எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

டிம் கஸ்டாப்சன்கட்டுரைகள்

ஒரு அடைக்கலான் குருவியாகிலும்!

தன் வாழ்நாள் முழுவதும் கம்பீரமாகவும் கண்ணியமாகவும் இருந்த என் தாயார், இப்பொழுது முதிர்வயதினால் சிறைப்பட்டு தளர்ந்து பலவீனமடைந்து ஒரு நலவாழ்வு மையத்தின் படுக்கையிலே படுத்திருந்தார். மூச்சுவிடவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்த அவர்களுடைய நிலை மேலும் மோசமாகிக் கொண்டிருந்த பொழுது, அதற்கு நேர் எதிர்மாறாக அவ்வறையின் ஜன்னலுக்கு வெளியே அழகான வசந்தகால நாள் நம்மை இனிதாய் வரவேற்றது. 

உணர்ச்சிமிக்க வழியனுப்புதலின் அப்பட்டமான உண்மை நிலைக்கு ஏற்றாற் போல நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ள இவ்வுலகத்தில் உள்ள எப்பேர்பட்ட ஆயத்தமும் நம்மை தயார் படுத்த இயலாது. இதை சிந்தித்தபொழுது சாவு என்பது எவ்வளவு வெட்கக்கேடான ஒன்று! என நான் எண்ணினேன்.

அப்பொழுது நான் என் பார்வையைத் திருப்பி ஜன்னலுக்கு வெளியே பறவைகளுக்காக வைக்கப்பட்டிருந்த விதை தட்டில் உள்ள விதையை உண்ணும்படி சிறகடித்தவாறு ஒரு சிறு பறவை அதை உண்டுகொண்டிருந்ததை கண்டேன். அக்காட்சியை கண்ட உடனே “உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது”, என்று நான் நன்கு அறிந்த இவ்வசனம் என் மனதிலே தோன்றியது (மத். 10:29). இவ்வார்த்தைகளை இயேசு தம்முடைய சீஷர்கள் யூதேயாவுக்கு சென்று ஊழியம் செய்யும்படி கட்டளையிட்டு அனுப்பி வைத்தபொழுது கூறினார். மேலும், அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்”, என்றும் அவர்களிடம் கூறினார் (வச. 31). இந்நியமனம் அவர்களுக்கு மாத்திரமல்ல நமக்கும் பொருந்தும். 

என் தாய் சற்று அசைந்து தன் கண்களைத் திறந்து பார்த்தார். அப்பொழுது அவர் தன் பால்ய வயதில் மிகுந்த அன்போடு அவரது தாயை கூப்பிடும் ஒரு டச்சு மொழிச் சொற்றொடரை கூறி, “மூயுட்டி இறந்துவிட்டார்!” என தன் தாயை குறித்து தெரிவித்தார். 

“உண்மைதான். அவர் இப்பொழுது இயேசுவுடன் இருக்கிறார்,” என்று என் மனைவி பதிலளித்தாள். அதைக் கேட்ட என் தாயார் நிச்சயமின்றி, “ஜாய்ஸ் மற்றும் ஜிம்?” என்று தன்னுடைய சகோதரியை குறித்தும் சகோதரனை குறித்தும் கேட்டார். அதற்கு என்னுடைய மனைவி, “ஆம், அவர்களும் இயேசுவோடுதான் இருக்கிறார்கள். நாமும் சீக்கிரத்தில் அவர்களோடு இருப்போம்!” என்று பதிலளித்தார். 

“ஆனால், காத்திருப்பது மிகக் கடினமாக உள்ளது,” என அமைதியாக என் தாயார் கூறினார்.

தேவனுக்கு ஆதரவாக!

