தேவனின் நல்ல பசை
சமீபத்தில் அமெரிக்க பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் மிகவும் வலிமையான, அதேநேரம் பிரித்தெடுக்கக்கூடிய புதிய வகை பசையை கண்டுபிடித்தனர். வறட்சியான இடங்களில் ஒட்டிக்கொண்டு, ஈரமான இடங்களில் எளிமையாய் விலகிக் கொள்ளும் நத்தையின் திரவமே அவர்கள் வடிவமைப்பிற்கு உந்துதல். நத்தையின் இந்த மாறும் தன்மை ஈரப்பதமான இடங்களிலும் எளிதாக நகரவும், பாதுகாப்பாய் இருக்கவும், நகர்வது ஆபத்தாய் தோன்றும் அபாயமான இடங்களில் உறுதியாய் தன்னை நிறுத்திக் கொள்ளவும் ஏதுவாயிருக்கிறது.
இயற்கையில் இருக்கும் இந்த ஒட்டும் பசை மாதிரி, விஞ்ஞானி ஜோன்ஸ் கெப்லர் புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடிக்க உறுதுணையாயிருந்தது. அவர் தேவனுடைய சிருஷ்டிப்புகளை நினைவு கூறுவதாகச் சொல்லுகிறார். வேதம், தேவன் வானத்தையும் பூமியையும் அதிலுள்ள யாவையும் சிருஷ்டித்ததாக சொல்லுகிறது: பூமியின் தாவரங்கள் (ஆதியாகமம் 1:12); சமுத்திரத்திலுள்ள நீர்வாழ் ஜந்துக்கள் மற்றும் ஆகாயத்துப் பறவைகள் (வச. 21); பூமியில் ஊரும் பிராணிகள் (வச.25); தேவசாயலில் உண்டாக்கப்பட்ட மனிதன் (வச.27) என்று தேவனுடைய சிருஷ்டிப்பு பட்டியல் நீளுகிறது. ஒரு தாவரத்தை அல்லது உயிரினங்களின் விசேஷமான சுபாவத்தைக் கண்டு நாம் ஆச்சரியப்பட நேர்ந்தால், தேவன் அதை வடிவமைத்த விதத்தைக் கண்டு நாம் தேவனுடைய படைப்பின் அடுச்சுவடுகளை பின்பற்றுகிறோம் என்று அர்த்தம்.
சிருஷ்டிப்பின் ஒவ்வொரு நாளின் இறுதியிலும், தேவன் தன்னுடைய கரத்தின் கிரியையை பரிசீலனை செய்து அதை “நல்லது” என்று காண்கிறார். தேவனுடைய படைப்புகளைக் குறித்து நாம் கற்றுக்கொள்ளும் போதும், கண்டுபிடிக்கும் போதும், அதின் வியக்கத்தக்க சுபாவங்களைக் கண்டு ஆச்சரியப்பட்டு, அதை பராமரிக்கவும் அதின் மேன்மையை பறை சாற்றவும் செய்யலாம்.
அழகான பாதங்கள்
ஜான் நாஷ் என்பவருக்கு கணிதத்தில் அவருடைய முன்னோடிப் பணியை பாராட்டி 1994இல் பொருளாதாரத்திற்கான நோபல்பரிசுகொடுக்கப்பட்டது. அவரது சமன்பாடுகள், வணிகத்தில் போட்டி மனப்பான்மையைக் குறித்து புரிந்துகொள்வதற்கு உலகெங்கிலும் உள்ள வணிகங்களில் பரவலாய் பயன்படுத்தப்படுகிறது. “அழகான மூளை” (a beautiful mind) என்ற தலைப்பில் அவருடைய வாழ்க்கை புத்தகமாக்கப்பட்டு, திரைக்காவியமாக்கப்பட்டது. அவருடைய மூளை விசேஷமான திறன் கொண்டது இல்லையெனினும் அதைக் கொண்டு அவர் என்ன சாதித்தார் என்பதே இங்ஙனம் முக்கியத்துவப்படுத்தப்படுகிறது.
பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசியான ஏசாயா, சுவிசேஷகனுடைய பாதங்களை அழகு என்று வர்ணிக்கிறார். அதின் மாம்சரீதியான அமைப்பை விவரிப்பதற்காய் இல்லை; மாறாக, அவர்கள் செய்கிற செய்கையை அழகு என்று வர்ணிக்கிறார். “சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன” (ஏசாயா 52:7). கர்த்தருக்கு உண்மையில்லாமல் வாழ்ந்ததின் விளைவாய் எழுபது ஆண்டுகள் சிறையிருப்பிற்குள் பிரவேசித்த இஸ்ரவேலர்களுக்கு “கர்த்தர் … எருசலேமை மீட்டுக்கொண்டார்” (வச. 9) என்னும் அவர்களின் சுயதேசம் திரும்பும் நற்செய்தியானது கர்த்தருடைய ஸ்தானாதிபதிகளின் மூலம் அறிவிக்கப்பட்டது.
இஸ்ரவேலின் இராணுவ பராக்கிரமத்தையோ அல்லது எந்த மாம்சீக முயற்சியையோ நற்செய்தி என்று அறிவிக்கவில்லை. மாறாக, அவர்களுக்காய் வெளிப்பட்ட “பரிசுத்த புயத்தை” (வச.10) நற்செய்தி என்று அழைக்கிறது. கிறிஸ்துவின் தியாகத்தினால் நம்முடைய ஆவிக்குரிய எதிரியோடு போராடி வெற்றியை ருசிபார்க்கும் நமக்கு இன்றும் அது உண்மையாகவே இருக்கிறது. அதின் விளைவாய் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு சமாதானத்தையும், நற்செய்தியையும், இரட்சிப்பையும் அறிவிக்கும் நற்செய்தியின் ஸ்தானாதிபதிகளாய் நாம் மாற்றப்பட்டுள்ளோம். அதை அழகான பாதங்களுடன் செயல்படுத்துகிறோம்.
படைப்பின் வியப்பு
அலாஸ்க்காவில் நடைபயணம் மேற்கொண்டிருந்த டிம், இதுவரை பார்த்திராத ஒன்றை அன்று சந்தித்தான். டிம், தொழில்ரீதியாகவும் கூட பனிப்பாறைகளை குறித்து படித்திருந்தாலும், அவைகளின் மேல் அதிகளவிலான பாசி உருண்டைகள் (ஒருவித செடி) படர்ந்திருப்பது அவனுக்கு முற்றிலும் புதியது. பல ஆண்டுகள் இந்த பிரகாசிக்கும் பச்சை நிற உருண்டைகளை கவனமாக ஆராய்ந்த பின், டிம்மும் அவன் சகாக்களும், இவ்வகையான பனிப்பாறை பாசியானது, மரங்களில் காணப்படும் பாசி உருண்டைகளை போல ஒன்றோடொன்று இணைக்கப்படாமல் இருப்பதையும், இன்னும் ஆச்சரியமாக இவை ஒரு மந்தையைப்போலவும், கூட்டமாகவும் ஒற்றுமையாக நகர்வதை கண்டுபிடித்தனர். முதலில், டிம்மும் அவன் சகாக்களும் இவைகள் காற்றினால் நகர்கின்றனவோ அல்லது மலையில் கீழ்நோக்கி சறுக்கி விழுகின்றனவோ என்று சந்தேகித்தனர் ஆனால் அவர்களின் ஆராய்ச்சி அத்தகைய யூகங்களை பொய்யாக்கியது.
அந்த பாசி உருளைகள் எவ்வாறு நகர்கின்றன என்று இன்னும் அவர்கள் கண்டுபிடிக்கவில்லை. இத்தகைய மர்மங்கள் தேவனுடைய படைப்பாற்றலின் மகுடங்கள். அவருடைய சிருஷ்டிப்பின் பணியில், தேவன் நிலத்தை மரங்களும், செடிகளும் முளைக்கும் "தாவரங்களின் விளைச்சலுக்காக" நியமித்தார் (ஆதியாகமம் 1:11). "பனிப்பாறை எலிகள்" என்ற இவ்வகை பாசிகளையும் அவரே வடிமைத்தார். அவைகளுக்கு ஏற்ற சூழலை அளிக்கும் பனிப்பாறைகளை நாம் நேரில் பார்க்கும்வரை, நம்மில் அநேகர் இதை பார்த்திருக்க முடியாது.
