எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஷெரிடன் வாய்ஸிகட்டுரைகள்

வரம்பற்றவர்

நான் அங்கே, பேரங்காடியில், (Shopping Mall) உணவு சாப்பிடும் இடத்தில், உட்கார்ந்திருக்கிறேன். என் உடல் பதட்டமாகவும் என் வயிறு, வேலைகளின் காலக்கெடுவினால் தத்தளித்துக்கொண்டிருந்தது. நான் என் உணவை எடுத்து, சாப்பிட ஆரம்பித்தபோது, என்னைச் சுற்றிலும் இருக்கும் மக்கள் தங்கள் சொந்த வேலைகளைக் குறித்து பதற்றமடைந்துக்கொண்டிருந்தனர். நாம் அனைவருக்கும் எவ்வளவு கட்டுப்பாடு இருக்கிறது, நேரம், ஆற்றல் மற்றும் திறன் இவற்றில் கட்டுப்பாடு, என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

நான், செய்ய வேண்டிய வேலைகள் என்ற புதிய பட்டியலை எழுதி முக்கியமான வேலைகளை முதலில் செய்ய நினைக்கிறேன். ஆனால் அதை எழுத பேனாவைத் திறக்கும்போது வேறொரு எண்ணம் என் மனதில் தோன்றுகிறது: தாங்கள் விரும்பிச் செய்யும் வேலைகளை சிரமமின்றி செய்து முடிக்கும், முடிவில்லாத மற்றும் எல்லையில்லாதவர்களைப் பற்றி நினைக்கிறேன். தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளந்து, வானங்களை ஜாணளவாய் பிரமாணித்து, பூமியின் மண்ணை மரக்காலில் அடுக்குகிறவர் நம் ஆண்டவர் (ஏசாயா 40:12) என்று ஏசாயா கூறுகிறார். அவர் நட்சத்திரங்களை பெயர்சொல்லி அழைத்து அவைகளின் பாதைகளை வழிநடத்துகிறவர் (வச. 26), அவர் பிரபுக்களை மாயையாக்கி, பூமியின் நியாயாதிபதிகளை அவாந்தரமாக்குகிறார் (வச. 23), தீவுகளை ஒரு அணுவைப் போலவும், தேசங்களை கடலின் ஒரு துளியைப் போலவும் கருதுகிறார் (வச. 15). அவர் கேட்கிறார் “என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்?” (வச. 25). “கர்த்தராகிய அநாதி தேவன், இளைப்படைவதுமில்லை, சோர்ந்து போவதுமில்லை” என்று ஏசாயா பதிலளிக்கிறார்” (வச. 28). 

மனஅழுத்தமும், சிரமமும் நமக்கு ஒருபோதும் நல்லதல்ல; ஆனால் இந்த நாளிலே அவைகள் ஒரு வல்லமையான செய்தியை அளிக்கிறது. வரம்பில்லாத ஆண்டவர் என்னைப் போலல்ல; அவர் விரும்புவதை செய்து முடிக்கிறார். நான் என் உணவை முடித்துவிட்டு மீண்டும் ஒருமுறை இடைநிறுத்துகிறேன். அவரை அமைதியோடு தொழுதுகொள்ளுகிறேன்.

பழிவாங்காத பாதை

ஒரு விவசாயி தன்னுடைய வாகனத்தில் ஏறி தன்னுடைய வயல் நிலத்தை பார்வையிட புறப்பட்டார். தன் நிலத்தின் ஓரத்தில் வந்தவுடன் அவருக்கு இரத்தம் கொதிக்க ஆரம்பித்தது. ஏனென்றால், தன்னுடைய பண்ணையின் ஒதுக்குப்புறத்தில் யாரோ மீண்டும் சட்டவிரோதமாய் குப்பையை கொட்டியிருந்தனர். அந்த குப்பைகளை தன்னுடைய வாகனத்தில் ஏற்றிய அவர், அதில் ஒரு கடித உறையை கண்டுபிடித்தார். அந்த முகவரிக்கு நேராய் சென்று அந்த வீட்டின் தோட்டத்தில், அந்த குப்பைகளையும் அதோடு சேர்த்து தன்னுடைய குப்பைகளையும் அதில் கொட்டிவிட்டு வந்தார். 

