எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

சோச்சில் டிக்ஸன்கட்டுரைகள்

பரலோக திருவிருந்து

ஜூலை 20, 1969 அன்று அப்பல்லோ 11இன் ஈகிள் லூனார் மாட்யூல் முதன்முதலில் சந்திரனில் மனிதர்களை தரையிறக்கியபோது, விண்வெளி பயணிகள் சந்திரனின் மேற்பரப்பில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு தங்கள் விமானத்திலிருந்து மீண்டு வர நேரம் எடுத்தனர். விண்வெளி வீரர் பஸ் ஆல்ட்ரின், அப்பம் மற்றும் திராட்சை ரசத்தைக் கொண்டு வர அனுமதி பெற்றார். அங்ஙனம் அவர் கர்த்தருடைய பந்தியை ஆசரித்தார். வேதத்தைப் படித்த பிறகு, சந்திரனில் உண்ட முதல் உணவாய் கர்த்தருடைய பந்தியை ஆசரிப்பார். அவர் “எங்கள் தேவாலயம் எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் திராட்சை ரசத்தை ஊற்றினேன்; நிலவின் ஆறில் ஒரு பங்கு ஈர்ப்பில் திராட்சரசம் மெதுவாகவும் அழகாகவும் கோப்பையின் பக்கமாக மிதந்தது" என்று எழுதுகிறார். ஆல்ட்ரின் இந்த பரலோக திருவிருந்தை அனுபவித்தபோது, அவரது நடவடிக்கைகள், சிலுவையில் கிறிஸ்துவின் தியாகம் மற்றும் அவரது இரண்டாவது வருகையின் மீதான அவரது நம்பிக்கையை பிரதிபலித்தது.

அப்போஸ்தலனாகிய பவுல், “அவர் காட்டிக்கொடுக்கப்பட்ட இரவில்” (1 கொரிந்தியர் 11:23) தம் சீஷர்களுடன் இயேசு எப்படி அமர்ந்திருந்தார் என்பதை நினைவில் கொள்ளும்படி நம்மை ஊக்குவிக்கிறார். கிறிஸ்து விரைவில் பிட்கப்படப்போகிற தன்னுடைய சரீரத்தை அப்பத்துடன் ஒப்பிட்டார் (வச.24). அவர் சிலுவையில் சிந்தப்பட்ட இரத்தத்தின் மூலம் நமது மன்னிப்பையும் இரட்சிப்பையும் உறுதிப்படுத்திய “புதிய உடன்படிக்கையின்” அடையாளமாக திராட்சை ரசத்தை அறிவித்தார் (வச.25). எப்பொழுதும், எங்கும் நாம் திருவிருந்தை எடுத்துக்கொண்டாலும், இயேசுவின் பலியின் உண்மையின் மீதுள்ள நம்பிக்கையையும், அவருடைய வாக்குறுதியளிக்கப்பட்ட இரண்டாம் வருகையின் மீதான நம்பிக்கையையும் நாம் அறிவிக்கிறோம் (வச. 26).

நாம் எங்கிருந்தாலும் பரவாயில்லை, உயிர்த்தெழுந்தவரும் மீண்டும் வரப்போகிறவருமான ஒரே மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையை கொண்டாடலாம்.

