வகை  |  odb

தேவனில் நம்பிக்கை

2020ஆம் ஆண்டில் ஏறெடுக்கப்பட்ட இந்தியாவின் நடுத்தர வயதுள்ளவர்களைப் பற்றிய ஆய்வில், சராசரியாக இந்தியர்கள் இயந்திர திரை கருவிகளைப் பார்வையிடும் நேரம் தினசரி 2 மணிநேரத்தில் இருந்து 4.5 மணிநேரமாக அதிகரித்துள்ளது. ஆனால் உண்மையைச் சொல்வதென்றால், ஒரு கேள்விக்கான பதிலைக் கண்டறிய கூகிளில் நான் எவ்வளவு தேடுகிறேன் அல்லது நாள் முழுவதும் என் தொலைபேசியில் வரும் உரைகள், அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்களின் முடிவில்லாத விழிப்பூட்டல்களுக்கு பதிலளிப்பேன் என்பதைக் கருத்தில் கொள்ளும்போது இந்த புள்ளிவிவரம் மிகவும் குறைவாய் தெரிகிறது. நம்மை ஒழுங்கமைக்கவும், தகவல் தெரிந்துகொள்ளவும், நம்மில் பலர் கருவிகளையே தொடர்ந்து சார்ந்துகொள்ளுகிறோம்.

கிறிஸ்தவர்களாகிய நம்மிடம் ஸ்மார்ட்போனை விட சிறந்த உபகரணங்கள் உள்ளது. தேவன் நம்மை நேசிக்கிறார்; பராமரிக்கிறார். மேலும் நம் தேவைகளுக்காய் நாம் அவரை சார்ந்துகொள்ளவேண்டும் என்று விரும்புகிறார். நாம் ஜெபிக்கும்போது, “நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறார்” (1 யோவான் 5:14) என்ற நம்பிக்கையுடன் இருக்கலாம் என்று வேதாகமம் அறிவுறுத்துகிறது. வேதத்தை வாசித்து அவற்றை நம் இருதயத்தில் பதிய வைப்பதின் மூலம், சமாதானம், ஞானம், விசுவாசம் போன்ற காரியங்களை அவர் நமக்கு அருளுவார் என்ற நம்பிக்கையுடன் அவரிடத்தில் நாம் ஜெபிக்கலாம் (வச. 15).

சில சமயங்களில் நம்முடைய சூழ்நிலையில் எந்த மாற்றமும் நேராதபோது, தேவன் நம் ஜெபத்தைக் கேட்கவில்லை என்று தோன்றலாம். ஆனால் எல்லா சூழ்நிலையிலும் நம்முடைய தேவைக்காய் அவரை சார்ந்துகொள்ளும்போது, அவர் மீதான நம்முடைய விசுவாசம் பெருகத் துவங்குகிறது (சங்கீதம் 116:2). அவர் நாம் கேட்ட அனைத்தையும் கொடுக்கவில்லையென்றாலும், நம்முடைய தேவைக்கேற்ப காரியங்களை ஏற்ற நேரத்தில் அருளுவார் என்ற விசுவாசத்தில் வளர நமக்கு உறுதுணையாயிருக்கிறது.

தேவனைத் தேடுதல்

நிச்சயதார்த்த மோதிரங்களுக்காக நான் ஷாப்பிங் செய்யும்போது, சரியான வைரத்தை கண்டுபிடிப்பதற்கு பல மணிநேரம் செலவிட்டேன். நல்ல தரமான ஒன்றை நான் தவறவிட்டுவிடக்கூடாது என்கிற எண்ணம் என்னை வாட்டியது.

என்னுடைய இந்த அலைபாயும் மனநிலையை, பொருளாதார உளவியலாளரான பேரி ஸ்வார்ட்ஸ், “திருப்தியாளர்” என்று அழைக்காமல் “அதிகப்படுத்துகிறவர்” என்று அழைக்கிறார். ஒரு திருப்தியாளர், அவரின் தேவை என்ன என்பதை அடிப்படையாகக் கொண்டு தேர்வு செய்வார். ஆனால் அதிகப்படுத்துபவர்களுக்கு சிறந்ததைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் (குற்றமனசாட்சி) இருக்கும். அநேக வாய்ப்புகளுக்கு மத்தியில் தேர்ந்தெடுக்கும் நம்முடைய திறன்? கவலை, மனச்சோர்வு மற்றும் அதிருப்தி. சமூகவியலாளர்கள் இந்த மனநிலையை, “தவறவிட்டுவிடுவோமோ என்கிற பயம்” என்று அடையாளப்படுத்துகின்றனர்.

