வல்லமையான ஓடை
வாஷிங்டன் டி சி நகரில் உள்ள ஆபிரிக்க-அமெரிக்க வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் தேசிய அருங்காட்சியகத்தில் அடிமைத்தனத்தையும் அதன் பின்விளைவுகளையும் கண்டு ஆராய்ந்துக் கொண்டிருக்கும்போது அங்குள்ள ஒரு அமைதியான அறையில் ஒளி வரக்கூடிய வெண்கல கண்ணாடிகளால்
ஆன சுவர்களில் தண்ணீர் மேலிருந்து மழைபோல ஊற்றி ஒரு சிறிய குளம் போன்று இருக்கும்.
அந்த அறையில் முனைவர் மார்ட்டின் லூத்தர் கிங் கூறிய சொற்கள் எழுதப்பட்டிருந்தன “நீதி மழையை போல பெய்யும் வரை, நேர்மை ஒரு வல்லமையான ஓடையை போல புரண்டு ஓடும் வரை நாம் போராடுவோம் என்று நாம் தீர்மானித்திருக்கிறேன்”.. இந்த வல்லமையுள்ள வார்த்தைகள் பழைய ஏற்பாட்டின் ஆமோஸின் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
மத வழிபாடுகளிலும்,பண்டிகைகள் கொண்டாடுவதிலும், பலிகள் செலுத்துவதிலும் அதிகம் நாட்டம் கொண்டு ஆனா உள்ளத்தில் தேவனை விட்டு வெகு தூரத்தில் இருந்த மக்களின் மத்தியில் தான் ஆமோஸ் தீர்க்கதரிசியாக வாழ்ந்து வந்தார். அவர்களுடைய செயல்கள் தேவனுடைய கட்டளைகளையும், தேவையுள்ளவர்களையும், ஒடுக்கப்பட்டவர்களையும் ஒதுக்கினதால் தேவன் அவர்கள் செயல்களை நிராகரித்தார்.
அணைத்து மக்களின் நலனுக்காக உண்மையான அக்கறை தம் மக்கள் காட்ட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதை ஆமோஸ் தன புத்தகத்தில் எழுதியுள்ளார். இப்பேற்பட்ட வாழ்வுமுறை மற்ற உயிரை வலிமையாக்கும் நதியாக இருக்கும்.
தேவனின் இணைந்து இருக்கிறோம் என்பதற்கு சான்றாக நம்மை சுற்றி இருப்பவர்களிடம் எப்படி நடந்துக் கொள்கிறோம் என்பது வெளிப்படுத்தும் என்று இயேசு கற்றுக்கொடுக்கிறார் (மத் 22:37-39). தேவனை நேசிக்க நம் இதயங்கள் நாடுவது நீதியை நேசிக்கும் இடத்தில் இருந்தும் வருவதாக.
எக்காள சத்தம்
‘டப்ஸ் ‘என்கிற எக்காள சத்தம் ஆனது அமெரிக்க ராணுவ தளத்தில் தினமும் நாள் முடியும்போதும் இறுதிச் சடங்குகளிலும் பாடப்படும் அழைப்பானது நான் அந்த பாடல் அழைப்பின் வசனங்களை வாசிக்கும் போது ஆச்சரியப்பட்டுப் போனேன் அதில் உள்ள அநேக வரிகள் தேவன் நம் அருகே என்கிற சொற்களோடு முடிந்தது.ராணுவ வீரர்கள் இருட்டு நிறைந்த காட்டில் இருந்தாலும் அல்லது தன் நெருங்கிய நண்பரின் இழப்பை குறித்து துக்கப்படும்போதும் ‘ தேவன் நம் அருகே’ என்கிற தான இந்த வார்த்தை அவர்களுக்கு நிச்சயமாக நம்பிக்கை தரும் .
பழைய ஏற்பாட்டிலும் இஸ்ரவேல் மக்களுக்கு தேவன் தம் அருகே இருக்கிறார் என்பதை நினைவூட்டும் படி இதேபோல் எக்காலம் ஊதப்படும் தேவனுக்கும் இஸ்ரவேல் மக்களுக்கும் உள்ள உடன்படிக்கையின் ஒப்பந்தத்தின்படி பண்டிகை நாட்களில் எக்காளம் ஊதவேண்டும் எக்காலம் ஊதினால் தேவ பிரசன்னத்தை நினைவுபடுத்துவது மாத்திரமல்லாமல் தேவன் அவர்களின் எக் காலங்களையும்எதிர்பார்ப்புகளையும் கேட்க வல்லவராயிருக்கிறார் என்று கேட்பவர்களுக்கு உதவ வாஞ்சையாய் இருக்கிறார் என்பதையும் உணர்த்தும் படி இந்த ஒப்பந்தம் .
