வகை  |  odb

தேவனில் ஊக்கமடைதல்

1925ஆம் ஆண்டு, ஒரு உணவு விடுதியில் உதவியாளராய் பணிபுரிந்த லாங்ஸ்டன் ஹியூஸ் எனும் எழுத்தாளர், அவரை அதிகமாய் பாதித்த கவிஞரான வச்செல் லின்ட்சே, தான் பணிபுரியும் உணவு விடுதியில் தங்கியிருப்பதைக் கேள்விப்பட்டார். ஹியூஸ், சற்று தயக்கத்துடன் லின்ட்சேவிடம் தன்னுடைய கவிதைகளை வாசித்துக் காண்பித்தார். அதை லின்ட்சே பொதுக்கூட்டத்தில், வெளிப்படையாய் சொல்லி அவரைப் பாராட்டினார். லின்ட்சேவின் இந்த பாராட்டு ஹியூஸ்க்கு பல்கலைக்கழகத்தின் கல்வி ஊக்கத்தொகையை பெறுவதற்கும், எழுத்துத் துறையில் சாதிப்பதற்கும் வழிவகுத்தது. 

எந்தவொரு சிறிய பாராட்டும் வெகுவாக நம்மை ஊக்குவிக்கும், குறிப்பாக தேவன் அதில் இருக்கையில். தாவீதைக் கொல்ல நினைத்த சவுலிடமிருந்து, தாவீது தப்பியோடிய சம்பவத்தை வேதம் கூறுகிறது. சவுலின் குமாரன் யோனத்தான், தாவீதைத் தேடி கண்டுபிடித்து, தேவனிடத்தில் பலப்படுவதற்கு உதவி செய்கிறான். “நீர் பயப்பட வேண்டாம்; என் தகப்பனாகிய சவுலின் கை உம்மைக் கண்டுபிடிக்கமாட்டாது; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிருப்பீர்” என்று ஆறுதல் கூறுகிறான் (1சாமுவேல் 23:15-17). 

யோனாத்தான் சொன்னது சரிதான். தாவீது ராஜாவாகிறான். யோனத்தான், தாவீதை “தேவனுக்குள்” (வச.16) திடப்படுத்தினான். அது, தாவீதை பெலப்படுத்தியது. தேவன், கிறிஸ்துவுக்குள் “நித்திய ஆறுதலையும், நல்நம்பிக்கையையும்” அருளுகிறார் (2 தெசலோனிக்கேயர் 2:16). அவருக்கு முன்பாக நம்மை நாம் தாழ்த்துகையில், அவரைப் போல் நம்மை உயர்த்துவதற்கு யாராலும் முடியாது. 

நம்மைச் சுற்றிலுமுள்ள மக்களுக்கு தேவனுடைய திடப்படுத்துதல் அவசியம். யோனத்தான், தாவீதைத் தேடியது போல நாமும் அவர்களைத் தேடி, அன்பான வார்த்தைகளையும், உதவிகளையும் நல்கும்போது, தேவன் மற்றதைப் பார்த்துக் கொள்வார். இந்த உலக வாழ்க்கை எப்படியிருந்தாலும், அவரை நம்பியவர்களுக்கு நித்தியத்தில் பிரகாசமான எதிர்காலம் உள்ளது.

நம்முடைய வரங்களை பிரயோகித்தல்

2013ஆம் ஆண்டு படமாக்கப்பட்டுக் கொண்டிருந்த தொலைக்காட்சி தொடர் ஒன்றின் இறுதிக் காட்சியில் புகழ்பெற்ற பிரிட்டிஷ் நடிகர் டேவிட் சுசெத் நடித்துக் கொண்டிருந்தார். அதேநேரம், ஒரு நாடகத்திலும் சிறப்புத் தோற்றத்தை ஏற்று நடித்துக் கொண்டிருந்தார். இந்த இரண்டு பெரிய வேலைகளின் மத்தியில், தன் “வாழ்க்கையின் முக்கிய பங்காக” ஆதியாகமம் தொடங்கி வெளிப்படுத்துதல் வரையிலான (752,702 வார்த்தைகள்) முழுவேதாகமத்தை, இருநூறு மணிநேரங்களுக்கு அதிகமாக செலவிட்டு ஒலிப்பதிவு செய்தார்.   