பழிவாங்குதல் இனிமையானது என்று யாரோ சொன்னார்கள். ஆனால் அது சரியானதா? 1 சாமுவேல் 24இல் தாவீதும் அவனுடைய மனிதர்களும் தங்களை கொலைசெய்ய தேடும் சவுலிடத்திலிருந்து தப்பிக்க குகைக்குள் ஒளிந்துக்கொண்டனர். அதே குகையில் சவுல் வரும்போது தாவீதின் மனிதர்கள், தாவீது சவுலை பழிவாங்குவதற்கான சரியான வாய்ப்பாய் அதை கருதினர் (வச. 3-4). ஆனால் தாவீது அதை செய்யவில்லை. “என் ஆண்டவன் மேல் என் கையைப்போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காப்பாராக” (வச. 6) என்று அவன் கூறுகிறான். தாவீது தனக்கு ஒன்றும் செய்யவில்லை என்று சவுல் அறிந்ததும், “நீ என்னைப் பார்க்கிலும் நீதிமான்” என்று உணர்ச்சிவசப்படுகிறான் (வச. 17-18). 

நாமோ அல்லது நம்மைச் சார்ந்தவர்களோ அநீதியை சந்திக்கும்போது, அதற்கு பழிவாங்குவதற்கான சரியான தருணம் நமக்கு வாய்க்கலாம். அந்த விவசாயி அதை தவறாய் பயன்படுத்தியதுபோல நாம் பயன்படுத்தப்போகிறோமா? அல்லது தாவீதைப் போன்று பழிவாங்குவதற்கு பதிலாக நீதியை பிரதிபலிக்கப்போகிறோமா? 

மேன்மை

வடக்கு இங்கிலாந்து தேசத்தில், கத்பர்ட் மிகவும் விரும்பப்பட்ட ஒரு நபர். 7ஆம் நூற்றாண்டில் அநேக இடங்களில் சுவிசேஷ ஊழியம் செய்த இவர் அவ்வப்போது மன்னர்களுக்கும் ஆலோசகராகவும், மாநில விவகாரங்களில் தீர்வுகாணவும் உதவி செய்துள்ளார். அவருடைய மரணத்திற்கு பின்,  அவருடைய நினைவாக துர்ஹாம் என்னும் பட்டணம் ஸ்தாபிக்கப்பட்டது. ஆனால் கத்பர்ட்டின் பணி இவைகளைக் காட்டிலும் அதிகம். 

ஒரு பெரிய வியாதியினால் குறிப்பிட்ட ஒரு பகுதியில் வாழ்ந்த மக்கள் சிக்குண்டு தவித்தபோது, கத்பர்ட் மக்களை தேற்றுவதற்கு அந்த இடத்திற்கு போனார். அப்படி ஒரு கிராமத்தில் தன் பணியை முடித்து கிளம்பியபோது யாருக்காவது ஜெப தேவை இருக்கிறதா என்று பார்க்க, அங்கு ஒரு பெண் தன் குழந்தையை தூக்கிக்கொண்டு வந்தாள். அவள் ஏற்கனவே ஒரு மகனை இழந்தவள். அவள் தூக்கிவந்த அந்த பிள்ளையும் மரிக்கும் தருவாயில் இருந்தது. ஜூரத்தினால் பாதிக்கப்பட்டிருந்த அந்த பிள்ளையை தன் கையில் தூக்கிய கத்பர்ட், அவனுக்காய் பாரத்துடன் ஜெபித்து, அவனுடைய நெற்றியில் முத்தமிட்டார். அவனைப் பார்த்து, “பயப்படாதே, இனி உன் குடும்பத்தில் யாரும் மரிப்பதில்லை” என்றார். அதற்கேற்றாற்போல் அந்த பிள்ளையும் உயிர் பிழைத்தது. 

