வகை  |  odb

சமாதானக் காரணர்

ஜானின் சளி இறுமல், நிமோனியா காய்ச்சலாக மாறியது. அதினால் அவர் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். அவர் அனுமதிக்கப்பட்ட அந்த மருத்துவமனையின் ஒருசில தளங்களுக்கு மேலே அவருடைய தாயார் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். தன் தாயின் உடல்நிலையையும் தன்னுடைய உடல் நிலையையும் குறித்து அவர் அதிக கவலைப்பட்டார். ஒரு கிறிஸ்மல் இரவின்போது, “ஓ புனித இரவே” என்று வானொலியில் ஒலித்த அந்த பாடலைக் கேட்ட ஜான், தேவனுடைய சமாதானத்தினால் ஆட்கொள்ளப்பட்டார். இரட்சகரின் பிறப்பைக் குறித்த அந்த பாடலின் வரிகளை அவர் கேட்டார்: “சோர்வுற்ற ஆத்துமாவுக்கு ஒரு நம்பிக்கையாய் அங்ஙனம் ஒரு புதிய மகிமையான காலை உதயமாகிறது.” அதைக் கேட்ட தருணத்தில், அவரைக் குறித்தும் அவருடைய தாயாரைக் குறித்தும் இருந்த கவலை மறைந்தது. 

ஏசாயா தீர்க்கதரிசனத்தின் படி, நமக்கு கொடுக்கப்பட்ட அன்பான இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவே சமாதான காரணர் (ஏசாயா 9:6). “மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல்” (மத்தேயு 4:15; ஏசாயா 9:2) வெளிச்சமாகவும் இரட்சிப்பாகவும் உதிக்க, இந்த உலகத்தில் குழந்தையாய் பிறந்த இயேசுவில் இந்த தீர்க்கதரிசனம் நிறைவேறியது. அவரால் நேசிக்கப்படுகிறவர்கள் கடினமான வாழ்க்கைப் பாதையில் பயணித்தாலும், அவர் அவர்களை சேர்த்துக்கொண்டு சமாதானத்தை அருளுகிறார். 

ஜான்; அந்த மருத்துவமனையில் இயேசுகிறிஸ்துவின் பிறப்பைக் குறித்து சிந்தித்து, அவை அனைத்தையும் மேற்கொள்ளும் சமாதானத்தைப் பெற்றுக்கொண்டார் (பிலிப்பியர் 4:7). கிறிஸ்மஸ் நாட்களில் தன் குடும்பத்தை விட்டு தள்ளியிருந்த அவருடைய விசுவாசத்தையும் நன்றியுணர்வையும் அந்த அனுபவம் அவருக்கு உறுதிப்படுத்தியது. தேவனுடைய பரிசான சமாதானத்தையும் நம்பிக்கையையும் நாமும் பெற்றுக்கொள்வோமாக. 

அவர்களுக்கு எப்படி தெரியும்

வடக்கு தாய்லாந்தில் இருக்கும் “கூடுகை” என்னும் திருச்சபை ஒரு தனிக்குழு சார்பற்ற, சர்வதேச திருச்சபை. சமீபத்திய ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று, கொரியா, கானா, பாக்கிஸ்தான், சீனா, வங்காள தேசம், அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் மற்றும் பல நாடுகளிலிருந்த கிறிஸ்துவின் விசுவாசிகள் தாழ்மையின் சிந்தையோடு ஒரு ஓட்டலின் மாநாட்டு அறையில் கூடினர். அவர்கள் “கிறிஸ்து மாத்திரமே” என்றும் “நான் கிறிஸ்துவின் பிள்ளை” என்றும் அந்த சூழ்நிலைக்கு கிளர்ச்சி தூண்டுகிறதுபோல் தோன்றிய பாடல்களை பாடினர். 

