நாங்கள் உடைந்து போவதில்லை
நான் கலிபோர்னிய குடிமகன். வெப்பமான அனைத்தையும் விரும்புபவன், குளிரான எல்லா பொருட்களையும் விட்டு விலகுபவன். ஆனாலும் பனிச்சூழலைக் காட்டும் அழகிய புகைப்படங்களை ரசிப்பவன். எனவே, இல்லினாய்ஸ்ஸிலிருக்கும் எனது நண்பன், அவன் ஜன்னலருகே வைத்திருந்த ஒரு மரக்கன்று குளிர்காலத்தில் தோன்றும் காட்சியைப் படம் பிடித்து அனுப்பியிருந்ததைப் பார்த்துச் சிரித்தேன். நான் அதைப் பார்த்து பாராட்டுவதை விட்டு விட்டு வருத்தத்திற்குள்ளானேன். ஏனெனில், அந்த இளம் மரத்தின் முடிச்சுகளான இலையற்ற கிளைகள், வெண்ணிற பனியின் எடையினால் தாழ்ந்து கிடந்தன.
எவ்வளவு காலம் இந்த வளைந்த கிளைகள் பழுவான பனியைத் தாங்கிக் கொண்டு உடைந்து போகாமல் இருக்க முடியும்? இந்த எடை எப்பொழுது வேண்டுமானாலும் இம்மரத்தின் கிளையை உடைத்து விடலாம் என பயமுறுத்திக் கொண்டிருந்தது. இந்த காட்சி, கவலையின் பாரத்தினால் தொங்கிப் போன எனது தோள்களை நினைவுபடுத்தியது.
மிகப் பெரிய பொக்கிஷங்கள் யாவும் இந்த உலகத்திற்குரியதல்ல, அவை நிலையானவை அல்ல என இயேசு உறுதியாகக் கூறி, உங்களுடைய கவலையின் எண்ணங்களை விட்டு விடுங்கள் என்கிறார். இவ்வுலகைப் படைத்து, அதைப் பாதுகாத்து வருபவர் அவருடைய பிள்ளைகளை நேசித்து அவர்களுக்குத் தேவையானவற்றைக் கொடுப்பது அதிக நிச்சயம். எனவே நாம் நம்முடைய விலையேறப்பெற்ற நேரத்தைக் கவலையில் செலவழிக்க வேண்டாம். தேவன் நம் தேவைகளையறிவார். அவர் நம்மை கவனித்துக் கொள்வார் (மத். 6:19-32).
ஆனால் நாம் கவலைகளுக்குள்ளாக இழுக்கப்படுகிறோம் என்பதையும் அவர் அறிவார். அவர் நம்மை முதலாவது அவரிடம் வரும்படி அழைக்கிறார். அவருடைய பிரசன்னத்தையும் நம்புங்கள் என்கிறார். உங்களுடைய அந்தந்த நாளின் தேவைகளை அவர் பார்த்துக் கொள்வார். ஒவ்வொரு நாளும் விசுவாசத்தில் வாழுங்கள் என்கிறார் (வச. 33-34).
இவ்வுலக வாழ்வில் நம் தோள்களை தொங்கச் செய்யும், நம்மை மேற்கொள்ளும் சோதனைகளையும் நிலையற்ற காரியங்களையும் நாம் சந்திக்கின்றோம். நம் கவலையின் பாரத்தினால் தற்காலிகமாக வளைந்து போகலாம். ஆனால் நாம் தேவனை நம்பும் போது நாம் உடைந்து போவதில்லை.
பயமில்லாமல் கொடுத்தல்
என்னுடைய மகன் சேவியர் ஆறு வயதாயிருக்கையில் என்னுடைய சிநேகிதி தன்னுடைய தத்தித் தத்தி நடக்கும் குழந்தையைக் கூட்டிக் கொண்டு எங்கள் வீட்டிற்கு வந்திருந்தாள். சேவியர் தன்னுடைய விளையாட்டுப் பொருட்களில் சிலவற்றை அச்சிறுவனுக்குக் கொடுக்க விரும்பினான். சேவியரின் இந்த பெருந்தன்மையை நினைத்து நான் பெருமிதம் அடைந்தேன். அவன் பஞ்சடைக்கப்பட்ட மிருக பொம்மையொன்றைக் கொடுக்க முன் வந்தபோது, அப்பொம்மையை வாங்குவதற்கு என் கணவர் எத்தனை இடங்களுக்குச் சென்று அநேகக் கடைகளைத் தேடி அலைந்து வாங்கி வந்ததை நினைத்தேன். இப்படி கிடைப்பதற்கரிய அந்த பொம்மையை என் சிநேகிதியும் தாழ்மையுடன் நிராகரித்தாள். ஆனால் சேவியர் அந்த பரிசை சிறுவனின் கரங்களில் வைத்து என்னுடைய தந்தை எனக்கு நிறைய பொம்மைகளை பகிர்ந்து கொள்ளும்படி கொடுத்துள்ளார் என்றான்.
