நற்செய்தி
1941இல் ஜரோப்பிய கண்டம் முழுவதும் ஹிட்லரின் ஆளுகை விரிவடைந்துகொண்டிருந்த தருணம், நாவலாசிரியர் ஜான் ஸ்டெயின்பெக் (அமெரிக்க எழுத்தாசிரியர்) அந்த யுத்தத்திற்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். யுத்தகளத்தில் முன்பாக நின்று யுத்தம் செய்வதற்காக அல்ல மாறாக, ஒரு நாவல் ஒன்றை எழுதும்படிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதின் விளைவாக “சந்திரன் கீழே உள்ளது” என்ற தலைப்பில், அமைதியாய் இளைப்பாறிய தேசம் சத்துருக்களினால் கைப்பற்றப்பட்டதை விவரிக்கும் நாவல் எழுதப்பட்டது. இரகசியமாய் அச்சிடப்பட்டு, கைப்பற்றப்பட்ட தேசங்களுக்கு விநியோகிக்கப்பட்டது. அதின் செய்தி: உங்களின் கூட்டாளிகள் வந்துகொண்டிருக்கிறார்கள், நாவலில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களின் செய்கைகளை பின்பற்றினால் நாம் சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்பதே. “சந்திரன் கீழே உள்ளது” என்ற நாவலின் மூலமாக ஜெர்மானிய ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த நாடுகளுக்கு அவர்களின் விடுதலை சமீபமாயிருக்கிறது என்னும் செய்தி தொடர்புகொள்ளப்பட்டது.
அந்த நாவலில் இடம்பெற்ற கதாபாத்திரங்களைப் போன்று, முதலாம் நூற்றாண்டில் யூதர்களும் ரோம ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தனர். ஆனால் நூற்றாண்டுகளுக்கு முன்பதாகவே, தேவன் அவர்களுக்கு உதவிசெய்ய மீட்பரை அனுப்புவதாகவும், அவர் உலகத்திற்கு சமாதானத்தைக் கொண்டுவருவார் என்றும் வாக்குப்பண்ணப்பட்டிருந்தது (ஏசாயா 11). அந்த மீட்பர் வந்தவுடன் மகிழ்ச்சி வந்தது! நாங்களும் உங்களுக்கு நற்செய்தியை அறிவிக்கிறோம் என்று பவுல் சொல்லுகிறார். “இயேசுவை எழுப்பினதினாலே தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தத்தை அவர்களுடைய பிள்ளைகளாகிய நமக்கு நிறைவேற்றினார்” (அப். 13:32-33). இயேசுவின் உயிர்த்தெழுதல் மூலமாயும் அவருடைய மன்னிப்பின் மூலமாயும் உலகத்தை மறுசீரமைக்கும் பணி துவங்கியது (வச. 38-39; ரோமர் 8:21).
அன்றிலிருந்து இந்த மீட்பின் செய்தி உலகெங்கும் பரவி, சென்ற இடமெல்லாம் இளைப்பாறுதலையும் விடுதலையையும் ஏற்படுத்தியது. இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார். பாவத்திலிருந்தும் தீமையிலிருந்துமான நம்முடைய மீட்புப் பணி துவங்கியது. அவரில் நாம் சுதந்திரவாளிகளாக்கப்பட்டோம்.
உபத்திரவத்தின் நோக்கம்
“இது என்னுடைய தவறாய் இருக்க வாய்ப்பில்லை என்று சொல்லவருகிறீர்களா?” அந்த பெண்மணியின் வார்த்தைகள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர்களுடைய திருச்சபையில் சிறப்பு பிரசங்கியாராய் நின்று, என்ன பிரசங்கிப்பது என்பதைக் குறித்து கலந்தாலோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது அவர், “எனக்கு நாள்பட்ட நோய் உள்ளது, அதற்காக நான் ஜெபித்து, உபவாசம் இருந்து, என் பாவங்களை அறிக்கையிட்டு, நோய் தீர இன்னும் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தேன். ஆனாலும் அந்த நோய் என்னை விட்டு அகன்றபாடில்லை, ஆகையால் அது என் பாவமாகவே இருக்கவேண்டும்” என்று சொன்னார்.
