ஞானமாக களையெடுப்பது
என் பேரக்குழந்தைகள் என் கொல்லைப்புறத்தை சுற்றி ஓடிக்கொண்டிருந்தார்கள். விளையாடிக்கொண்டிருந்தார்களா? இல்லை, களைகளை பிடுங்கிக்கொண்டிருந்தார்கள். “வேரோடு அவற்றைப் பிடுங்குகிறேன்” என்று இளைய குழந்தை கூறி எனக்கு மிகப்பெரிய பரிசைக் காட்டினாள். அந்த நாளில் நாங்கள் கடினமாக முயற்சித்து களைகளை சமாளிக்கும் போது அவளுடைய மகிழ்ச்சியானது, களைவேர்களை பிடுங்குவதை - ஒவ்வொரு தொல்லைதரும் அச்சுறுத்தலையும் நீக்குவதை நாங்கள் எவ்வளவு ரசிக்கிறோம் என்பதாகும். எனினும், சந்தோஷங்களுக்கு முன்பு அவைகளை செய்ய முடிவெடுக்கும் தேர்ந்தெடுப்பு வந்தது.
குறிப்பிட்ட நோக்கத்துடன் களையெடுப்பது தனிப்பட்ட பாவத்தை அகற்றுவதற்கான முதல் படியாகும். தாவீது இவ்வாறு ஜெபித்தார்: “தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்... வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து” (சங்கீதம் 139: 23-24).
என்ன ஒரு ஞானமான அணுகுமுறை, நம்முடைய பாவத்தை நமக்குக் வெளிப்படுத்திக்காண்பிக்கும்படி தேவனிடம் கேட்டு அதைப் பின்பற்றுவது. எல்லாவற்றிற்கும் மேலாக அவர் நம்மைப் பற்றி எல்லாவற்றையும் அறிந்தவர். “கர்த்தாவே நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்”. சங்கீதக்காரன் எழுதுகிறார், “என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்” (வச. 1-2).
“இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும் எனக்கு எட்டாத உயரமுமாயிருக்கிறது (வச. 6). பாவம் வேரூன்றுவதற்கு முன்பே, தேவன் ஆபத்தை நமக்கு முன்னமே எச்சரிக்க முடியும். அவர் நம்மை உள்ளும் புறமுமாக அறிவார். ஆகவே, ஒரு ரகசியமான பாவமனப்பான்மை நம்மில் வேரூன்ற முயற்சிக்கும்போது, அவர் அதை முதலில் அறிந்து, சுட்டிக்காட்டுகிறார்.
“உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்?”, தாவீது எழுதுகிறார். “உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்?” (வச. 7). நம்முடைய இரட்சகரை உயர்ந்த ஒழுக்க மேன்மையுடன் நெருக்கமாக பின்பற்றுவோம்.
ஒருபோதும் விட்டுக்கொடுத்துவிடாதே
தங்கள் சொந்த மொழிகளில் வேதத்தை பெறவிரும்பிய, தங்களுடைய சபை மக்களின் போராட்டத்தை “காலம் கடந்தது, போர் நுழைந்தது” என்றுதான் தெற்கு சூடானின் கெலிகோ மக்களின் பாதிரியார் செமி நிகோ விவரிப்பார். உண்மையை சொல்லப்போனால், ஒரு வார்த்தைகூட கெலிகோ மொழியில் அதுவரைக்கும் அச்சடிக்கப்பட்டிருக்கவில்லை. பல தசாப்தங்களுக்கு முன்பு பாதிரியார் நிகோ வின் பாட்டனார் வேதாகமத்தை மொழிபெயர்க்கும் வேலையை தைரியமாக தொடங்கினார். ஆனால் போரும், அமைதியின்மையும் அந்த முயற்சியை தடுத்துநிறுத்திக்கொண்டே இருந்தன. வடக்கு உகாண்டாவிலுள்ள தங்களுடைய அகதிகள் முகாம்கள் மற்றும் காங்கோ வின் ஜனநாயக குடியரசின் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டபோதிலும் பாதிரியாரும் அவருடன் அவருடைய சக விசுவாசிகளும் அந்த திட்டத்தை உயிர்ப்போடு வைத்திருந்தனர்.