இயேசுகிறிஸ்துவும் ஒரு சிறு பிள்ளையை தூக்கி, ஒரு பெரிய பாடத்தை கற்றுத் தந்தார். “இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்” என்றார் (மாற்கு 9:37). ஒரு தொகுப்பாளர் விசேஷ விருந்தாளியை நிகழ்ச்சிக்கு வரவேற்பதுபோல, யூத கலாச்சாரத்தின்படி, ஒருவரை வரவேற்பது என்பது அவர்களுக்கு பணிவிடை செய்வது என்று பொருள்படுகிறது. சிறியவர்கள் பெரியவர்களுக்கு பணிவிடை செய்யவேண்டும் என்ற நிலை இருந்தபோது, இயேசு சொன்ன இந்த காரியம் சற்று அதிர்ச்சியாகவே இருந்திருக்கும். இயேசு சொல்ல வந்தது என்ன? சிறுமையும் எளிமையுமான காரியங்களுக்கு ஊழியம் செய்வதே உண்மையான மேன்மை (வச. 35).

மன்னர்களுக்கு ஆலோசகர். வரலாற்று புகழ்பெற்றவர். அவர் நினைவாக ஒரு பட்டணம் அமைந்துள்ளது. ஷதன் எஜமானை பிரதிபலிக்கும் அவளின் எளிமையான செயலாய் பதிந்துகொள்வன, தாயின் அழுகை குரலுக்கு செவிகொடுத்தது மற்றும் சிறு பிள்ளையின் நெற்றியில் முத்தம் இடப்பற்றது.. தன் எஜமானனை பிரதிபலிக்கும் எளிமையான வாழ்க்கை. 

பொறாமையை மேற்கொள்ளுதல்

பிரபல ஆங்கிலத் திரைப்படமொன்றில், வயதுமுதிர்ந்த இசைவாத்தியக் கலைஞர் ஒருவர் அந்த குறிப்பிட்ட நிகழ்விற்கு வந்திருந்த பாதிரியாருக்கு தன்னுடைய இசைகளில் சிலவற்றை பியானோவில் வாசித்துக் காண்பித்தார். சங்கடப்பட்ட பாதிரியார், அந்த இசை தனக்கு பிடிபடவில்லை என்றார். “இது எப்படியிருக்கிறது?” என்று எல்லோருக்கும் பரீட்சையமான ஒரு இசையை வாசித்துக் காண்பித்தார். இது உங்களுடையதா என்று அவர் கேட்க, வெறுமனே “இல்லை” என்று பதிலளிக்கிறார். ஆனால் அது பிரபல மொசார்த்தின் இசை என்பதை எளிதில் மக்கள் புரிந்துகொண்டனர். அதுமட்டுமின்றி, அவர் அதை வாசித்தது, அந்த பிரபல இசைக்கு காரணமான மொசார்த்தின் மரண நிகழ்வில் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மொசார்த்தின் வெற்றியின் மீது அவர் கொண்ட பொறாமை அதை வெளிப்படையாய் ஒத்துக்கொள்ள அனுமதிக்கவில்லை. 

மற்றுமொரு பொறாமைக் கதையின் அடிப்படையாக ஒரு பாடல் அமைக்கப்பட்டுள்ளது. தாவீது கோலியாத்தை வெற்றிகொண்ட பின், மக்கள், “சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம்” (1 சாமுவேல் 18:7) என்று மகிழ்ச்சியோடு பாடினர். இந்த ஒப்பிடுதல் சவுல் ராஜாவுக்கு திருப்தியாயில்லை. தாவீதின் வெற்றியின் மீது பொறாமைக் கொண்டு, தன்னுடைய ராஜ்யத்தை இழக்க நேரிடுமோ என்று பயந்த சவுல் (வச. 8-9), தாவீதைக் கொலை செய்வதற்காக நீண்ட முயற்சியை ஏறெடுக்கிறான். 