ஒரு காரில் ஒட்டியிருந்த பம்பர்-ஸ்டிக்கர் ஓர் பல்கலைக்கழகப் பேராசிரியரின் கவனத்தை ஈர்த்தது. அக்காரின் சொந்தக்காரர் விசுவாசிகளை கோபமடையச் செய்யும்படியாகவே தேவனைக்குறித்து எதிர்மறையான காரியங்களை கொண்ட ஸ்டிக்கரை ஒட்டியிருக்கக்கூடும் என அப்பேராசிரியர் எண்ணினார். மேலும் “விசுவாசிகளின் கோபம் கடவுள் இல்லை எனக்கூறும் அந்நாத்திகனின் கொள்கையை நியாயப்படுத்தும்படி உதவுகிறது,” என விளக்குகிறார். கூடவே, “அநேகங்தரம் தான் எதிர்பார்த்ததையே அவன் பெற்றுக்கொள்ளவும் செய்கிறான்”, என அவர் எச்சரிக்கிறார். 

இப்பேராசிரியர் தன்னுடைய விசுவாச பாதையைக்குறித்து நினைவுக்கூரும்பொழுது, கிறிஸ்துவைகுறித்ததான சத்தியத்தை எண்ணி அவருடைய கிறிஸ்தவ நண்பர் ஒருவர் அக்கறையுடன் தன்னை அணுகியதை நினைவுகூருகிறார். தன் நண்பனிடம் “சத்தியத்தை எப்படியாவது தெரிவித்துவிட வேண்டும் என்கிற ஒரு அவசர உணர்வு காணப்பட்டாலும், அதை கோபத்தின் சுவடே இல்லாமல் தெரிவித்தால்,” அன்று தான் பெற்ற உண்மையான மரியாதையையும் கிருபையையும் ஒருபோதும் மறப்பதில்லை என அப்பேராசிரியர் கூறுகிறார்.

 

இயேசுவைப் பிறர் நிராகரிக்கும்பொழுது அநேகமாய் விசுவாசிகள் காயமடைந்து மனக்கசப்புக்குள்ளாகிறார்கள். ஆனால் பிறர் தன்னை நிராகரிப்பதைக்குறித்து இயேசு என்ன நினைக்கிறார்?  எப்பொழுதும் பல அச்சுறுத்தல்களையும் வெறுப்பையும் இயேசு எதிர்கொண்டபொழுதும், அவர் தன்னுடைய தெய்வசாயலை குறித்து சந்தேகித் ததேயில்லை. ஒரு சமயம் இயேசு ஒரு கிராமத்திற்கு சென்றபொழுது, அவரை ஏற்றுக்கொள்ள அக்கிராமத்தினர் மறுத்துவிட்டனர். உடனே யாக்கோபும், யோவானும் அவர்களுக்குப் பதிலடி கொடுக்க எண்ணி, “ஆண்டவரே, எலியா செய்தது போல வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா?” என்று இயேசுவிடம் கேட்டனர் (லூக். 9:54). இயேசு அப்படி ஒன்றும் செய்ய விரும்பாததால், “திரும்பிப் பார்த்து (அவர்களை) அதட்டி(னார்)” (வச. 55). சொல்லப்போனால், “உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்” (யோவா. 3:17).

 

நம்முடைய சொல்லாலோ (அல்லது) செயலாலோ தேவனுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்கிற அவசியம் அவருக்கில்லை என்கிற செய்தி நமக்கு வியப்பளிக்கலாம். அவருடைய பிரதிநிதியாக அவரை பிரதிபலிப்பதையே அவர் விரும்புகிறார்! அதற்கு நம்முடைய நேரமும், முயற்சியும், நிதானமும், அன்பும் தேவைப்படும்.

ஒரே ஒரு தொடுதல்

கிழக்கு ஆப்பிரிக்காவின் ஒரு தொலைவான பகுதியில் மருத்துவ ஊழியம்செய்யும் வாய்ப்பு வந்தபொழுது கைலீ(Kiley) உற்சாகமடைந்த போதிலும் மருத்துவ அனுபவம் எதுவும் தனக்கில்லையே என்று சற்றே கலக்கமடைந்தாள். ஆனாலும் அடிப்படை மருத்துவ உதவியை அவளால் தரமுடியும் என்பதை எண்ணி தைரியமடைந்தாள். 