அவர்களுடைய விடாமுயற்சி பலனளித்தது. ஏறக்குறைய முப்பது வருடங்களுக்கு பிறகு, ஒரு கிளர்ச்சியூட்டும் கொண்டாட்டத்தில் வேதாகம புதியஏற்பாடு கெலிகோவில் அகதிகளுக்கு கொடுக்கப்பட்டது. “கெலிகோவின் உத்வேகம் வார்த்தைகளுக்கும் அப்பாற்பட்டது,” என்று ஒரு திட்ட ஆலோசகர் சொல்கிறார்.
கெலிகோ மக்களின் அர்ப்பணிப்பு தேவன் யோசுவாவிடம் கோரிய நிலைத்தன்மையை பிரதிபலிப்பதாக உள்ளது. “இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய் அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்” (யோசுவா 1:8). தேவன் கூறியபடி சமமான விடாமுயற்சியுடன் கெலிகோ மக்கள் வேதாகமத்தின் மொழிபெயர்ப்பை அடைந்தனர். இப்பொழுது,“நீ அவர்களை முகாம்களில் காணும்போது அவர்கள் சிரிக்கிறார்கள்” என்றுஒரு மொழிபெயர்ப்பாளர் கூறுகிறார். வேதத்தை கவனிப்பதும் புரிந்துகொள்வதும் “அவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது”. கெலிகோ மக்களை போல நாமும் வேதத்திலிருந்து வல்லமையையும்,ஞானத்தையும் தேடுவதை ஒருபோதும் விட்டுவிடக்கூடாது.
பாடுவதை நினைவில்கொள்
ஓய்வுபெற்ற ஓபரா பாடகியான நான்சி கஸ்டாஃப்சன், தனது தாயைப் பார்க்க சென்றபொழுது, தன் தாய்க்கு ஞாபக மறதி நோய் அதிகரித்ததைக் கண்டு இடிந்து போனார். அவளுடைய அம்மா இனி அவளை அடையாளம் கண்டு பேசப் போவதில்லை. பல மாதாந்திர வருகைகளுக்குப் பிறகு, நான்சிக்கு ஒரு யோசனை தோன்றியது. அவளிடம் பாட ஆரம்பித்தாள். அவரது தாயின் கண்கள் இசை ஒலிகளில் ஒளிர ஆரம்பித்தன, அவளும் பாட ஆரம்பித்தாள்-இருவரும் இருபது நிமிடம் வரை பாடினார்கள்! பின்னர் நான்சியின் அம்மா சிரித்து கேலி செய்துகொண்டே, அவர்கள் "கஸ்டாஃப்சன் குடும்ப பாடகர்கள்!" என்று கூறினார். இழந்த நினைவுகளைத் தூண்டுவதற்கு சில சிகிச்சையாளர்கள் முடிவு செய்தபடி, வியத்தகு திருப்பம் இசையின் சக்தியை பரிந்துரைத்தது. “பிடித்த பழைய பாடல்களை” பாடுவது மனநிலையை அதிகரிப்பதற்கும், வீழ்ச்சியைக் குறைப்பதற்கும், அவசர அறைக்கு வருகை குறைப்பதற்கும், மயக்க மருந்துகளின் தேவையை குறைப்பதற்கும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இசை-நினைவக இணைப்பில் கூடுதல் ஆராய்ச்சி நடந்து வருகிறது. ஆனாலும், வேதாகமம் வெளிப்படுத்தியபடி, பாடுவதால் கிடைக்கும் மகிழ்ச்சி தேவனிடமிருந்து கிடைத்த பரிசு - அது உண்மையானது. “கர்த்தரைத் துதியுங்கள்; நம்முடைய தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது!" (சங். 147:1).
