எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

மைக் விட்மெர்கட்டுரைகள்

எழும்புதல்

ஒரு விமானம் தாங்கி கப்பலை நாங்கள் சுற்றிப்பார்த்துக் கொண்டிருக்கையில், ஒரு சிறியரக போர்விமானத்தின் விமானி, இத்தகைய குறுகலான ஓடுபாதையில் விமானங்கள் உயரே எழும்ப மணிக்கு 56 கி.மீ வேகத்தில் காற்றடிக்க வேண்டும் என விளக்கினார். இந்த நிலையான காற்றுக்காக கப்பலின் கேப்டன், கப்பலை காற்றுமுகமாய் திருப்புவார். "விமானத்தின் பின்புறத்திலிருந்து தானே காற்றடிக்க வேண்டும்?" என நான் கேட்டேன். "இல்லை விமானம் காற்றுக்கெதிரே பறக்க வேண்டும், அது உயரே எழும்ப அதுதான் ஒரே வழி" என விமானி பதிலளித்தார்.

வாக்குப்பண்ணப்பட தேசத்திலே தம்முடைய ஜனங்களுக்கு காத்துக்கொண்டிருந்த "காற்றுமுகத்தினூடே" அவர்களை நடத்த யோசுவாவை தேவன் அழைத்தார். யோசுவாவிற்கு இரண்டு காரியங்கள் தேவைப்பட்டது. உட்புறமாக அவர், "மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு."(யோசுவா 1:7) இருக்க வேண்டும் மேலும் வெளிப்புறமாக அவருக்கு சவால்கள் இருக்க வேண்டும். அரனான பட்டணங்களை எதிர்கொள்ளுதல் (6:1–5), மனசோர்வுண்டாக்கும் தோல்விகள் (7:3–5), ஆகானின் திருட்டு (7:16–26), மேலும் தெடர்ச்சியான யுத்தங்கள் (அதிகாரங்கள் 10-11) என இதுபோன்ற அனுதின பணிகளில் ஆயிரக்கணக்கான இஸ்ரவேலர்களை வழிநடத்த வேண்டும்.

தேவனுடைய கற்பனைகளிலிருந்து யோசுவாவிற்கு உந்துதல் உண்டான காலமுழுதும் யோசுவாவின் முகத்திற்கெதிரே வீசிய காற்று அவருடைய வாழ்வையே உயரே எழுப்பியது. அவர் "நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்க..அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிரு(க்க)..இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிரு(க்க)" வேண்டும், "அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய்" (வ.7 -௮) என்று தேவன் கூறினார்.

என்ன நடந்தாலும் தேவனுடைய வழிகளை பின்பற்ற தீர்மானித்துள்ளீர்களா? சவால்களை எதிர்பாருங்கள். தைரியமாக காற்றுமுகத்திற்கெதிரே பறந்துபோங்கள், நீங்கள் உயரே எழும்புவதை காண்பீர்கள்.

இது கிருபை

 “லேஸ் மிசெரபிலெஸ்” என்ற பிரபலமான ஒரு பிரெஞ்சு வரலாற்று நாவலில், பரோலில் வெளிவந்த ஜீன் வால்ஜீன் என்ற குற்றவாளி, ஒரு மதகுருவின் வெள்ளியைத் திருடிவிடுவான். அவன் கையும் களவுமான பிடிபடுகிறான். அவன் சிறைக்கு செல்லுவான் என்று எதிர்பார்க்கும் வேளையில், அந்த வெள்ளியை தானே அவனுக்குக் கொடுத்ததாக மதகுரு கூறி, அவனை காப்பாற்றுவார். காவலர்கள்  போனதும், “இனி நீ தீமைக்குச் சொந்தமானவன் அல்ல; நன்மைக்கு சொந்தமானவன்” என்று அறிவுறுத்துவதாக நாவல் நீளுகிறது.