அங்கு சென்றபொழுது, மிகவும் கொடுமையான ஓர் வியாதியையுடைய ஒரு பெண்ணை சந்தித்தாள். உருக்குலைந்து அழுகிய நிலையிலிருந்த காலைக் கண்டவுடன் கைலீயிக்கு அருவருப்பாக இருந்தது, ஆனாலும் தான் ஏதாவது செய்யவேண்டும் என்பதை அறிந்திருந்தாள். ஆகவே அப்பெண்ணின்  காலைத் தொட்டு காயங்களை சுத்தப்படுத்தி கட்ட ஆரம்பித்தாள். அதைக் கண்ட அப்பெண் அழஆரம்பித்தாள். கவலை அடைந்த கைலீ, தான் வலியை ஏற்படுதிவிட்டேனோ என்று அப்பெண்ணிடம் கேட்டபொழுது, “இல்லை, கடந்த ஒன்பது வருடங்களில் இன்றைக்குத் தான் என்னை ஒருவர் தொட்டிருக்கிறார்” என்று அவள் கூறினாள்.

தொழுநோயும் அப்படிப்பட்ட ஒரு வியாதிதான். அதனால் பாதிக்கப்பட்ட நபர்களை கண்டாலே மக்கள் முகஞ்சுழிப்பதுண்டு. அந்நோய் பரவுவதை தடுக்கும் பொருட்டு “அவர்கள் தனித்து வாழவேண்டும். அவர்கள் கூடார முகாம்களுக்கு வெளியேதான் இருக்கவேண்டும்” என்று பண்டைய யூத கலாச்சாரத்தில் பல கடுமையான சட்டங்கள் இருந்தது (லேவி. 13:46). 

அதனால்தான் இயேசுவை நோக்கி வந்த குஷ்டரோகி சொன்ன வார்த்தைகள் மிகவும் விசேஷமானது. அவன் “ஆண்டவரே உமக்கு சித்தமானால் என்னை சுத்தமாக்க உம்மால் ஆகும்,” என்றான் (மத். 8:2). இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு: ‘எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு’ என்றார்” (வச. 3). 

தனிமையில் வாழ்ந்துவந்த ஓர் பெண்மணியின் வியாதியுற்ற காலைத் தொட்டதினால் ஓரு இணைப்பை ஏற்படுத்தும் இயேசுவின் பயமற்ற அன்பை கைலீ வெளிப்படுத்தத் தொடங்கினாள். ஓர் சிறிய தொடுதல்தான் இவற்றையெல்லாம் செய்தது.

கொடுப்பதின் வரம்

“அவருடைய தோள்களிலிருக்கும் சட்டையைக் கழற்றி தருவார்” என்ற வரிக்கு ஒரு போதகர் உண்மையிலேயே உயிரூட்டினார். “நம்முடைய மேல்சட்டைகளை நிஜமாகவே  கழற்றி, இல்லாதவரிடம் கொடுத்தால் என்ன நடக்கும்?” என்று சபையாரிடம் ஓர் சவால் விடுத்தார். அதன் பின்னர், தமது கோட்டை(Coat) கழற்றி சபையின் முன்னால் அதை வைத்தார். அதை பார்த்தவுடன், பலர் அவரது செய்கையைப் பின்பற்றினார்கள். இந்த சம்பவம் குளிர்காலத்தில் நடந்தது, அதனால் வீட்டிற்கு திரும்பும் பயணம் அவ்வளவு எளிதாக இருந்துவிடவில்லை. ஆனால் தேவைகளுடன் இருந்த பலருக்கு அந்த குளிர் காலம் இதமாய் இருந்தது. 

யோவான் ஸ்நானகன் யூதேயாவின் வனாந்திரங்களில் சுற்றித்திரிந்த போது, அவரைக் காண வந்த மக்களிடம் கடுமையாகப் பேசினார். “விரியன்பாம்பு குட்டிகளே!....மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்” என்று அவர்களை விமர்சித்தார் (லூக். 3:7-8). “நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று ஆச்சர்யத்துடன் கேட்ட அவர்களிடம், “இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கடவன்; ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன்” என பதிலளித்தார். உண்மையான மனந்திரும்புதல் பெருந்தன்மையுள்ள இருதயத்தை உண்டுபண்ணும். 