1950களில் கன்டுபிடிக்கப்பட்ட முதற்கொண்டு இந்த "பனிப்பாறை எலிகள்", தங்கள் தெளிவற்ற பச்சை படிவத்தினால் விஞ்ஞானிகளுக்கு களிப்பூட்டி வருகின்றன. தேவன், தான் படைத்த தாவரங்களை பார்த்து "அது நல்லது என்று கண்டார்." (வ.12), நாம் தேவனின் தாவரவியல் வடிவமைப்புகளால் சூழப்பட்டுள்ளோம் அவை ஒவ்வொன்றும் அவரின் படிப்பின் வல்லமைகளை நிரூபித்து, அவரை தொழுதுகொள்ள நம்மை அழைக்கிறது. அவர் படைத்த ஒவ்வொரு மரத்தின்பேரிலும், செடியின்பேரிலும் நாம் மகிழலாம் ஏனெனில் அவைகள் நல்லது.
தேவனிடமிருந்து ஒளித்துக்கொள்ளுதல்
நான் கண்ணாமூச்சி விளையாடியபோது என் கண்களை இறுக மூடிக்கொண்டிருந்தேன். என் சிநேகிதிகள் ஒளிந்துகொள்ள இடத்தைத் தேடி சென்றனர். மணிக்கணக்காய் அலமாரி, டிரங்க் பெட்டி, குளியலறை என்று தேடியும் ஒரு சிநேகிதியையும் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியில் அவள், கூரையிலிருந்து தொங்கிக் கொண்டிருந்த செடியின் பின்னாலிருந்து குதித்தபோது நான் சற்று முட்டாள்தனமாய் உணர்ந்தேன். அவள் ஒளிந்துகொண்டபோது, அவளின் தலையை மட்டுமே அந்த செடி மறைத்திருந்தது, அவள் உடல் முழுவதும் பார்க்கக்கூடிய வகையில் வெளியரங்கமாகவே இருந்தது.
தேவன் அனைத்தும் அறிந்தவர். ஆதலால் ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் ஒளித்துக்கொண்டபோதும், அவர்கள் அவரின் தெளிவான பார்வையில் (ஆதியாகமம் 3:8) இருந்தனர். அவர்கள் திடீரென்று ஏற்பட்ட விழிப்புணர்வாலும், அவமானத்தாலும், தாங்கள் செய்த தவறான செயலுக்காகவும், தேவன் உண்ணக்கூடாது என்று விலக்கி வைத்த மரத்தின் கனியைப் புசித்ததினாலும் தங்களை ஒளித்துக்கொண்டனர்.
ஆதாமும் ஏவாளும் தேவனுக்குக் கீழ்ப்படியாததால் அவரை விட்டு விலகினர். கோபத்தில் அவர்களை விட்டுவிடாமல் “நீ எங்கே இருக்கிறாய்” என்று அவர் வெளியே கொண்டுவர முயன்றார். அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று அவருக்கு தெரியாது என்று அர்த்தமில்லை; அவர் தாம் அவர்கள் மீது கொண்டிருக்கிற அக்கறையை அவர்கள் அறியவேண்டும் என நினைத்தார் (வச. 9).
என் சிநேகிதி மறைந்திருந்ததை நான் காணவில்லை; ஆனால் தேவன் எப்போதும் நம்மைக் காண்கிறார். நாம் அவருடைய தெளிவான பார்வையில் இருக்கிறோம். அவர் ஆதாம் ஏவாளை பின்தொடர்ந்தது போல, “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” (ரோமர் 5:8). நாம் இனி ஒளிந்துகொள்ளத் தேவையில்லை.