பெந்தெகொஸ்தே நாளில், பேதுரு விசுவாசிகளிடம் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இதே நகரத்தில் இயேசுவை சிலுவையில் அறைந்தனர் என்றார். மக்கள் கூட்டம் இருதயத்திலே குத்தப்பட்டவர்களாக நாங்கள் என்ன செய்யவேண்டும் என்கிறார்கள். பேதுரு அவர்களை நோக்கி, “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்” (அப்போஸ்தலர் 2:38) என்று ஆலோசனை கூறுகிறார்.  அவர்களுக்கு தகுந்த தண்டனையை இயேசு ஏற்றார். இப்பொழுது அவர்கள் விசுவாசத்தை அவர் மீது வைத்ததினால் தண்டனையிலிருந்து மன்னிக்கப்படுவர்.

என்னே ஆச்சரியமான கிருபை! மக்கள்தான் கிறிஸ்துவின் மரணத்திற்கு பொறுப்பானவர்கள், அதினால் அந்த மரணத்தால் அவர்களுக்கே மன்னிப்பளிக்கப்படுகிறது. தேவன் கிருபையுள்ளவர், வல்லமையில் சிறந்தவர். மானுடத்தின் பெரிய பாவத்தை அவர்களின் இரட்சிப்பிற்காகவே பயன்படுத்தினார். தேவன் இயேசுவை முன்பே சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்திருந்தால் எதுவுமே நன்மையானதாக மாறியிருக்காது என்று நாம் யோசிக்கலாம். சகலத்தையும் நன்மைக்கு ஏதுவாக நடத்துகிற (ரோமர் 8:28) அவர் ஒருவரையே விசுவாசியுங்கள்.

மரணத்தின் மூலம் வாழ்வு

கார்ல் என்பவர் புற்றுநோயுடன் போராடினார். அவருக்கு இரண்டு நுரையீரல் மாற்று சிகிச்சை தேவைப்பட்டது. அவர் தேவனிடம் புதிய நுரையீரல் தருமாறு ஜெபித்தார். ஆனால் அவ்வாறு ஜெபிப்பது அவருக்கு சற்று விசித்திரமாய் தோன்றியது. ஏனெனில் “நான் உயிர்வாழ யாரோ ஒருவர் இறக்க வேண்டும்,” என்பதை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. 

கார்லினின் இக்கட்டான நிலை, வேதாகமத்தின் ஓர் அடிப்படைச் சத்தியத்தை வெளிப்படுத்துகிறது. தேவன் மரணத்தின் மூலம் புதிய வாழ்க்கையைத் தருகிறார். இதை யாத்திராகமத்தில் காண்கிறோம். அடிமைத்தனத்தில் பிறந்த இஸ்ரவேலர்கள், எகிப்தியர்களின் அடக்குமுறையால் சோர்ந்துபோயினர். தேவன் தனிப்பட்ட தீர்வைக் கொடுக்காவிட்டால் பார்வோன் தன் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கமாட்டான். ஒவ்வொரு குடும்பமும் ஒரு பழுதற்ற ஆட்டுக்குட்டியை அடித்து அந்த இரத்தத்தை வீட்டுவாசலின் நிலைக்கால்கள் சட்டத்தில் தெளித்தால் மட்டுமே, வீட்டின் தலைச்சன் பிள்ளைகள் உயிருடன் இருக்கும், இல்லையேல் மரித்துவிடும் என்ற நிலையை தேவன் அனுமதிக்கிறார் (யாத்திராகமம் 12:6-7).

இன்று நீங்களும் நானும் பாவத்தின் அடிமைத்தனத்தில் பிறந்துள்ளோம். தேவன் தனிப்பட்ட தீர்வு காண தம் பழுதற்ற ஒரேபேறான குமாரனை சிலுவையில் இரத்தம் சிந்த ஒப்புக்கொடுத்தார். 

