
பாதுகாப்பு மற்றும் அமர்ந்திருப்பது
உற்சாகமிக்க பாலகனான என் மகன் சேவியர், மதிய அமைதி நேரத்தை தவிர்த்தான். அமைதியாக இருப்பது பெரும்பாலும் தேவையற்ற, ஆனால் மிகவும் அத்தியாவசியமான தூக்கத்தில் போய் முடியும். எனவே அவன் இருக்கையில் வேகமாக அசைந்துக்கொண்டே இருப்பான், சாய்விருக்கையில் இருந்து சறுக்கி விளையாடுவான், தரையில் அங்கும் இங்கும் ஓடுவான், அமைதியை குலைக்க அறை முழுவதும் உருளுவான். “அம்மா, பசிக்கிறது… தாகமெடுக்கிறது… நான் குளியலறைக்கு செல்ல வேண்டும்… என்னை கட்டியணைக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டே இருப்பான்.
அமர்ந்திருப்பதன் நன்மைகளை புரிந்துகொள்வதால், கட்டியணைக்க அழைப்பதன் மூலம் நான் சேவியருக்கு உதவுவேன். என்னருகில் சாய்ந்து, அவன் தூங்குவான்.
என் ஆவிக்குரிய வாழ்க்கையின் ஆரம்பகாலத்தில், எப்பொழுதும் செயல்பாட்டில் இருக்கும் என் மகனின் விருப்பத்தை நானும் பிரதிபலித்தேன். ஓய்வில்லாத செயல்பாடுகள் என்னை அங்கீகரிக்கப்பட்டவராகவும், முக்கியமானவராகவும், கட்டுப்பாட்டில் இருப்பவராகவும் உணரவைத்தது. அதன் இரைச்சல்கள் எனது தோல்விகளையும், சோதனைகளையும் பற்றி அதிகமாக கவலைப்படுவதிலிருந்து என்னை திசைதிருப்பியது. ஓய்விற்கு என்னை ஒப்படைப்பது எனது பலவீனமான மனுஷிகத்தை மட்டுமே உறுதிப்படுத்தியது. எனவே நான் அமைந்திருப்பதையும், அமைதலாய் இருப்பதையும் தவிர்த்தேன். தேவன் என் துணை இல்லாமலும் காரியங்களை கையாளுவார் என்பதை சந்தேகித்தேன்.
எத்தனை பிரச்சனைகள் அல்லது நிச்சயமற்றதன்மைகள் நம்மை சூழ்ந்துகொண்டாலும் அவர் நமக்கு அடைக்கலமானவர். எதிரே உள்ள பாதை நீளமாக, பயமுறுத்துவதாக அல்லது மூழ்கடிக்கக்கூடியதாய் தோன்றினாலும் அவருடைய அன்பு நம்மை சூழ்ந்துகொள்கிறது. அவர் நமக்கு செவிக்கொடுகிறார், பதிலளிக்கிறார், நம்மோடு எப்பொழுதும் இருக்கிறார்…. இப்பொழுதும், எப்பொழுதும் நித்தியகாலமாகவும் (சங்கீதம் 91).
நாம் அமைதலாய் இருப்பதை பற்றிக்கொள்ளலாம், தேவனுடைய நிச்சயமான அன்பு மற்றும் மாறாத அவருடைய பிரசன்னத்தின் மீது நாம் சாய்ந்து கொள்ளலாம். நாம் அவரில் அமைதலாயும், இளைப்பாறவும் செய்யலாம், ஏனெனில் நாம் அவருடைய மாறாத உண்மைத்தன்மையின் தங்குமிடத்தின் கீழ் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம்.