அந்த பெண்ணின் அறிக்கைக்காய் நான் வேதனைப்பட்டேன். பிரச்சனையைத் தீர்க்கும் ஆவிக்குரிய சூத்திரம் செயல்படவில்லை என்பதை அறிந்ததும், அவள் தன்னையே குற்றப்படுத்திக்கொள்ளுகிறாள். உபத்திரவத்திற்கு இதுபோன்ற சூத்திரங்கள் செல்லுபடியாகாது என்பது காலாகாலமாய் நிரூபிக்கப்பட்ட ஒன்று.
நீங்கள் உபத்திரப்படுகிறீர்களென்றால் ஏதேனும் பாவம் செய்திருக்கவேண்டும் என்று கருதுவது மிகவும் பழைய சூத்திரம். யோபு தனக்குண்டான கால்நடைகள், பிள்ளைகள், மற்றும் சரீர பெலன் ஆகியவற்றை இழந்து நிர்க்கதியாய் நின்றபோது, அவனுடைய நண்பர்கள் இந்த சூத்திரத்தை பயன்படுத்தினர். யோபுவின் பாவத்தை சந்தேகித்த எலிப்பாஸ், “சன்மார்க்கர் அதம்பண்ணப்பட்டது எப்போ?” என்று கேட்கிறார் (யோபு 4:7). பில்தாத்தும், யோபுவின் குமாரர்கள் மரித்ததற்கு காரணம் அவர்களுடைய பாவமே என்று குற்றப்படுத்துகிறார் (8:4). யோபுவின் உபத்திரவத்திற்கான சரியான காரணத்தை அறிய முற்படாமல் (1:6-2:10), அவர்களுடைய இலகுவான சூத்திரங்களை வைத்து அவனை நியாயந்தீர்த்ததினால் தேவனுடைய கடிந்துகொள்ளுதலுக்கு பாத்திரவான்களாகின்றனர் (42:7).
அழியக்கூடிய இந்த உலகத்தில் உபத்திரவம் என்பது வாழ்க்கையின் ஓர் அங்கம். யோபுவைப் போல அதை தேவன் ஏன் நம் வாழ்க்கையில் அனுமதிக்கிறார் என்பதை ஒருவேளை நாம் அறியாமலிருக்கலாம். ஆனால் நீங்கள் அனுபவிக்கும் அந்த வலியைக் கடந்து தேவன் உங்கள் வாழ்க்கையில் ஒரு நோக்கம் வைத்திருக்கிறார். இலகுவான சூத்திரங்களை நம்பி சோர்ந்துபோகாதீர்கள்.
எப்போது தியாகம் செய்வது?
பிப்ரவரி 2020ல் கோவிட் தொற்று பரவத்துவங்கிய தருணத்தில், ஒரு செய்தித்தாள் கட்டுரையாளரின் வார்த்தைகள் என்னை ஆச்சரியப்படுத்தியது. மற்றவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, நம்முடைய வேலை, பயணம் மற்றும் ஷாப்பிங் பழக்கத்தை விட்டுவிட்டு, நாம் நம்மை தனிமைப்படுத்திக்கொள்வதை விரும்புவோமா? மேலும் அவள், “இது மருத்துவ பரிசோதனை மட்டுமல்ல, நாம் வெளியே போகாமல் மற்றவர்களை பாதுகாக்கும் உணர்வு” என்று எழுதுகிறாள். திடீரென்று நல்லொழுக்கத்தின் தேவை முதல் பக்க செய்தியாய் மாறுகிறது.