குற்றஉணர்ச்சியினாலோ பிறரின் பலவந்தத்தினாலோ ஒருவரும் கொடுக்கத் தேவையில்லை, ஏனெனில் “உற்சாகமாய் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்” (2 கொரி. 9:7). இலவசமாகவும் உற்சாகத்துடனும் நாம் கொடுக்க ஆரம்பித்தவுடன், ஒன்று நன்றாக விளங்க ஆரம்பிக்கும்-பெற்றுக்கொள்ளும்போது உணரும் ஆசீர்வாதத்தை விட, கொடுப்பதில்தான் அதிக ஆசீர்வாதம்.

கொஸ்ஸியின் தைரியம்

டோகோ (togo) நாட்டில் மோனோ (mono) நதியில் ஞானஸ்நானம் எடுக்க காத்திருந்த கொஸ்ஸி(kossi), கீழே கிடந்த பழைய மரச்சிற்பம் ஒன்றை குனிந்து எடுத்தான். பல தலைமுறைகளாக அவனுடைய குடும்பத்தில் அச்சிற்பத்தை வணங்கி வந்துள்ளனர். இப்பொழுதோ, அக்கோரமான உருவப் பொம்மையை இத்தருணத்திற்கென்று  ஆயத்தப்படுத்தியிருந்த நெருப்பில் கொஸ்ஸி தூக்கி எறிவதை அவனுடைய குடும்பத்தினர் உடனிருந்து கண்டனர். இனி ஒருபொழுதும் அவர்களுடைய கோழிகள் இக்கோரக் கடவுளுக்கு பலியாக படைக்கப்படபோவதில்லை.

மேற்கத்திய நாட்டிலுள்ள கிறிஸ்தவர்கள் தேவனுடைய ஸ்தானத்தில் வைக்கப்படும் அனைத்தையும் விக்கிரகமாக உருவகப்படுத்திக் கொள்வார்கள். ஆனால் மேற்கு ஆப்பிரிக்கா பகுதியிலுள்ள டோகோ தேசத்தில், பலியிட்டு திருப்திப்படுத்த வேண்டிய கடவுள்களாகவே இவ்விக்கிரகங்களை காண்கிறார்கள். ஆகவே, ஒன்றான மெய் தேவனுக்கு தன்னுடைய விசுவாசத்தைக் காண்பிக்க விரும்பும் ஒரு புதிய விசுவாசி, விக்கிரகத்தை எரித்து ஞானஸ்நானம் எடுப்பது மிகத்தைரியமான ஒரு பிரகடனமாகும்.

விக்கிரக ஆராதனையிலும் வேசித்தனத்திலும் மூழ்கியிருந்த ஒருகலாச்சார சூழ்நிலையில், எட்டு வயது யோசியா அரசனானான். யூதா தேசத்தின் மிக இழிவான வரலாற்றின் மிக மோசமான இரண்டு ராஜாக்கள் யோசியாவின் தகப்பனும் தாத்தாவுமே. ஆனால் யோசியா ராஜாவானபொழுது, பிரதான ஆசாரியர் ஆலயத்திலே நியாயப்பிரமானமாண புஸ்தகத்தை கண்டுபிடித்தான். அதை வாசித்த யோசியா அவ்வார்த்தைகளை தன் இருதயத்திலே பதித்துக்கொண்டான் (2 இரா. 22:8-13). பின்பு பாகாலுடைய பலிபீடங்களையும், விக்கிரக தோப்புகளையும் அங்கு படைக்கப்பட்ட சகலவிதமான அருவருப்பான பொருட்களையும் அழித்து, விபச்சாரச் சடங்குகளை நடப்பிக்கும் இலச்சையான புணர்ச்சிக்காரரின் வீடுகளையும் இடித்துப்போட்டான் (23ஆம் அதிகாரம்). இவ்வாறான எல்லா வழக்கங்களையும் ஒழித்துவிட்டு அவ்விடத்திலே பஸ்கா பண்டிகையை கொண்டாடினான் (23:21-23).