ஒருபோதும் விட்டுக்கொடுத்துவிடாதே
தங்கள் சொந்த மொழிகளில் வேதத்தை பெறவிரும்பிய, தங்களுடைய சபை மக்களின் போராட்டத்தை “காலம் கடந்தது, போர் நுழைந்தது” என்றுதான் தெற்கு சூடானின் கெலிகோ மக்களின் பாதிரியார் செமி நிகோ விவரிப்பார். உண்மையை சொல்லப்போனால், ஒரு வார்த்தைகூட கெலிகோ மொழியில் அதுவரைக்கும் அச்சடிக்கப்பட்டிருக்கவில்லை. பல தசாப்தங்களுக்கு முன்பு பாதிரியார் நிகோ வின் பாட்டனார் வேதாகமத்தை மொழிபெயர்க்கும் வேலையை தைரியமாக தொடங்கினார். ஆனால் போரும், அமைதியின்மையும் அந்த முயற்சியை தடுத்துநிறுத்திக்கொண்டே இருந்தன. வடக்கு உகாண்டாவிலுள்ள தங்களுடைய அகதிகள் முகாம்கள் மற்றும் காங்கோ வின் ஜனநாயக குடியரசின் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டபோதிலும் பாதிரியாரும் அவருடன் அவருடைய சக விசுவாசிகளும் அந்த திட்டத்தை உயிர்ப்போடு வைத்திருந்தனர்.
அவர்களுடைய விடாமுயற்சி பலனளித்தது. ஏறக்குறைய முப்பது வருடங்களுக்கு பிறகு, ஒரு கிளர்ச்சியூட்டும் கொண்டாட்டத்தில் வேதாகம புதியஏற்பாடு கெலிகோவில் அகதிகளுக்கு கொடுக்கப்பட்டது. “கெலிகோவின் உத்வேகம் வார்த்தைகளுக்கும் அப்பாற்பட்டது,” என்று ஒரு திட்ட ஆலோசகர் சொல்கிறார்.
கெலிகோ மக்களின் அர்ப்பணிப்பு தேவன் யோசுவாவிடம் கோரிய நிலைத்தன்மையை பிரதிபலிப்பதாக உள்ளது. “இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய் அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்” (யோசுவா 1:8). தேவன் கூறியபடி சமமான விடாமுயற்சியுடன் கெலிகோ மக்கள் வேதாகமத்தின் மொழிபெயர்ப்பை அடைந்தனர். இப்பொழுது,“நீ அவர்களை முகாம்களில் காணும்போது அவர்கள் சிரிக்கிறார்கள்” என்றுஒரு மொழிபெயர்ப்பாளர் கூறுகிறார். வேதத்தை கவனிப்பதும் புரிந்துகொள்வதும் “அவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது”. கெலிகோ மக்களை போல நாமும் வேதத்திலிருந்து வல்லமையையும்,ஞானத்தையும் தேடுவதை ஒருபோதும் விட்டுவிடக்கூடாது.

காலைதோறும் புதியவைகள்
என் சகோதரர் பால் கடுமையான கால்-கை வலிப்புடன் போராடி வளர்ந்தார், அவர் தனது வாலிப பருவத்தில் நுழைந்தபோது அது இன்னும் மோசமாகிவிட்டது. ஒரே நேரத்தில் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ச்சியான வலிப்புத்தாக்கங்களை அவர் அனுபவித்ததால், இரவுநேரம் அவருக்கும் எனது பெற்றோருக்கும் வேதனையளித்தது. அறிகுறிகளைத் தணிக்கும் ஒரு சிகிச்சையை மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை, அதே நேரத்தில் நாளின் ஒரு பகுதியையாவது அவரை விழிப்புடன் வைத்திருக்கிறார்கள். என் பெற்றோர் ஜெபத்தில் கூக்குரலிட்டனர்: “தேவனே, தேவனே,, எங்களுக்கு உதவுங்கள்!”
அவர்களின் உணர்ச்சிகள் நொறுங்கியிருந்தாலும், அவர்களின் உடல்கள் களைப்படைந்து இருந்தாலும், பவுலும் என் பெற்றோரும் ஒவ்வொரு புதிய நாளுக்கும் தேவனிடமிருந்து போதுமான பலத்தைப் பெற்றார்கள். கூடுதலாக, என் பெற்றோர் புலம்பல் புத்தகம் உட்பட வேதாகம வார்த்தைகளில் ஆறுதல் கண்டனர். பாபிலோனியர்கள் எருசலேமை அழித்ததைப் பற்றி எரேமியா தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார், “எட்டியும் பிச்சுமாகிய” சிறுமையை நினைவு கூர்ந்தார் (3:19). இன்னும் எரேமியா நம்பிக்கையை இழக்கவில்லை. கர்த்தரின் இரக்கங்களை அவர் மனதில் கொண்டார், அவருடைய இரக்கங்கள் “அவைகள் காலைதோறும் புதியவைகள்;” (வச. 23). என் பெற்றோரும் அவ்வாறே செய்தார்கள்.