டேவிட், தன்னுடைய ஓட்டல் அறையிலிருந்த ரோமர் நிருபத்தை வாசித்து இயேசுவை ஏற்றுக்கொண்டவர். தன்னுடைய இந்த முயற்சியை, “27 ஆண்டுகால லட்சியத்தின் நிறைவேற்றம்; அதை செய்யும்படிக்கு ஏவப்பட்டேன். அதை நேர்த்தியாய் செய்வதற்கு பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளேன்; ஆகையால் என்னால் காத்திருக்க முடியவில்லை” என்று குறிப்பிடுகிறார். பின்னர் தன் சம்பளத்தையும் காணிக்கையாக கொடுத்தார்.

வரங்களை பொறுப்பாக பேணி, பின்னர் பகிர்ந்து, தேவனை எவ்வாறு மகிமைப்படுத்த வேண்டும் என்பதற்கு, இவருடைய இந்த ஒலிப்பதிவு முயற்சி நல்ல உதாரணம். அதுபோன்ற ஒரு பொறுப்பான குணத்தை எதிர்பார்த்தே முதலாம் நூற்றாண்டு விசுவாசிகளுக்கு பேதுரு நிருபம் எழுதுகிறார். இராயனை வணங்காமல் இயேசுவை வணங்கியதற்காய் உபத்திரவப்படுத்தப்பட்ட இவர்களுக்கு, தங்கள் வரங்களை உபயோகித்து தேவனுக்காய் வாழ்வது, சவால் நிறைந்த ஒன்றாய் இருந்தது. “ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன்” (1 பேதுரு 4:11). “இயேசுகிறிஸ்து மூலமாய் தேவன் மகிமைப் படும்படியாய்” மற்ற திறமைகளைப் போலவே இவைகளையும் வளர்த்துக்கொள்ளலாம்

இந்த நடிகர் தன்னுடைய தாலந்தை தேவனுக்காய் பயன்படுத்தியது போல நாமும் செய்ய முற்படுவோம். தேவன் உங்களுக்கு என்ன தாலந்தைக் கொடுத்திருக்கிறாரோ அவருடைய நாம மகிமைக்காய் அதைப் பயன்படுத்துங்கள்.  

ஒரு நட்பான உரையாடல்

கேத்ரீனும், நானும் சிறந்த பள்ளிபருவ நண்பர்கள். நாங்கள் தொலைபேசியில் பேசுவதோடு, இரவில் யார் வீட்டில் தங்குவதென்று வகுப்பில் துண்டுக் குறிப்புகளை அனுப்பிக் கொள்வோம். சிலநேரம் வாரயிறுதி நாட்களை ஒன்றாகக் கழித்து, பள்ளி வேலைகளை இணைந்து செய்வோம்.  

ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம், கேத்ரீனை பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். அன்று காலை என் சபை போதகர் நித்திய வாழ்வைக் குறித்துப் பிரசங்கித்தார். ஆனால் நான் வேதத்தை நம்புவதைப் போல, அவள் வேதத்தை நம்பவில்லை. நான் பாரப்பட்டு, அவளை அழைத்து இயேசுவோடு எப்படி உறவுகொள்வது என்பதைக் குறித்து அவளுக்கு விளக்க விரும்பினேன். ஒருவேளை நான் சொல்வதை அவள் நிராகரித்து, என்னுடனான சிநேகிதத்தை விட்டு விலகிவிடுவாளோ என்றும் தயங்கினேன்.