அறிந்தோ அறியாமலோ தேவனைச் சாராமல் பதில்களை எதிர்பார்ப்போமானால், நாம் பொய்யானதொரு கடவுளைப் பின்தொடர நேரிடும். ஆகவே, நாம் யாதொரு விக்கிரகத்தையாவது, உருவகங்கள் உட்பட, நெருப்பில் வீசவேண்டுவன எதுவோ என நம்மை நாமே கேட்டுக் கொள்வது ஞானமாக இருக்கும்.

இரண்டு புகைப்படங்கள்

ஆலய நுழைவாயிலில் இரண்டு புகைப்படங்களை இறுகப் பிடித்துக்கொண்டிருந்த ஒரு மூதாட்டி, அவற்றைப் பெருமையுடன் தன் நண்பர்களுக்குக் காட்டிக்கொண்டிருந்தாள். முதலாவது புகைப்படம் அவளது தாய்நாடாகிய புருன்டியில் (Burundi) எடுக்கப்பட்ட அவளுடைய மகளின் படம். இரண்டாவது புகைப்படம் அம்மகளுக்கு பிறந்த அவளது மகனின் புகைப்படம். ஆனால் அப்புகைப்படத்தில் மகள் இல்லை. ஏனெனில், அவனை பிரசவிக்கும் பொழுது அவள் இறந்துவிட்டாள்.

அப்பொழுது அங்கு வந்த அவளுடைய தோழி அப்புகைப்படங்களைப் பார்த்துவிட்டு உடனே அம்மூதாட்டியின் முகத்தை அன்பாய் தன் கரங்களில் ஏந்தி கண்ணீரோடு, “எனக்குத் தெரியும். எனக்கு தெரியும்,” எனக் கூறினாள்.

அவளுக்குத் தெரியும்தான். ஏனெனில் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் தன் மகனை அவள் அடக்கம் செய்தாள்.

நம்முடைய வலி வேதனைகளை தானும் அனுபவித்தவர்கள் கூறும் ஆறுதல் விசேஷமானது. ஏனெனில் அவர்கள் எல்லாவற்றையும் அறிவார்கள். இயேசு கைது செய்யப்படுவதற்கு சற்று முன்பு, தன் சீஷர்களைப் பார்த்து, “நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்,” என்று கூறினார்: ஆனால் அவ்வார்த்தைகளோடு நிறுத்திக்கொள்ளாமல், “நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்,” என்னும் ஆறுதலான வார்த்தைகளையும் கூறினார் (யோவா. 16:20). இன்னும் சில மணி நேரங்களில், இயேசுவின் கைதும், சிலுவை மரணமும் அவருடைய சீஷர்களை நிலைகுலையச் செய்யும். ஆனால் தாங்கொண்ணா துயரத்தில் மூழ்கியிருந்த அவர்கள் இயேசுவை உயிரோடு கண்டவுடன் எதிர்பாராத மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார்கள்.

மேசியாவைக் குறித்து, “மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்,” என ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்தார் (ஏசா. 53:4). நம்முடைய இரட்சகர் நம்முடைய
வலி, வேதனைகளை அறிந்தவர் மட்டுமன்று அவைகளை அனுபவித்தவரும் கூட. அவர் எல்லாவற்றையும் அறிவார். அவரே நம்மை விசாரிக்கிறவராய் இருக்கிறார். ஒரு நாள் நம்முடைய துக்கம் சந்தோஷமாக மாறும்.

எனது எல்லாவற்றையும்!

இளம் ஐசக் வாட்ஸ் (Issac Watts) தன்னுடைய சபையின் பாடல்கள் நிறைவற்றதாக இருப்பதை எண்ணி வருந்தினான். அப்பொழுது அவனுடைய தகப்பன் சிறப்பான பாடல்களை உண்டாக்குமாறு அவனுக்கு அன்பாக ஆணையிட்டார். அப்படியே ஐசக் செய்தான். “என் அருள் நாதா இயேசுவே” (When I survey the wondrous cross) என்னும் அவருடைய பாடல் ஆங்கில மொழியின் மிகச் சிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. அப்பாடல் அநேக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

அப்பாடலின் ஆராதனை ததும்பும் மூன்றாவது சரணம் கிறிஸ்துவின் சிலுவைக் காட்சிக்குள் நம்மை பிரவேசிக்கச் செய்கிறது.