இந்த மூத்த இசைக்கலைஞரைப் போல, அதிகாரத்திலிருந்த சவுலைப் போல, நம்மைவிட திறமையானவர்களைச் சந்திக்கும்போது நாம் பெறாமைப்பட நேரிடலாம். அவர்களுடைய குறைகளை சுட்டிக்காட்டுவதையும் அவர்களின் வெற்றியை அற்பமாய் எண்ணுவதையும் விட்டுவிட்டு, நம்முடைய பொறாமையை மேற்கொள்ள பழகுவோம். 

சவுல் ராஜாவாக தெய்வீகமாய் தேர்ந்தெடுக்கப்பட்டான் (10:6-7, 24). அந்த தெரிந்தெடுத்தல் அவனுக்குள் பொறாமையை அல்ல, மாறாக, பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்தியிருக்கவேண்டும். நம்முடைய அழைப்பும் பிரத்யேகமானது என்பதினால் (எபேசியர் 2:10), மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுக்கொள்வதை நிறுத்துவதின் மூலம் பொறாமையை மேற்கொள்ளலாம் முயற்சிக்கலாம். அதற்கு பதிலாக, மற்றவர்களுடைய வெற்றியில் மகிழலாம். 

நம்பிக்கையுள்ள ஜெபம்

குழந்தையில்லாமையோடு ஆண்டுகளாய் போராடிய விஷ்வாஸ் மற்றும் ரீடா தம்பதியினர், ரீடா கருவுற்றபோது ஆச்சரியப்பட்டனர். ரீடாவின் சரீர பெலவீனம் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் இருந்ததால் ஒவ்வொரு நாள் இரவும் விஷ்வாஸ் தன் மனைவிக்காகவும் பிள்ளைக்காகவும் தொடர்ந்து ஜெபித்து வந்தார். ஒரு நாள் இரவில், தேவன் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வதாக வாக்குப்பண்ணியிருந்ததால் இனி மன்றாடி ஜெபிக்க வேண்டியதில்லை என்று தீர்மானித்தார். ஆனால் ஒருவாரம் கழித்து, ரீடாவிற்கு கருச்சிதைவு ஏற்பட்டுவிட்டது. விஷ்வாஸ் மனமுடைந்துபோனார். தான் மன்றாடி ஜெபிக்காததினால் தான் குழந்தையை இழக்க நேரிட்டதோ என யோசித்தார். 

முதல்முறை வாசிக்கும்போது இந்த உவமையும் அப்படித்தான் எண்ணத் தூண்டும். அதில் தன் சிநேகிதனின் தொந்தரவு பொறுக்காமல் அவனுக்கு உதவிசெய்ய தன் படுக்கையிலிருந்து எழுந்திருக்கிறான் (தேவனை பிரதிபலிக்கும் கதாபாத்திரமாய் நம்பப்படுகிறது) (லூக்கா 11:5-8). அதாவது, தேவனை தொந்தரவு செய்தால் தான், நமக்குத் தேவையானதை அவர் கொடுப்பார் என்பதை உவமை ஆலோசிக்கிறது. நாம் கடினமாய் மன்றாடி ஜெபிக்கவில்லையென்றால் தேவன் ஒருவேளை நமக்கு உதவி செய்யாமலிருக்கலாம். 