நிச்சயமாக, வேதத்தில் அதிகப்படுத்துபவர் அல்லது திருப்தியாளர் போன்ற வார்த்தைகளை நாம் காண முடியாது. ஆனால் இதேபோன்ற ஒரு யோசனையை நாம் காண்கிறோம். 1 தீமோத்தேயுவில், பவுல் தீமோத்தேயுக்கு இந்த உலகத்தின் விஷயங்களைக் காட்டிலும் தேவனைத் தேடும்படியாக சவால் விடுக்கிறார். உலகத்தின் “நிறைவாக்கும்” வாக்குறுதிகள் ஒருபோதும் நம்மை திருப்தியாக்காது. அதற்கு பதிலாக தீமோத்தேயு தனது அடையாளத்தை தேவனில் வேரூன்ற வேண்டும் என்று பவுல் விரும்பினார்: “போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்" (6:6).

“உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்” (வச. 8) என்று பவுல் கூறும்போது, அவர் “திருப்தியாளர்” என்பது நன்றாய் தெரிகிறது.

உலகம் கொடுக்கும் நிறைவை அடைய நான் தீர்மானிக்கும்போது நான் திருப்தியற்றவனாக இருக்க நேரிடுகிறது. ஆனால் நான் தேவனில் கவனம் செலுத்தி, என்னுடைய இந்த மனநிலையை கைவிடும்போது, என் ஆத்துமா மெய்யான மனநிறைவையும் இளைப்பாறுதலையும் அடைகிறது.

நம்பிக்கையின் வானவில்லைக் கண்டறிதல்

அக்டோபர் விடுமுறையின் போது, நாள்பட்ட வலியுடன் போராடிய நான் சில நாட்கள் அறையிலேயே ஓய்வெடுக்க வேண்டியதாயிருந்தது. வானத்தின் மேகமூட்டம் போல் என் மனநிலை மாறியது. கடைசியாக என் கணவருடன் அருகில் உள்ள கலங்கரை விளக்கத்தை சுற்றிப் பார்த்து மகிழ நான் கிளம்பியபோது, சாம்பல் மேகங்கள் எங்கள் கண்களை மறைத்தன. ஆனாலும், நிழல் படிந்த மலைப்பகுதிகளையும் மந்தமான அடிவானத்தின் சில புகைப்படங்களையும் நான் எடுத்தேன்.

இரவு முழுவதும் மழை பெய்ததால் நான் ஏமாற்றமடைந்து, நான் எடுத்த டிஜிட்டல் புகைப்படங்களை ஒவ்வொன்றாய் பார்த்துக்கொண்டிருந்தேன். பெருமூச்சுடன் என் கணவரிடம் கேமராவைக் கொடுத்தேன். “ஒரு வானவில்!” நான் எடுத்த புகைப்படத்தில், ஒரு மாலை நேர வானவில் பதிவாகியிருந்தது. சோர்வுற்றிருந்த என்னுடைய ஆவியை புதுப்பிக்க தேவன் அருளிய இந்த நம்பிக்கையின் அடையாளத்தை நான் எப்படி தவறவிட்டேன் (ஆதியாகமம் 9:13-16).

உடல் அல்லது உணர்ச்சி ரீதியான பாதிப்புகள் பெரும்பாலும் விரக்தியின் ஆழத்திற்கு நம்மை இழுத்துச் செல்லும். தேவனுடைய பிரசன்னத்திற்காகவும் அவருடைய அளவற்ற வல்லமையையும் நினைவுகூர்ந்து நம் ஆவி புத்துணர்வு அடைய நாம் ஏங்குகிறோம் (சங்கீதம் 42:1-3). நாம் எவ்வளவு இக்கட்டான சூழலுக்குள் கடந்துசென்றாலும், தேவன் நமக்காகவும் மற்றவர்களுக்காகவும் கடந்த காலத்தில் செய்த நன்மைகளை நினைவுகூர்ந்து அவரிடத்தில் நம்முடைய நம்பிக்கையை வைப்போம் (வச. 4-6).

மோசமான அணுகுமுறைகள் அல்லது கடினமான சூழ்நிலைகள் நம் பார்வையை மங்கச் செய்யும் போது, அவரை நோக்கிக் கூப்பிடவும், வேதத்தை வாசிக்கவும், அவரையே முழுமையாய் நம்பவும் தேவன் நம்மை அழைக்கிறார் (வச. 7-11). நாம் தேவனைத் தேடும்போது, இருள் சூழ்ந்த நேரத்தில் வளைந்து நிற்கும் நம்பிக்கையின் வானவில்லை கண்டுபிடிக்க அவர் நமக்கு உதவிசெய்வார்.

