஷ்டிகர் முன் நாம் எங்கேயும் எப்பொழுதும் வரலாம். அவருடைய மாறாத அன்பையும் விசுவாசத்தையும் நினைவுகூர்ந்து அவருடன் ஐக்கியத்தையும் அவருடைய பராமரிப்புக்காகவும் நாம் நன்றி செலுத்தலாம். நம் வாகனங்களில் செல்லும்போது துதிகளை செலுத்தி பொது இடங்களில் ஜெபித்தும் சிறிய அன்பின் காரியங்களால் தேவனுடைய அன்பை பரப்பி மற்றவர்களை தேவனுடைய நாமத்தை துதிக்க உற்சாகப்படுத்தலாம் (வச 4). ஞாயிறு காலை மட்டும் நடக்கும் ஒரு நிகழ்வு அல்ல.

இயேசுவின் வேகத்தில் நகர்வது
சமீபத்தில் எனது நான்கு சக்கர வாகனம் பழுதாகி விட்டது. வாகனம் பழுது பார்க்கும் இடம் ஒரு மைல் தூரத்தில் இருந்தது. நடந்து செல்லலாம் என்று முடிவு எடுத்தேன். ஒன்றை கவனித்தேன். அனைவரும் என்னை விட மிகவும் வேகமாக சென்று கொண்டிருந்தார்கள். ஆனால் இது ஒன்றும் பெரிய ஏவுகணை அறிவியல் இல்லை நடந்து செல்பவர்களை விட ஊர்திகளில் செல்பவர்கள் வேகமாக செல்வார்கள். அப்பொழுது தான் ஒன்றை நான் உணர்ந்தேன்: நாம் எப்போதும் மிகவும் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறோம். மற்றொன்றையும் உணர்ந்தேன்: தேவனையும் என்னுடைய கால அட்டவணைக்கு ஏற்ப வேகமாக நகர வேண்டும் என்று விரும்புகிறேன்.
இயேசு இவ்வுலகத்தில் வாழ்ந்த போது அவருடைய மெதுவான வேகம் அவர் நண்பர்களை சில நேரங்களில் விரக்தி அடைய செய்தது. நாம் யோவான் 11ல் வாசிப்பது போன்று மார்த்தாள் மரியாள் தங்கள் சகோதரனாகிய லாசருவை குணப்படுத்த வல்லவராகிய இயேசுவின் மேல் விசுவாசம் வைத்து அவரை அழைத்து வர ஆள் அனுப்பினார்கள். ஆனால் அவரோ லாசரு மரித்து 4 நாட்களுக்கு பிறகு வந்தார் (வச. 17). மார்த்தாள் இயேசுவைப் பார்த்து “ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்க மாட்டான்” என்று கூறினாள். அதாவது இயேசு வேகமாக செயல்படவில்லை என்று அர்த்தம். ஆனால் இயேசுவோ லாசருவை உயிரோடு எழுப்பும்படி பெரிய திட்டத்தை வைத்திருந்தார் (வச. 38-44).
உங்களால் மார்த்தாவின் விரக்தியை உணர முடிகிறதா? என்னால் முடிகிறது. சில சமயங்களில் நம் ஜெபங்களுக்கு சீக்கிரமாக பதிலளிக்கும்படி இயேசுவை எதிர்பார்க்கிறவர்களாக நாம் இருக்கிறோம். சிலவேளைகளில் அவர் தாமதிப்பது போல் காணப்படலாம். ஆனால் அவருடைய சர்வவல்ல திட்டம் நம் திட்டத்திற்கு எதிர்மாறானது. அவருடைய திட்டத்தில் உள்ள வேலைகளை அவர் சரியாக செய்து முடிக்க வல்லவர். இதிலிருந்து அவருடைய மகிமையும் நன்மையும் நம் திட்டங்களுக்கு அப்பாற்பட்டவை என்று அறியலாம்.