தேவனின் நிறைவான ஆசீர்வாதம்

திருச்சபையின் பலசரக்கு வாகனத்திலிருந்து மளிகைப் பொருட்களை இறக்க உதவுவதற்காக மூன்று வயது சிறுவனும் அவனது அம்மாவும் ஒவ்வொரு வாரமும் திருச்சபைக்குச் சென்றனர். பலசரக்கு வாகனம் பழுதாகிவிட்டது என்று அவனது அம்மா, பாட்டியிடம் கூறுவதை சிறுவன் கேட்டான். “ஐயோ, அவர்கள் இனி எப்படி பலசரக்குக் கொண்டு வருவார்கள்?” என்று சிறுவன் கேட்க, ஒரு புதிய வாகனம் வாங்குவதற்கு திருச்சபை பணம் திரட்ட வேண்டும் என்று அவனுடைய அம்மா விளக்கினார். சிறுவன் சிரித்தான். “என்னிடம் பணம் இருக்கிறது,” என்று சொல்லிக்கொண்டே அந்த அறையை விட்டு வெளியேறினான். வண்ணமயமான ஸ்டிக்கர்களால் அலங்கரிக்கப்பட்டு நாணயங்களால் நிறைந்திருந்த பிளாஸ்டிக் ஜாடியுடன் அவன் திரும்பி வந்தான். அதில் தோராயமாக 2500 ரூபாய்க்கு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. சிறுவனிடம் அதிகம் இல்லையென்றாலும், திருச்சபையின் நடவடிக்கைகள் தடைபடாமல் இருக்கும்பொருட்டு, திருச்சபையின் புதிய குளிர்பதன வாகனத்தை வாங்குவதற்கு தேவன் அந்த பணத்தையும் மற்றவர்களுடைய ஊக்கமான காணிக்கைகளோடு சேர்த்துக்கொண்டார்.

உற்சாகமாய் கொடுக்கப்படுகிற சிறிய தொகையானது, தேவனுடைய கரத்தில் வைக்கப்படும்போது, எப்போதும் தேவைக்கு அதிகமானதாய் மாறுகிறது. 2 இராஜாக்கள் 4 இல், ஒரு ஏழை விதவை எலிசா தீர்க்கதரிசியிடம் பொருளாதார உதவி கேட்கிறார். அவளிடம் என்ன இருக்கிறது என்று எலிசா தெரிந்துகொண்டு, அவளது அண்டை வீட்டாரிடத்திலிருக்கும் பாத்திரங்களை வாங்கி வரும்படி சொல்லுகிறார் (வச. 1-4). அவள் சேகரித்த ஜாடிகளில் அவளிடமிருந்த எண்ணெயை கொஞ்சமாய் வார்க்க, தேவன் அவள் வீட்டிலிருந்த அனைத்து பாத்திரங்களையும் எண்ணெயால் நிரப்புகிறார் (வச. 5-6). எலிசா அவளிடம், “நீ போய் அந்த எண்ணெயை விற்று, உன் கடனைத் தீர்த்து, மீந்ததைக்கொண்டு நீயும் உன் பிள்ளைகளும் ஜீவனம்பண்ணுங்கள் என்றான்” (வச. 7).

நம்மிடம் இல்லாதவற்றில் நாம் கவனம் செலுத்தும்போது, நம்மிடம் இருப்பதைக் கொண்டு தேவன் செய்யும் பெரிய காரியங்களை நாம் இழக்கும் அபாயம் ஏற்படுகிறது.

நம்பிக்கையின் வானவில்லைக் கண்டறிதல்

அக்டோபர் விடுமுறையின் போது, நாள்பட்ட வலியுடன் போராடிய நான் சில நாட்கள் அறையிலேயே ஓய்வெடுக்க வேண்டியதாயிருந்தது. வானத்தின் மேகமூட்டம் போல் என் மனநிலை மாறியது. கடைசியாக என் கணவருடன் அருகில் உள்ள கலங்கரை விளக்கத்தை சுற்றிப் பார்த்து மகிழ நான் கிளம்பியபோது, சாம்பல் மேகங்கள் எங்கள் கண்களை மறைத்தன. ஆனாலும், நிழல் படிந்த மலைப்பகுதிகளையும் மந்தமான அடிவானத்தின் சில புகைப்படங்களையும் நான் எடுத்தேன்.