நம்மைக் குறித்தே சிந்தித்துக் கொண்டிருப்போமாகில் மற்றவர்களின் தேவையை உணர முடியாது. நம்முடைய வேறுபாடுகளை மாற்றும் அன்பையும், சோகத்தை மாற்றும் சந்தோஷத்தையும், கவலையை மாற்றும் சமாதானத்தையும், மனக்கிளர்ச்சியை மாற்றும் நீடிய பொறுமையையும், மற்றவர்களிடத்தில் காண்பிக்கும் தயவையும், மற்றவர்களின் தேவைகளை சந்திக்கும் நற்குணத்தையும், நம் வாக்கை நிறைவேற்றுவதில் விசுவாசமும், கோபத்திற்கு பதிலாக சாந்தத்தையும், சுய நலத்திற்கு அப்பாற்பட்ட இச்சையடக்கத்தையும் பரிசுத்த ஆவயானவரிடத்தில் கேட்கலாம் (கலாத்தியர் 5:22-23). இவைகள் எல்லாவற்றிலும் நாம் நேர்த்தியாய் செயல்படமுடியாத பட்சத்தில், ஆவியானவரின் நற்பண்புகளை தொடர்ந்து நாடுவதற்கு நாம் அழைக்கப்படுகிறோம் (எபேசியர் 5:18).
செய்யப்படவேண்டிய நேரத்தில் ஒன்றை செய்யும் திறனையே பரிசுத்தம் என்று ஒரு ஆசிரியர் குறிப்பிடுகிறார். நோய் தொற்று காலத்தில் மட்டுமல்லாது, இந்த பரிசுத்தம் எல்லா காலகட்டத்திலும் அவசியப்படுகிறது. மற்றவர்களுக்காய் தியாகமாய் வாழும் குணம் நம்மிடத்தில் உள்ளதா? பரிசுத்த ஆவியானவர் செய்யப்படவேண்டியதை செய்யும் வல்லமையினால் நம்மை நிரப்பட்டும்.
வரம்பற்றவர்
நான் அங்கே, பேரங்காடியில், (Shopping Mall) உணவு சாப்பிடும் இடத்தில், உட்கார்ந்திருக்கிறேன். என் உடல் பதட்டமாகவும் என் வயிறு, வேலைகளின் காலக்கெடுவினால் தத்தளித்துக்கொண்டிருந்தது. நான் என் உணவை எடுத்து, சாப்பிட ஆரம்பித்தபோது, என்னைச் சுற்றிலும் இருக்கும் மக்கள் தங்கள் சொந்த வேலைகளைக் குறித்து பதற்றமடைந்துக்கொண்டிருந்தனர். நாம் அனைவருக்கும் எவ்வளவு கட்டுப்பாடு இருக்கிறது, நேரம், ஆற்றல் மற்றும் திறன் இவற்றில் கட்டுப்பாடு, என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.
நான், செய்ய வேண்டிய வேலைகள் என்ற புதிய பட்டியலை எழுதி முக்கியமான வேலைகளை முதலில் செய்ய நினைக்கிறேன். ஆனால் அதை எழுத பேனாவைத் திறக்கும்போது வேறொரு எண்ணம் என் மனதில் தோன்றுகிறது: தாங்கள் விரும்பிச் செய்யும் வேலைகளை சிரமமின்றி செய்து முடிக்கும், முடிவில்லாத மற்றும் எல்லையில்லாதவர்களைப் பற்றி நினைக்கிறேன். தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளந்து, வானங்களை ஜாணளவாய் பிரமாணித்து, பூமியின் மண்ணை மரக்காலில் அடுக்குகிறவர் நம் ஆண்டவர் (ஏசாயா 40:12) என்று ஏசாயா கூறுகிறார். அவர் நட்சத்திரங்களை பெயர்சொல்லி அழைத்து அவைகளின் பாதைகளை வழிநடத்துகிறவர் (வச. 26), அவர் பிரபுக்களை மாயையாக்கி, பூமியின் நியாயாதிபதிகளை அவாந்தரமாக்குகிறார் (வச. 23), தீவுகளை ஒரு அணுவைப் போலவும், தேசங்களை கடலின் ஒரு துளியைப் போலவும் கருதுகிறார் (வச. 15). அவர் கேட்கிறார் “என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்?” (வச. 25). “கர்த்தராகிய அநாதி தேவன், இளைப்படைவதுமில்லை, சோர்ந்து போவதுமில்லை” என்று ஏசாயா பதிலளிக்கிறார்” (வச. 28).