இயேசுவைப் போல யாராலும் மக்களை ஒன்றுதிரட்ட முடியாது. அவர் ஆரம்பத்திலிருந்தே அப்படி செய்கிறார். முதலாம் நூற்றாண்டில் அந்தியோகியாவில் பதினெட்டு இன மக்கள் தனித்தனியே வசித்தனர். விசுவாசிகள் முதலில் அந்தியோகியாவுக்கு வந்தபோது, அங்கிருந்த யூதர்களுக்கு மட்டுமே சுவிசே~த்தைப் பிரசங்கித்தனர் (அப்போஸ்தலர் 11:19). ஆனால் திருச்சபையைக் குறித்த தேவனுடைய திட்டம் அதுவல்ல. உடனடியாக, மற்றவர்களும் அங்கு கடந்து வந்து “கிரேக்கருடனே பேசிக் கர்த்தராகிய இயேசுவைக்குறித்துப் பிரசங்கித்தார்கள்,” “அநேக ஜனங்கள் விசுவாசிகளாகி, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள்” (வச. 20-21). நூற்றாண்டுகளாய் யூதருக்கும் கிரேக்கருக்கும் இடையே நீடித்துக்கொண்டிருந்த பகையை இயேசு குணமாக்குகிறார் என்பதை அப்பட்டணத்திலிருந்தவர்கள் அறிந்துகொண்டனர். இந்த பலதரப்பட்ட இன மக்களைக் கொண்ட இந்த திருச்சபை “கிறிஸ்தவர்கள்” என்று அழைக்கப்பட்டனர் (வச. 26). 

இனம், சமுதாயம், மற்றும் பொருளாதார எல்லைகளைக் கடந்து நம்மிலிருந்து வேறுபட்ட மக்களை சந்திப்பது நமக்கு சவாலான ஒன்று. ஆனால் இந்த கடினமான பாதை நமக்கு வாய்ப்பாய் கொடுக்கப்பட்டுள்ளது. அது கடினமாயில்லையென்றால், அதை செய்வதற்கு நாம் இயேசுவின் உதவியை தேடியிருக்கமாட்டோம். அதில் சிலர் நாம் அவரை பின்பற்றுகிறோம் என்பதை அறிந்திருக்கின்றனர். 

நிஜமான பிரசன்னம்

கொரோனா வைரஸ் உலகமெங்கிலும் பரவிக்கொண்டிருக்கும்போது, அதின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மக்களிடையே இடைவெளியை கடைபிடிக்கும்படிக்கு சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். அநேக நாடுகள் மக்கள் தங்களை சுயதனிமைப்படுத்திக்கொள்ளுதலை கடைபிடிக்கும்படி அறிவுறுத்துகிறது. ஒருபுறம் அலுவலகங்கள் முடிந்தவரை தங்கள் அலுவலர்களை வீடுகளிலிருந்து வேலைசெய்யும்படிக்கு உற்சாகப்படுத்த, மறுபுறம் பலர் வேலைகளை இழந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். நானும் என்னுடைய சபை ஆராதனைகளிலும் பராமரிப்புக் குழுக்களிலும் ஆன்லைன் மூலமாகவே கலந்துகொள்ள நேர்ந்தது. சரீரப்பிரகாரமாக ஒன்று கூடுவதைத் தவிர்த்து, தற்போது உலகம் ஒன்றுகூடுவதற்கு புதிய முறையை தத்தெடுத்துக்கொண்டுள்ளது. 

இணையதளம் நம்மிடையே ஐக்கிய சிந்தையை ஏற்படுத்துவதில்லை. நாமெல்லாரும் தேவனுடைய சரீரத்தின் அங்கத்தினர்களாய் ஆவியில் இணைக்கப்பட்டுள்ளோம். கொலோசெயருக்கு எழுதிய நிருபத்தில் நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே பவுல் இக்கருத்தை பதிவுசெய்துள்ளார். அந்த சபை அவரால் ஸ்தாபிக்கப்படவில்லை என்றாலும், அவர்களைக் குறித்தும் அவர்களின் விசுவாசத்தைக் குறித்தும் பவுல் தன் ஆழமான அக்கறையை வெளிப்படுத்தினார். பவுல் அவர்கள் மத்தியில் இருக்கமுடியவில்லை என்றாலும், “ஆவியின்படி உங்களுடனேகூட” இருக்கிறேன் என்று அவர்களுக்கு நினைவுபடுத்துகிறார் (கொலோசெயர் 2:5). 