இரவு முழுவதும் மழை பெய்ததால் நான் ஏமாற்றமடைந்து, நான் எடுத்த டிஜிட்டல் புகைப்படங்களை ஒவ்வொன்றாய் பார்த்துக்கொண்டிருந்தேன். பெருமூச்சுடன் என் கணவரிடம் கேமராவைக் கொடுத்தேன். “ஒரு வானவில்!” நான் எடுத்த புகைப்படத்தில், ஒரு மாலை நேர வானவில் பதிவாகியிருந்தது. சோர்வுற்றிருந்த என்னுடைய ஆவியை புதுப்பிக்க தேவன் அருளிய இந்த நம்பிக்கையின் அடையாளத்தை நான் எப்படி தவறவிட்டேன் (ஆதியாகமம் 9:13-16).

உடல் அல்லது உணர்ச்சி ரீதியான பாதிப்புகள் பெரும்பாலும் விரக்தியின் ஆழத்திற்கு நம்மை இழுத்துச் செல்லும். தேவனுடைய பிரசன்னத்திற்காகவும் அவருடைய அளவற்ற வல்லமையையும் நினைவுகூர்ந்து நம் ஆவி புத்துணர்வு அடைய நாம் ஏங்குகிறோம் (சங்கீதம் 42:1-3). நாம் எவ்வளவு இக்கட்டான சூழலுக்குள் கடந்துசென்றாலும், தேவன் நமக்காகவும் மற்றவர்களுக்காகவும் கடந்த காலத்தில் செய்த நன்மைகளை நினைவுகூர்ந்து அவரிடத்தில் நம்முடைய நம்பிக்கையை வைப்போம் (வச. 4-6).

மோசமான அணுகுமுறைகள் அல்லது கடினமான சூழ்நிலைகள் நம் பார்வையை மங்கச் செய்யும் போது, அவரை நோக்கிக் கூப்பிடவும், வேதத்தை வாசிக்கவும், அவரையே முழுமையாய் நம்பவும் தேவன் நம்மை அழைக்கிறார் (வச. 7-11). நாம் தேவனைத் தேடும்போது, இருள் சூழ்ந்த நேரத்தில் வளைந்து நிற்கும் நம்பிக்கையின் வானவில்லை கண்டுபிடிக்க அவர் நமக்கு உதவிசெய்வார்.

புயலை தகர்க்கும் நம்பிக்கை

2021ஆம் ஆண்டின் வசந்தகாலத்தில் டெக்ஸாஸில், சூழல்காற்றின் அருகே தோன்றிய வானவில்லின் காணொலிகளையும், புகைப்படங்களையும் ஆர்வலர்கள் பதிவுசெய்திருந்தனர். அதில் ஒரு காணொலியில், நீண்ட கோதுமை கதிரின் தண்டுகள் காற்றின் வீரியத்தால் வளைந்திருந்தன, கருவானத்தை துண்டாடிய வானவில், சுழல்காற்றுக்கு முன் கெம்பிரமாய் நின்றது. இன்னொரு காணொலியில், பாதசாரிகள் சாலையின் ஓரத்தில் நின்றுகொண்டு புனல் வடிவ மேகத்தின் அருகே இருந்த அந்த நம்பிக்கையின் சின்னத்தை பார்த்துக்கொண்டிருந்தார்கள். 

சங்கீதம் 107இல் சங்கீதக்காரன், கடினமான தருணங்களில் தேவனிடத்திற்கு திரும்பும்படிக்கு நமக்கு நம்பிக்கைக் கொடுத்து உற்சாகப்படுத்துகிறார். அந்த புயலின் நடுவில் இருப்பவர்களின் “ஞானமெல்லாம் முழுகிப்போகிறது” (வச. 27) என்று விவரிக்கிறார். “அப்பொழுது தங்கள் ஆபத்திலே அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார்” (வச. 28). 

வாழ்க்கையில் புயல் போன்ற சூழ்நிலைகள் ஏற்படும்போது நம்பிக்கையோடு செயல்படுவதற்கு தேவனுடைய பிள்ளைகள் தடுமாறுவார்கள் என்பதை தேவன் அறிவார். நம்முடைய பாதை இருளாயிருக்கும்போது, அவருடைய நன்மைகளை நினைவுகூருதல் அவசியம். 

