வகை  |  odb

உம் பிரசன்னத்தில் தங்கியிருக்க!

அவர்கள் தங்களுடைய காரில் ஏறிப்போனபோது, தன் தாயாரின் கைகளிலிருந்து தன்னை விலக்கிக்கொண்டு தர்ஷன் ஆலயத்தின் கதவை நோக்கி ஓடினான். அவன் அங்கிருந்து வருவதை விரும்பவில்லை. அவனுடைய தாயார் அவன் பின்னாக ஓடி, அவனை தன் கைகளினால் அணைத்து மீண்டும் புறப்படுவதற்கு தயாரானாள். தர்ஷனை அணைத்து, அவனுடைய தாயார் அவனை வெளியே கூட்டிச்செல்லும்போது, அவன் ஆலயத்தை நோக்கி தன் கைகளை நீட்டியவாறு அடம்பிடித்துக்கொண்டே வெளியே சென்றான். 

தர்ஷன், ஆலயத்தில் தனக்கிருக்கும் நண்பர்களை விட்டுப் பிரிய மனதில்லாமல் அப்படி செய்திருக்கலாம். ஆனால் அவனுடைய அந்த ஆர்வம், தாவீது தேவனை ஆராதிக்க காண்பித்த ஆர்வத்திற்கு ஒத்திருக்கிறது. தன்னுடைய நலனுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் தன்னுடைய சத்துருக்களை அழிக்கும்படிக்கு தேவனிடத்தில் கெஞ்சினாலும், அவன் சமாதானமாயிருப்பதற்கு, “நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்” என்கிறார் (27:4). அவர்; எங்கேயிருந்தாலும் தேவ பிரசன்னத்தை அனுவித்து தேவனோடு இருப்பதையே நாடினான். இஸ்ரவேலின் சிறந்த கதாநாயகனும் படைத்தலைவனுமான தாவீது, “கர்த்தரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுவேன்” என்று தன் விருப்பத்தை பிரதிபலிக்கிறான் (வச. 6). 

அவர் விசுவாசத்தினால் பரிசுத்த ஆவியானவர் மூலமாக நமக்குள் வாசம்பண்ணுகிறார் என்பதினால், நாம் அவரை எங்கு வேண்டுமானாலும் ஆராதிக்கமுடியும் (1 கொரிந்தியர் 3:16; எபேசியர் 3:17). தேவ பிரசன்னத்தில் நம்முடைய நாட்களை கழிக்கவும், மற்ற விசுவாசிகளோடு சேர்ந்து அவரை ஆராதிக்கவும் முற்படுவோம். கட்டடத்தின் சுவரில் அல்ல, தேவனில் நம்முடைய பாதுகாப்பையும் நம்முடைய அதிகப்படியான மகிழ்ச்சியையும் நாம் அடைகிறோம். 

உம் பிரசன்னத்தில் தங்கியிருக்க!

அவர்கள் தங்களுடைய காரில் ஏறிப்போனபோது, தன் தாயாரின் கைகளிலிருந்து தன்னை விலக்கிக்கொண்டு தர்ஷன் ஆலயத்தின் கதவை நோக்கி ஓடினான். அவன் அங்கிருந்து வருவதை விரும்பவில்லை. அவனுடைய தாயார் அவன் பின்னாக ஓடி, அவனை தன் கைகளினால் அணைத்து மீண்டும் புறப்படுவதற்கு தயாரானாள். தர்ஷனை அணைத்து, அவனுடைய தாயார் அவனை வெளியே கூட்டிச்செல்லும்போது, அவன் ஆலயத்தை நோக்கி தன் கைகளை நீட்டியவாறு அடம்பிடித்துக்கொண்டே வெளியே சென்றான். 

தர்ஷன், ஆலயத்தில் தனக்கிருக்கும் நண்பர்களை விட்டுப் பிரிய மனதில்லாமல் அப்படி செய்திருக்கலாம். ஆனால் அவனுடைய அந்த ஆர்வம், தாவீது தேவனை ஆராதிக்க காண்பித்த ஆர்வத்திற்கு ஒத்திருக்கிறது. தன்னுடைய நலனுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் தன்னுடைய சத்துருக்களை அழிக்கும்படிக்கு தேவனிடத்தில் கெஞ்சினாலும், அவன் சமாதானமாயிருப்பதற்கு, “நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்” என்கிறார் (27:4). அவர்; எங்கேயிருந்தாலும் தேவ பிரசன்னத்தை அனுவித்து தேவனோடு இருப்பதையே நாடினான். இஸ்ரவேலின் சிறந்த கதாநாயகனும் படைத்தலைவனுமான தாவீது, “கர்த்தரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுவேன்” என்று தன் விருப்பத்தை பிரதிபலிக்கிறான் (வச. 6). 