மனஅழுத்தமும், சிரமமும் நமக்கு ஒருபோதும் நல்லதல்ல; ஆனால் இந்த நாளிலே அவைகள் ஒரு வல்லமையான செய்தியை அளிக்கிறது. வரம்பில்லாத ஆண்டவர் என்னைப் போலல்ல; அவர் விரும்புவதை செய்து முடிக்கிறார். நான் என் உணவை முடித்துவிட்டு மீண்டும் ஒருமுறை இடைநிறுத்துகிறேன். அவரை அமைதியோடு தொழுதுகொள்ளுகிறேன்.
கிறிஸ்துவில் பரிபூரணம்
பிரபலமான ஒரு திரைப்படத்தில், தன்னுடைய திருமண வாழ்க்கை சிதைந்துகொண்டிருக்கும் வேளையில், ஒரு நடிகர், தான் ஒரு வெற்றிகரமான விளையாட்டு முகவராக நடிக்கிறார். தன்னுடைய மனைவியைத் திரும்பப் பெறும் முயற்சியில் அவளுடைய கண்களைப் பார்த்து “நீ என்னைப் பூரணப்படுத்துகிறாய்” என்று கூறுகிறார். இது இதயத்தை நெகிழவைக்கும் நாட்டுப்புறக் கதையைப் பிரதிபலிக்கும் ஒரு செய்தி. நாம் ஒவ்வொருவரும் ஒரு “பாதி”, நாம் முழுமையடைய “மற்றொரு பாதியை” கண்டுபிடிக்க வேண்டும்.
நாம் காதலிக்கும் துணை நம்மை “முழுமை”யடையச் செய்கிறார் என்ற நம்பிக்கை பிரபலமான கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும், ஆனால் இது உண்மையா? தங்களுக்கு பிள்ளைகளில்லாததினால் அவர்கள் இன்னும் முழுமையடையவில்லை என்று கருதும் அநேக தம்பதிகளிடம் நான் பேசி இருக்கிறேன். தங்களுக்கு பிள்ளைகளிருந்தாலும் வேறே எதையோ தொலைத்து விட்டதாகக் கருதுகின்றனர். இறுதியாக எந்த மனிதனும் நம்மை முழுமையாக பூரணமாக்க முடியாது.
அப்போஸ்தலனாகிய பவுல் நமக்கு இன்னொரு தீர்வைக் கொடுக்கிறார். “தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது. அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்” (கொலோ. 2:9-10). தேவன் நம்மை மன்னித்து, விடுவிப்பது மட்டுமல்லாமல், அவருடைய ஜீவனை நம்முடைய ஜீவனில் கொடுத்து நம்மை பரிபூரணப்படுத்துகிறார் (வச. 13-15).
திருமணம் நல்லது. ஆனால் அது நம்மை பரிபூரணமாக்காது. இயேசு ஒருவர் மட்டுமே அதைச் செய்யமுடியும். ஒரு நபரோ, தொழிலோ அல்லது மற்ற ஏதாவதோ நம்மை பரிபூரணமடையச்செய்யும் என்று நாம் எதிர்பார்க்காமல், தேவன், அவருடைய பரிபூரணத்தை நம்முடைய வாழ்க்கையில் அதிகமதிகமாக நிரப்ப நமக்குக் கொடுக்கும் அழைப்பை ஏற்றுக்கொள்ளுவோம்.
வரம்பற்றவர்
நான் அங்கே, பேரங்காடியில், (Shopping Mall) உணவு சாப்பிடும் இடத்தில், உட்கார்ந்திருக்கிறேன். என் உடல் பதட்டமாகவும் என் வயிறு, வேலைகளின் காலக்கெடுவினால் தத்தளித்துக்கொண்டிருந்தது. நான் என் உணவை எடுத்து, சாப்பிட ஆரம்பித்தபோது, என்னைச் சுற்றிலும் இருக்கும் மக்கள் தங்கள் சொந்த வேலைகளைக் குறித்து பதற்றமடைந்துக்கொண்டிருந்தனர். நாம் அனைவருக்கும் எவ்வளவு கட்டுப்பாடு இருக்கிறது, நேரம், ஆற்றல் மற்றும் திறன் இவற்றில் கட்டுப்பாடு, என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.