உணர்வு ரீதியான புயலோ, மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்த கூடிய ஒன்றோ நம் வாழ்வை கலங்கடிக்கும்போது, தேவன் அதையே அமர்ந்த மெல்லிய சத்தமாய் மாற்றி நம்மை பாதுகாப்பாய் வழிநடத்துவார் (வச. 29-30). நாம் எதிர்பார்த்த நேரத்தில் நமக்கு நன்மை கிட்டவில்லையென்றாலும், அவர் கொடுத்த வாக்குத்தத்தங்களில் அவர் உண்மையுள்ளவர் என்று அவரையே நம்புவோம். எப்பேர்ப்பட்ட புயலையும் தகர்க்க அவர் என்றென்றும் நம்பத்தக்கவரே.

பகிர்வதற்கு ஏற்றது

நான் இயேசுவை ஏற்றுக்கொண்ட பின்பு, எனது தாயாருக்கு சுவிசேஷம் அறிவித்தேன். இயேசுவை ஏற்றுக்கொள்வர் என நான் எதிர்பார்க்க, அவரோ ஒருவருடமாய் என்னோடு பேசவில்லை. கிறிஸ்தவர்களுடன் அவருக்கு ஏற்பட்ட சில மனவருத்தத்தினால், அவர்களை அவர் நம்புவதில்லை. அவருக்காய் நான் ஜெபித்து, வாராவாரம் அவரை சந்தித்தேன். பரிசுத்த ஆவியானவர் என்னை தேற்றினார். தாயாரோ மௌனமாகவே இருந்தார். கடைசியாய் அவர் என் தொலைபேசி அழைப்பிற்கு பதிலளிக்க துவங்க, நான் அவரை நேசிக்கவும், வாய்ப்பு கிட்டும்போதெல்லாம் அவருக்கு இயேசுவைக் குறித்து சொல்ல ஆரம்பித்தேன். நாங்கள் ஒப்புரவாகி, சில மாதங்களுக்கு பின், நான் மாறிவிட்டதாக என் தாயார் கூறினார். ஏறத்தாழ ஒரு வருடம் கழித்து, என் தாயார் இயேசுவை ஏற்றுக்கொண்டார். அதினால் எங்கள் உறவு இன்னும் ஆழமானது.
கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்து என்னும் மேன்மையான பரிசு கொடுக்கப்பட்டுள்ளது. பவுல் அப்போஸ்தலர், “அவரை அறிகிற அறிவின் வாசனையை” (2 கொரிந்தியர் 2:14) பிரசித்தப்படுத்தவேண்டும் என்று அறிவுறுத்துகிறார். அதாவது சுவிசேஷத்தைக் கேட்கிறவர்களுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறவர்கள் கிறிஸ்துவின் சுகந்த வாசனையாய் இருக்கிறார்கள் என்றும் அதை நிராகரிப்பவர்கள் மரணத்தைத் தெரிந்துகொள்ளுகிறார்கள் என்றும் அறிவிக்கிறார் (வச.15-16).
நாம் இயேசுவை ஏற்றுக்கொண்ட பின்பு, மற்றவர்களை நேசித்து அவர்களின் வாழ்வை மாற்றக்கூடிய சத்தியத்தை பறைசாற்றும் பாக்கியத்தை நாம் பெற்றிருக்கிறோம். கடினமான மற்றும் தனிமையான தருணங்களிலும் கூட நம் தேவையை அவர் சந்திப்பார் என்று நாம் அவரை நம்பலாம். எந்த விளைவுகளை ஏற்படுத்தினாலும் சரி, சுவிசேஷத்தை பகிர்வது எப்போதுமே ஏற்றது