சேவியர் தன்னுடைய கொடுப்பதின் உறுதியை என்னிடமிருந்தே கற்றுக் கொண்டாலும் நான் தேவனிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் பெற்ற வளங்களை இறுகப் பற்றிக் கொள்பவளாக இருக்கின்றேன். ஆனால் என்னுடைய பரலோகத் தந்தை எனக்குத் தேவையான யாவற்றையும் எனக்குத் தருகிறார். எனவே நான் சுலபமாக பகிர்ந்து கொள்ள முடியும்.
பழைய ஏற்பாட்டில் தேவன் தங்களுக்குத் தந்தவற்றில் ஒரு பகுதியை லேவியர்களான ஆசாரியர்களுக்குக் கொடுப்பதன் மூலம் தேவனை நம்பும்படி கட்டளையிட்டார். ஆசாரியர்கள் அவற்றைக் கொண்டு தேவையுள்ளவர்களுக்கு தர வேண்டுமெனவும் கட்டளையிட்டார். ஜனங்கள் கொடுப்பதற்கு மறுத்த போது மல்கியா தீர்க்கதரிசி அவர்கள் தேவனை வஞ்சிக்கிறார்கள் (மல்கி. 3:8-9) எனக் குறிப்பிடுகிறார். ஆனால் அவர்கள் மனப்பூர்வமாய் கொடுக்கும்போது தேவன் வாக்களித்த ஆசீர்வாதங்களையும் பாதுகாப்பையும் பெற்றுக் கொள்வார்கள் என்ற உறுதியில் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றனர் (வச. 10-11) மற்றவர்களும் இவர்கள் பாக்கியவான்களென்பதைத் தெரிந்து கொள்வார்கள் (வச. 12).
நம்முடைய பணம் நம்முடைய திட்டங்கள். தேவன் நமக்களித்த கொடைகள் யாவற்றையும் நாம் கையாண்டாலும் தேவனுக்குக் கொடுத்தல் என்பது ஒரு வகை ஆராதனையாகும். தாராளமாகவும் தைரியமாகவும் கொடுப்பது அன்புள்ள நம் தேவன் பேரிலுள்ள நம்முடைய நம்பிக்கையைக் காட்டுகிறது - அவர் நம்முடைய தாராளமான கொடையாளர்.
வல்லவரும், அணுகக்கூடியவரும்
என்னுடைய தாயாருக்கு புற்றுநோய் என்ற அறிக்கை வந்த போது, என் கணவர் வேலைக்குச் சென்று விட்டிருந்தார். நான் அவருக்கும், சில நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இச்செய்தியைத் தெரியப்படுத்தினேன். என் முகத்தை நடுங்கும் கரங்களால் மூடிக்கொண்டு “எனக்கு உதவும் கர்த்தாவே” என்று விம்மி அழ ஆரம்பித்தேன். நான் முற்றிலும் தனிமையை உணர்ந்த அந்த நேரத்திலேயே தேவன் என்னோடிருந்து என்னைத் தேற்றி, என்னருகில் இருக்கிறார் என்ற உத்திரவாதத்தை எனக்குத் தந்தார்.
என் கணவர் உடனே வீட்டிற்கு வந்தார். என்னுடைய நண்பர்கள் உறவினரின் ஆதரவும் எனக்குக் கிடைத்தது. நான் தேவனுக்கு நன்றி கூறினேன். எங்கெங்கிருந்தும், எவ்வெப்பொழுதும் நாம் அவருடைய உதவியைக் கேட்கும் போது, தயாராகவும் உண்மையுள்ளவராகவும் வந்து நம்மை அமைதிப்படுத்தும் அவருடைய பிரசன்னத்தை, நான் அந்த முதல் சில மணித்துளிகள் தனிமையாக துயருற்றபோது உண்ர்ந்தேன்.