இன்றைக்கும் டேவன் நம் அருகில் இருக்கிறார் என்பதை நாம் நினைவு கூறுவோம் ஒருவேளை நம் ஜெபமும் தேவனுக்கு எக்காளம் போல் தொனி த்து அதைக் கேட்டு பதில் அளிப்பார் என்பதை குறித்து நாம் ஊக்குவிக்கப்படுவோம்( 1 பேதுரு 3:12 ) .நம் வருத்தங்களும் கஷ்டங்களும் தீரும் படி அவர் பெலப்படுத்தும் பிரசனத்தினால் நாம் வேண்டுதலுக்கு பதிலளிக்கிறார்.
உலகத்துக்கு மகிழ்ச்சி
ஓவ்வொரு கிறிஸ்மஸிற்கும், உலகெங்கிலும் உள்ள, கிறிஸ்துவின் பிறப்பிடம் பற்றிய காட்சிகளால் எங்கள் வீட்டை அலங்கரிக்கிறோம். எங்களிடம் ஒரு ஜெர்மன் பிறப்பிட பிரமிட் உள்ளது. பெத்லெகேமிலுள்ள ஒலிவ மரத்திலிருந்து வடிவமைக்கப்பட்ட முன்னணைக் காட்சி மற்றும் பிரகாசமான வண்ண மெக்ஸிகன் நாட்டுப்புற பதிப்பும் உள்ளது. ஆப்பிரிக்காவிலிருந்து விசித்திரமாய் நுழைந்தது எங்கள் குடும்பத்துக்கு மிகவும் பிடித்திருந்தது. பாரம்பரியமான ஆடுகள் மற்றும் ஒட்டகங்களுக்கு பதிலாக, ஒரு நீர்யானை குழந்தை இயேசுவை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தது.
ஒரு தனித்துவமான பாரம்பரிய முன்னோக்கு இந்த பிறப்பிடக் காட்சிகளுக்கு உயிர்கொடுத்தது. இயேசுவின் பிறப்பு ஒரு தேசத்திற்கோ அல்லது கலாச்சாரக்திற்கோ மட்டுமல்ல என்பதை ஆழ்ந்து சிந்திக்கும்போது ஒவ்வொரு அழகான நினைவூட்டலும் என் இதயத்தை அன்பினால் நிறப்புகிறது. இது பூமி முழுதுக்கும் ஒரு நல்லச் செய்தி, ஒவ்வொரு நாட்டினரும், இனத்தவரும் மகிழ்ந்திருக்க ஒரு காரணம். நம்முடைய ஓவ்வொரு பிறப்பிடக்காட்சியிலும் சித்தரிக்கப்பட்ட சிறு குழந்தை, தேவனுடைய இதயத்தின் உண்மையை இந்த முழு உலகத்துக்கும் வெளிப்படுத்தியது. ஆர்வமிக்க பரிசேயனான நிக்கோதேமுவுடன் கிறிஸ்து உரையாடுவதைக் குறித்து யோவான் 'தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டுப்போகாமல், நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தாhர்" (யோவா. 3:16) என்று எழுதுகிறார்.
இயேசுவாகிய பரிசு அனைவருக்கும் ஒரு நல்ல செய்தி. உலகத்தில் எந்த இடத்தை நீங்கள் இருப்பிடமாய் கொண்டிருந்தாலும்,, இயேசுவின் பிறப்பு தேவன் உங்களுக்கு கொடுக்கும் சலுகை, அன்பு மற்றும் சமாதானமே. கிறிஸ்துவில் புதிய வாழ்வைக் கண்ட யாவரும் 'சகல கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும், ஜனங்களும், ஜாதிகளிலுதிருந்து" ஒருநாள் தேவனுடைய மகிமையை என்றென்றைக்கும் கொண்டாடுவார்கள் (வெளி. 5:9).