அவர் விசுவாசத்தினால் பரிசுத்த ஆவியானவர் மூலமாக நமக்குள் வாசம்பண்ணுகிறார் என்பதினால், நாம் அவரை எங்கு வேண்டுமானாலும் ஆராதிக்கமுடியும் (1 கொரிந்தியர் 3:16; எபேசியர் 3:17). தேவ பிரசன்னத்தில் நம்முடைய நாட்களை கழிக்கவும், மற்ற விசுவாசிகளோடு சேர்ந்து அவரை ஆராதிக்கவும் முற்படுவோம். கட்டடத்தின் சுவரில் அல்ல, தேவனில் நம்முடைய பாதுகாப்பையும் நம்முடைய அதிகப்படியான மகிழ்ச்சியையும் நாம் அடைகிறோம். 

வல்லமையுள்ளதும் நேசிக்கக்கூடியதும்

ஈக்வேடார் எரிமலை 2020ஆம் ஆண்டில் வெடித்து சிதறியது. அதிலிருந்து வெளிவந்த கருமையான தீப்பிளம்புகள் 12,000 மீட்டர் உயரத்திற்கு எழும்பிற்று என்று செய்தி ஊடகங்கள் அறிவிக்கிறது. அந்த பிளம்பு நான்கு மாகாணங்களில் (ஏறத்தாழ 198,000 ஏக்கர்) பாய்ந்து சாம்பல் நிறத்தில் காணப்பட்டது. வானம் மங்கலாகவும், இருள் சூழ்ந்தும் காணப்பட்டது. காற்று சற்று தடிமனாய் வீசியதால் சுவாசிக்க கடினமாய் தோன்றியது. பெலிசியானோ இங்கா என்ற விவசாயி, “எல் கமர்சியோ” என்ற பத்திரிக்கையில் அளித்த பேட்டியொன்றில், “இந்த தூசுகளெல்லாம் எங்கிருந்து வந்தன என்று எங்களுக்குத் தெரியாது... ஆனால் வானம் இருட்டுவதை கண்டு நாங்கள் அஞ்சினோம்” என்று கூறியுள்ளார். 

இஸ்ரவேலர்கள், “சேர்ந்துவந்து, (சீனாய்) மலையின் அடிவாரத்தில்” நின்று, “அந்த மலையில் வானத்தை அளாவிய அக்கினி எரிய, இருளும் மேகமும் அந்தகாரமும்” சூழ்ந்ததைக் கண்டு அஞ்சினர் (உபாகமம் 4:11). அதிரக்கூடிய தேவனுடைய சத்தத்தைக் கேட்டு மக்கள் அஞ்சினர். அது பயமுறுத்தக்கூடியதாயிருந்தது. ஜீவனுள்ள தேவனை சாட்சியிடும் ஆச்சரியமான ஒரு அனுபவமாய் அது இருந்தது.

பின்பு “கர்த்தர்… பேசினார்,” அவர்கள், “வார்த்தைகளின் சத்தத்தை” கேட்டார்கள், ஆனால் “ஒரு ரூபத்தையும் காணவில்லை” (வச. 12). அவர்களின் எலும்புகளை அதிரப்பண்ணிய வார்த்தை அவர்களுக்கு ஜீவனையும் நம்பிக்கையையும் கொடுத்தது. தேவன் இஸ்ரவேலர்களுக்கு பத்துக் கற்பனைகளைக் கொடுத்து, அவர்களோடு உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டார். கருமேகத்திலிருந்து ஒலித்த அந்த சத்தம் அவர்களை அதிரப்பண்ணியது. ஆனால் அவர்களை கவர்ந்திழுத்து நேசித்தது (யாத்திரரகமம் 34:6-7). தேவன் வல்லமையுள்ளவர், உலகத்திற்கு அப்பாற்பட்டவர், அதிரக்கூடியவர். ஆனாலும் அவர் நம்மை அன்போடு நெருங்குகிறார். வல்லமையுள்ள அன்பான தேவனே நம்முடைய அத்தியாவசிய தேவை. 

யாராலும் பிரிக்கமுடியாது

பிரிஸ்ஸின் தகப்பனார் ஒரு போதகர். அவர் தேவனுடைய அழைப்பை ஏற்று இந்தோனேஷியாவின் சிறிய தீவு ஒன்றில் ஊழியம் செய்யப் புறப்பட்டார். பிரிஸ்ஸின் குடும்பம் ஒரு காலத்தில் விலங்குகளின் தங்குமிடமாயிருந்த ஒரு குடிசையில் தங்க நேரிட்டது. குடிசையில் மழைத்தண்ணீர் ஒழுக, பிரிஸ்ஸின் குடும்பம் தரையில் அமர்ந்து கிறிஸ்மஸைக் கொண்டாடிய தருணத்தை பிரிஸ் நினைவுகூருகிறாள். ஆனால் அவளுடைய தகப்பனார், “பிரிஸ், நாம் ஏழையாய் இருப்பதினால், நம் தேவன் நம்மை நேசிக்கவில்லை என்று அர்த்தம் கிடையாது” என்று அவளுக்கு நினைவுபடுத்தினாராம். 

