காரணமேயின்றி என் தோழி எங்கள் பத்தாண்டுகால நட்பை முறித்தபோது, ஜனங்களிடம் நெருங்கிப் பழக தடுமாறும் என் பழைய பழக்கத்திற்கு மீண்டும் திரும்பினேன். என் துயரத்தில் பழகிக் கொண்டிருக்கையில், சி.ஸ்.லூயிஸ் எழுதிய “தி ஃபோர் லவ்ஸ்” (The Four Loves) என்ற புத்தகத்தை சிதைந்த நிலையில் என் அலமாரியிலிருந்து எடுத்தேன். அதில் லூயிஸ், அன்பானது பாதிப்புக்குள்ளாக்கப்பட வேண்டியதே என்ற ஆழமான சிந்தனையைச் சொல்கிறார். ஒருவர் அன்புகாட்ட துணியும்போது அவருக்கென்று “பாதுகாப்பான முதலீடு என்று ஒன்றுமில்லை” என்கிறார். ஒருவர் ஒன்றை நேசிக்கையில், அவர் இருதயம் காயப்படும், உடையும் என்று அவர் குறிப்பிடுகிறார். இதை வாசித்தபின், பேதுரு தன்னை மூன்றுமுறை மறுதலித்த பின்னரும் (யோவான் 18:15-27), இயேசு தம் உயிர்தெழுதலுக்கு பின், மூன்றாம் முறை தம் சீஷருக்கு தரிசனமானதை (யோவான் 21-1-14) வாசிக்கும் என் அணுகுமுறையை முற்றிலும் மாற்றியது. இயேசு, “யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார்” (21:15).

மறுதலிக்கப்பட்ட பின்னரும் இயேசு பேதுருவிடம், துணிவோடு பேசினார்; தயங்கவில்லை. சுயநலமில்லாமல் உறுதியாய் பேசினார். அதில் பெலவீனமோ, விரக்தியோ இல்லை. அன்புகாட்ட தாம் விரும்புவதை உறுதிப்படுத்துவதற்கு, அவர் கருணையை வெளிக்காட்டினாரேயன்றி கோபத்தையல்ல.

“என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு” (வச. 17) என்று வேதம் சொல்லுகிறது. ஆனால் பேதுரு தம்மை பின்பற்றுவதின் மூலமும் (வச. 19), மற்றவர்களை நேசிக்கும்படியாய் சொல்லும்போதும் (வச. 15–17), அவர் தம்முடைய சீஷர்கள் அனைவரையும் நிபந்தனையின்றி நேசிக்க பொதுவாக அழைப்புக் கொடுக்கிறார். “நீ என்னை நேசிக்கின்றாயா?” என்று இயேசு கேட்கையில், அதற்கு நாம் ஒவ்வொரும் பதிலளிக்க வேண்டும். நம் பதிலே நாம் பிறரை நேசிக்கும் விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.