ஜெபத்தின் சலுகை
நாட்டுப்புற பாடலாசிரியர் கிறிஸ் ஸ்டேபிள்டன் அவர்களால் எழுதப்பட்ட “டேடி டஸன்ட் ப்ரே எனிமோர்” என்ற பாடல் தன்னுடைய தகப்பனார் தனக்காக ஏறெடுக்கும் ஜெபத்தினால் ஈர்க்கப்பட்டு எழுதியது. அதன் கடுமையான வாரிகள், தன் தகப்பனாரின் ஜெபம் ஏமாற்றத்தாலோ, சோர்வினாலோ முடிவடைந்ததினால் அல்ல, ஆனால் அவருடைய மரணத்தில் முடிவடைந்ததை வெளிப்படுத்துகிறது. தன் தகப்பன் ஜெபத்தில் இயேசுவோடு பேசுவதற்கு மாறாக இயேசுவுடன் நடந்துக்கொண்டு முகமுகமாய் அவருடன் பேசிக்கொண்டிருப்பதை கற்பனை செய்கிறார்.
தன் தகப்பன் தனக்காக செய்யும் ஜெபத்தினை நினைக்கும்போது, வேதத்தில் ஒரு தகப்பன் தன் மகனுக்காக ஜெபிப்பதை நினைவுபடுத்துகிறது. தாவீது ராஜா தன் கடைசி நாட்களிலே தன் மகன் சாலொமோன் இஸ்ரவேலின் அடுத்த புதிய ராஜாவாக பதவியேற்க ஆயத்தம் பண்ணினார். சாலொமோனை அபிஷேகம் பண்ண தேசத்தை ஒன்று கூட்டின தாவீது ராஜா எப்போதும் போலவே ஜனங்களை ஜெபத்தில் வழி நடத்தினார். இஸ்ரவேலின் மேல் தேவனுடைய கிருபையை நினைவுகூர்ந்த ராஜா, இஸ்ரவேல் மக்கள் தேவனுக்கு எப்போதும் விசுவாசமாயிருக்க ஜெபித்தார். பிறகு, ராஜா தேவனிடம் தன் மகனுக்காக ஒரு தனிப்பட்ட வேண்டுதலாக 'என் குமாரனாகிய சாலொமோன், உம்முடைய கற்பனைகளையும், உம்முடைய சாட்சிகளையும், உம்முடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்படிக்கு அவனுக்கு உத்தம இருதயத்தைத் தந்தருளும்" (1 நாளாகமம் 29:19) என்று ஜெபித்தார்.
தேவன் நம்முடைய வாழ்க்கையில் நாம் சந்திக்கிற மக்களுக்காக விசுவாசத்தோடு ஜெபிப்பதற்காக குறிப்பிட்ட உரிமையை தந்திருக்கிறார். நம்முடைய விசுவாசத்தின் மாதிரி ஜீவியம் நாம் மரித்த பின்பும் அழியாத தாக்கத்கை ஏற்படுத்தும். சாலொமோனுக்காகவும், இஸ்ரவேலுக்காகவும் தாவீதின் வேண்டுதலை, தாவீது மரித்த பின்பும், தேவன் பதிலளித்தது போல நம்முடைய ஜெபத்தின் தாக்கமும் நம் காலம் கடந்து வாழ்ந்திருக்கும்.
இனிமையான அறுவடை
நாங்கள் எங்கள் புதிய வீட்டை வாங்கும்போது நிறுவப்பட்ட ஒரு திராட்சை தோட்டத்தையும் அதினோடு சுதந்தரித்துக்கொண்டோம். போதுமான அளவு குடும்பமாக நேரம் செலவளித்து தோட்டத்தை பண்படுத்தவும், நீர்பாய்ச்சவும், அதை பண்படுத்த ஆரம்பித்தோம். இறுதியில் எங்கள் முதல் அறுவடை வந்ததும் ஆர்வத்துடன் ஒரு திராட்சையை பறித்து புசித்தேன். ஏமாற்றமடையும் விதமாய் யாரும் விரும்பாத புளிப்பு நிறைந்த சுவையை உடையதாக இருந்தது. மிகவும் பிரயாசப்பட்டு பராமரித்த தோட்டத்தின் புளிப்பான அறுவடையைக்குறித்து மிகவும் எரிச்சலடைந்தேன்.