அன்புசெய்ய துணியலாம்

காரணமேயின்றி என் தோழி எங்கள் பத்தாண்டுகால நட்பை முறித்தபோது, ஜனங்களிடம் நெருங்கிப் பழக தடுமாறும் என் பழைய பழக்கத்திற்கு மீண்டும் திரும்பினேன். என் துயரத்தில் பழகிக் கொண்டிருக்கையில், சி.ஸ்.லூயிஸ் எழுதிய “தி ஃபோர் லவ்ஸ்” (The Four Loves) என்ற புத்தகத்தை சிதைந்த நிலையில் என் அலமாரியிலிருந்து எடுத்தேன். அதில் லூயிஸ், அன்பானது பாதிப்புக்குள்ளாக்கப்பட வேண்டியதே என்ற ஆழமான சிந்தனையைச் சொல்கிறார். ஒருவர் அன்புகாட்ட துணியும்போது அவருக்கென்று “பாதுகாப்பான முதலீடு என்று ஒன்றுமில்லை” என்கிறார். ஒருவர் ஒன்றை நேசிக்கையில், அவர் இருதயம் காயப்படும், உடையும் என்று அவர் குறிப்பிடுகிறார். இதை வாசித்தபின், பேதுரு தன்னை மூன்றுமுறை மறுதலித்த பின்னரும் (யோவான் 18:15-27), இயேசு தம் உயிர்தெழுதலுக்கு பின், மூன்றாம் முறை தம் சீஷருக்கு தரிசனமானதை (யோவான் 21-1-14) வாசிக்கும் என் அணுகுமுறையை முற்றிலும் மாற்றியது. இயேசு, “யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார்” (21:15).

மறுதலிக்கப்பட்ட பின்னரும் இயேசு பேதுருவிடம், துணிவோடு பேசினார்; தயங்கவில்லை. சுயநலமில்லாமல் உறுதியாய் பேசினார். அதில் பெலவீனமோ, விரக்தியோ இல்லை. அன்புகாட்ட தாம் விரும்புவதை உறுதிப்படுத்துவதற்கு, அவர் கருணையை வெளிக்காட்டினாரேயன்றி கோபத்தையல்ல.

“என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு” (வச. 17) என்று வேதம் சொல்லுகிறது. ஆனால் பேதுரு தம்மை பின்பற்றுவதின் மூலமும் (வச. 19), மற்றவர்களை நேசிக்கும்படியாய் சொல்லும்போதும் (வச. 15–17), அவர் தம்முடைய சீஷர்கள் அனைவரையும் நிபந்தனையின்றி நேசிக்க பொதுவாக அழைப்புக் கொடுக்கிறார். “நீ என்னை நேசிக்கின்றாயா?” என்று இயேசு கேட்கையில், அதற்கு நாம் ஒவ்வொரும் பதிலளிக்க வேண்டும். நம் பதிலே நாம் பிறரை நேசிக்கும் விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

தேவனின் பேரன்பு

என் தோழி, வாலிப பெண்களுக்கான கருத்தரங்கு ஒன்றில் பரிசுத்தத்தைக் குறித்து பேசுமாறு என்னை கேட்க, நான் மறுத்துவிட்டேன். என் வாலிப பிராயத்தில் என் வீட்டை விட்டு வெளியேறிய நான், பல ஆண்டுகளாக என் ஒழுங்கீனத்தால் காயப்பட்டிருந்தேன். திருமணத்தின் பின், முதல் குழந்தை கருச்சிதைவுற்ற வேளையில், தேவன் என் கடந்தகால பாவங்களுக்காக என்னை தண்டிக்கிறார் என எண்ணினேன். இறுதியாக முப்பதாம் வயதில், என் வாழ்வை கிறிஸ்துவிடம் அர்பணித்தபோது, என் பாவங்களை அறிக்கையிட்டு மனந்திரும்பினேன். இருப்பினும், குற்றமனசாட்சியும் அவமானமும் என்னைத் தொடர்ந்தது. தேவனின் மகா அன்பின் ஈவை நானே முழுமையாக பெற்றுக்கொள்ளாதபோது, அவரின் கிருபையைக் குறித்து பிறரோடு நான் எப்படி பேசுவது? ஆண்டுகள் நகர, என்னை என் குற்றமனசாட்சியில் கட்டிவைத்திருந்த என்னுடைய பழைய பாவங்களைக் குறித்த பொய்களை தேவன் மாற்றினார். கிருபையாக மன்னிப்பைப் பெற்றுக்கொண்டேன்.