வேதவாக்கியங்கள் முழுவதிலும், தேவனின் மக்கள் அவரைப் புகழ்ந்து பாடும் பாடல்களில் தங்கள் குரல்களை உயர்த்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். “கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுங்கள், அவர் மகத்துவமான கிரியைகளைச் செய்தார்” (ஏசா. 12:5). “நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்; அநேகர் அதைக் கண்டு, பயந்து, கர்த்தரை நம்புவார்கள்” (சங். 40:3). எங்கள் பாடல் எங்களுக்கு ஊக்கமளிக்கிறது, ஆனால் அதைக் கேட்பவர்களுக்கும். நம் தேவன் பெரியவரும், துதிக்கு பாத்திரமானவர் என்பதை நாம் எப்பொழுதும் நினைவில் வைத்துக்கொள்வோம்.
இழந்ததை மீட்டெடுத்தல்
தொலைபேசி கடையில் இளம் போதகர் மோசமான செய்திக்காக தன்னைத்தானே திடப்படுத்திக் கொண்டார். அவரது திறன்பேசி (smartphone) எங்கள் வேதாகம வகுப்பின் போது தற்செயலாக கை தவறி கீழே விழுந்தது இழப்பு இல்லையா? உண்மையில் அது அப்படி அல்ல. கடை ஊழியர் போதகருடைய வேதாகம காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் உட்பட எல்லா தரவையும் மீட்டெடுத்தார். “நான் அழித்த ஒவ்வொரு புகைப்படத்தையும் கூட அவர் மீட்டெடுத்தார்" என்று அவர் கூறினார். "அந்தக் கடை எனது உடைந்த கைபேசியை ஒரு புதிய கைபேசியுடன் மாற்றியது.” அவர் சொன்னதுபோல "நான் இழந்த அனைத்தையும் மேலும் அதிகமானவற்றையும் மீட்டெடுத்தேன்."
கொடூரமான அமலேக்கியர்களின் தாக்குதலுக்கு பிறகு தாவீது ஒருமுறை தனது சொந்த மீட்பு பணியை வழிநடத்தினார். பெளிஸ்திய ஆட்சியாளர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட தாவீது மற்றும் அவரது ராணுவம், அவர்கள் தங்கள் நகரமான ஜிக்லாக் மீது திடீர் தாக்குதல் நடத்தி எரித்ததை கண்டுபிடித்தனர். “அதிலிருந்த ஸ்திரீகளாகிய சிறுவர்களையும் பெரியவர்களையும் சிறைப்பிடித்து... தங்கள் மனைவிகளும் தங்கள் குமாரரும் தங்கள் குமாரத்திகளும் சிறைபிடித்து கொண்டு போகப்பட்டார்கள்” (1 சாமு. 30: 2-3). அப்பொழுது தாவீதும் அவரோடு இருந்த ஜனங்களும் அழுவதற்கு தங்களில் பெலன் இல்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதார்கள். (வச. 4) வீரர்கள் தங்கள் தலைவர் தாவீதுடன் மிகவும் கசப்பாக இருந்தார்கள். அவர்கள் "அவரைக் கல்லெறிவது" பற்றி பேசினர் (வச. 6).
“தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்கு உள்ளே தன்னை திடப்படுத்திக் கொண்டான்” (வச. 6). கடவுள் வாக்குறுதி அளித்தபடி, தாவீது அமலேக்கியரை பின் தொடர்ந்து "அமலேக்கியர் பிடித்துக்கொண்டுபோன எல்லாவற்றையும், தன்னுடைய இரண்டு மனைவிகளையும், தாவீது விடுவித்தான்.