சங்கீதம் 46ல், சங்கீதக்காரன் தேவன் நமக்கு அடைக்கலமும், பெலனும், அனுகூலமான துணையுமானவர் எனத் தெரிவிக்கின்றார். நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் குழப்பமாக இருப்பதை நாம் உணரும் போதும் நாம் நம்பியிருந்த உறுதி யாவும் நொறுக்கப்பட்ட போதும், நாம் பயப்படத் தேவையில்லை (வச. 2-3) தேவன் தள்ளாடுவதில்லை (வச. 4-7). அவருடைய வல்லமை உண்மையும் செயல் திறனுமுள்ளது. (வச. 8-9) அவர் நம்மை முடிவில்லாமல் காப்பவர். அவருடைய மாறாத தன்மையின் மீது நமக்கு நம்பிக்கையைத் தருகிறார் (வச. 10). நமக்கு உறுதியான பாதுகாப்பாக அவர் எப்பொழுதும் நம்மோடிருக்கிறார் (வச. 11).
ஜெபத்தில் ஒருவரையொருவர் தாங்கவும், ஊக்குவிக்கவுமே, தேவனைப் பின்பற்றுகிறவர்களை அவர் உருவாக்கினார். அவர் வல்லவரும், எப்பொழுதும் நமக்கு உதவ ஆயத்தமாயிருக்கிறார் என்ற உறுதியை நமக்களிக்கின்றார். நாம் அவரை நோக்கிக் கூப்பிடும் போது நமக்கு உதவி செய்ய, அவருடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார் என நாம் அவரை நம்பலாம். அவருடைய பிள்ளைகள் மூலமாயும், அவருடைய பிரசன்னத்தாலும் அவர் நம்மைத் தேற்ற வல்லவராயிருக்கிறார்.
கடனை நீக்குபவர்
என்னுடைய மருத்துவ கட்டணத்தைப் பார்த்தபோது, என் கண்ணீரை நான் அடக்க முடியவில்லை. என் கணவர் நீண்ட நாட்கள் வேலையில்லாமல் இருந்து, பின்னர் மிகவும் குறைக்கப்பட்ட சம்பளத்தில் வேலைபார்க்கும் நிலையில் இருக்கிறார். இந்த மருத்துவச் செலவில் பாதியினைக் கூட மாதத் தவணையாக அநேக வருடங்களுக்கு கொடுக்க வேண்டிய நிலையில் இருந்தேன். நான் மருத்துவரின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, என்னுடைய சூழ்நிலையை விளக்கி, பணத்தைச் செலுத்தக் கூடிய ஒரு திட்டத்தைக் குறித்துக் கேட்பதற்கு முன்னர் ஜெபம் பண்ணினேன்.
தொலைபேசியில் சிறிது நேரம் என்னைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு, அந்த வரவேற்பாளர், என்னுடைய மருத்துவக்கணக்கு அத்தனையையும் மருத்துவர் நீக்கிவிட்டதாகத் தெரிவித்தார்.
நான் எனது நன்றியைத் தெரிவித்தேன். தாராளமான இந்த நன்கொடையால் என் உள்ளத்தில் நன்றியுணர்வு மேற்கொண்டது. தொலைபேசியை வைத்தவுடன் நான் தேவனைத் துதித்தேன். நான் அந்த கட்டணச்சீட்டைப் பத்திரப்படுத்த எண்ணினேன். நான் எவ்வளவு கடன்பட்டிருந்தேன் என்பதை நினைவுபடுத்த அல்ல, தேவன் எனக்கு எவ்வளவு செய்திருக்கிறார் என்பதை நினைத்துக்கொள்ளவே.
என்னுடைய மருத்துவர் என் கடன் முழுவதையும் மன்னித்துவிட்டதைப் போல, தேவன் என்னால் செலுத்த முடியாத கடனாகிய பாவத்தை மன்னிக்கத் தெரிந்து கொண்டார் என்பதை நினைத்துக் கொண்டேன். தேவன், “கரிசனையுள்ளவர், கிருபையுள்ளவர், மாறாத அன்புடையவர்” (சங். 103:8). அவர் நம்முடைய பாவங்களுக்குத் தக்கதாக நமக்கு செய்யாமல் இருக்கிறார் (வச. 10), “மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார்” (வச. 12) என வேதாகமம் நமக்கு உறுதியளிக்கிறது. நாம் மனம் திரும்பி இயேசுவை நமது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டால், அவருடைய தியாகம் நம்முடைய பாவத்திற்கான கடனை முற்றிலுமாக நீக்கிவிடுகிறது.