நம்முடைய பொருளாதார, சுகாதார மற்றும் பல நடைமுறைத் தேவைகளுக்காக நாம் நேசிக்கிறவர்களோடு எல்லாவேளைகளிலும் சரீரப்பிரகாரமாய் இருக்கமுடியாது. தொழில்நுட்பம் அந்த இடைவெளியை பூர்த்திசெய்யும். கிறிஸ்துவின் சரீரத்தின் அவயங்களாய் நாம் நம்மை பார்க்கும்போது, கண்ணிற்கு புலப்படாத ஒரு ஐக்கியத்திற்கு நாம் உட்படுத்தப்படுகிறோம் (1 கொரி. 12:27). அத்தகைய தருணங்களில், நாமும் பவுலைப்போல, ஒவ்வொருவருடைய விசுவாச உறுதியினாலும், ஜெபத்தினாலும் “கிறிஸ்துவுக்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்(ள)” உற்சாகப்படுத்தப்படுகிறோம் (கொலோ. 2:2).

தேவனின் திசைகாட்டி

இரண்டாம் உலகப்போரின்போது வால்டெமெர் செமெனோவ் ஒரு உதவி பொறியாளராய், எஸ்.எஸ் ஆக்கோவா கைடு என்ற கப்பலில் பணியாற்றினார். வடக்கு கரோலினாவுக்கு ஏறத்தாழ 300 மைல் தூரத்தில் நங்கூரமிட்ட ஜெர்மானியர்களின் நீhமூழ்கிக் கப்பல் ஒன்று இந்த கப்பலை நோக்கி குண்டுகளை வீசின. கப்பல் தாக்கப்பட்டு, தீப்பிடித்து, நீரில் மூழ்க ஆரம்பித்தது. செமெனோவும் அவருடைய குழுவினரும் உயிர்காப்புப் படகின் மூலமாக தப்பித்து, திசைகாட்டியின் உதவியுடன் கப்பல் பாதையை நோக்கிச் சென்றனர். மூன்று நாட்களுக்குப் பிறகு, அவர்களை கண்டுபிடித்த கண்காணிப்பு விமானம், ப்ரும் என்ற அமெரிக்க கப்பலின் மூலம் அடுத்த நாளே அவர்களை மீட்டது. அந்த திசைகாட்டிக்காக நன்றி. செமெனோவும், 26பேர் கொண்ட அவருடைய குழுவினரும் உயிர் பிழைத்தனர். 

தேவனுடைய ஜனங்கள் வேதாகமம் என்னும் வாழ்க்கையின் திசைகாட்டியைக் கொண்டு வழிநடத்தப்படுகின்றனர் என்று சங்கீதக்காரன் சொல்லுகிறான். அவர் வேதத்தை “தீபம்” என்று ஒப்பிட்டு (சங். 119:105), தேவனைத் தேடுவோரின் பாதைக்கு வெளிச்சமளிக்கக்கூடியதாய் சித்தரிக்கிறார். வாழ்க்கையின் நடுக்கடலில் சிக்கிக்கொண்ட சங்கீதக்காரன், வேதத்தைக் கொண்டு ஆவிக்குரிய அச்சரேகையையும் தீர்க்கரேகையையும் கொண்ட நமக்கு திசைகாட்டவும் உயிர்பிழைக்கவும் செய்ய தேவனால் கூடும் என்று அறிந்திருந்தார். ஆகையினால், அவர் நடப்பதற்கு தேவையான ஒளியையும், தேவனுடைய பிரசன்னத்தில் கரைசேர்க்கும்படியாகவும் தேவனிடத்தில் விண்ணப்பிக்கிறார் (43:3). 

கிறிஸ்துவின் விசுவாசிகளாய், நம்முடைய பாதைகளை தவறவிடும்போது, பரிசுத்த ஆவியானவரின் துணையோடு வேதாகமத்தில் உள்ள பாதையில் தேவன் நம்மை நடத்தமுடியும். வேதாகமத்தை வாசிக்கும்போதும், கற்றுக்கொள்ளும்போதும், அதின் ஞானத்தை கைக்கொள்ளும்போதும் தேவன் நம் இருதயத்தையும் சிந்தையையும் மறுரூபமாக்குவார்.