அவர்கள் கொள்ளையாடிக்கொண்டுபோன எல்லாவற்றிலும், சிறியதிலும், பெரியதிலும், குமாரரிலும், குமாரத்திகளிலும், ஒன்றும் குறைபடாமல், எல்லாவற்றையும் தாவீது திருப்பிகொண்டான்" (வச. 18-19). நமது நம்பிக்கையைக் கூட கொள்ளையடிக்கும் ஆவிக்குரிய தாக்குதல்களை நாம் எதிர்கொள்ளும் போது கர்த்தரில் நாம் புதிய பலத்தை காணலாம். வாழ்க்கையின் ஒவ்வொரு சவாலிலும் அவர் நம்முடன் இருப்பார்.
இறுதியில் விடுதலை
லெபனான் தேசத்தில் நடந்த கொடுமையான உள்நாட்டு போரில் ஐந்து வருடமாக பிணைக்கைதியாக வைக்கப்பட்டிருந்த பிரிட்டன் நாட்டு பத்திரிக்கையாளர் ஜான் மெக்கார்த்தி தன்னை விடுதலை செய்ய நடத்திய பேச்சுவார்த்தையில் முக்கியமான நபரை சந்திப்பதற்கு 25 வருடங்கள் ஆயின. உலக ஐக்கிய நாடுகளின் தூதரான ஜியாண்டோமேனிக்கோ பிக்கோ-வை மெக்கார்த்தி சந்தித்த போது “என் விடுதலைக்கு நன்றி” என்று கூறினார். அவருடைய இந்த இதயபூர்வமான வார்த்தைகள் மிகவும் கனமான வார்த்தைகள் ஏனென்றால் மெக்கார்தியையும் மற்றவர்களையும் விடுவிக்க பிக்கோ தன்னுடைய சொந்த உயிரையே பணயம் வைத்தார.
விசுவாசிகள் ஆகிய நாம் அதிகமாக போராடி பெற்றுக் கொண்ட விடுதலையுடன் தொடர்பு படுத்திக் கொள்ள முடியும். நம்மையும் சேர்த்து நமக்காக ரோம சிலுவையில் இயேசு தம் ஜீவனை தந்தார். அவருடைய “ நாம் விடுதலை பெறும்படி கிறிஸ்து நம்மை விடுதலை ஆக்கினார்” (கலா 5:1) என்பதை நாம் அறிவோம்.
யோவான் சுவிசேஷமும் “ குமாரன் விடுதலை ஆக்கினால் மெய்யாகவே விடுதலை உண்டு” (யோ 8:36) என்று சுட்டிக்காட்டுகிறது.
எஃப் வழிகளில் விடுதலை? பாவமும், அதன் பிடியிலிருந்து மாத்திரம் நமக்கு விடுதலை இல்லை,குற்றங்கள், அவமானம், கவலை, சாத்தானின் பொய்கள், மூடநம்பிக்கைகள், தவறான போதனைகள் மற்றும் நித்திய மரணத்திலிருந்து நம்மை இயேசு நம்மை விடுவிக்கிறார்.அவைகள் எதற்கும் நாம் பிணைக் கைதிகள் அல்ல, நம் எதிரிகளிடம் அன்பு செலுத்தவும், அன்பில் நடக்க நடக்கவும், நம்பிகையோடு வாழ நமக்கு விடுதலை கிடைத்தது. பரிசுத்த ஆவியின் வழிநடுத்தலின் மூலம், நாம் மன்னிப்பு பெற்றதின் நிமித்தம் மற்றவர்களையும் நாம் மன்னிப்போம்.
இவை அனைத்திற்கும் தேவனுக்கு நன்றி செலுத்தி, மற்றவர்களிடம் அன்பு செலுத்துவோம். அதன் மூலம் அவர்கள் மெய்யான விடுதலையை அறிந்து கொள்வார்கள்.