ஆனால் பிரபல விளக்கவுரை ஆசிரியர்கள் இந்த உவமை தவறாய் புரிந்துகொள்ளப்படுகிறது என்று கருதுகின்றனர். அதின் உண்மையான அர்த்தம் என்னவெனில், நம் சிநேகிதர்கள் தங்கள் சுயநல காரணங்களை வைத்துக்கொண்டே நமக்கு உதவ முன்வந்தால், எந்த சுயநலமுமில்லாத தேவன் நமக்கு எவ்வளவு உதவுவார் என்பதே அதின் அர்த்தம். ஆகையினால் மனிதர்களைக் காட்டிலும் தேவன் பெரியவர் என்பதை அறிந்து (வச. 11-13), நாம் நம்பிக்கையோடே அவரிடத்தில் கேட்போம் (வச. 9-10). இந்த உவமையில் இடம்பெற்றுள்ள சிநேகிதன் கதாபாத்திரம் தேவனைக் குறிக்கவில்லை; மாறாக, தேவன் அவருக்கு நேர் எதிரான சுபாவம் கொண்டவர் என்பதைக் காண்பிக்கிறது. 

நான் விஷ்வாவைப் பார்த்து, “உன் குழந்தையை நீ ஏன் இழந்தாய் என்று எனக்குத் தெரியாது; ஆனால் நீ கடினமாய் மன்றாடி ஜெபிக்கவில்லை என்பது மட்டும் காரணமாய் இருக்கமுடியாது. தேவன் அப்படிப்பட்டவரல்ல” என்று சொன்னேன்.

தேவனுடைய பிள்ளைகள்

குழந்தையில்லாத தம்பதியினருக்காக ஒழுங்குசெய்யப்பட்ட பொதுவான கருத்தரங்கில் நான் பேச வேண்டியிருந்தது. அதில் பங்குபெற்ற அநேகர் குழந்தையில்லாமையால், எதிர்காலத்தைக் குறித்து சோர்ந்துபோயிருந்தார்கள். அந்த பாதையில் நடந்த அனுபவம் எனக்கும் இருந்ததால், அவர்களை உற்சாகப்படுத்த நினைத்தேன். “பெற்றோராக முடியவில்லையென்றாலும் உங்களால் அழகான வாழ்க்கை வாழமுடியும்” என்றும், “நீங்கள் பிரமிக்கத்தக்க ஆச்சரியமாய் உண்டாக்கப்பட்டிருக்கிறீர்கள்; உங்களைக் குறித்த புதிய நோக்கத்தை நீங்கள் கண்டுபிடிக்கவேண்டும்” என்றும் அவர்களை உற்சாகப்படுத்தினேன்.

சிறிது நேரம் கழித்து, ஒரு பெண் கண்ணீரோடு என்னிடத்திற்கு வந்து, நன்றி சொன்னாள். “குழந்தையின்மையால் சோர்ந்துபோயிருந்த நான் பிரமிக்கத்தக்க ஆச்சரியமாய் உண்டாக்கப்பட்டவள் என்பதை இன்று அறிந்தது ஆசீர்வாதமாய் இருந்தது” என்றாள். “நீங்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டவரா” என்று கேட்டேன். “வெகுநாட்களுக்கு முன்பு தேவனை விட்டு பின்வாங்கிப்போனேன்” என்ற அவள், “நான் மீண்டும் அந்த உறவைப் புதுப்பிக்க வேண்டும்” என்று தீர்மானம் எடுத்தாள்.

இதுபோன்ற தருணங்களில் சுவிசேஷத்தின் மேன்மை என்ன என்று புரிந்துகொள்ளமுடிகிறது. “அம்மா” “அப்பா” ஸ்தானத்தை அடைவது சிலருக்கு கடினம். நம் வேலை ஸ்தலங்களில் கொடுக்கப்படும் பதவி அந்தஸ்தையும் அவ்வப்போது நாம் இழக்கநேரிடும். ஆனால் இயேசு நமக்குக் கொடுக்கும் “பிரியமான பிள்ளைகள்” என்னும் ஸ்தானத்தை யாரும் நம்மிடத்திலிருந்து பறிக்கமுடியாது (எபேசியர் 5:1). அந்த அங்கீகாரத்தோடு இந்த உலகம் கொடுக்கும் எல்லா ஸ்தானங்களுக்கும் மேலான அன்பின் பாதையிலே நாம் நடக்கமுடியும் (வச. 2).