நான், செய்ய வேண்டிய வேலைகள் என்ற புதிய பட்டியலை எழுதி முக்கியமான வேலைகளை முதலில் செய்ய நினைக்கிறேன். ஆனால் அதை எழுத பேனாவைத் திறக்கும்போது வேறொரு எண்ணம் என் மனதில் தோன்றுகிறது: தாங்கள் விரும்பிச் செய்யும் வேலைகளை சிரமமின்றி செய்து முடிக்கும், முடிவில்லாத மற்றும் எல்லையில்லாதவர்களைப் பற்றி நினைக்கிறேன். தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளந்து, வானங்களை ஜாணளவாய் பிரமாணித்து, பூமியின் மண்ணை மரக்காலில் அடுக்குகிறவர் நம் ஆண்டவர் (ஏசாயா 40:12) என்று ஏசாயா கூறுகிறார். அவர் நட்சத்திரங்களை பெயர்சொல்லி அழைத்து அவைகளின் பாதைகளை வழிநடத்துகிறவர் (வச. 26), அவர் பிரபுக்களை மாயையாக்கி, பூமியின் நியாயாதிபதிகளை அவாந்தரமாக்குகிறார் (வச. 23), தீவுகளை ஒரு அணுவைப் போலவும், தேசங்களை கடலின் ஒரு துளியைப் போலவும் கருதுகிறார் (வச. 15). அவர் கேட்கிறார் “என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்?” (வச. 25). “கர்த்தராகிய அநாதி தேவன், இளைப்படைவதுமில்லை, சோர்ந்து போவதுமில்லை” என்று ஏசாயா பதிலளிக்கிறார்” (வச. 28).
மனஅழுத்தமும், சிரமமும் நமக்கு ஒருபோதும் நல்லதல்ல; ஆனால் இந்த நாளிலே அவைகள் ஒரு வல்லமையான செய்தியை அளிக்கிறது. வரம்பில்லாத ஆண்டவர் என்னைப் போலல்ல; அவர் விரும்புவதை செய்து முடிக்கிறார். நான் என் உணவை முடித்துவிட்டு மீண்டும் ஒருமுறை இடைநிறுத்துகிறேன். அவரை அமைதியோடு தொழுதுகொள்ளுகிறேன்.
பழிவாங்காத பாதை
ஒரு விவசாயி தன்னுடைய வாகனத்தில் ஏறி தன்னுடைய வயல் நிலத்தை பார்வையிட புறப்பட்டார். தன் நிலத்தின் ஓரத்தில் வந்தவுடன் அவருக்கு இரத்தம் கொதிக்க ஆரம்பித்தது. ஏனென்றால், தன்னுடைய பண்ணையின் ஒதுக்குப்புறத்தில் யாரோ மீண்டும் சட்டவிரோதமாய் குப்பையை கொட்டியிருந்தனர். அந்த குப்பைகளை தன்னுடைய வாகனத்தில் ஏற்றிய அவர், அதில் ஒரு கடித உறையை கண்டுபிடித்தார். அந்த முகவரிக்கு நேராய் சென்று அந்த வீட்டின் தோட்டத்தில், அந்த குப்பைகளையும் அதோடு சேர்த்து தன்னுடைய குப்பைகளையும் அதில் கொட்டிவிட்டு வந்தார்.
பழிவாங்குதல் இனிமையானது என்று யாரோ சொன்னார்கள். ஆனால் அது சரியானதா? 1 சாமுவேல் 24இல் தாவீதும் அவனுடைய மனிதர்களும் தங்களை கொலைசெய்ய தேடும் சவுலிடத்திலிருந்து தப்பிக்க குகைக்குள் ஒளிந்துக்கொண்டனர். அதே குகையில் சவுல் வரும்போது தாவீதின் மனிதர்கள், தாவீது சவுலை பழிவாங்குவதற்கான சரியான வாய்ப்பாய் அதை கருதினர் (வச. 3-4). ஆனால் தாவீது அதை செய்யவில்லை. “என் ஆண்டவன் மேல் என் கையைப்போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காப்பாராக” (வச. 6) என்று அவன் கூறுகிறான். தாவீது தனக்கு ஒன்றும் செய்யவில்லை என்று சவுல் அறிந்ததும், “நீ என்னைப் பார்க்கிலும் நீதிமான்” என்று உணர்ச்சிவசப்படுகிறான் (வச. 17-18).