இந்த பயமே நம்மில் அநேகரை அமைதியாய் இருக்கச் செய்கிறது. பவுல் அப்போஸ்தலனும் கூட, “நான் தைரியமாய் என் வாயைத் திறந்து சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு” (எபேசியர் 6:20) “எனக்காய் வேண்டிக்கொள்ளுங்கள்” என்று ஜனங்களிடம் கேட்க வேண்டியிருந்தது. நற்செய்தியைப் பகிர்வதில் எந்த ஆபத்தும் இல்லை. எனினும், பவுல் தன்னை தேவனுடைய சார்பில் நின்று பேசக்கூடிய “ஸ்தானாதிபதி” (வச.19) என்கிறார். நாமும் அப்படித்தான். ஜனங்கள் நம்முடைய செய்தியை நிராகரித்தால், அந்த செய்தியை நம்மிடம் கொடுத்தனுப்பியவரை நிராகரிக்கின்றனர் என்று அர்த்தம். நம்முடைய நிராகரிக்கப்படுதலை நம்மோடு சேர்ந்து தேவனும் அனுபவிக்கிறார்.

ஆகவே, எது நம்மை பேசத் தூண்டுகிறது? தேவனைப் போலவே நாமும் மக்கள் மீது அக்கறையோடிருக்கிறோம் (2 பேதுரு 3:9). கேத்ரீனை துணிந்து கூப்பிடுவதற்கு இதுவே எனக்கு உந்துதலாயிருந்தது. ஆச்சரியப்படும்படி அவள் எனக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை, நான் சொன்னதைக் கவனமாக கேட்டாள். என்னிடம் சில கேள்விகளும் கேட்டாள். அவள் தன்னுடைய பாவங்களை மன்னிக்கும்படி இயேசுவிடம் வேண்டி, அவருக்காய் வாழத் தீர்மானித்தாள். என்னுடைய துணிச்சலான முயற்சி பலனளித்தது.

மகிழ்ச்சியை தெரிந்துகொள்ளுதல்

எழுத்தாளர் மார்லின் மக்என்டயர், தன் தோழியிடமிருந்து "மகிழ்ச்சியாயிருப்பதே பொறாமைக்கு எதிரானது" என்பதை தான் கற்றுக்கொண்ட விதத்தை பகிர்கிறார். இந்த தோழி மாற்றுத் திறனாளியாக, நெடுநாளாய் பல வலிகளோடு இருந்தவர், அவருடைய திறமைகளை அவர் விரும்பிய வகையில் வளர்த்திக்கொள்ள முடியாமல் அவர் உடல்நிலை அவர் திறன்களை மட்டுப்படுத்தியது. இருந்தபோதிலும், அவர் எப்படியோ தனித்துவமாக சந்தோஷத்தை அனுபவித்து மற்றவர்களோடும் மகிழ்ந்தார். அவர் மரிக்கும் முன்னர், தான் எதிர்கொண்ட ஒவ்வொன்றையும் பாராட்டி மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்.

"பொறாமைக்கு எதிர்மறையானது மகிழ்ச்சியாய் இருப்பது" இந்த புரிந்துகொள்ளுதல், எனக்குள் நீட்டித்திருக்கிறது. என் வாழ்விலும் இருக்கும் சில நண்பர்களை எனக்கு நினைவூட்டுகிறது. அவர்கள் தங்களை யாரோடும் ஒப்பிட்டுப் பார்க்காமல், மற்றவர்களுக்காக ஆழமாகவும், உண்மையாகவும் மகிழ்ச்சி கொள்பவர்களாய் ​வாழ்கின்றனர்.

பொறாமை என்பது சுலபமாய் சிக்கிக் கொள்ளக்கூடிய வலை. அது நம்முடைய ஆழமான பாதிப்புகளையும், காயங்களையும், மற்றும் பயங்களையும் பயன்படுத்தி நாம் இப்படி இருந்தால் நமக்கு கஷ்டங்கள் இருக்காது, நாம் கவலைப்பட வேண்டியிருக்காது என்று நம்மோடு கிசுகிசுத்து கொண்டே இருக்கும்.

பேதுரு, புதிய விசுவாசிகளுக்கு 1பேதுரு 2இல் நினைப்பூட்டியது போல, பொறாமை நமக்கு சொல்லும் பொய்களிலிருந்து விடுபட இருக்கும் ஒரே வழி, சத்தியத்தில் ஆழமாக வேரூன்றுவது தான். எப்படியெனில், கர்த்தர் தயையுள்ளவர் என்பதை ஆழமாக ருசிப்பது; அதாவது ஆழமாக அனுபவிப்பது (வ.1-3). நாம் "சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்பு" கூரமுடியும் (1:22) எப்பொழுதெனில் ,"என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான" (1:23) தேவவசனமே நமது சந்தோஷத்தின் மெய்யான ஆதாரம் என்று நாம் அறிந்துகொள்ளும்.