அவருடன் சேர்ந்துகொள்ள இயேசு நமக்கு அழைப்பு கொடுக்கிறார். “கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்” (கலாத்தியர் 2:20) என்று பவுல் அறிவிக்கிறார். நாம் தேவனின் பழுதற்ற ஆட்டுக்குட்டியானவரின் மீது விசுவாசம் வைக்கும்போது, நம் பாவத்திற்கு மரித்து அவருடனே கூட நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் உயிர்த்தெழுவோம் (ரோமர் 6:4-5). நாம் ஒவ்வொருமுறையும் பாவத்தின் கட்டுகளுக்கு மறுத்து தெரிவித்து, கிறிஸ்துவின் மீட்பை அங்கீகரித்து நம் விசுவாசத்தை வெளிப்படுத்துவோம். நாம் இயேசுவுடன் மரித்தபோதுதான் மெய்யாகவே பிழைத்திருக்கிறோம்.  

அவர்களுக்கு எப்படி தெரியும்

வடக்கு தாய்லாந்தில் இருக்கும் “கூடுகை” என்னும் திருச்சபை ஒரு தனிக்குழு சார்பற்ற, சர்வதேச திருச்சபை. சமீபத்திய ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று, கொரியா, கானா, பாக்கிஸ்தான், சீனா, வங்காள தேசம், அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் மற்றும் பல நாடுகளிலிருந்த கிறிஸ்துவின் விசுவாசிகள் தாழ்மையின் சிந்தையோடு ஒரு ஓட்டலின் மாநாட்டு அறையில் கூடினர். அவர்கள் “கிறிஸ்து மாத்திரமே” என்றும் “நான் கிறிஸ்துவின் பிள்ளை” என்றும் அந்த சூழ்நிலைக்கு கிளர்ச்சி தூண்டுகிறதுபோல் தோன்றிய பாடல்களை பாடினர். 

இயேசுவைப் போல யாராலும் மக்களை ஒன்றுதிரட்ட முடியாது. அவர் ஆரம்பத்திலிருந்தே அப்படி செய்கிறார். முதலாம் நூற்றாண்டில் அந்தியோகியாவில் பதினெட்டு இன மக்கள் தனித்தனியே வசித்தனர். விசுவாசிகள் முதலில் அந்தியோகியாவுக்கு வந்தபோது, அங்கிருந்த யூதர்களுக்கு மட்டுமே சுவிசே~த்தைப் பிரசங்கித்தனர் (அப்போஸ்தலர் 11:19). ஆனால் திருச்சபையைக் குறித்த தேவனுடைய திட்டம் அதுவல்ல. உடனடியாக, மற்றவர்களும் அங்கு கடந்து வந்து “கிரேக்கருடனே பேசிக் கர்த்தராகிய இயேசுவைக்குறித்துப் பிரசங்கித்தார்கள்,” “அநேக ஜனங்கள் விசுவாசிகளாகி, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள்” (வச. 20-21). நூற்றாண்டுகளாய் யூதருக்கும் கிரேக்கருக்கும் இடையே நீடித்துக்கொண்டிருந்த பகையை இயேசு குணமாக்குகிறார் என்பதை அப்பட்டணத்திலிருந்தவர்கள் அறிந்துகொண்டனர். இந்த பலதரப்பட்ட இன மக்களைக் கொண்ட இந்த திருச்சபை “கிறிஸ்தவர்கள்” என்று அழைக்கப்பட்டனர் (வச. 26). 

இனம், சமுதாயம், மற்றும் பொருளாதார எல்லைகளைக் கடந்து நம்மிலிருந்து வேறுபட்ட மக்களை சந்திப்பது நமக்கு சவாலான ஒன்று. ஆனால் இந்த கடினமான பாதை நமக்கு வாய்ப்பாய் கொடுக்கப்பட்டுள்ளது. அது கடினமாயில்லையென்றால், அதை செய்வதற்கு நாம் இயேசுவின் உதவியை தேடியிருக்கமாட்டோம். அதில் சிலர் நாம் அவரை பின்பற்றுகிறோம் என்பதை அறிந்திருக்கின்றனர். 