நாமோ அல்லது நம்மைச் சார்ந்தவர்களோ அநீதியை சந்திக்கும்போது, அதற்கு பழிவாங்குவதற்கான சரியான தருணம் நமக்கு வாய்க்கலாம். அந்த விவசாயி அதை தவறாய் பயன்படுத்தியதுபோல நாம் பயன்படுத்தப்போகிறோமா? அல்லது தாவீதைப் போன்று பழிவாங்குவதற்கு பதிலாக நீதியை பிரதிபலிக்கப்போகிறோமா?
மேன்மை
வடக்கு இங்கிலாந்து தேசத்தில், கத்பர்ட் மிகவும் விரும்பப்பட்ட ஒரு நபர். 7ஆம் நூற்றாண்டில் அநேக இடங்களில் சுவிசேஷ ஊழியம் செய்த இவர் அவ்வப்போது மன்னர்களுக்கும் ஆலோசகராகவும், மாநில விவகாரங்களில் தீர்வுகாணவும் உதவி செய்துள்ளார். அவருடைய மரணத்திற்கு பின், அவருடைய நினைவாக துர்ஹாம் என்னும் பட்டணம் ஸ்தாபிக்கப்பட்டது. ஆனால் கத்பர்ட்டின் பணி இவைகளைக் காட்டிலும் அதிகம்.
ஒரு பெரிய வியாதியினால் குறிப்பிட்ட ஒரு பகுதியில் வாழ்ந்த மக்கள் சிக்குண்டு தவித்தபோது, கத்பர்ட் மக்களை தேற்றுவதற்கு அந்த இடத்திற்கு போனார். அப்படி ஒரு கிராமத்தில் தன் பணியை முடித்து கிளம்பியபோது யாருக்காவது ஜெப தேவை இருக்கிறதா என்று பார்க்க, அங்கு ஒரு பெண் தன் குழந்தையை தூக்கிக்கொண்டு வந்தாள். அவள் ஏற்கனவே ஒரு மகனை இழந்தவள். அவள் தூக்கிவந்த அந்த பிள்ளையும் மரிக்கும் தருவாயில் இருந்தது. ஜூரத்தினால் பாதிக்கப்பட்டிருந்த அந்த பிள்ளையை தன் கையில் தூக்கிய கத்பர்ட், அவனுக்காய் பாரத்துடன் ஜெபித்து, அவனுடைய நெற்றியில் முத்தமிட்டார். அவனைப் பார்த்து, “பயப்படாதே, இனி உன் குடும்பத்தில் யாரும் மரிப்பதில்லை” என்றார். அதற்கேற்றாற்போல் அந்த பிள்ளையும் உயிர் பிழைத்தது.
இயேசுகிறிஸ்துவும் ஒரு சிறு பிள்ளையை தூக்கி, ஒரு பெரிய பாடத்தை கற்றுத் தந்தார். “இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்” என்றார் (மாற்கு 9:37). ஒரு தொகுப்பாளர் விசேஷ விருந்தாளியை நிகழ்ச்சிக்கு வரவேற்பதுபோல, யூத கலாச்சாரத்தின்படி, ஒருவரை வரவேற்பது என்பது அவர்களுக்கு பணிவிடை செய்வது என்று பொருள்படுகிறது. சிறியவர்கள் பெரியவர்களுக்கு பணிவிடை செய்யவேண்டும் என்ற நிலை இருந்தபோது, இயேசு சொன்ன இந்த காரியம் சற்று அதிர்ச்சியாகவே இருந்திருக்கும். இயேசு சொல்ல வந்தது என்ன? சிறுமையும் எளிமையுமான காரியங்களுக்கு ஊழியம் செய்வதே உண்மையான மேன்மை (வச. 35).