ஏசாயா 5ல் தேவனும் இதைபோல் எரிச்சலடைவதை பார்க்கிறோம். இஸ்ரவேல் தேசத்தோடே அவருடைய உறவைக்குறித்து இங்கு விவரிக்கிறது. திராட்சை தோட்டக்காரராக, "அவர் அதை வேலியடைத்து, அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, அதிலே நற்குல திராட்சச்செடிகளை நட்டு, அதின் நடுவில் ஒரு கோபுரத்தைக்கட்டி, அதில் ஆலையையும் உண்டுபண்ணி, அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று காத்திருந்தார்"
(ஏசா. 5:2). ஆனால் அவருக்கு திகைப்பூட்டும்படி, அவர் திராட்சை தோட்டமாகிய இஸ்ரவேல் தனது அநீதியும், சுயநலமுமான புளிப்பான பழங்களை தந்தது. தேவன் அந்த தோட்டத்தை அளித்து அதிலே சிலவற்றை மாத்திரம் பிரித்தெடுத்து அவைகளை வெவ்வேறு திசைகளில் சிதரப்பண்ணி, அவைகள் ஒரு நாள் நல்ல கனிகளை தருமென்று எண்ணினர்.
திராட்சைத்தோட்டத்தை மறுபடியும் இயேசு யோவான் சுவிசேஷத்தில் உவமையாக்குவதை பார்க்கிறோம். "நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்" (யோவான் 15:5). இதிலே இயேசு, விசுவாசிகளாகிய நாம் கொடியாகவும், திராட்சச்செடியாகிய அவரில் இணைந்திருக்கும்படி நம்மை அழைக்கிறார். நாம் ஜெபத்துடன் ஆவிக்குள்ளவர்களாய் இயேசுவுக்குள் இணைந்திருந்தால் ஆவியின் கனிகளில் முதன்மையும் இனிமையுமான அன்பை நாம் சுலபமாக அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
நம்பிக்கையைத் தேர்ந்தேடுத்தல்
உலகில் எஸ் ஏ டி (SAD) எனப்பட்ட ( காலா கால கோளாறு) மன அழுத்தத்தில் பாதிக்கப்படுகிற இலட்சக் கணக்கான மக்களில் நானும் ஒருவள். இந்த மன அழுத்தம் குளிர் காலத்தில் சூரிய வெளிச்சம் மிக குறுகிய நேரம் இருக்கும் இடங்களில் காணலாம். எல்லாவற்றையும் உறையவைக்கும் அந்த சாபத்திற்கு முடிவு உண்டோ என்று நான் அங்கலாய்க்கும்போது நீண்ட நாட்களும் வெப்பமான சீதோஷணமும் வருமா என்று நான் ஏங்குவதுண்டு.
மீதி இருக்கும் பனி ஊடே பூக்கள் துளைத்துக்கொண்டு வெளிவரும்போது --- அது வசந்த காலத்தின் அறிகுறி - தேவன் நம்முடைய இருண்ட காலத்தை கூட மாற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு நினைவுவரும்.. இவ்விதமான உறையும் குளிர் நாட்களைப் போல இஸ்ரவேலர் தேவனை விட்டு தங்கள் முகத்தை திருப்பியபோது தான், மீகா தீர்க்கதரிசி இவ்விதம் அறிக்கையிட்டார்: “மனுஷரில் செம்மையானவன் இல்லை”
(மீகா 7:2)
அந்த இரருண்ட நாட்கள் மிகவும் மோசமாக இருந்தாலும் கூட, அந்த தீர்க்கதரிசி நம்பிக்கையை இழக்கவில்லை. அதற்கான ஆதாரங்கள் தெரியாவிட்டாலும் கூட தேவன் கிரியை செய்துகொண்டுதான் இருக்கிறார் (வச. 7) என்று விசுவாசித்தார்.
நாமும் கூட முடிவில்லா குளிர்காலங்களில் வசந்த காலம் வெளிப்படாத நேரங்களில் அவ்விதமாக போராடுகிறோம். இன்னும் விரக்திக்குள் செல்வோமா அல்லது “என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்போமா?” (வச. 7)
தேவன் மேல் நாம் வைக்கும் நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது (ரோம. 5:5) அலறுதலும், வருத்தமுமில்லாத வாசஸ்தலத்தை அவர் கொண்டுவருகிறார் (வெளி. 21:7). அது வரை நாம் அவரில் “ நீரே என் நம்பிக்கை” (சங்கீதம் 39:7) என்று இளைப்பாறலாம்.