ஐசுவரியம், ஆரோக்கியம் மற்றும் நீடித்த ஆயுள் ஆகியவைகள் மட்டுமே தேவனுடைய ஆசீர்வாதத்திற்கான அடையாளம் என்று சிலர் நம்பிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் பாடுகள் வரும்போது, தேவன் நம்மை நேசிக்கிறாரா என்று அவர்கள் கேள்வியெழுப்பக்கூடும். ஆனால் ரோமர் 8:31-39ல், உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மை பிரிக்கமுடியாது என்கிறார் (வச. 36). இதுவே மெய்யாய் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையின் அடித்தளம்: தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை நம்முடைய பாவங்களுக்காக மரிக்க ஒப்புக்கொடுத்து தன்னுடைய அன்பை பிரதிபலித்துள்ளார் (வச. 32). கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்து பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருந்து நமக்காகப் பரிந்துபேசிக்கொண்டிருக்கிறார் (வச. 34). 

நம்முடைய உபத்திரவத்தின் நாட்களில், கிறிஸ்து நமக்காக செய்த தியாகத்தைக் குறித்த ஆறுதலான சத்தியத்தில் நாம் நம்மை பலமாய் ஸ்தாபித்துக்கொள்வோம். “மரணமானாலும், ஜீவனானாலும்... வேறெந்தச் சிருஷ்டியானாலும்” கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மை பிரிக்க மாட்டாது (வச. 38-39). நம்முடைய சூழ்நிலைகள் எதுவாயினும், நம்முடைய பாடுகள் எதுவாயினும், தேவன் நம்மோடு இருக்கிறார் என்பதையும், அவருடைய அன்பிலிருந்து நாம் பிரிக்கப்படுவதில்லை என்பதையும் நினைவில்கொள்வோம். 

தேவனின் ஆச்சரியமான படைப்பு

நானும் எனது மனைவியும் ஒரு சாதாரண இயற்கை நடைபயணம் மேற்கொள்ள துவங்கினோம். எங்கள் ஊரில் இருந்த நதியோரமாய் நாங்கள் போன அந்த பயணம் எங்களுக்கு மறக்க முடியாத ஒரு அனுபவமாய் மாறியது. சிதறிய தண்ணீரில் எங்களுக்கு பழக்கப்பட்ட சில நண்பர்களான 5 அல்லது 6 ஆமைகள் சூரிய ஒளியில் மின்னுவதைப் பார்த்தோம். பல மாதங்களாய் நாங்கள் பார்க்கத் தவறின இந்த ஆச்சரியமான உயிரினங்களைப் பார்த்து நாங்கள் புன்னகைத்தோம். அவைகள் வந்தது எங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. தேவனுடைய இந்த அற்புதமான படைப்பில் நாங்கள் ஒரு கணம் மகிழ்ச்சியை கொண்டாடினோம். 

தேவன் யோபுவையும் ஒரு இயற்கை நடை பயணம் கூட்டிச்செல்லுகிறார் (யோபு 38ஐ காண்க). இக்கட்டில் இருக்கும் இந்த மனிதனுக்கு அவனுடைய நிலைமையைக் குறித்து, சிருஷ்டிகரிடத்திலிருந்து பதில் தேவைப்படுகிறது (வச. 1). தேவனோடு நேரிட்ட இந்த நடைபயணம் இந்த மனிதனுக்குத் தேவையான உற்சாகத்தை அளித்தது. 

இந்த உலகத்தின் நேர்த்தியான வடிவமைப்பை யோபுவுக்கு விவரிக்கும்போது யோபுவின் ஆச்சரியத்தை சற்று கற்பனை செய்யுங்கள். இந்த உலகத்தைப்பற்றி அதை உண்டாக்கியவரிடமிருந்து நேரடியாய் யோபு கேட்கிறான்: “அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்? அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப்பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே” (வச. 6-7). சமுத்திரத்தின் வரையறையைக் குறித்த பூகோளவியல் பாடத்தை தேவன் யோபுவுக்கு கற்றுக்கொடுக்கிறார் (வச. 11). 

மேலும் தேவன் யோபுவுக்கு, ஒளி, பனி, மழை என்று தன்னுடைய சிருஷ்டிப்புகளை ஏன் சிருஷ்டித்தார் என்று அறிவிக்கிறார் (வச. 19-28). ஆகாயத்தில் மிதப்பவரிடமிருந்து விண்மீண்களைக் குறித்து யோபு கேட்டறிகிறான் (வச. 31-32).

கடைசியாக, “தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர்” (42:2) என்று யோபு ஒப்புக்கொள்கிறான். இந்த இயற்கையை நாம் அனுபவிக்கும்போது, நம்முடைய ஞானமுள்ள அற்புதமான சிருஷ்டிகரை நினைத்து பூரிக்கலாம்.