வகை  |  odb

ஒரு மகிழ்ச்சியான கொண்டாட்டம்

எனது நண்பர் டேவின் வாலிப மகள் மெலிசா இறப்பதற்கு ஒரு வருடம் முன்பு எனது நண்பர் ஷரோன் காலமானார். அவர்கள் இருவரும் கார் விபத்துக்களில் கோரமாக கொல்லப்பட்டனர். ஒரு இரவு ஷரோன் மற்றும் மெலிசா இருவரும் என் கனவில் வந்தார்கள். ஒரு பெரிய விருந்து மண்டபத்தில் அவர்கள் அலங்காரங்களை தொங்கவிட்டு கொண்டிருந்தபோது சிரித்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்தார்கள். நான் அந்த அறைக்குள் நுழைந்த போது என்னைப் புறக்கணித்தார்கள். ஒரு நீண்ட மேஜை வெள்ளைத்துணிகளாலும் தங்கத் தட்டுகளும் கோப்பைகளுடனும் ஆயத்தப்படுத்தப்பட்டிருந்தது. நானும் அலங்காரத்தில் உதவட்டுமா என்று நான் கேட்டதை அவர்கள் கேட்காதது போல வேலை செய்து கொண்டிருந்தனர். ஆனால் பின்னர் ஷரோன், “இந்த விருந்து மெலிசாவின் திருமண வரவேற்பு” என்றார்.

“மணவாளன் யார்?” நான் கேட்டேன். இருவரும் பதிலளிக்கவில்லை, ஆனால் புன்னகைத்து ஒருவருக்கொருவர் அர்த்தத்தோடு பார்த்தார்கள். இறுதியாக, அது எனக்கு வெளிப்பட்டது - அது இயேசு!

 “இயேசு மணவாளன்” என்று நான் எழுந்தவுடன் மெல்லிய குரலில் சொல்லிக்கொண்டிருந்தேன்.

இயேசு திரும்பி வரும் போது விசுவாசிகள் அவரோடு சந்தோஷமாக கொண்டாடும் மகிழ்ச்சியான கொண்டாட்டத்தை கனவு என் மனதில் கொண்டு வருகிறது. இது "ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்து" (19:9) என்று அழைக்கப்படும் ஒரு பகட்டான விருந்தாக வெளிப்படுத்துதலில் சித்தரிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துவின் முதல் வருகைக்கு மக்களை தயார்படுத்திய யோவான் ஸ்நானகன், அவரை “ உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்று அழைத்தார் (யோவா. 1:29). அவர் இயேசுவை “மணவாளன்” என்றும், தன்னை "மணவாளனுடைய தோழன்" (சிறந்த மனிதனைப் போல) என்றும் காத்திருந்தார் (3:29).

அந்த விருந்து நாளிலும், நித்திய காலத்திலும், இயேசு, நம்முடைய மணவாளன், ஷரோன், மெலிசா மற்றும் கடவுளின் மக்கள் அனைவருடனும் இடைவிடாத ஐக்கியத்தை அனுபவிப்போம்.

துடிக்கும் கடிகாரம்

தொழிலாளர்கள் ஒரு குழு உறைந்த ஏரியிலிருந்து பனியை வெட்டி ஒரு ஐஸ்ஹவுஸில் சேமித்து வைத்துக் கொண்டிருக்கும்பொழுது, அவர்களில் ஒருவர் ஜன்னல் இல்லாத கட்டிடத்தில் தனது கைக்கடிகாரத்தை இழந்துவிட்டார் என்பதை உணர்ந்தார். அவரும் அவரது நண்பர்களும் அதை தேடும் முயற்சி வீணை போயிற்று.

அவர்கள் தேடுவதை பிறகு, அவர்கள் வெளியேறுவதைக் கண்ட ஒரு சிறுவன் கட்டிடத்திற்குள் சென்றான். விரைவில், அவன் கடிகாரத்துடன் வெளிப்பட்டான். அவன் அதை எப்படிக் கண்டுபிடித்தான் என்று கேட்டதற்கு, “நான் உட்கார்ந்து அமைதியாக இருந்தேன், விரைவில் நான் கடிகாரத்தின் துடிக்கும் சத்தத்தை கேட்டேன்.”

அசையாமல் இருப்பதன் மதிப்பு பற்றி வேதாகமம் அதிகம் பேசுகிறது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை, ஏனென்றால் தேவன் சில நேரங்களில் ஒரு மெல்லிய குரலில் பேசுகிறார் (1 இரா. 19:12). வாழ்க்கையின் பரபரப்பில், அவருக்கு செவி சாய்ப்பது கடினமாகத் தோன்றலாம், ஆனால் சற்று நிதானித்து, அவருடனும் வேதாகம வசனங்களுடனும் சிறிது நேரம் செலவிட்டால், அவருடைய எண்ணங்களை நம் எண்ணங்களில் கேட்கலாம்.

