வகை  |  odb

இளவயது விசுவாசம்

இளமைப்பருவம் என்பது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இக்கட்டான ஒரு பருவம். என்னுடைய இளமைப் பருவத்தில் என் தாயாரிடத்திலிருந்து என்னை தனியே அடையாளப்படுத்த எண்ணிய நான், அவர்களுடைய கருத்துகள், விதிமுறைகள், நோக்கங்கள் ஆகியவைகள் என்னை தவறாய் நடத்துகிறது என்று புறக்கணித்தேன். அவைகள் நல்லது என்பதை ஒரு கட்டத்தில் புரிந்துகொள்ள நேரிட்டாலும், அந்த பருவத்தில் அதை என்னால் செய்யமுடியவில்லை. அதை மீறுவது எனக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அறிந்த என் தாய் என்னுடைய மீறுதல்களைக் குறித்து புலம்பினார்.

தேவனும் அவருடைய பிள்ளைகளான இஸ்ரவேலைக் குறித்து இதேபோன்று எண்ணினார். தேவன் தன்னுடைய ஞானத்தை பத்து கற்பனைகளாய் கொடுத்துள்ளார் (உபாகமம் 5:7-21). அவைகள் விதிமுறைகளை உள்ளடக்கிய பட்டியல் போல் தெரிந்தாலும், “அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருக்கும்படி..” (வச.29) என்று தேவன் அதை கொடுத்ததற்கான சித்தத்தை மோசேக்கு வெளிப்படுத்துகிறார். கர்த்தருடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிவதின் மூலம் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் தேவ பிரசன்னத்தை இஸ்ரவேலர்கள் அனுபவிக்க முடியும் என்ற தேவனுடைய இருதயத்தை மோசே அறிந்திருந்தார் (வச.33). 

கர்த்தருடைய கற்பனைகள் நன்மையானவைகள் என்பதை உணராமல் தேவனோடு ஒரு இளமைப்பருவ அனுபவத்திற்குள் கடந்துசெல்கிறோம். நமக்கு எது நல்லது, எது ஞானத்திற்கேதுவானது என்று தேவன் வைத்துள்ளவைகளை உணர்ந்து அதை கவனமாய் கைக்கொள்ள பிரயாசப்படுவோம். நாம் இயேசுவைப் போல மாறுவதற்கும், ஆவிக்குரிய முதிர்ச்சி நம்மில் ஏற்படுத்துவதுமே அவருடைய வழிநடத்துதல்களின் நோக்கமாயிருக்கிறது (சங். 119:97-104; எபேசியர் 4:15; 2 பேதுரு 3:18).

உன்னுடைய பெயர் என்ன?

வாழ்க்கையில் நமக்கு மூன்று பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது என்று ஒருவர் சொல்லுகிறார்;: நம்முடைய பெற்றோர்கள் நமக்கு வைத்த பெயர், மற்றவர்கள் நமக்கு கொடுத்த பெயர் (நம் நன்மதிப்பு) நாம் நமக்கு கொடுத்துக்கொண்ட பெயர் (நம் குணாதிசயங்கள்). இதில் மற்றவர்கள் நமக்குக் கொடுக்கும் பெயரானது முக்கியத்துவம் வாய்ந்தது. “திரளான ஐசுவரியத்தைப்பார்க்கிலும் நற்கீர்த்தியே தெரிந்துகொள்ளப்படத்தக்கது; பொன் வெள்ளியைப்பார்க்கிலும் தயையே நலம்” (நீதி 22:1). நன்மதிப்பு மட்டுமல்லாது, குணாதிசயங்கள் அதைக்காட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இன்னொரு மிக முக்கியமான பெயர் இருக்கிறது. பெர்கமு திருச்சபையிலுள்ள விசுவாசிகளுக்கு இயேசு சொல்லும்போது, அவர்களுடைய நன்மதிப்பு பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை நேரிடும் தருவாயிலும், சோதனையை மேற்கொள்ளுகிறவர்களுக்கு பரலோகத்தில் ஒரு புதிய நாமம் வைக்கப்பட்டுள்ளது என்கிறார். “அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன்” (வெளி. 2:17). 