ஒன்றாய் தரித்திருங்கள்

ஒரு கோழி தொடையினால் டெவ்பெர்ரி பாப்திஸ்து திருச்சபை 1800ல் இரண்டாய் பிளவுபட்டது. அதைக் குறித்து பல கதைகள் நிலவுகிறது. ஆனால் அத்திருச்சபையின் தற்போதைய அங்கத்தினர் ஒருவர் சொல்லும்போது, அத்திருச்சபையின் விருந்தின்போது, ஒரு கடைசி கோழி தொடைக் கறிக்காய் இருவர் சண்டையிட்டுக்கொண்டனர், அதில் ஒருவர் அந்த கோழித் தொடை தேவனுக்குரியது என்றார் ; மற்றவர் தேவன் அதை கேட்கமாட்டார், எனக்கு அது தேவை என்றார். அந்த மனிதன் மிகுந்த கோபப்பட்டு, இரண்டு கிலோமீட்டர் தள்ளி இரண்டாவது டெவ்பெர்ரி பாப்திஸ்து திருச்சபையை ஸ்தாபித்தார். அதிர்ஷ்டவசமாக அந்த திருச்சபைகள் பிரச்சனைகளை அமர்த்தி, சபை பிளவுபட்டதற்கான இந்த கீழ்த்தரமான காரணத்தைத் தங்களுக்குள்ளாகவே மறைத்துக்கொண்டனர்.

இயேசு ஏற்றுக்கொள்கிறார். அவருடைய மரணத்திற்கு முந்தினநாள் இரவில் அவரை பின்பற்றுகிறவர்களுக்காக அவர் ஜெபிக்கிறார். “அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்” (யோவான் 17:21-23). 

பவுல் ஏற்றுக்கொள்கிறார். “சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள். ஒரே சரீரமும், ஒரே ஆவியும் உண்டு” (எபேசியர் 4:3-4) என்று வலியுறுத்துகிறார். அவைகள் பிரிக்கப்படவும் முடியாது. 

நம்முடைய பாவங்களுக்காக கிறிஸ்துவின் சரீரம் உடைக்கப்பட்டது என்பதை நம்பும் நாம், அவருடைய சரீரமாகிய திருச்சபையை, கோபம், புறம்பேசுதல், பிரிவினைகள் என்று தகர்க்கக்கூடாது. சபை ஊழல்களில் சிக்குவதைக் காட்டிலும் நமக்கு நாமே தீங்கிழைத்துக்கொள்வது மேல். மற்றவர்களுக்கு கோழித் தொடையை தாருங்கள், அத்துடன் சுவையான தின்பண்டத்தையும் சேர்த்துத் தாருங்கள்.  

இயேசுவின் உண்மையான சீஷன்

ஒரு ஓவிய சேகரிப்பாளர் வான் காகின் ஓவியங்களை (பிரபலமான மேற்கத்திய ஓவியர்), ஓவிய நிபுணர் ஒருவரிடம் காண்பித்தபோது, அந்த நிபுணர் அதை ஒரு பார்வை பார்த்துவிட்டு இது உண்மையான ஓவியம் அல்ல என்று நிராகரித்துவிட்டாராம். எனவே அந்த ஓவிய சேகரிப்பாளர் அதை கொண்டுபோய் ஒரு ஓவியக்கிடங்கில் மறைத்து வைத்துவிட்டாராம். அங்கே அது ஐம்பது ஆண்டுகள் இருந்தது. அவருடைய மரணத்திற்கு பின்னர், அந்த ஓவியத்தை மீண்டும் எடுத்து நாற்பது ஆண்டுகளாக மதிப்பீடு செய்தனர். ஒவ்வொரு முறையும் அது பொய்யான ஓவியம் என்றே நிராகரிக்கப்பட்டது. 2012ல் கணினி நிபுணர் ஓருவர் தீர்க்கமாய் ஆய்வு செய்து, அந்த ஓவியம் வரையப்பட்ட கேன்வாஸ் துணியின் ஒவ்வொரு நூலாக ஆய்வுசெய்தபோது, அந்த கேன்வாஸ் வான் காகின் மற்றொரு ஓவியத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட உண்மையைக் கண்டறிந்தார். இறந்த அந்த ஓவிய சேகரிப்பாளர் தன் வாழ்நாள் முழுதும் வான்காகின் உண்மையான ஓவியத்தையே வைத்திருந்தார். 