தீய மக்களின் “பொல்லாத திட்டங்களிலிருந்து” நம்மை மீட்பதற்கும், நமக்கு அடைக்கலம் கொடுப்பதற்கும், உண்மையுள்ளவர்களாக இருக்க உதவுவதற்கும் நமது நம்பிக்கை கர்த்தர் மீது இருக்க வேண்டும் (சங். 37:1-7) நமக்கு கூறுகிறது. ஆனால் நம்மைச் சுற்றி கொந்தளிப்பு இருக்கும்போது இதை நாம் எவ்வாறு செய்ய முடியும்? 7 வது வசனம் இவ்வாறு கூறுகிறது: “கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு.” ஜெபத்திற்குப் பிறகு சில நிமிடங்கள் அமைதியாக இருக்க கற்றுக்கொள்வதன் மூலம் இதை நாம் தொடங்கலாம். அல்லது அமைதியாக வேதாகமத்தைப் படித்து, வார்த்தைகளை நம் இருதயத்தில் ஊறவைப்பதன் மூலம். பின்னர், ஒருவேளை, அவருடைய ஞானம் நம்மிடம் அமைதியாகவும் நிதானமாகவும் அந்த துடிதுடிக்கும் கடிகாரத்தை போல பேசுவதை கேட்க முடியும்.

நம்பிக்கையோடு காத்திருப்பது

ஹச்சி: எ டாக்ஸ் டேல் (Hachi: A Dog's Tale) என்ற ஆங்கில திரைப்படத்தில், கல்லூரி பேராசிரியர் ஒருவர் ஹச்சி என்ற தெரு நாய்க்குட்டியுடன் நட்பு கொண்டிருந்தார். பேராசிரியர் வேலையிலிருந்து திரும்புவதற்காக ஒவ்வொரு நாளும் ரயில் நிலையத்தில் காத்திருந்து நாய் தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியது. ஒரு நாள், பேராசிரியருக்கு ஆபத்தான பக்கவாதம் ஏற்பட்டது. ஹச்சி ரயில் நிலையத்தில் பல மணி நேரம் காத்திருந்தது. அடுத்த பத்து வருடங்களுக்கு ஒவ்வொரு நாளும் அது திரும்பத் திரும்ப வந்தது. அதனுடைய அன்பான எஜமானருக்காக காத்திருந்தது.

தன் எஜமானரின் வருகைக்காக பொறுமையாகக் காத்திருந்த சிமியோன் என்ற மனிதனின் கதையை லூக்கா சொல்கிறார் (லூக்கா 2:25). மேசியாவைக் காணும் வரை அவர் மரணத்தைக் காணமாட்டார் என்று பரிசுத்த ஆவியானவர் சிமியோனுக்கு வெளிப்படுத்தினார் (வச. 26). இதன் விளைவாக, கடவுளின் மக்களுக்கு “இரட்சிப்பை” அளிப்பவருக்காக சிமியோன் காத்திருந்தார் (வச. 30). மரியாளும் யோசேப்பும் இயேசுவோடு ஆலயத்திற்குள் நுழைந்தபோது, ​​பரிசுத்த ஆவியானவர் சிமியோனிடம் இவர்தான் அவர் என்று கிசுகிசுத்தார்! காத்திருப்பு இறுதியாக முடிந்தது! சிமியோன் எல்லா மக்களுக்கும் நம்பிக்கை, இரட்சிப்பு மற்றும் ஆறுதலுமான கிறிஸ்துவை தன் கைகளில் வைத்திருந்தார் (வச. 28-32).

காத்திருக்கும் பருவத்தில் நாம் நம்மைக் கண்டால், ஏசாயா தீர்க்கதரிசியின் வார்த்தைகளை புதிய காதுகளால் கேட்கலாம்: “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்” (ஏசா. 40:31). இயேசுவின் வருகைக்காக நாம் காத்திருக்கும்போது, ​​ஒவ்வொரு புதிய நாளுக்கும் நமக்குத் தேவையான நம்பிக்கையையும் பலத்தையும் அவர் அளிக்கிறார்.

மேல்நோக்கி பார்த்தல்

மாறுகண் (வெவ்வேறு அளவிலான கண்கள்) கனவா மீன் வகை சமுத்திரத்தின் அந்தி மண்டலத்தில் வாழ்கிறது. அங்கு சூரிய ஒளி ஆழமான நீர் வழியாக குறைவாக ஊடுருவுகிறது. கணவாயின் புனைப்பெயர் அதன் இருவேறுபட்ட கண்களை குறிக்கிறது. இடது கண் காலப்போக்கில் வலது கண்ணை விட கணிசமாக பெரிதாகிறது - கிட்டத்தட்ட இரு மடங்கு பெரியது. முதுகெலும்பில்லாத உயிரிகளை படிக்கும் விஞ்ஞானிகள் கணவாய் அதன் சிறிய வலது கண்ணை இருண்ட ஆழத்தை நோக்கிப் பார்க்க பயன்படுத்துவதாக கண்டறிந்துள்ளனர் பெரிய இடது கண் சூரிய ஒளியை நோக்கி மேல்நோக்கி பார்க்கிறது.