இயேசு வெண்மையான கற்களை ஏன் வாக்குப்பண்ணுகிறார் என்று நமக்கு தெரியாது. அது ஜெயித்தவர்களுக்கான வெகுமதியா? மேசியாவின் விருந்திற்கான அனுமதிச்சீட்டா? குற்றஞ்சுமத்தப்பட்டவர்களை விடுவிக்க ஒரு காலத்தில் நீதிபதிகள் வாக்களிக்கும் முறையை போன்று கூட இருக்கலாம்.

அது எதுவென நமக்குத் தெரியாது; எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். நம்முடைய அவமானங்களை அகற்றும் புதிய நாமத்தை தேவன் நமக்கு வாக்குப்பண்ணுகிறார் (ஏசாயா 62:1-5). 

நம்முடைய நன்மதிப்பு தகர்க்கப்பட்டிருக்கலாம்; நம் குணாதிசயங்கள் சரிசெய்ய முடியாத நிலையில் இருக்கலாம். ஆனால் இந்த இரண்டு பெயர்களும் நம்மை யார் என்று தீர்மானிக்கப் போவதில்லை. மற்றவர்கள் உங்களை எப்படி அழைக்கிறார்கள் என்பதோ, நீங்கள் உங்களை எப்படி பார்க்கிறீர்கள் என்பதோ நிஜமல்ல. இயேசு உங்களை யார் என்று சொல்லுகிறாரோ அதுவே நீங்கள். உங்கள் புதிய நாமத்திற்குரிய வாழ்க்கையை வாழுங்கள்.

உங்களுக்குத் தேவையான அனைத்தும்

சாப்பாட்டு அறை மேசையின் மேல் அமர்ந்துகொண்டு என்னைச் சுற்றி நடந்துக்கொண்டிருந்த இன்பமான குழப்பங்களை நோக்கிக்கொண்டிருந்தேன். அத்தைகள், மாமாக்கள், பிள்ளைகள், சகோதர சகோதரிகள், இன்னும் மற்ற உறவினர்கள் எங்களுடைய குடும்பத்தின் கூடுகைக்கு வந்து ஒன்றாக உணவை மகிழ்ச்சியுடன் ருசித்துக்கொண்டிருந்தனர். நானும் அதை ருசித்துக்கொண்டிருந்தேன். ஆனால் ஒரு எண்ணம் என் இருதயத்தை பிளந்தது: உங்களுக்கென்று பிள்ளைகள் இல்லாத, சொந்தமாக ஒரு குடும்பம் இல்லாத ஒரே பெண் நீங்கள்தான்.

என்னைப் போல தனிமையாக இருக்கும் பெண்களுக்கு இதேபோலத்தான் எண்ணம் இருக்கிறது. திருமணத்தையும் குழந்தைகளையும் அதிகமாக மதிப்பிடும் ஆசியக் கலாச்சாரமான, என்னுடைய கலாச்சாரத்தில், தனக்கென்று ஒரு குடும்பம் இல்லாத சூழ்நிலை முழுமையடையாத ஒரு உணர்வை ஏற்படுத்தும். நீங்கள் யார் என்பதை வரையறுத்து, உங்களை முழுமையடைய வைக்கும் ஒன்று உங்களிடத்தில் இல்லாதது போல் தோன்றலாம். 

அதனால் தான் கர்த்தர் என் “பங்கு” என்ற சத்தியம் எனக்கு அதிக ஆறுதலைக் கொடுக்கிறது (சங்கீதம் 73:26). இஸ்ரவேல் கோத்திரத்தாருக்கு அவரவருடைய சுதந்திரம் பங்கிடப்பட்டது. ஆனால் லேவி கோத்திரத்தாருக்கு எதுவும் கொடுக்கப்படவில்லை; மாறாக, கர்த்தரே அவர்களுக்கு பங்காகவும் சுதந்தரமாகவும் இருப்பதாக வாக்களித்தார் (உபாகமம் 10:9). அவர்கள் அவரிடத்தில் முழு திருப்தியடைந்து அவர்களுடைய எல்லாத் தேவைகளையும் அவர் கொடுப்பார் என்று நம்பினார்கள். 