நீங்கள் போலியாக எண்ணுகிறீர்களா? ஜனங்கள் உங்களை ஆய்வுசெய்யும்போது, உங்களின் கொஞ்சமான ஜெபவாழ்க்கையையும், கொடுக்கும் மனப்பான்மையையும், சாதாரண ஊழியத்தையும் அறியக்கூடும் என்று அஞ்சுகிறீர்களா? ஜெபிக்கிற கண்களிலிருந்து மறைந்து, உங்கள் அறையில் ஒளிந்துகொள்ள தூண்டப்படுகிறீர்களா? 

உங்கள் வாழ்க்கையை மேற்பூச்சான நிறங்களில் அல்லாமல் சற்று ஆழமாய் பாருங்கள். உங்களுடைய பாவ வழிகளிலிருந்து திரும்பி, இயேசுவை விசுவாசித்தால், நீங்களும் அவரும் ஒரே கேன்வாஸ் துணியைப்போல் இருப்பீர்கள். “நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள்” என்று இதை இயேசு சித்தரிக்கிறார் (யோவான் 15:5). நீங்களும் இயேசுவும் இணைந்து ஒரு முழுமையை அடைகிறீர்கள். 

இயேசுவில் இளைப்பாறுவது அவருடைய மெய்யான சீஷனாய் உங்களை மாற்றுகிறது. உங்கள் ஓவியத்தை மேம்படுத்துவதற்கு அது ஒன்றே வழி. “ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது” (வச. 5). 

ஞானமுள்ள கிறிஸ்தவர்கள்

கொரோனா பெருந்தொற்றின் நாட்களில் உலகம் முழுமையுமுள்ள பள்ளிகள் நிறுத்தப்பட்டுள்ளது. சீன தேசத்தில், டிங்டாக் என்னும் ஆன்லைன் செயலி மூலம் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டது. சங்கடப்பட்ட மாணவர்கள், இந்த டிங்டாக் செயலிக்கான நிகழ்நிலை மதிப்பீட்டை குறைவாகக் காட்டினால் அந்த செயலியை பயன்பாட்டிலிருந்து நீக்கிவிடுவார்கள் என்று எண்ணினர். ஒரே இரவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒரேயொரு நட்சத்திர மதிப்பீட்டைக் கொடுத்து, அந்த செயலியை செயல்படவிடாமல் முடக்கினர். 

மாணவர்களின் இந்த பொறுப்பற்ற செயலை தேவன் அங்கீகரிக்கமாட்டார் என்றாலும், அவர்களின் புத்தி கூர்மையை தேவன் பொருட்படுத்துகிறார். தன் எஜமானிடத்தில் திட்டுவாங்கிய ஓர் உக்கிராணக்காரன் தன் கடைசி நாட்களில் மற்றவர்களுக்கு நன்மைசெய்ய முயன்றதைக் குறித்த ஒரு கதையை இயேசு சொல்லுகிறார். அந்த உக்கிராணக்காரனுடைய செய்கையை இயேசு நியாயப்படுத்தவில்லை. மாறாக, அவனுடைய புத்திகூர்மையான செயலை முக்கியத்துவப்படுத்தி, தன்னைப் பின்பற்றுகிறவர்களும் ஞானமாய் செயல்படவேண்டும் என்று கூறுகிறார்: “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்” (லூக்கா 16:9). 