நாம் தற்போதைய உலகில் வாழ்வதன் அர்த்தம் என்ன என்பது பற்றியும் “நாம் கிறிஸ்துவுடனே எழுந்ததுண்டானால்” எதிர்காலத்தின் நிச்சயம் என்ன என்பதையும் பற்றிய ஒரு சித்தரிப்பாக கணவாய் இருக்கிறது (கொலோ. 3:1). பவுல் கொலோசையருக்கு எழுதிய கடிதத்தில் “மேலானவைகளையே நாடுங்கள்” என்று அவர் வலியுறுத்துகிறார். ஏனென்றால் நம் வாழ்க்கை "கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது." (வச. 2-3)

பூமியில் வசிப்பவர்கள் பரலோகத்தில் நம் வாழ்க்கையை எதிர்பார்த்து காத்திருப்பதால் நம்முடைய தற்போதைய எதார்த்தத்தில் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை குறித்து பார்க்கப் பயிற்சி அளிக்கிறோம். ஆனால் கணவாயின் இடதுகண் காலப்போக்கில் வளர்ந்து பெரியதாகவும் அதிக உணர் திறன் கொண்டதாகவும் உருவாகிறது. அதேபோல ஆவிக்குரிய உலகில் தேவன் செயல்படும் வழிகளைப் பற்றிய விழிப்புணர்வில் நாமும் வளர்கிறோம். இயேசுவில் உயிரோடு இருப்பதன் அர்த்தம் என்ன என்பதை நாம் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளாமல் இருக்கலாம், ஆனால் நாம் “மேலே” பார்க்கும் போது நம் கண்கள் அதை மேலும் மேலும் பார்க்கத் தொடங்கும்.

ஒளியை நம்புங்கள்

மாபெரும் சூறாவளி என்று வானிலை முன்னறிவிப்பு தெரிவித்துள்ளது. வளிமண்டல அழுத்தம் குறைந்து குளிர்கால புயல் விரைவாக தீவிரமடையும்போது இப்படித்தான் நடக்கும். இரவு நேரத்தில் காற்று வீசும். தூசி நிறைந்த சூழ்நிலை விமான நிலையத்துக்கு செல்லும் நெடுஞ்சாலையில் கிட்டத்தட்ட பார்க்க இயலாததாக ஆக்கிவிட்டது. ஆனால் உங்கள் மகள் உங்கள் வீட்டிற்கு விமானத்தில் பயணித்து வரும் போது, நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்கிறீர்கள். நீங்கள் கூடுதல் உடைகள் மற்றும் தண்ணீரை எடுத்து செல்வீர்கள். (நீங்கள் நெடுஞ்சாலையில் சிக்கிக்கொண்டால்). மிக மெதுவாக வாகனம் ஓட்டு வீர்கள். நிறுத்தாமல் பிரார்த்தனையும் செய்வீர்கள் இறுதியாக, உங்கள் முகப்பு விளக்குகளை நம்புவீர்கள். சில நேரங்களில் நீங்கள் கிட்டத்தட்ட சாத்தியமற்றதை அடையமுடியும்.

அவருடைய மரணம் சம்பந்தப்பட்ட ஒரு புயலை இயேசு தன் ஞானத்தால் முன்னறிவித்தார் (1 யோவா. 12:31-33). அது தம்மை பின்பற்றுபவர்களுக்கு உண்மையுள்ளவர்கவும், சேவை செய்பவர்களாகவும் இருக்க ஊக்குவிக்கிறது. இப்பொழுது இருட்டாக போகிறது, பார்க்க கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக இருக்கிறது.. ஆகவே இயேசு அவர்களை பார்த்து "ஒளியினிடத்தில் விசுவாசமாயிருங்கள்" என்று சொன்னார் (வச. 36). அவர்கள் முன்னோக்கிச் சென்று உண்மையாக இருக்க ஒரே வழி அதுதான்.

இயேசு இன்னும் சிறிது காலம் மட்டுமே அவர்களுடன் இருப்பார். ஆனால் விசுவாசிகளுக்கு தேவ ஆவியானவர் வழியை ஒளிர செய்வதற்கான நிலையான வழிகாட்டியாக இருக்கிறார். நாமும் கிட்டத்தட்ட பார்க்க சாத்தியமற்ற காலங்களை எதிர்கொள்வோம். ஆனால் ஒளியினிடத்தில் விசுவாசமாயிருப்பதின் மூலம் நாம் முன்னோக்கி செல்லலாம்.