நம்மில் சிலருக்கு பற்றாக்குறை என்ற உணர்வு குடும்பத்தோடு தொடர்புடையதாக இல்லாதிருக்கலாம். ஒருவேளை நாம் ஒரு நல்ல வேலைக்காக அல்லது உயர் கல்விக்காக முயற்சிக்கலாம். நம்முடைய சூழ்நிலை எதுவாக இருந்தாலும், தேவன் நம்முடைய பங்காகத் தழுவிக்கொள்ளலாம். அவர் நம்மை முழுமையடையச் செய்கிறார். அவரிடம் நமக்கு எந்தக் குறையும் இல்லை. 

மகிழ்ச்சியான கற்றல்

இந்தியாவில் மைசூர் என்ற நகரத்தில், புதுப்பிக்கப்பட்ட இரண்டு ரயில் பெட்டிகள் இறுதியில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு, பள்ளிகளாக மாற்றப்பட்டிருக்கிறது. உள்ளுர் கல்வியாளர்கள், ஒதுக்கப்பட்ட ரயில் பெட்டிகளை வாங்கவும் அவைகளை மறுவடிவமைக்கவும் தென்மேற்கு ரயில் நிறுவனத்துடன் இணைந்துக் கொண்டனர். இவைகள் பெரிய உலோகப் பெட்டிகளாக இருந்தன. தொழிலாளர்கள் அதில் படிகள், மின்விசிறிகள், விளக்குகள் மற்றும் சாய்வுமேசைகளை அமைக்கும் வரை அது உபயோகமில்லாததாய் இருந்தது. தொழிலாளர்கள் சுவர்களுக்கு வண்ணம் பூசி, உள்ளேயும் வெளியேயும் வண்ண வண்ண சுவரோவியங்களை ஒட்டினர். இப்படிப்பட்ட அற்புதமான உருமாற்றம் செய்யப்பட்டதின் காரணமாகத் தற்போது அறுபது மாணவர்கள் அங்கு வகுப்புகளில் கலந்துக்கொள்ளுகின்றனர்.

“உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” (ரோமர் 12:2), என்ற பவுலின் கட்டளையைப் பின்பற்றும்போது, இன்னும் அதிக அற்புதமான காரியம் ஒன்று நிகழ்கிறது. உலகத்தோடும் அதின் வழிகளோடும் இருக்கும் தொடர்பிலிருந்து துண்டித்துவிட பரிசுத்த ஆவியானவரை நாம் அனுமதிக்கும்போது நம்முடைய வழிகளும், சிந்தனைகளும், மனப்பான்மையும் மாறத் தொடங்குகின்றன. நாம் அதிக அன்புள்ளவர்களாகவும், நம்பிக்கையுள்ளவர்களாகவும், உள்ளான சமாதானத்தினாலே நிரப்பப்பட்டவர்களாயும் இருக்கிறோம் (8:6).

இன்னும் ஏதோ ஒன்று நடக்கிறது. இந்த மறுரூபமாக்கப்படுதல் தொடர்ந்து நடக்கும் செயலாக இருந்தாலும், ரயில் பயணத்தைப் போல அநேக நிறுத்தங்களையும், துவக்கங்களையும் கொண்டிருந்தாலும், இந்தச் செயல்முறை தேவன் நம் வாழ்க்கையில் என்ன விரும்புகிறார் என்று புரிந்துக்கொள்ள உதவுகிறது. நமக்காக தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ள உதவுகிறது (12:2). அவருடைய சித்தத்தை அறிவது பிரத்தியேகங்களை உள்ளடக்கியிருக்கலாம் அல்லது இல்லாதிருக்கலாம். ஆனால் அது எப்போதும் நம்மை அவருடைய குணத்தோடும் அவர் இந்த உலகத்தில் செய்யும் கிரியைகளோடும் சீரமைத்துக்கொள்ள வைக்கிறது. 