நம்முடைய பாடுகளினாலும், கடந்தகால பாவங்களின் விளைவுகளினாலும் நாம் புலம்புவதை தேவன் அறிவார். எனினும், தம் ஜனங்கள் விரக்தியிலிருந்து மீண்டு, பாவங்களிலிருந்து திரும்பி, அவரின் மகா கிருபை, இரக்கம், மற்றும் உண்மைத்துவத்தில் (புலம்பல் 3:19-23) நம்பிக்கை வைக்க பெலன் தருகிறார். தேவனே நம் பங்கும், நம் நம்பிக்கையும், இரட்சிப்புமாய் உள்ளார் என்று (வச. 24-26) வேதம் சொல்கிறது. அவர் நல்லவர் என்பதை நாம் நம்பப் பழகுவோம்.
உருக்கமான நம் தகப்பன் தன் வாக்குறுதிகளை நம்ப நமக்கு உதவுகிறார். அவருடைய பெரிதான அன்பை நாம் ருசிக்கையில், அவருடைய கிருபையின் நற்செய்தியை நாம் பறைசாற்றலாம்.

தேவன் எங்கே?

வால்டோ எங்கே?’ (Where’s Waldo?) என்னும் பிரபல சிறுவர் தொடர் புத்தகத்தில், நாம் கண்டுபிடிக்கவேண்டிய கதாபாத்திரம், சிவப்பு மற்றும் வெள்ளை கோடிட்ட சட்டை, தொப்பி, நீலநிற ஜீன்ஸ், பழுப்பு பூட்ஸ் மற்றும் கண்ணாடி அணிந்திருக்கும். அந்த விளையாட்டை வடிவமைத்தவர், உலகின் பல்வேறு இடங்களில், கூட்டநெரிசலாலான மற்ற கதாபாத்திரங்களுக்கு நடுவில் இந்த வால்டோவை திறமையாய் ஒளித்து வைத்திருப்பார். வால்டோவைக் கண்டிபிடிப்பது அவ்வளவு சுலபமல்ல; ஆனால் வாசகர்கள் அவரை நிச்சயமாய் கண்டுபிடிக்க முடியும் என்று அதை உருவாக்கியவர் உறுதியளிக்கிறார். தேவனைக் கண்டுபிடிப்பது இந்த புதிர்புத்தகத்தில் வால்டோவைக் கண்டுபிடிப்பது போலில்லை என்றாலும், அவரை நாம் கண்டுபிடிக்க முடியும் என்று நம்முடைய சிருஷ்டிகரும் வாக்களித்துள்ளார். 

சிறையிருப்பில், அந்நியர்களாய் வாழ்வது எப்படி என்பதை எரேமியா தீர்க்கதரிசியின் மூலம் தேவன் அறிவுறுத்தினார் (எரேமியா 29:4-9). அவருடைய திட்டத்தின்படி, அவர்களை மீட்கும் காலமட்டும் அவர்களை பாதுகாப்பதாக தேவன் வாக்களித்திருக்கிறார் (வச.10-11). அவருடைய வாக்கை நிறைவேற்றுவதின் மூலம், ஜெபத்தில் இஸ்ரவேலர்களுடைய அர்ப்பணிப்பு ஆழமாகும் என தேவன் உறுதியளிக்கிறார் (வச.12).