மனிதர்கள் அனைவரும் “பிரமிக்கத்தக்க அதிசயமாய்” உண்டாக்கப்பட்டுள்ளனர் (சங்கீதம் 139:14).இயேசுவை பின்பற்றுபவர்கள் அவருடைய பிள்ளைகளாய் மாறுகின்றனர். குழந்தையின்மையால் சோர்ந்திருந்த அந்த பெண், இந்த உலகம் கொடுப்பதைக்காட்டிலும் மேன்மையான ஸ்தானத்தையும் அங்கீகாரத்தையும் தேடிப் புறப்பட்டாள்.

நமது நிஜமான அங்கீகாரம்

எனது பெற்றோரின் புகைப்பட ஆல்பத்தில் ஒரு சிறுவனின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. பருக்கள் நிறைந்த வட்ட முகமும் நீட்டிக்கொண்டிருந்த தலைமுடியும் அவனுக்கு இருந்தது. அவனுக்கு கேலிச் சித்திரங்கள் பிடிக்கும்; சில பழவகைகள் பிடிக்காது; ஒரு வகையான இசையை விரும்புவான். அதே புகைப்பட ஆல்பத்தில் ஒரு இளைஞனுடைய புகைப்படம் ஒன்றும் இருந்தது. அவனுடைய முகம் வட்டமாய் இல்லாமல் சற்று நீண்டிருந்தது; தலைமுடி நீட்டிக்கொண்டில்லாமல் படிந்திருந்தது; முகத்தில் பருக்கள் இல்லை; அவனுக்கும் சில பழவகைகள் பிடிக்கும்; கேலிச் சித்திரங்களை விட திரைப்படங்களை அதிகம் விரும்புகிறான்; குறிப்பிட்ட சில இசைகளில் ஆர்வமுள்ளவன். அந்த சிறுவனின் முகமும் இந்த இளைஞனின் முகமும் ஒன்றுபோலவே இருந்தது. அறிவியல்பூர்வமாய் தோல், பற்கள், இரத்தம், எலும்பு ஆகியவற்றின் உருவ அமைப்பில் இருவரும் மற்றவரிலிருந்து வேறுபடுகின்றனர். எனினும், அந்த இரண்டு படங்களும் என்னுடையதுதான். மனிதனின் இந்த தோற்ற முரண்பாடு தத்துவமேதைகளையும் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. ஒவ்வொரு பருவத்திலும் நம்முடைய உருவ அமைப்பு மாற்றமடைந்துகொண்டே இருப்பதால் எது நம்முடைய நிஜமான உருவம்?  

வேதம் இக்கேள்விக்கு பதிலளிக்கிறது. தாயின் கருவிலே தேவன் நம்மை உருவாக்கத் துவங்கினதுமுதல் (சங். 139:13-14), படிப்படியாய் வளர்ந்து ஒரு நேர்த்தியான உருவத்தை நாம் அடைகிறோம். நம்முடைய வாழ்க்கையின் இறுதியில் நாம் எந்த உருவத்தில் இருக்கப்போகிறோம் என்பது நமக்கு தெரியாது. ஆனால் நாம் தேவனுடைய பிள்ளைகளாய் இருந்தால் இயேசுவைப் போல மாறுவோம் என்பதை மட்டும் நன்கு அறிந்திருக்கிறோம் (1 யோ. 3:2): நம்முடைய சரீரம் அவருடைய தன்மையையும், நம்முடைய ஆள் தத்துவம் அவருடைய சுபாவத்தையும், பாவங்கள் தொலைந்து, வரங்கள் பிரதிபலிக்கிற வாழ்க்கையையும் பெற்றுக்கொள்வோம்.