ஒருமுறை மன்னிப்பைப் பெற்ற பின்பு, நாம் நமது முந்திய கடனைக் குறித்து குற்றப்படுத்தப்படமாட்டோம். நம்முடைய தேவனின் மனப்பூர்வமான பரிசுக்கும் அவர் நமக்கு செய்த யாவற்றிற்கும் ஈடாக நம்முடைய அர்ப்பணிப்போடுள்ள ஆராதனையையும், நன்றியுள்ள பாசத்தையும் அவருக்குக் கொடுத்து, அவருக்காக வாழ்ந்து அவரின் அன்பைப் பிறரோடு பகிர்ந்து கொள்வோம்.
விசுவாசத்தைக் கட்டும் நினைவலைகள்
இசையால் நிறைந்திருந்த பரிசுத்த ஸ்தலத்தில் நான் நுழைந்தபோது, புது வருஷத்தைக் கொண்டாட புத்தாண்டிற்கு முந்தையநாள் அங்கு வந்திருந்தவர்களைச் சுற்றிப் பார்த்தேன். கடந்த ஆண்டு நாங்கள் ஏறெடுத்த ஜெபங்களை நான் நினைத்த பொழுது சந்தோஷம் என் இருதயத்தை நம்பிக்கையால் துள்ளப்பண்ணிற்று. சபையாக நாங்கள், வழிதவறிப்போன பிள்ளைகள், அருமையானவர்களின் மரணம், வேலையிழப்பு, முறிந்த உறவுகள் ஆகிய வற்றால் துக்கப்படுகிறவர்களுக்காக ஜெபித்தோம். தேவனுடைய கிருபையால் மனந்திரும்பினவர்கள், உறவுகள் மறுபடியும் சீராக்கப்பெற்றவர்கள்… போன்றவர்களையும் நினைத்தோம். வெற்றிகள், திருமணங்கள், பட்டம்பெற்றது, தேவசபையில் இணைக்கும் ஞானஸ்நானங்கள் ஆகியவற்றையும் நாங்கள் கொண்டாடினோம். தத்தெடுக்கப்பட்ட மற்றும் பிறந்த குழந்தைகள் அர்பணிக்கப்பட்ட குழநதைகளை வரவேற்றோம். இன்னும் இது போன்ற பல காரியங்களை எண்ணி நன்றி கூறினோம்.
எரேமியா தன் சிறுமையையும், தவிப்பையும் (புல. 3:19) நினைத்ததுபோல, நாங்களும் எங்கள் சக குடும்பத்தினர் சந்தித்த பாடுகளின் வரலாற்றை நினைவுகூர்ந்தோம். “நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை” (புல. 3:22) என்பதை நான் விசுவாசித்தேன். தீர்கதரிசி, கடந்தகாலத்தில் தேவனுடைய உண்மையை நினைத்து “தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத்தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர்” (வச. 25) என்ற வார்த்தையினால் தன்னைத் தேற்றிக்கொண்டது, அது என்னையுயம் ஆறுதல்படுத்தினது.
அந்த இரவில், எங்கள் சபையிலுள்ள ஒவ்வொருவரும் வாழ்வை மறுரூபமாக்கும் தேவனுடைய அன்பிற்கு அடையாளமாயிருந்தனர். கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் உறுப்பினர்கள் யாவரும், வரப்போகிற ஆண்டுகளில் எதை சந்திக்க நேர்ந்தாலும், அவரையே சார்ந்திருக்க முடியும். நாம் ஒருவரையொருவர் தாங்கி, தொடர்ந்து தேவனைத் தேடும்பொழுது, எரேமியாவைப் போல நாமும் விசுவாசத்தைக் கட்டும் நினைவுகளால் பெலப்பட்டு, தேவனுடைய மாறாத்தன்மைiயும் நம்முடைய நம்பிக்கையையும் அவர் மீது சார்ந்திருக்கச் செய்வார்.