நம் இரக்கமுள்ள தேவன்
குளிர் நிறைந்த ஒரு இரவு நாளில், ஒரு யூத குடும்ப வீட்டின் ஜன்னல் ஒன்றின் மீது கல் எறியப்பட்டது. தாவீதின் நட்சத்திரமானது அந்த ஜன்னலில் தொங்கவிடப்பட்டிருந்தது. யூதர்களின் ஒளியின் திருவிழாவாகக் கொண்டாடப்படும் ஹானுக்கா-வை முன்னிட்டு மெனோரவும் (யூத விளக்குத்தண்டு) வைக்கப்பட்டிருந்தது. சில ஆயிரம் மக்கள் வசித்து வந்த இந்த சிறிய அமெரிக்க நகரத்தில் பெரும்பாலானோர் கிறிஸ்துவை விசுவாசித்தவர்கள் - அவர்கள் அந்த வெறுப்பு நிறைந்த செயலுக்கு இறக்கத்துடன் பதிலளித்தார்கள். அவர்கள் அருகில் வாழ்ந்து வந்த யூதர்களின் வலியிலும் பயத்திலும் பங்கேற்க்கும் வண்ணமாக, மெனோராக்களின் படங்களை தங்கள் வீடுகளின் ஜன்னல்களில் ஒட்டினார்கள்.
நம் இரட்சகராகிய இயேசு நமக்காக தம்மை தாழ்த்தி நம்மோடு வாழும்படி (யோ 1:14) வந்ததால் விசுவாசிகள் ஆகிய நாமும் பெரிதான இரக்கத்தை பெற்றவர்களாய் இருக்கிறோம். நமக்காக “அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும்,.. தம்மை வெறுமையாக்கி அடிமையின் ரூபமெடுத்தார்” (பிலி 2:6-7). நான் அழும்போது நம்மோடு அவரும் அழுது, நம்மை காக்கும் படி நமக்காக சிலுவையில் மரித்தார்.
தேவனுடைய அக்கறைக்கு அப்பால் நமக்கு எந்த சோதனையும் நேரிடாது. நம்மீது யாராவது ‘கல்லெறிந்தால்’ அவர் நமக்கு ஆறுதலாய் இருப்பார், வாழ்க்கை நமக்கு ஏமாற்றங்களை கொண்டு வந்தால் நம்மோடு அந்த கஷ்டத்தில் நடக்கிறார் (சங் 138:6). சோதனையில் நம்மை தப்புவித்து நம் பயங்களுக்கு நம்மை தப்புவிக்கிறார். உம் இரக்கம் நிறைந்த அன்பிற்காக நன்றி, தேவனே.
வாழ்க்கையின் வெடிகள்
புத்தாண்டு தினத்தன்று உலகெங்கிலும் உள்ள நகரம் மற்றும் மாநகரங்களில் அதிக சக்தி வாய்ந்த பட்டாசுகள் வெடிக்கும்போது, அதனுடைய சத்தம் நோக்கத்துடன் அதிகமாக இருக்கும். உற்பத்தியாளர்கள் கூறுகையில், அவற்றின் இயல்பால் ஒளிரும் பட்டாசுகள் வளிமண்டலத்தை பிளவுபடுத்துவதாக இருக்கும். 'ரிப்பீட்டர்ஸ்" அதாவது ஒரே சமயத்தில் மீண்டும் மீண்டும் வெடிப்பவை, குறிப்பாக தரையில் வெடிக்கப்படும்போது அதிக சத்தத்துடன் வெடிக்கும்.
தொல்லைகள் நம் இதயங்கள், மனங்கள் மற்றும் வீட்டின் மூலமாக ஏற்றம் பெறலாம். வாழ்க்கையின் பட்டாசுகள், குடும்பப் பிரச்சனைகள், உறவுப் பிரச்சனைகள், வேலை சவால்கள், நிதி நெருக்கடி, தேவாலயத்தில் பிரிவுகள் - இவைகள் நம்முடைய உணர்வு சூழலை பாதித்து ஒரு பெரிய வெடியைப் போல வெடிக்கும்.