மன்னர்களுக்கு ஆலோசகர். வரலாற்று புகழ்பெற்றவர். அவர் நினைவாக ஒரு பட்டணம் அமைந்துள்ளது. ஷதன் எஜமானை பிரதிபலிக்கும் அவளின் எளிமையான செயலாய் பதிந்துகொள்வன, தாயின் அழுகை குரலுக்கு செவிகொடுத்தது மற்றும் சிறு பிள்ளையின் நெற்றியில் முத்தம் இடப்பற்றது.. தன் எஜமானனை பிரதிபலிக்கும் எளிமையான வாழ்க்கை.
பொறாமையை மேற்கொள்ளுதல்
பிரபல ஆங்கிலத் திரைப்படமொன்றில், வயதுமுதிர்ந்த இசைவாத்தியக் கலைஞர் ஒருவர் அந்த குறிப்பிட்ட நிகழ்விற்கு வந்திருந்த பாதிரியாருக்கு தன்னுடைய இசைகளில் சிலவற்றை பியானோவில் வாசித்துக் காண்பித்தார். சங்கடப்பட்ட பாதிரியார், அந்த இசை தனக்கு பிடிபடவில்லை என்றார். “இது எப்படியிருக்கிறது?” என்று எல்லோருக்கும் பரீட்சையமான ஒரு இசையை வாசித்துக் காண்பித்தார். இது உங்களுடையதா என்று அவர் கேட்க, வெறுமனே “இல்லை” என்று பதிலளிக்கிறார். ஆனால் அது பிரபல மொசார்த்தின் இசை என்பதை எளிதில் மக்கள் புரிந்துகொண்டனர். அதுமட்டுமின்றி, அவர் அதை வாசித்தது, அந்த பிரபல இசைக்கு காரணமான மொசார்த்தின் மரண நிகழ்வில் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மொசார்த்தின் வெற்றியின் மீது அவர் கொண்ட பொறாமை அதை வெளிப்படையாய் ஒத்துக்கொள்ள அனுமதிக்கவில்லை.
மற்றுமொரு பொறாமைக் கதையின் அடிப்படையாக ஒரு பாடல் அமைக்கப்பட்டுள்ளது. தாவீது கோலியாத்தை வெற்றிகொண்ட பின், மக்கள், “சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம்” (1 சாமுவேல் 18:7) என்று மகிழ்ச்சியோடு பாடினர். இந்த ஒப்பிடுதல் சவுல் ராஜாவுக்கு திருப்தியாயில்லை. தாவீதின் வெற்றியின் மீது பொறாமைக் கொண்டு, தன்னுடைய ராஜ்யத்தை இழக்க நேரிடுமோ என்று பயந்த சவுல் (வச. 8-9), தாவீதைக் கொலை செய்வதற்காக நீண்ட முயற்சியை ஏறெடுக்கிறான்.
இந்த மூத்த இசைக்கலைஞரைப் போல, அதிகாரத்திலிருந்த சவுலைப் போல, நம்மைவிட திறமையானவர்களைச் சந்திக்கும்போது நாம் பெறாமைப்பட நேரிடலாம். அவர்களுடைய குறைகளை சுட்டிக்காட்டுவதையும் அவர்களின் வெற்றியை அற்பமாய் எண்ணுவதையும் விட்டுவிட்டு, நம்முடைய பொறாமையை மேற்கொள்ள பழகுவோம்.
சவுல் ராஜாவாக தெய்வீகமாய் தேர்ந்தெடுக்கப்பட்டான் (10:6-7, 24). அந்த தெரிந்தெடுத்தல் அவனுக்குள் பொறாமையை அல்ல, மாறாக, பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்தியிருக்கவேண்டும். நம்முடைய அழைப்பும் பிரத்யேகமானது என்பதினால் (எபேசியர் 2:10), மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுக்கொள்வதை நிறுத்துவதின் மூலம் பொறாமையை மேற்கொள்ளலாம் முயற்சிக்கலாம். அதற்கு பதிலாக, மற்றவர்களுடைய வெற்றியில் மகிழலாம்.