அன்பின் பூட்டு
பாரிஸில் உள்ள பாண்ட் டெஸ் ஆர்ட்ஸ் பாலத்தின் கற்பனைக்குறிய ஒவ்வொரு பகுதியிலும் தங்களின் காதலர்களின் ஆயிரக்கணக்கான பெயரின் முதலெழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்த கொண்டிப்பூட்டுகளைக் கண்டு ஆச்சரியத்துடன் நின்றேன். சீன் ஆற்றின் நடப்பதற்கு உபயோகப்படுத்தப்படும் பாலம் முழுவதும், ஒரு ஜோடியின் “என்றென்றைக்கும்” என்ற உறுதிமொழியினால் காதலர்களின் அடையாளமான இந்தப் பூட்டுகளால் மூழ்கியிருந்தது. 2014ம் ஆண்டு இந்தப் பூட்டுகள் அதிர்ச்சியூட்டும் 50 டன் எடை கொண்டு, பாலத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததால், இந்தப் பூட்டுக்களை அகற்றவேண்டியிருந்தது.
அன்பு பாதுகாப்பானது என்ற உறுதி வேண்டி மனிதன் எவ்வளவாய் ஏங்குகிறான் என்பதை இந்த ஏராளமான காதல் பூட்டுகள் சுட்டிக்காட்டுகிறது. உன்னதப்பாட்டு, பழைய ஏற்பாட்டில் ஒரு புத்தகம், இரண்டு காதலர்களுக்கிடையே ஒரு உரையாடலைச் சித்தரிக்கிறது. அந்தப் பெண் பாதுகாப்பான அன்பிற்காக ஏங்குவதை “நீர் உம்மடைய இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்” (உன்ன. 8:6) என்று கேட்கிறாள்.
உன்னதப்பாட்டில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிற நீடித்த காதல் அன்புக்கான ஏக்கம், புதிய ஏற்பாட்டில் எபேசியருக்கு எழுதிய நிருபத்தில் நாம் பரிசுத்த ஆவியினால் முத்திரிக்கப்பட்டிருக்கிறோம் (1:3) என்ற சத்தியத்தை சுட்டிக்காட்டுகிறது. மனித அன்பு சிக்கலானதாயிருக்கும் மற்றும் காதல் பூட்டுகளை பாலத்திலிருந்து அகற்றிவிட முடியும் ஆனால் நம்மில் வாசமாயிருக்கிற கிறிஸ்துவின் ஆவி தேவனின் முடிவில்லாத அன்பையும் தன்னுடைய ஒவ்வொரு பிள்ளைக்காக அவர் வைத்திருக்கிற நிரந்திர உறுதியான அன்பையும் நிரூபிக்கிறது.
தேவனால் பெயரிடப்படல்
சுட்டி, சீனி, குண்டு. இவை நம்முடைய குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் சில “புனை பெயர்கள்”. அநேகமான இப்பெயர்கள் அவர்களின் குணாதிசயம், சரீரத் தோற்றம், ஆகியவற்றை விளக்குவதாக இருக்கும், இவை தங்களின் பிரியத்தைக் காட்டும் பெயர்கள்.
புனைபெயர்கள் குழந்தைகளுக்கு மட்டும் வைக்கப் படுவதில்லை, இவற்றின் பயனை நாம் வேதாகமத்திலும் காண்கின்றோம். எடுத்துக் காட்டாக, யோவான், யாக்கோபு என்ற இரு சீஷர்களுக்கும் இயேசு “இடிமுழக்க மக்கள்” (மாற்.3:17) என்று புனை பெயரிட்டார். தனக்குத் தானே புனைபெயரிடும் அரிய நிகழ்வையும் வேதாகமத்தில் காணலாம். நகோமி என்ற பெயர் கொண்ட ஒரு பெண், தன்னை “மாரா” என்று அழைக்குமாறு கூறுகின்றாள். அதற்கு “கசப்பு” என்று அர்த்தம் (ரூத். 1:20), ஏனெனில், அவளுடைய கணவனும், இரு மகன்களும் மரித்துப் போயினர். தேவன் அவளுடைய வாழ்வைக் கசப்பாக்கினார் என்பதாக அவள் உணர்ந்தாள் (வ.21).
நகோமி தனக்கு கொடுத்த புதிய புனைபெயர் நீண்ட நாட்கள் நிலைத்திருக்கவில்லை, ஏனெனில் அவளை நிலைகுலையச் செய்த அந்த இழப்புகளோடு அவளுடைய கதை முடிந்து போகவில்லை. அவளுடைய துயரத்தின் மத்தியில், தேவன் அவளுக்கு ஓர் அன்பான மருமகள், ரூத்தைக் கொடுத்து ஆசீர்வதித்தார். அவள், மறுமணம் செய்து, ஒரு மகனைப் பெற்றெடுத்ததின் மூலம், நகோமிக்கு திரும்பவும் ஒரு குடும்பத்தை உருவாக்கினாள்.