இப்படிப்பட்ட ஒரு சலசலப்புக்கு மேலே நம்மை தூக்கி நிறுத்துபவர் யார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். கிறிஸ்துவே நம்முடைய சமாதானக் காரணர் என்று பவுல் எபேசியர் 2:14ல் எழுதுகிறார். அவருடைய பிரசன்னத்தில் நாம் உறுதியாக நிற்கும்போது, அவருடைய சமாதானம் எப்படிப்பட்ட இடையூரைக் காட்டிலும் மகா பெரியது. எந்த ஒரு கவலை, காயம் மற்றும் ஒற்றுமையின்மையின் சத்தத்தையும் அமைதிப்படுத்தும்.
இது யூதர்களுக்கும், புறஜாதிகளுக்கும் ஒரு ஆற்றல் மிக்க உறுதிமொழியாய் இருந்திருக்கும். அவர்கள் ஒருகாலத்தில் 'இந்த உலகத்தில் நம்பிக்கையில்லாமலும், தேவனில்லாமலும் வாழ்ந்து வந்தனர்" (வச. 12). இப்போது அவர்கள் துன்புறுத்தலின் அச்சுறுத்தல்களையும், அவர்களுக்குள்ளே பிரிவினையின் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் கிறிஸ்துவினால் அவர்கள் தேவனுக்கும், அதன் விளைவால் ஒருவருக்கொருவர் அவருடைய இரத்தத்தினாலே நெருங்கி கொண்டுவரப்பட்டனர். 'அவரே நம்முடைய சமாதானக் காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினைர்யாகிய நடுச்சுவரைத் தகர்த்தார் (வச. 14).
ஒரு புதிய ஆண்டை நாம் தொடங்கும்போது, அமைதியின்மை மற்றும் வானவெளியில் எப்போதும் உருட்டிக்கொண்டிருக்கும் பிரிவினையின் அச்சுறுத்தல்களிலிருந்து வாழ்க்கையின் இரைச்சல்மிக்க சோதனைகளிலிருந்து நாம் எப்போதும் இருக்கிற சமாதானத்திற்கு திரும்பக் கடவோம். அவர் வெள்ளப்பெருக்கை அமைதிப்படுத்தி நம்மை குணப்படுத்துகிறார்.
மென்மையான பேச்சு
நான் முகநூலில் வாதிட்டுக்கொண்டிருந்தேன். மோசமான நடவடிக்கை. நான் ஒரு அந்நியரை ஒரு காரசாரமான தலைப்பு முக்கியமாக, பிரிவினையை உண்டாக்கும் தலைப்பு - இதைப்பற்றி பேசி திருத்த கடமைப்பட்டிருக்கிறேன் என்று நினைத்தேன். அதன் விளைவு கடுமையான வாக்குவாதம், புண்படுத்தும் உணர்வுகள் (என்னுடைய பங்கில்) மற்றும் இயேசுவுக்காக சாட்சி கொடுப்பதற்கு ஒரு தகாத தருணமாக இருந்தது. இது 'இணையதள கோபத்தின்" வெளிப்பாடாக இருந்தது. இது வலைதளத்தில் தினமும் வீசப்படும் கடுஞ்சொற்களை குறிக்கும் பதம். ஒரு நெறிமுறை நிபுணர் விளக்கியது போல், ஆத்திரம் என்பது 'எப்படி பொதுக் கருத்துக்கள் பேசப்படுகின்றது" என்று மக்கள் தவறாக முடிவு செய்கிறார்கள்.
பவுல் தீமோத்தேயுவுக்கு கொடுத்த ஞானமான ஆலோசனை எச்சரிக்கையாக இருந்தது. புத்தியீனமும் அயுக்தமுமான தர்க்கங்கள் சண்டையை பிறப்பிக்குமென்று அறிந்து, அவைகளுக்கு விலகியிரு. கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைப்பண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகச் சமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனாயும் இருக்க வேண்டும் (2 தீமோ. 2:23-24).