இந்தியாவில் மறுவடிவமைக்கப்பட்ட பள்ளியின் பெயர் “நாலி காலி” - இதற்கு ஆங்கிலத்தில் “மகிழ்ச்சியான கற்றல்” என்று அர்த்தம். தேவனின் மறுரூபப்படுத்தும் வல்லமை அவருடைய சித்தத்தை அறிவதில் உங்களை எவ்வாறு வழி நடத்துகிறது?

இக்கபோத் விலகிப் போயிற்று

“த லெஜெண்ட் ஆஃப் ஸ்லீப்பி ஹால்லோ” (ஒரு ஆங்கில நாவல்), இதில் கட்ரீனா என்ற அழகான இளம் பெண்ணை திருமணம் செய்ய இக்கபோத் க்ரேன் என்ற பள்ளி ஆசிரியர் நாடுவதைப் பற்றி நூலாசிரியர் கூறுகிறார். குடியேறிய கிராமப்புறப் பகுதிகளை வேட்டையாடும் தலையில்லாத ஒரு குதிரைவீரன் தான் கதையின் திறவுகோல். ஒரு இரவு, குதிரையின் மேல் ஒரு பூதம் போன்ற தோற்றத்தைக் கண்ட இக்கபோத், பயத்தினால் அப்பகுதியை விட்டு ஓடிப்போகிறார். இந்தக் குதிரை வீரன் கட்ரீனாவுக்கு ஒரு போட்டியான முறைமைக்காரன் என்றும் பின்னர் அவன் கட்ரீனாவை திருமணம் செய்துக்கொள்ளுகிறார் என்றும் வாசகர்களுக்கு தெளிவாகத் தெரிகிறது.

இக்கபோத் என்பது முதன்முதலில் வேதத்தில் காணப்பட்ட ஒரு பெயர் மற்றும் ஒரு இருண்ட பின்னணியைக் கொண்டுள்ளது. பெலிஸ்தியரோடு யுத்தம் பண்ணும்போது இஸ்ரவேலர் தேவனுடையப் பெட்டியயைப் போர்க்களத்திற்கு கொண்டு வந்தனர். இது ஒரு தவறான நடவடிக்கை. இஸ்ரவேல் இராணுவம் தோற்கடிக்கப்பட்டு தேவனுடைய பெட்டி சிறைப்பிடிக்கப்பட்டது. பிரதான ஆசாரியரான ஏலியின் குமாரர் ஓப்னி மற்றும் பினகாஸ் கொல்லப்பட்டனர் (1 சாமுவேல் 4:17). ஏலியும் இறந்து விடுகிறார் (வச. 18). கர்ப்பமாயிருந்த பினகாஸின் மனைவி இந்தச் செய்திகளைக் கேட்டபோது, “அவள் குனிந்துப் பிரசவித்தாள். அவள் சாகும்போது “மகிமை இஸ்ரவேலரை விட்டுப் போயிற்று என்று சொல்லி தன் மகனுக்கு இக்கபோத் (மகிமை புறப்பட்டது) என்று பெயரிட்டாள்” (வச. 22).

அதிர்ஷ்டவசமாக, தேவன் ஒரு பெரிய கதையை வெளிப்படுத்துகிறார். அவருடைய மகிமை கடைசியாக இயேசுவிடம் வெளிப்படுத்தப்படும் என்று அவர் தம்முடைய சீஷர்களிடம் “நாம் ஒன்றாயிருக்கிறதைப் போல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி நீர் (பிதா) எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்” என்று தம்முடைய சீஷர்களைப் பற்றி கூறினார் (யோவான் 17:22).

இன்றைக்கு தேவனுடையப் பெட்டி எங்கு இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. ஆனால் பரவாயில்லை. இக்கபோத் ஓடிவிட்டது. இயேசுவின் மூலம் தேவன் தம்முடைய மகிமையை நமக்குத் தந்திருக்கிறார்.