நாமும் சில வேளைகளில் நமக்கு, “தோற்றவன்”, “நேசிக்கப்படாதவன்” போன்ற கசப்பான புனைபெயர்களை, நாம் அநுபவிக்கும் கஷ்டங்களையோ அல்லது நாம் இழைத்த தவறுகளையோ தழுவி, கொடுக்கும்படி முனைவோம். ஆனால், இந்தப் பெயர்கள், நம்முடைய கதையின் முடிவு ஆகிவிடுவதில்லை. நம் ஒவ்வொருவருக்கும் தேவன் கொடுத்துள்ள பெயரான “சிநேகிக்கப்பட்டவன்” (ரோம.9:25) என்ற பெயரால், நம்முடைய கசப்பான பெயரை மாற்றுவோம். நம் வாழ்வின் மிக சவாலான வேளைகளில், தேவன் தரும் வழியை எதிர்நோக்கி இருப்போம்.
காட்டிக்கொடுக்கப் படல்
2019 ஆம் ஆண்டு, லியானார்ட் டா வின்சியின் ஐநூறாவது மறைவு தினத்தை நினைவு கூரும் வகையில், உலகளவில் கலை கண்காட்சி நடத்தப்பட்டது. அவர் வரைந்த அநேக படங்களும், அறிவியல் கண்டுபிடிப்புகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றுள், முழுவதுமாக வரையப்பட்ட ஐந்து படங்கள் தான், டா வின்சிக்கு உலகளவில் பெருமை சேர்த்தது, அதில் கடைசி இராப்போஜனம் படமும் அடங்கும்.
இந்த நுணுக்கமான படத்தில், இயேசு தன்னுடைய சீடர்களோடு கடைசி உணவைச் சாப்பிட்ட காட்சி, யோவான் சுவிசேஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படி காட்டப்பட்டுள்ளது. இயேசு தன்னுடைய சீஷர்களிடம், “உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான்” (யோவா.13:21) என்று கூறிய போது, சீஷர்கள் குழப்பமடைந்த காட்சியை இந்த படம் சித்தரிக்கின்றது. கலக்கமடைந்த சீஷர்கள், காட்டிக் கொடுப்பவன் யார் என்று தங்களுக்குள்ளே விவாதித்தனர், அச்சமயம், யூதாஸ் தன்னந்தனியாக அந்த இரவில், தன்னுடைய போதகரும், நண்பருமான இயேசுவின் நடவடிக்கைகளைக் குறித்து, அதிகாரிகளுக்குச் சொல்லும்படி வெளியேறினான்.
காட்டிக் கொடுத்தான். யூதாஸ் இழைத்த துரோகத்தின் வேதனையை இயேசுவின் வார்த்தைகளில் காணலாம். “என்னுடனே அப்பம் புசிக்கிறவன், என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்” (வ.18) என்றார். ஒரு நண்பன், தன்னோடு சாப்பிடும் அளவுக்கு நெருக்கமானவன், அந்த நெருங்கிய உறவை, இயேசுவுக்கு தீங்கு இழைக்க பயன்படுத்திக் கொண்டான்.
ஒரு நண்பனின் துரோகத்தை நாம் அனைவருமே அநுபவித்திருக்கலாம். இத்தகைய வேதனையின் போது, நாம் எவ்வாறு செயல் படுவோம்? இயேசு தனக்கு துரோகம் செய்தவன், தன்னோடு அப்பம் புசித்தவன் (யோவா.13:18) என்பதைக் குறிப்பிட, சங்கீதம் 41:9 ல் கூறப்பட்டுள்ளதை எடுத்துக் கூறுகின்றார். நமக்கு நம்பிக்கை தருகின்றார் தன்னுடைய உற்ற நண்பன் செய்த வஞ்சகச் செயலால், வேதனையுற்ற தாவீது, தேவன் தன் மீது பிரியமாய் இருக்கிறார், என்றென்றைக்கும் அவருடைய சமுகத்தில் நிலை நிறுத்துவார் என்பதால் ஆறுதல் அடைகின்றார் (சங்.41:11-12).
நண்பர்கள் நம்மை ஏமாற்றும் போது, தேவனுடைய அன்பு நம்மைத் தாங்குகின்றது, அவருடைய வல்லமையான பிரசன்னம் நம்மோடிருந்து, அழிவுக்குள்ளாக்கும் வேதனைகளையும் தாங்கிக் கொள்ள நமக்கு பெலனளிக்கும்.