இயேசுவின் வருகை வரும்வரை இந்த எதிர்கால உருவ மாற்றத்திற்கு நேராய் நாம் இழுக்கப்படுகிறோம். தேவன் நம்மில் கிரியை செய்யும்போது படிப்படியாய் அவருடைய சாயலை நாம் தெளிவாய் பிரதிபலிக்கமுடியும்  (2 கொரி. 3:18). நாம் தெரிந்துகொள்ளப்பட்ட நோக்கத்தை இன்னும் அடையவில்லை. ஆனால் கிறிஸ்துவைப் போல் மாறும்போது நம்முடைய நிஜமான அங்கீகாரத்தைப் பெறுகிறோம்.

குற்ற உணர்ச்சியும் மன்னிப்பும்

“ஹியூமன் யுனிவர்சல்ஸ்” என்ற தனது புத்தகத்தில், மானுடவியலாளர் டொனால்ட் பிரவுன் மனிதகுலத்திற்கு பொதுவான மக்களின் நானுறுக்கும் அதிகமான பழக்கவழக்கங்களை பட்டியலிடுகிறார். பொம்மைகள், நகைச்சுவைகள், நடனங்கள் மற்றும் பழமொழிகள், பாம்புகளின் போர்க்குணம், மற்றும் சரங்களை கட்டுவது போன்றவற்றை அதில் உள்ளடக்கியுள்ளார்! அதேபோல், எல்லா கலாச்சாரங்களிலும் சரி மற்றும் தவறு என்ற கருத்துக்கள் உள்ளன. அங்கு தாராள குணம் பாராட்டப்படுகிறது; வாக்குறுதிகள் மதிக்கப்படுகிறது; மற்றும் கஞ்சத்தனம் மற்றும் கொலை செய்தல் ஆகியவை தவறானவை என்றும் புரிந்துகொள்ளப்படுகின்றன. நாம் எங்கிருந்தாலும் நம் அனைவருக்கும் மனசாட்சி உணர்வு இருக்கிறது.

அப்போஸ்தலனாகிய பவுல் இதேபோன்ற கருத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கூறினார். தேவன் யூத ஜனங்களுக்கு சரி தவறுகளை தெளிவுபடுத்த பத்து கட்டளைகளைக் கொடுத்தாலும், புறஜாதியார் தங்கள் மனசாட்சியின்படி நடக்கிறதின் மூலம் சரியானதைச் செய்யமுடியும் என்பதால், தேவனின் நியாயப்பிரமாணங்கள் அவர்களுடைய இருதயங்களில் எழுதப்பட்டிருப்பதாக பவுல் குறிப்பிடுகிறார் (ரோமர் 2:14-15). அதினால் மக்கள் எப்போதும் சரியானதையே செய்தனர் என்று அர்த்தமல்ல. புறஜாதியார் தங்கள் மனசாட்சிக்கு எதிராக செயல்பட்டார்கள் (1:32), யூதர்கள் நியாயப்பிரமாணத்தை மீறினார்கள் (2:17-24), இருவரும் குற்றவாளிகளாக இருந்தனர். ஆனால் இயேசுவை விசுவாசிப்பதின் மூலம், தேவன் நம்முடைய எல்லா நியாயப்பிரமாண மீறுதலினால் ஏற்பட்ட மரண தண்டனையை நீக்குகிறார் (3:23-26; 6:23).

தேவன் எல்லா மனிதர்களையும் சரி மற்றும் தவறு என்ற உணர்வோடு படைத்ததால், நாம் செய்த ஒரு கெட்ட காரியம் அல்லது நாம் செய்யத் தவறிய ஒரு நல்ல காரியம் குறித்து நாம் ஒவ்வொருவரும் சில குற்ற உணர்வை பெறுகிறோம். அந்த பாவங்களை நாம் அறிக்கையிடும்போது, தேவன் ஒரு வெள்ளை பலகையை சுத்தமாக துடைப்பது போல அனைத்து பாவங்களையும் துடைக்கிறார். நாம் யாராக இருந்தாலும், எங்கிருந்தாலும் அவரிடம் கேட்பது மட்டுமே நாம் செய்ய வேண்டிய ஒன்று. 