கிறிஸ்துவின் ஆவியின் மூலம் இன்று தேவன் தன்னை வெளிப்படுத்தினாலும், உலகத்தின் பரபரப்பான சூழ்நிலையில் நம்முடைய கவனம் எளிதாய் சிதற நேரிடுகிறது. சிலவேளைகளில் தேவன் எங்கே? என்று கூட கேட்க நேரிடுகிறது. ஆனால் சிருஷ்டிகரும், பராமரிக்கிறவுமாகிய தேவனை முழு இருதயத்தோடு தேடுகிறவர்கள் அவரைக் கண்டடைவார்கள் என்று தேவனே அறிவிக்கிறார். 

நாம் எல்லோரும் ஒன்றே

சிறிய விவசாய சமூகத்தில் செய்தி வேகமாக பரவுகிறது. ஜெயந்தின் குடும்பத்திற்கு ஆண்டாண்டு காலமாக சொந்தமாக  இருந்த நிலத்தை பல ஆண்டுகளுக்கு முன்னர் வங்கி விற்ற பிறகு, அந்த சொத்து விற்பனைக்கு மீண்டும் வந்திருப்பதை அறிந்து கொண்டார். பல தியாகங்கள் மற்றும் சேமிப்புகளுக்கு பின்னர் ஜெயந்த், சுமார் 200 உள்ளூர் விவசாயிகள் கூடியிருந்த அந்த ஏலமெடுக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஜெயந்தின் அற்பமான ஏலத் தொகை போதுமானதாக இருக்குமா? இப்பொழுது ஏலதாரர் உயர்ந்த ஏலத் தொகையை அறிவித்து ஆரம்பித்த பின்னர், ஜெயந்த் ஒரு பெருமூச்சோடு தனது முதலாவது ஏலத் தொகையை அறிவித்தார்.  ஏலதாரர், ஏலத்தின் முடிவை அறிவிக்கும்வரை அவரை சுற்றி இருந்த கூட்டம் அமைதியாய் இருந்தது. சக விவசாயிகள் ஜெயந்த் மற்றும் அவருடைய குடும்பத்தின் தேவைகளை தங்கள் சொந்த பொருளாதாரத்தின் முன்னேற்றத்தை பார்க்கிலும் முதன்மைப்படுத்தியிருந்தனர்.

விவசாயிகளுடைய கருணை நிறைந்த இந்தத் தியாகச் செயல், அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்கள் வாழவேண்டிய விதத்தை பற்றி கூறுவதை விளக்குகிறது. நம்முடைய சுயநலமான விருப்பங்களை மற்றவர்களுடைய தேவைகளை விட அதிக முக்கியத்துவம் படுத்துவதும், நம்முடைய சுயத்தை பேணுவதற்காக துடிப்பதையும் நிறுத்தும்படி பவுல் நம்மை, "நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்" (ரோமர் 12:2) என்று எச்சரிக்கிறார். மாறாக, மற்றவர்களுக்கு சேவை செய்யும்போது தேவன் நம்முடைய தேவைகளை சந்திக்க அவரை நாம் நம்பலாம். பரிசுத்த ஆவியானவர் நம்முடைய மனங்களை புதிதாக்குகையில், நாம் எல்லா சூழ்நிலைகளிலும் தேவனை மகிமைப்படுத்தும் நோக்கத்தோடும், அன்போடும் செயல்படுவோம். பிறரை நாம் முன்னிலைப் படுத்தும்போது, நம்மை குறித்து நாமே உயர்வாய் எண்ணுவதை தவிர்ப்போம். மேலும், தேவன் நாம் ஒரு பெரிய காரியத்தின் பகுதியாக இருப்பதை நமக்கு நினைவுபடுத்துகிறார் - அதுதான் சபை (வ.3-4).

பரிசுத்த ஆவியானவர், விசுவாசிகள் வேதவசனங்களை புரிந்து கொள்ளவும், கீழ்ப்படியவும் உதவுகிறார். அவர் நாம் சுயநலமில்லாமல் கொடுக்கவும், உதாரத்துவமாய் நேசிக்கவும் நம்மை பெலப்படுத்துகிறார். ஆகையால் நாம் ஒன்றாய் செழித்தோங்க முடியும்.