நித்திய நம்பிக்கை
என் தாயார் இறந்து இரண்டு மாதங்களாகியிருந்தது. கிறிஸ்துமஸூக்கு இன்னும் ஒரு வாரமேயிருந்த நிலையில், வீட்டை அலங்கரிப்பது, கடைக்குச் செல்வது, எனது முன்னுரிமை பட்டியலில் கடைசியாயிருந்தது. எங்கள் குடும்பத்தின் விசுவாசத்தாயின் மரணத்தை இன்றும் நினைத்துக் துக்கத்தில் இருந்தபடியால் என்னை ஆறுதல்படுத்த என் கணவர் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. நான் ஒதுங்கியே இருந்தேன். என் மகன் சேவியர் சீரியல் பல்புகளை வீட்டினுள் தொங்கவிட்டு பிளக்கை சொருகி எரியச் செய்து விட்டு அவனும், அவன் தந்தையும் வேலைக்குப் போய்விட்டார்கள்
அந்த கலர் பல்புகள் விட்டுவிட்டு எரியும்போது, தேவன் என்னை என் இருளிலிருந்து வெளியே கொண்டுவந்தார். தேவனுடைய வெளிச்சம் எனக்குள் வந்தபோது, எவ்வளவு வேதனையான சூழ்நிலையிலிருந்தாலும், அவருடைய மாறாத சத்தியத்தின் வெளிச்சம் அவருடைய மாறாத தன்மையை அப்பொழுதும் அது வெளிப்படுத்திக் காட்டியது.
இக்கட்டான காலையில் தேவன் எனக்கு நினைப்புட்டினதை, 146ம் சங்கீதம் உறுதிப்படுத்தியது. எனக்கு உதவி செய்பவரும், என் வல்லமையும் இரக்கமுள்ள “தேவன் மேலேயே, என் நம்பிக்கை நித்தியகாலமாய் இருக்கும்” (வச. 5). எல்லாவற்றையும் சிருஷ்டித்த அவரே “என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர்” (வச. 6). “அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயம் செய்கிறார்”, நம்மைப் போஷித்துப் பாதுகாக்கிறார் (வச. 7). “மடங்கடிக்கப்பட்டவர்களைக் கர்த்தர் தூக்கிவிடுகிறார்” (வச. 8), “கர்த்தர் காப்பாற்றுகிறார்”, “ஆதரிக்கிறார்” “சதா காலங்களிலும் அரசாளுகிறார்; தலைமுறை தலைமுறையாகவும் ராஜரீகம் பண்ணுகிறார் (வச. 9,10).
கிறிஸ்துமஸ் வரும்பொழுது, சிலவேளைகளில், சந்தோஷம் பொங்கி வழியும், சில வேளைகளில் இழப்பைச் சந்திக்கிறோம், வேதனைப்படுகிறோம் அல்லது தனிமை உணர்வினால் வருந்துகிறோம். ஆனால், எல்லா நேரங்களிலும் அவர் நமது இருளில் வெளிச்சமாயிருந்து, தேவையான உதவிகளைச்செய்து நித்திய நம்பிக்கையாயிருப்பேன் என்று வாக்குப் பண்ணியிருக்கிறார்.
எது நடந்தாலும் தேவனை நம்புவேன்
1992ல் ஏற்பட்ட ஒரு காயத்தினால் எனது மேல் முதுகு தோல்பட்டைகள் மற்றும் கழுத்து பகுதிகளில் அதிக வலியினால் அவதியுற்றேன். அத்தகைய வேதனையில் நம்பிக்கையிழந்த வேளைகளில் தேவனை நம்பிக்கையோடு துதித்தல் என்பது எப்பொழுதும் சுலபமானதல்ல. ஆனால், தேவனுடைய மாறாத பிரசன்னம் என்னைத் தேற்றியது. அவர் என்னை பெலப்படுத்தி அவருடைய மாறாத நன்மையினாலும், அளவற்ற வல்லமையினாலும் தாங்கி நடத்தும் கிருபையினாலும் ஆறுதல்படுத்தினார். சிலவேளை நான் கடவுளை சந்தேகிக்கும் போது, சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களின் திட நம்பிக்கையினால் தைரியப்படுத்தப்பட்டேன். அவர்கள் நம்புவதற்கு ஏதுவில்லாத சூழ்நிலையிலும் தேவனைப் பணிந்து கொண்டு தேவன் அவர்களோடிருக்கிறார் என்று நம்பினார்கள்.
ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எரிகிற அக்கினிச் சூளையின் நடுவில் போடப்படுவீர்கள் என எச்சரித்திருந்தும் அவர்கள் உண்மை தேவனைவிட்டு விட்டு பொற்சிலையை வணங்கவில்லை (தானி. 3:13-15). இந்த மூன்று மனிதரும் தைரியத்தையும் திட நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்கள் (வச. 17). அந்த ஆபத்தான வேளையிலும் தேவன் தங்களை விடுவியாமல் போனாலும்; அவர் ஆராதிக்க உகந்தவரல்ல என்று ஒருபோதும் சந்தேகப்படவில்லை (வச. 18). திட நம்பிக்கையிலிருந்த அவர்களின் தேவையின் போது, தேவன் அவர்களை தனியே விடவில்லை. தேவன் அக்கினிச்சூளையின் நடுவே அவர்களோடிருந்து அவர்களைப் பாதுகாத்தார் (வச. 24-25).
தேவன் நம்மையும் தனியே விடுவதில்லை. நேபுகாத்நேச்சாரின் அக்கினிச்சூளைபோன்ற சோதனைகளின் மத்தியிலும் நம்மோடிருக்கிறார். நித்தியத்தின் மறுபக்கத்தில் (இவ்வுலகில்) ஒரு வேளை நம் வேதனைகள் முடிவில்லாதவைகளாயிருப்பினும், வல்லவரும், நம்பிக்கைக்குரியவரும், நல்லவருமாக தேவன் இருக்கிறார். நாம் அவரின் மாறாத அன்பின் பிரசன்னத்தைச் சார்ந்து கொள்ளுவோமாக.
அற்புத படைப்புகளைப் பார்த்தல்
வில் வித்தைகாரர்கள் தங்கள் அம்புகளை எடுத்துச் செல்வதற்கான அம்பாரத்துனிகளை (அம்புகளை வைக்கும் தோல்பை) என் தந்தை வடிவமைப்பார்கள். சிறந்த தோல் துண்டுகளில் வனவிலங்குகளின் விரிவான வாழ்க்கைச் சித்திரங்களை நேர்த்தியாகச் செதுக்கி, அவற்றை ஒன்றாக இணைத்துத் தைப்பார்கள். ஒருமுறை நான் அங்கு சென்றபோது அவர் கலைப்படைப்பொன்றை செதுக்குவதைப் பார்த்தேன். தன் கைகளினால், கவனமாக கூர்மையான கத்தியைக்கொண்டு, மென்மையான அந்தத்தோலிலே, தேவையான அழுத்தம் கொடுத்து வெவ்வேறு தன்மையில் அழகிய டிசைன்கள் செதுக்குவதைப் பார்த்தேன். அதன்பின் ஒரு துண்டுத் துணியை, சிவப்பு நிறத் சாயமோன்றில் முக்கி எடுத்து அந்தத் தோலின் மேல் பல தடவைகள் ஒரே சீராகப் பூசினார். அது அவருடைய படைப்பின் அழகிற்கு மேலும் அழகு சேர்த்தது.
நான் என் தகப்பனின் திறமைமிக்க கலைநயத்தை வியந்துகொண்டிருக்கையில், என்னிடத்திலும் மற்றவர்களிடத்திலும், என் பரம தகப்பனின் வியத்தகு படைப்பின் கலைத்திறனை இதுவரை பாராட்டாமல் இருந்ததை உணர்ந்தேன். “தேவரீர் என் உள்ளந்திரியங்களையும் உருவாக்குகிறீர். நான் பிரமிக்கத் தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால் உம்மைத் துதிப்பேன்” என்று தாவீது தேவனின் மகத்துவமான சிருஷ்டிப்பின் கைவண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் எழுதியுள்ளதை நினைவு கூர்ந்தேன் (சங். 139:13,14).
நாம் நமது சிருஷ்டிகரை மனஉறுதியுடன் துதிக்கலாம், ஏனென்றால் “அவருடைய கிரியைகள் அதிசயமானவைகள்” நாம் நம்மையும் மற்றவர்களையும் மேன்மையாகக் கருதலாம்; ஏனென்றால் சர்வலோக சிருஷ்டிகர், நம்மை உள்ளும் புறமும் அறிந்திருப்பதோடு நாம் உருவாகும் முன்னரே நமது வாழ்நாளைத் திட்டம்பண்ணி உள்ளார் (வச. 15-16).