நாம் உண்மையாகவே தெரிந்துகொள்ளப்பட்ட சநததியினராய், அவருக்குச் சொந்தமான ஜனமாயும், அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைக்க பட்டவர்களாயும் (2:9) இருக்கிறோம் என்பதை நாம் நினைவுகூரும்போது, மற்றவர்களோடு ஓப்பிடுவதை விட்டுவிடுவோம்.

நற்செய்தியின் மகிழ்ச்சி

1964 ஆம் ஆண்டு ஒரு மாலையில், மகா அலாஸ்க்காவின் நிலநடுக்கம், நான்கு நிமிடங்களுக்கு மேலாக நீடித்து, 9.2 அளவு பதிவாகி, அனைத்தையும் அசைத்தும், உதிர்த்தும் போட்டது. நங்கூரம் பாய்ச்சுமிடத்தில் நகரத்தின் பகுதிகள் உள்வாங்கி, பெரும் பள்ளங்களும், இடிபாடுகளும் மட்டும் இருந்தன. அந்த பயங்கரமான இரவின் இருளினூடே, செய்தியாளர் ஜெனி சான்ஸ் தனது மைக்கை பிடித்திக்கொண்டு, தங்கள் வானொலிகளின் அருகிலே தவிப்போடு இருந்த மக்களுக்கு செய்திகளை வழங்கினார்: புதர்களில் வேலை செய்துகொண்டிருந்த ஒரு கணவர் தன் மனைவி உயிரோடிருப்பதை கேட்டறிந்தார், சாரணர் படையின் முகாமிற்கு சென்ற தங்கள் மகன்கள் நலமாயிருப்பதை அந்த கலக்கமடைந்த குடும்பத்தினர் கேட்டறிந்தனர், காணாமல் போன தங்கள் பிள்ளை மீண்டும் கிடைத்த செய்தியை அந்த தம்பதியினர் கேட்டனர், வானொலி வரிக்கு வரி நல்ல செய்திகளை இந்த அழிவின் மத்தியிலும் அறிவித்தது.

தீர்க்கதரிசி ஏசாயாவின் வார்த்தைகளை கேட்டபோது இஸ்ரவேல் ஜனங்கள் இப்படியாக தான் உணர்ந்திருப்பார்கள், அவர், "சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம் பண்ணினார்" (61:1) என்றார். தரிசாய்ப்போன தங்கள் தலைகீழான வாழ்க்கையையும், இருளடைந்த எதிர்காலத்தையும் அவர்கள் வெறித்துக் கொண்டிருந்தபோது, ஏசாயாவின் தெளிவான குரல் அனைத்தும் இழந்ததுபோல தோன்றிய தருவாயில் அவர்களுக்கு நற்செய்தியை கொண்டுவந்தது. தேவன், "இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும்… நெடுங்காலம் பாழாய்க் கிடந்தவைகளைக் கட்டி, பூர்வத்தில் நிர்மூலமானவைகளை எடுப்பித்து"(வ.1,4) இவைகளை செய்ய நோக்கமாயிருந்தார். பயங்கரத்தின் மத்தியிலே, ஜனங்கள் தேவனுடைய உறுதியளிக்கும் வாக்குத்தத்தை கேட்டனர், அது அவருடைய நற்செய்தியே.

இன்று நமக்கு, இயேசுவிலே, தேவனுடைய நற்செய்தியை கேட்கிறோம். இதுதான் சுவிசேஷம் என்ற வார்த்தைக்கு பொருள். நம் பயங்களினுடே, வலிகளினுடே, மற்றும் தோல்விகளின் மத்தியில் அவர் நற்செய்தியை வழங்குகிறார்.அதினால், நம் துன்பங்கள் விலகி சந்தோஷத்திற்கு வழிவிடும்.