கை, தலை, காலிலும், இதோ!
பேரன்பும் துன்பம் கலந்தே
பாய்ந்தோடும் காட்சி போல் உண்டோ?
முள்முடியும் ஒப்பற்றதே!

உலக வரலாற்றின் மிக மோசமான தருணமாகிய சிலுவைக் காட்சியை வாட்ஸ் மிக நேர்த்தியாக விவரித்துள்ளார். அன்று அச்சிலுவையின் அருகே நின்றிருந்தவர்களோடு நாமும் சற்று நேரம் சிலுவையின் அருகே செல்வோமாக. தம்முடைய சரீரத்தில் சொரசொரப்பான பெரிய ஆணிகள் பாய்ந்து, சிலுவையில் அறையப்பட்டிருந்த தேவகுமாரனாகிய இயேசு மூச்சுவிட சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். சில மணிநேர சித்திரவதைகளுக்குப் பின்பு, அவ்விடமெங்கிலும் இயற்கைக்கு அப்பாற்பட்ட இருள் சூழ்ந்தது. அண்டசராசரங்களின் தேவனாகிய கர்த்தர் இறுதியாக கடும் வேதனை அடைந்து, தம்முடைய ஆவியை ஒப்புக்கொடுத்தார். அப்பொழுது அவ்விடமெங்கிலும் நிலநடுக்கத்தின் ஆரவார சத்தம் ஒலித்தது. அதேவேளை பட்டணத்திலுள்ள ஆலயத்தின் திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது. கல்லறைகள் திறந்து, அதிலிருந்த மரித்தோர் உயிர்பெற்று பட்டணத்திலே உலாவினார்கள் (மத். 27:51-53). இச்சம்பவங்களை எல்லாம் கண்ட அதிபதி “மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன்!” என ஒப்புக்கொண்டான் (வச. 54).

சின்னப் பொய்களும் பூனைக்குட்டிகளும்

புதிதாய் பிறந்த பூனைக்குட்டிகளிடமிருந்து விரைந்தோடிய நான்கு வயது எலியாசை (Elias) அம்மா கவனித்தார். பூனைக்குட்டிகளைத் தொடக்கூடாது என்று ஏற்கனவே அவனுக்கு சொல்லி இருந்தார். ஆனால் எலியாஸ் ஓடியதைப் பார்த்து, “நீ அந்த பூனைக்குட்டிகளைத் தொட்டாயா?” என்று கேட்டார்.

“இல்லை!” என நல்லபிள்ளை போல் கூறினான். ஆகவே வேறு விதமாக ஒரு கேள்வி கேட்டார்கள். “அவை மென்மையாக இருந்தனவா?” அதற்கு அவன் “ஆமாம்” என கூறியது மட்டுமின்றி “அந்த கருப்பு பூனைக்குட்டி ‘மியாவ்’ என கத்தியது,” என்றும் கூறினான்.

குழந்தைகள் ஏமாற்றும் பொழுது நாம் சிரிக்கிறோம். ஆனால் எலியாசின் கீழ்ப்படியாமை மனித குலத்தின் நிலையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நான்கு வயது சிறுவனுக்கு ஒருவரும் பொய் சொல்ல கற்றுத்தர வேண்டியதில்லை. “நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்,” என தாவீது தன்னுடைய புகழ்பெற்ற பாவ அறிக்கையில் எழுதியுள்ளான் (சங். 51:5).