நீங்கள் எதை எதிர்கொண்டாலும், தேவன் ஒவ்வொரு காலைதோறும் உண்மையுள்ளவர் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவர் நாளுக்கு நாள் நம் பலத்தை புதுப்பித்து, நம்பிக்கையைத் தருகிறார். சில நேரங்களில், என் குடும்பத்திற்கு செய்தது போலவே, ஆறுதலும் தருகிறார். பல வருடங்களுக்குப் பிறகு, ஒரு புதிய மருந்து கிடைத்தது, இது பவுலின் தொடர்ச்சியான இரவுநேர வலிப்புத்தாக்கங்களை நிறுத்தி, எனது குடும்பத்திற்கு மறுசீரமைப்பு தூக்கத்தையும் எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும் அளித்தது.
நம்முடைய ஆத்மாக்கள் நமக்குள் முறிந்துபோகிறபோது (வச. 20), தேவனின் இரக்கங்கள் காலைதோறும் புதியவைகள் என்ற வாக்குறுதிகளை நாம் மனதில் கொள்ளலாம்.

நீங்களே இல்லை
1859ம் ஆண்டு கோடையில், நயாகரா நீர்வீழ்ச்சியை ஒரு இறுக்கமான பாதையில் கடக்கும் முதல் நபராக மான்சியூர் சார்லஸ் ப்ளாண்டின் ஆனார் - இது அவர் நூற்றுக்கணக்கான முறை செய்யப் போகிறது. ஒருமுறை அவர் தனது மேலாளர் ஹாரி கோல்கார்டுடன் தனது முதுகில் ஏற்றிக் கொண்டு செய்தார். ப்ளாண்டின் கோல்கார்டுக்கு இந்த அறிவுறுத்தல்களைக் கொடுத்தார்: “பாருங்கள், ஹாரி… நீங்கள் இனி கோல்கார்ட் இல்லை, நீங்கள் ப்ளாண்டின்… நான் சாய்ந்து ஆடினால், என்னுடன் சேர்ந்து கொள்ளுங்கள். உங்களை நீங்களே சமநிலைப்படுத்த முயற்சிக்க வேண்டாம். நீங்கள் செய்தால், நாம் இருவரும் நமது மரணத்திற்கு செல்வோம்.”
பவுல், சாராம்சத்தில், கலாத்திய விசுவாசிகளிடம் கூறினார்: கிறிஸ்துவை விசுவாசிப்பதைத் தவிர, தேவனுக்கு பிரியமான ஒரு வாழ்க்கையை நீங்கள் வாழ முடியாது. ஆனால் இங்கே ஒரு நல்ல செய்தி - நீங்கள் செய்ய வேண்டியதில்லை! தேவனிடம் நம் வழியை சம்பாதிக்க எந்த முயற்சியும் அதை குறைக்காது. ஆகவே, நம்முடைய இரட்சிப்பில் நாம் செயலற்றவர்களா? இல்லை! கிறிஸ்துவிடம் ஒட்டிக்கொள்வதே நமது அழைப்பு. இயேசுவிடம் ஒட்டிக்கொள்வது என்பது பழைய, சுதந்திரமான வாழ்க்கை முறையை கொல்வது; நாம் இறந்துவிட்டோம் போல. எனினும், நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன் (கலா. 2:20).
இன்று நாம் எங்கு இறுக்கமாக நடக்க முயற்சிக்கிறோம்? தண்ணீடம் கயிற்றில் நடந்து செல்ல தேவன் நம்மை அழைக்கவில்லை; அவருடன் ஒட்டிக்கொண்டு இந்த வாழ்க்கையை அவருடன் நடக்க அவர் நம்மை அழைத்தார்.