இயற்கையை கவனித்தல்

நானும் என் நண்பரும் எனக்கு பிடித்த நடைபயிற்சி இடத்தை சமீபத்தில் பார்வையிட்டோம். காற்று வீசும் மலையில் ஏறி, காட்டுப்பூக்களின் தோட்டத்தை கடந்து, உயரமான பைன் மரக் காடுகளுக்குள் சென்று, பின்னர் ஒரு பள்ளத்தாக்கில் இறங்கி, அங்கே ஒரு கணம் நின்றோம். மேகங்கள் எங்களுக்கு மேலே மென்மையாக மிதந்தன. அருகில் ஒரு சிறு ஊற்று ஓடியது. பறவைகள் பாடும் ஒலி மட்டுமே அங்கு ஒலித்தது. அதையெல்லாம் உள்ளார அனுபவித்துக்கொண்டு, நானும் என் நண்பனும் பதினைந்து நிமிடங்கள் அமைதியாக அங்கே நின்றோம்.

அன்றைய நாளின் இந்த அனுபவம் எங்களுக்கு ஆழ்ந்த சிகிச்சையை போல் இருந்தது. ஒரு அமெரிக்க பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியின் படி, இயற்கையைப் பற்றி நிதானித்து சிந்திப்பவர்கள் அதிக அளவு மகிழ்ச்சியையும், குறைந்த அளவிலான பதட்டத்தையும், பூமியைப் பாதுகாப்பதற்கான அதிக விருப்பத்தையும் தெரிவிக்கிறார்கள். காட்டின் வழியாக நடந்து செல்வது மட்டும் போதாது; நீங்கள் மேகங்களைப் பார்க்க வேண்டும்; பறவைகளின் ஓசையைக் கேட்கவேண்டும். இயற்கையில் வசிப்பது மட்டுமல்ல; அதை உற்று கவனிப்பதும் மிகவும் அவசியம்.

இயற்கையின் நன்மைகளுக்கு ஆன்மீக காரணம் இருக்க முடியுமா? படைப்பு தேவனின் வல்லமையும் அவரது தன்மையையும் வெளிப்படுத்துகிறது என்று பவுல் கூறுகிறார் (ரோமர் 1:20). தேவன் யோபுவிடம் அவரது பிரசன்னத்தை உணர சமுத்திரத்தையும், வானத்தையும், நட்சத்திரங்களையும் பார்க்கும்படி சொன்னார் (யோபு 38-39). “ஆகாயத்து பட்சிகளை” மற்றும் “காட்டுப் புஷ்பங்களை” பற்றி சிந்தித்துப் பார்ப்பது தேவனின் பாதுகாப்பை வெளிப்படுத்துவதோடு பதட்டத்தையும் குறைக்கும் என்று இயேசு கூறுகிறார் (மத்தேயு 6:25-30). வேதத்தில், இயற்கையை உற்று நோக்குவது ஒரு ஆவிக்குரிய நடைமுறையாய் காண்பிக்கப்பட்டுள்ளது.

இயற்கையானது நம்மை ஏன் மிகவும் நேர்மறையாக பாதிக்கிறது என்று விஞ்ஞானிகள் ஆச்சரியப்படுகிறார்கள். ஒரு காரணம் என்னவென்றால், இயற்கையை கவனிப்பதன் மூலம், அதைப் படைத்த தேவனை பற்றியும் அவர் நம்மை கண்ணோக்குகிறார் என்பது ஒரு காரணமாய் இருக்கலாம்.