என் தகப்பனாரின் திறமைமிக்க காலங்களில் உருவான தனித்தன்மை வாய்ந்த தோல்களைப் போலவே நாமும் விலையுயர்ந்த அழகான படைப்புகள். ஏனென்றால் நம்மைப்போல் இன்னொருவன் கிடையாது! நாம் தேவனின் அற்புதப் படைப்புகளாயிருக்கும்படி, நம் ஒவ்வொருவரையும் தனித்தன்மை உடையவர்களாக உருவாக்கப்பட்டுள்ளோம். இது தேவனுடைய மகத்துவத்தை வெளிப்படுத்துகிறது.
மொத்தத்திற்கும் நம்புங்கள்
நானும் என் கணவனும், எங்களது வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுக்கு முன்பு, விவாகரத்து செய்து கொள்ளலாம் என்று எண்ணியிருந்தோம். ஆனால், தேவனுடைய அன்பிற்கு எங்களை ஒப்புக் கொடுத்து அவருக்கு கீழ்ப்படிந்த பின்பு, நாங்கள் மறுபடியும் ஒருவருக்கொருவர் எங்களை ஒப்புக் கொடுத்தோம். நாங்கள் சிறந்த ஆலோசர்களிடம் ஆலோசனை கேட்டதோடு, பரிசுத்த ஆவியானவர், எங்களைத் தனித்தனியாகவும், கணவன், மனைவியாகவும் சந்தித்து எங்களை மாற்றியமைக்க ஜெபித்தோம். எங்களது பரமபிதா தொடர்ந்து ஒருவரை ஒருவர் சிறந்த முறையில் தொடர்புகொள்ள உதவி செய்கிறார். தேவாதிதேவனை எப்படி நேசிப்பது எப்படி நம்புவது என்று கற்றுத்தருவதோடு என்ன நேரிட்டாலும் ஒருவரை ஒருவர் நேசிக்கவும் கற்றுத் தருகிறார்.
ஆயினும், நாங்கள் எங்களது 25வது வருட திருமண நாளைக் கொண்டாட இருக்கும் வேளையில், எங்களது சோதனைகளில், தேவன் செய்த அனைத்துக் காரியங்களையும். அவ்வப்பொழுது மறந்து விடுகிறேன். சில சமயங்களில் என் உள்ளத்தில் ஆழத்தில் உள்ள நான் அறியாத ஏதோ ஒரு பயம் என்னை ஆட்கொள்கிறது. அதனால், தேவனால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வழிகளை சார்ந்திருக்காமல், தேவையற்ற கவலைகளை அடைகிறேன்.
உபாகமம் 1ம் அதிகாரத்தில், தேவனை எக்காலத்திலும் உறுதிபட நம்பலாம் என்று மோசே உறுதியாகக் கூறியுள்ளார். இஸ்ரவேல் மக்கள் அவர்களது சுதந்திரமான தேசத்தை பெற்று மகிழ்ச்சியடைய முன்னேறிச் செல்லும்படி மோசே அவர்களை ஊக்கப்படுத்தினான் (வச. 21) ஆனால், தேவனுடைய ஜனங்கள் அவர்களது எதிர்காலத்தை அவரிடம் ஒப்புக் கொடுக்கும் முன்பு, அவர்கள் எதைப் பெற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்பதைப் அவர்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டார்கள் (வச. 22-33).
கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களுக்கு பயமும், கவலையும் அடைவதிலிருந்து விதிவிலக்குக் கிடையாது. நாம் சந்திக்க இருக்கும் அல்லது சந்திக்காத கஷ்டங்களைக் குறித்து கவலைப்படுவது, நம்மை விசுவாசத்தை சார்ந்திருப்பதிலிருந்து நம்மை விலக்கி, நமக்கும் தேவனுக்கும், பிறருக்கும் உள்ள உறவை பாதிக்கும். ஆனால், தேவன் கடந்த காலத்தில் நம்முடைய வாழ்க்கையில் உண்மையுள்ளவராக இருந்த உறுதிப்பாட்டை நம்புவதற்கு பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவிசெய்வார். நேற்றும், இன்றும் நாளையும் தேவனுடைய உண்மையான தன்மையின் மேல் நாம் தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் சார்ந்திருக்க ஆவியானவர் நமக்கு உதவி செய்வார்.