இரண்டாம் உலகப்போரின்போது வால்டெமெர் செமெனோவ் ஒரு உதவி பொறியாளராய், எஸ்.எஸ் ஆக்கோவா கைடு என்ற கப்பலில் பணியாற்றினார். வடக்கு கரோலினாவுக்கு ஏறத்தாழ 300 மைல் தூரத்தில் நங்கூரமிட்ட ஜெர்மானியர்களின் நீhமூழ்கிக் கப்பல் ஒன்று இந்த கப்பலை நோக்கி குண்டுகளை வீசின. கப்பல் தாக்கப்பட்டு, தீப்பிடித்து, நீரில் மூழ்க ஆரம்பித்தது. செமெனோவும் அவருடைய குழுவினரும் உயிர்காப்புப் படகின் மூலமாக தப்பித்து, திசைகாட்டியின் உதவியுடன் கப்பல் பாதையை நோக்கிச் சென்றனர். மூன்று நாட்களுக்குப் பிறகு, அவர்களை கண்டுபிடித்த கண்காணிப்பு விமானம், ப்ரும் என்ற அமெரிக்க கப்பலின் மூலம் அடுத்த நாளே அவர்களை மீட்டது. அந்த திசைகாட்டிக்காக நன்றி. செமெனோவும், 26பேர் கொண்ட அவருடைய குழுவினரும் உயிர் பிழைத்தனர். 

தேவனுடைய ஜனங்கள் வேதாகமம் என்னும் வாழ்க்கையின் திசைகாட்டியைக் கொண்டு வழிநடத்தப்படுகின்றனர் என்று சங்கீதக்காரன் சொல்லுகிறான். அவர் வேதத்தை “தீபம்” என்று ஒப்பிட்டு (சங். 119:105), தேவனைத் தேடுவோரின் பாதைக்கு வெளிச்சமளிக்கக்கூடியதாய் சித்தரிக்கிறார். வாழ்க்கையின் நடுக்கடலில் சிக்கிக்கொண்ட சங்கீதக்காரன், வேதத்தைக் கொண்டு ஆவிக்குரிய அச்சரேகையையும் தீர்க்கரேகையையும் கொண்ட நமக்கு திசைகாட்டவும் உயிர்பிழைக்கவும் செய்ய தேவனால் கூடும் என்று அறிந்திருந்தார். ஆகையினால், அவர் நடப்பதற்கு தேவையான ஒளியையும், தேவனுடைய பிரசன்னத்தில் கரைசேர்க்கும்படியாகவும் தேவனிடத்தில் விண்ணப்பிக்கிறார் (43:3). 

கிறிஸ்துவின் விசுவாசிகளாய், நம்முடைய பாதைகளை தவறவிடும்போது, பரிசுத்த ஆவியானவரின் துணையோடு வேதாகமத்தில் உள்ள பாதையில் தேவன் நம்மை நடத்தமுடியும். வேதாகமத்தை வாசிக்கும்போதும், கற்றுக்கொள்ளும்போதும், அதின் ஞானத்தை கைக்கொள்ளும்போதும் தேவன் நம் இருதயத்தையும் சிந்தையையும் மறுரூபமாக்குவார்.