பிரித்தெடுத்தல்

1742ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், இங்கிலாந்தின் ஸ்டாஃபோர்ட்ஷையரில், சார்லஸ் வெஸ்லி பிரசங்கித்த நற்செய்திக்கு எதிராக ஒரு கலவரம் வெடித்தது. சார்லஸ_ம் அவரது சகோதரரான ஜானும், பாரம்பரிய திருச்சபை வழக்கங்களை மாற்ற முயற்சித்ததினால், நகர வாசிகளுக்கு அது தவறாய் தெரிந்தது.

ஜான் வெஸ்லி கலவரத்தைப் பற்றி கேள்விப்பட்டதும், அவர் தனது சகோதரருக்கு உதவ ஸ்டாஃபோர்ட்ஷையருக்கு விரைந்தார். கட்டுக்கடங்காத கூட்டம் ஜான் தங்கியிருந்த இடத்தை சூழ்ந்தது. அக்கூட்டத்தின் தலைவர்களை ஜான் நேருக்கு நேர் சந்தித்தார். அவர்களுடன் பட்சமாய் பேசினார். அவர்கள் ஒவ்வொருவரின் கோபமும் தணிந்தது.

ஜான் வெஸ்லியின் சாந்தமான மற்றும் அமைதியான அணுகுமுறை ஒரு முரட்டுத்தனமான கும்பலை அமைதிப்படுத்தியது. ஆனால் அது இவருக்குள் இயல்பாய் ஏற்பட்ட சாந்தம் அல்ல; மாறாக, வெஸ்லி பின்பற்றிய இரட்சகரின் இருதயம் இது. இயேசு, “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்” (மத்தேயு 11:29) என்கிறார். இந்த மென்மையான அணுகுமுறை “மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி” (எபேசியர் 4:2)

இருங்கள் என்று பவுல் அப்போஸ்தலர் நமக்கு விடுத்த சவாலுக்குப் பின்னால் உள்ள மெய்யான சக்தியாக மாறுகிறது. அத்தகைய பொறுமை நமக்கு சாத்தியமற்றதாய் தெரிகிறது. ஆனால் நம்மில் இருக்கும் ஆவியின் கனிகளும், கிறிஸ்துவின் இருதயத்தின் மென்மையும் நம்மை வேறுபிரித்து, இந்த பகைமையான உலகத்தை மேற்கொள்ள நமக்கு உதவுகிறது. நாம் அவ்வாறு செய்யும்போது, “உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார்” (பிலிப்பியர் 4:5) என்ற பவுலின் வார்த்தைகளை நிறைவேற்றுகிறோம்.

அன்பின் ஈகை

ஆயுஷ் தன்னுடைய காலை சிற்றுண்டியை அனுதினமும் அருகில் இருக்கும் கடையில் வாங்குவது வழக்கம். அதேபோன்று ஒவ்வொரு நாளும் தேவையிலிருப்பவர்களின் காலை சிற்றுண்டிக்கான தொகையையும் செலுத்தி, அவர்களை வாழ்த்துமாறு கேஷியரிடம் சொல்லுவதும் வாடிக்கை. அந்த உதவியை பெறுபவர்களுக்கும் ஆயுஷ_க்கும் நேரடியான தொடர்பு ஏதும் இல்லை. உதவியைப் பெற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் அவர் பார்ப்பதில்லை. இதை அவரால் செய்ய முடிந்த சிறிய உதவி என்று அவர் நம்புகிறார். இருப்பினும் தன்னுடைய உள்ளுர் பத்திரிக்கை ஆசிரியருக்கு வந்த முகவரியில்லாத ஒரு கடிதத்தை படித்தபோது, அவருடைய செய்கையின் தாக்கத்தை அவர் அறிந்துகொண்டார். தன்னுடைய வாழ்க்கையை மாய்த்துக்கொள்ள எண்ணிய ஒரு நபரின் தீர்மானத்தை அவருடைய அந்த சிறிய உதவி எப்படி மாற்றியது என்பதை அவர் கண்டறிந்தார்.

ஆயுஷ் எந்த ஒரு பலனையும் எதிர்பார்க்காமல் யாரோ ஒருவருக்கு காலை உணவை பரிசளிக்கிறார். அதின் பாதிப்பையும் அவர் பார்க்க நேர்ந்தது. இயேசு, “உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது” (மத்தேயு 6:3) என்று சொல்லுகிறார். ஆயுஷ் செய்தது போல, அங்கீகாரத்தை எதிர்பார்க்காமல் உதவிசெய்யுமாறு அவர் நம்மை உற்சாகப்படுத்துகிறார்.
மற்றவர்களின் பாராட்டுகளை எதிர்பார்க்காமல், தேவன் மீதுள்ள அன்பினால் நாம் செய்யும் சிறியதோ அல்லது பெரிய உதவியோ, அதைப் பெறுபவர்களுக்கு நிச்சயமாய் அது உதவும் என்று நாம் உறுதியாக நம்பலாம்.