ரோமானிய சிறையிலிருந்து தீமோத்தேயுவுக்கு எழுதப்பட்ட பவுலின் நல்ல ஆலோசனை, தேவனுடைய சத்தியத்தை கற்பிப்பதற்கு இளம் போதகரை தயார்படுத்த அனுப்பப்பட்டது. பவுலின் அறிவுரை இன்று சரியான நேரத்தில், முக்கியமாக நம்முடைய உரையாடல் விசுவாசத்திற்கு நேராக திருப்பப்படும்போது, நமக்கும் கொடுக்கப்படடுள்ளது. எதிர் பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும் … சாந்தமாய அவர்களுக்கு உபதேசிக்க வேண்டும் (வச. 25).
மற்றவர்களுடன் கனிவாக பேசுவது இந்த சவாலின் ஒரு பகுதி, ஆனால் போதகர்களுக்கு மட்டுமல்ல. தேவனை நேசித்து, அவரைப்பற்றி மற்றவர்களுக்கும் சொல்ல வாஞ்சிக்கும் எல்லோரும், அவருடைய சத்தியத்தை அன்போடு சொல்வோமாக. ஓவ்வொரு வார்த்தையிலும் பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவி செய்வார்.
மோதல்களிடம் இருந்து விலகுவது
பிரபல விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கல்லறையில் அவருடைய அறிவியல் சொற்பொழிவுகள் ஒன்றையும் குறிப்பிடவில்லை. அதற்கு பதிலாக தனது நண்பரான ஹென்ரிக் லாரன்சினுடைய "மாறாத அன்பு" என்பதை அவர் கல்லறையின் கல்வெட்டில் எழுதினார்கள். அவருடைய சாந்த குணமும், அவர் மற்றவர்களிடம் சமமாக பழகும் விதத்தையும் இது நினைவூட்டுகிறது. ஐன்ஸ்டீன் அவரைக்குறித்து "அனைவர்க்கும் ஹென்ரிக் ஒரு எடுத்துக்காட்டாக இருந்தார், தன்னை மேம்படுத்தும்படி ஏதும் செய்யாமல், தம்மால் முடிந்தவறை மற்றவர்களுக்கு உதவியாக இருக்க பார்த்தார்.
நோபெல் பரிசை வென்ற ஹென்ரிக் ஏற்றத்தாழ்வு இல்லாமல் மற்ற விஞ்ஞானிகளை ஒன்றிணைத்து, அரசியல் பாரபட்சம் காணாமல் முதலாம் உலக போர் காலத்தில் வேலை செய்தார். உலக போர் முடிந்த பிறகும் அவர் தம்மை மற்ற விஞ்ஞானிகளுடன் சமரசப்படுத்தி, வேற்றுமையை அகற்றி விஞ்ஞானத்தில் முற்றிலும் தம்மை அர்ப்பணித்தார் என்று ஐன்ஸ்டீன் அவருக்கு சாட்சி கொடுத்திருக்கிறார்.
சபையிலும் நாம் அனைவரும் வேற்றுமை அகற்றி ஒரே மனதாய் சமரசப்படுத்துவது அனைவருடைய குறிக்கோளாக இருக்க வேண்டும். சில சமயங்களில் தவிர்க்க முடியாத பிரச்சனைகள் வருவது உண்மை தான், எனினும் நம்மால் முடிந்த வரை சமாதானத்தை கடைபிடிக்க வேண்டும். "சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது;" (வச. 26). ஒன்றிணைந்து வாழுவதற்கு "கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்தி விருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவனுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்." (வச. 29)
இறுதியில் பவுல் "சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது. ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்." (வ 31,32). தேவ சபையை கட்டுவதற்கு நம்மாலே கூடுமான அளவு சர்ச்சைகளை தவிர்த்து விலகியிருப்பது மிகவும் உதவியாக இருக்கும். அதன் மூலம் நாம் தேவனை மகிமை படுத்துகிறோம்.