பணம் என்று வரும்போது, அதை செலவழிக்காமல் பாதுகாக்க நம்மில் பலர் பிரயாசப்படுவர். ஆனால் ஞானமுள்ளவர்கள் அதை எப்படி நேர்த்தியாய் பயன்படுத்துவது என்று சிந்திப்பபர்கள். மற்றவர்களுக்குக் கொடுப்பதின் மூலமாய் “உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்” என்றும் அதுவே பாதுகாப்பும் மேன்மையுமானது என்று இயேசு சொல்லுகிறார். எந்த ஒரு குழுவிலும் தலைவன் என்பவன் யார்? யார் பணத்தை முன்வந்து செலவழிக்கிறார்களோ அவர்களே. கொடுப்பது நமக்கு நித்திய வீட்டின் ஆசீர்வாதத்தைக் கொடுக்கும் என்றும், இயேசுவின் மீதுள்ள நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது. 

நம்மிடத்தில் பணம் இல்லையென்றாலும், நேரம், திறமைகள் மற்றும் கேட்கும் செவி ஆகியவைகள் நம்மிடம் உண்டு. மற்றவர்களுக்கு எப்படி நேர்த்தியாய் உதவுவது என்பதை நமக்குக் காண்பிக்கும் பொருட்டு தேவனிடத்தில் கேட்போம். 

உன்னுடைய பெயர் என்ன?

வாழ்க்கையில் நமக்கு மூன்று பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது என்று ஒருவர் சொல்லுகிறார்;: நம்முடைய பெற்றோர்கள் நமக்கு வைத்த பெயர், மற்றவர்கள் நமக்கு கொடுத்த பெயர் (நம் நன்மதிப்பு) நாம் நமக்கு கொடுத்துக்கொண்ட பெயர் (நம் குணாதிசயங்கள்). இதில் மற்றவர்கள் நமக்குக் கொடுக்கும் பெயரானது முக்கியத்துவம் வாய்ந்தது. “திரளான ஐசுவரியத்தைப்பார்க்கிலும் நற்கீர்த்தியே தெரிந்துகொள்ளப்படத்தக்கது; பொன் வெள்ளியைப்பார்க்கிலும் தயையே நலம்” (நீதி 22:1). நன்மதிப்பு மட்டுமல்லாது, குணாதிசயங்கள் அதைக்காட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இன்னொரு மிக முக்கியமான பெயர் இருக்கிறது. பெர்கமு திருச்சபையிலுள்ள விசுவாசிகளுக்கு இயேசு சொல்லும்போது, அவர்களுடைய நன்மதிப்பு பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை நேரிடும் தருவாயிலும், சோதனையை மேற்கொள்ளுகிறவர்களுக்கு பரலோகத்தில் ஒரு புதிய நாமம் வைக்கப்பட்டுள்ளது என்கிறார். “அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன்” (வெளி. 2:17). 

இயேசு வெண்மையான கற்களை ஏன் வாக்குப்பண்ணுகிறார் என்று நமக்கு தெரியாது. அது ஜெயித்தவர்களுக்கான வெகுமதியா? மேசியாவின் விருந்திற்கான அனுமதிச்சீட்டா? குற்றஞ்சுமத்தப்பட்டவர்களை விடுவிக்க ஒரு காலத்தில் நீதிபதிகள் வாக்களிக்கும் முறையை போன்று கூட இருக்கலாம்.

அது எதுவென நமக்குத் தெரியாது; எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். நம்முடைய அவமானங்களை அகற்றும் புதிய நாமத்தை தேவன் நமக்கு வாக்குப்பண்ணுகிறார் (ஏசாயா 62:1-5). 