அப்போஸ்தலனாகிய பவுல், “ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணமும் எல்லாருக்கும் வந்தது” எனக் கூறியுள்ளார் (ரோம. 5:12). வருத்தமளிக்கும் இச்செய்தி இராஜாக்களுக்கும், நான்கு வயது சிறுவர்களுக்கும், உங்களுக்கும், எனக்கும் சமமாய் பொருந்தும். ஆனால் சோர்ந்து போக வேண்டாம். மிகுந்த நம்பிக்கையளிக்கும் செய்தியும் உண்டு. மனுஷனுடைய பாவ சுபாவம் வெளிப்படும்படியாய் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது. “மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று,” என பவுல் எழுதியுள்ளார் (ரோம. 5:20).

நாம் தவறு செய்தவுடன் நம் மீது பாய்ந்து வந்து நம்மைத் தண்டிக்க தேவன் காத்திருக்கவில்லை. நமக்கு கிருபை பாராட்டி, நம்மை மன்னித்து, சீர்ப்படுத்துவதே அவருடைய நோக்கம். நாம் செய்ய வேண்டியதென்னவெனில் பாவத்தை அசட்டைபண்ணாமலும், அதை விரும்பாமலும் விசுவாசத்தோடு அவரிடத்தில் மனந்திரும்பக்கடவோம்.

சந்தேகத்தின் இறப்பு

“சந்தேகத் தோமா” என்று நம்மால் அழைக்கப்படும் தோமாவுக்கு (யோவா. 20:24-29) இந்த அடைமொழி உண்மையில் நியாயமானதல்ல. சொல்லப்போனால் கொல்லப்பட்ட நம்முடைய தலைவர் உயிர்த்தெழுந்து விட்டார் என்ற செய்தியை நம்மில் எத்தனை பேர் நம்பியிருப்போம்? உண்மையில் அவரை “தைரிய தோமா” என்றுதான் கூற வேண்டும் ஏனென்றால், இயேசு அனைத்தையும் அறிந்தவராய் தாமாகவே மரணத்தை நோக்கிச் சென்றபொழுது நடந்த சம்பவங்களில் தோமா மிகச்சிறந்த தைரியத்தை வெளிப்படுத்தினார்.

லாசரு மரித்த பொழுது, “நாம் மறுபடியும் யூதேயாவுக்குப் போவோம் வாருங்கள்” (யோவா. 11:7) என்று இயேசு கூறியதற்கு சீஷர்களிடமிருந்து எதிர்ப்பு வந்தது. “ரபீ, இப்பொழுதுதான் யூதர் உம்மைக் கல்லெறியத் தேடினார்களே, மறுபடியும் நீர் அவ்விடத்திற்குப் போகலாமா?” என்றார்கள் (வச. 8). ஆனால் தோமாவோ, “அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள்,” என்றான் (வச. 16).

தோமாவுடைய செய்கைகளைக் காட்டிலும் அவனது நோக்கங்கள் உன்னதமானதாய் இருந்தன. ஏனென்றால், இயேசுவைக் கைது செய்த பொழுது, மற்ற சீஷர்களோடு தோமாவும் இயேசுவை விட்டு விலகி ஓடிப்போனான் (மத். 26:56). பேதுருவும், யோவானும் மாத்திரம் இயேசுவை அழைத்துச்சென்ற பிரதான ஆசாரியரின் மண்டபம் வரை சென்றனர். ஆனால் யோவான் மாத்திரமே இயேசுவை சிலுவை வரை பின்பற்றிச் சென்றான்.

லாசருவின் உயிர்தெழுதலைக் கண்டும் கூட (யோவா. 11:38-44) தோமாவால் சிலுவையில் அறையப்பட்ட ஆண்டவர் மரணத்தை வென்று உயிர்தெழுந்துவிட்டார் என்று விசுவாசிக்க முடியவில்லை. ஆனால் சந்தேகப்பட்ட அற்ப மனுஷனாகிய தோமா உயிர்த்தெழுந்த ஆண்டவரைக் கண்டவுடன், “என் ஆண்டவரே! என் தேவனே!” என வியப்புடன் உரத்த சத்தமிட்டான் (யோவா. 20:28). அதற்கு இயேசு அளித்த பதில் சந்தேகித்தவனுக்கு நம்பிக்கையையும், நமக்கு அளவற்ற ஆறுதலையும் அளிக்கிறது. “தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்,” என்றார் (வச. 29).