நம்முடைய நன்மதிப்பு தகர்க்கப்பட்டிருக்கலாம்; நம் குணாதிசயங்கள் சரிசெய்ய முடியாத நிலையில் இருக்கலாம். ஆனால் இந்த இரண்டு பெயர்களும் நம்மை யார் என்று தீர்மானிக்கப் போவதில்லை. மற்றவர்கள் உங்களை எப்படி அழைக்கிறார்கள் என்பதோ, நீங்கள் உங்களை எப்படி பார்க்கிறீர்கள் என்பதோ நிஜமல்ல. இயேசு உங்களை யார் என்று சொல்லுகிறாரோ அதுவே நீங்கள். உங்கள் புதிய நாமத்திற்குரிய வாழ்க்கையை வாழுங்கள்.

கிறிஸ்துவுக்குள் உடையாமலிப்பது

லூயி செம்பரெனியுடைய இராணுவ விமானம் இரண்டாம் உலகப்போரின் போது கடலில் மோதியது. அதிலிருந்த பதினொரு பேர்களில் எட்டுப் பேர் மரித்தனர். லூயி மற்றும் மற்ற இரண்டு பேரும் உயிர்காக்கும் படகில் ஏறிக்கொண்டனர். அவர்கள் அந்தப் படகில் இரண்டு மாதங்கள், சுறாக்களிடமிருந்து தங்களைக் காத்துக்கொண்டு, புயல்களைக் கடந்து, எதிராளி போர் விமானங்களின் குண்டுவீச்சிலிருந்து வரும் தோட்டாக்களிலிருந்து தப்பித்து, மீன்களையும், பறவைகளையும் பச்சையாக சாப்பிட்டுக் கொண்டு திரிந்துக்கொண்டிருந்தனர். கடைசியாக ஒரு தீவில் அவர்கள் இறங்கினவுடன் கைதுசெய்யப்பட்டனர். இரண்டு ஆண்டுகளாக லூயி அடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, இரக்கமின்றி போர்க்கைதியாக வேலை செய்தார். அவருடைய குறிப்பிடத்தக்க கதை “அன்புரோக்கன்” என்ற புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 

வேதாகமத்திலுள்ள உடைக்கப்படமுடியாத கதாபாத்திரங்களில் எரேமியாவும் ஒருவர். எதிராளிகளின் சதிச்செயல்களை சகித்துக்கொண்டார் (எரேமியா 11:18), கசையால் அடிக்கப்பட்டு, காவலிலே போடப்பட்டார் (20:2), அடிக்கப்பட்டு காவற்கிடங்கில் போடப்பட்டார் (37:15-16), கயிறுகளால் கட்டி உளையிலே இறக்கிவிட்டார்கள் (38:6). தேவன் அவரைக் காக்கும்படி அவரோடு கூட இருப்பதாக வாக்குபண்ணினதால் அவர் உயிர்பிழைத்தார் (1:8). “நான் உன்னை விட்டு விலகுவதில்லை, உன்னை என்றும் கைவிடுவதில்லை” (எபிரெயர் 13:5) என்று தேவன் அதேபோல ஒரு வாக்குத்தத்தத்தை நமக்கும் கொடுத்திருக்கிறார். எரேமியாவையோ, நம்மையோ, பிரச்சனை வராதபடி காப்பாற்றுவேன் என்று வாக்களிக்கவில்லை; மாறாக, பிரச்சனைகளைக் கடக்க நம்மோடுகூட இருப்பதாக வாக்களித்திருக்கிறார். 

லூயி தேவனுடைய பாதுகாப்பைக் கண்டுக்கொண்டார். போருக்குப் பின் தன்னுடைய வாழ்க்கையை தேவனுக்கு ஒப்புக்கொடுத்தார். தன்னை சிறைப்பிடித்தவர்களை மன்னித்து, சிலரை கிறிஸ்துவுக்குள் நடத்தினார். நாம் எல்லா பிராச்சனைகளையும் தவிர்க்கமுடியாவிட்டாலும், நாம் அவைகளோடு தனிமையாக அவதிப்பட வேண்டியதில்லை என்று லூயி உணர்ந்தார். இயேசுவோடு அவைகளை நாம் எதிர்கொண்டால் நாம் உடைக்கப்பட முடியாதவர்களாகி விடுவோம்.