நெருக்கமாகிறோம்
கொரோனா வைரஸ் வந்த பிறகு வங்கியில் உள்ள பாதுகாப்புப் பெட்டகத்திலிருந்து ஒன்றை எடுக்க முன்பைவிட அநேக விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது. வங்கி பெட்டகத்திற்குள் நுழைவதற்கு முன்னால், ஏற்கனவே முன் அனுமதி வாங்கி, என்னுடைய அடையாள அட்டை மற்றும் கையெழுத்தை பரிசோதித்து, வங்கி ஊழியர் ஒருவர் காவலுக்கு வந்து பெட்டகத்திற்கு அழைத்துச் செல்லும் வரை நான் காத்திருக்க வேண்டியுள்ளது. உள்ளே நுழைந்ததும், எனக்குத் தேவையானவற்றை என் பெட்டகத்திலிருந்து நான் எடுக்கும் வரைக்கும் அந்த உறுதியான கதவுகள் பூட்டியிருக்கும். இந்த ஒழுங்கை நான் சரியாகப் பின்பற்றினால் மட்டுமே என்னால் வங்கியில் நுழைய முடியும்.
பழைய ஏற்பாட்டில் தேவன், உடன்படிக்கைப் பெட்டி வைத்திருக்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே நுழைய சில ஒழுங்குமுறைகளை வைத்திருந்தார் (யாத்திராகமம் 26:33). பரிசுத்த ஸ்தலத்திற்கும், மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் பிரிவை உண்டாக்கும் அந்த சிறப்பான திரைக்குப் பின்னே பிரதான ஆசாரியன் மாத்திரம் வருஷத்துக்கு ஒரு தரம் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவார் (எபிரெயர் 9:7). ஆரோனும் பிரதான ஆசாரியர்களும் ஜலத்திலே ஸ்நானம் பண்ணி, பரிசுத்த வஸ்திரங்களைத் தரித்துக் கொண்டு பலிகளுடன் உட்பிரவேசிக்க வேண்டும் (லேவியராகமம் 16:3-4). தேவனுடைய கட்டளைகள் உடல் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பிற்குமான வழிமுறைகள் அல்ல; மாறாக, நம்முடைய பாவ மன்னிப்பின் தேவையுடன் பரிசுத்த தேவனை எவ்வாறு நெருங்குவது என்பதை வலியுறுத்துவதற்காக கொடுக்கப்பட்டது.
இயேசுவின் மரணம் அந்த திரைச்சீலையை இரண்டாகக் கிழியச் செய்தது (மத்தேயு 27-51), இயேசுவின் சிலுவை மரணத்தின் மூலம் பாவங்கள் மன்னிக்கப்படும் என விசுவாசிக்கிறவர்கள் எவரும் தேவனுடைய பிரசன்னத்திற்குள் நுழையலாம் என்பதை அது வெளிப்படுத்தியது. உடன்படிக்கைப் பெட்டியின் திரைச்சீலை இரண்டாகக் கிழிந்த அந்த நிகழ்வு நம்முடைய நித்திய மகிழ்ச்சிக்கு காரணமாகியது. நான் எப்போது வேண்டுமானாலும் தேவனிடத்தில் நெருங்கலாம் என்பதை இயேசு சாத்தியமாக்கினார்.
நிஜமான பிரசன்னம்
கொரோனா வைரஸ் உலகமெங்கிலும் பரவிக்கொண்டிருக்கும்போது, அதின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மக்களிடையே இடைவெளியை கடைபிடிக்கும்படிக்கு சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். அநேக நாடுகள் மக்கள் தங்களை சுயதனிமைப்படுத்திக்கொள்ளுதலை கடைபிடிக்கும்படி அறிவுறுத்துகிறது. ஒருபுறம் அலுவலகங்கள் முடிந்தவரை தங்கள் அலுவலர்களை வீடுகளிலிருந்து வேலைசெய்யும்படிக்கு உற்சாகப்படுத்த, மறுபுறம் பலர் வேலைகளை இழந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். நானும் என்னுடைய சபை ஆராதனைகளிலும் பராமரிப்புக் குழுக்களிலும் ஆன்லைன் மூலமாகவே கலந்துகொள்ள நேர்ந்தது. சரீரப்பிரகாரமாக ஒன்று கூடுவதைத் தவிர்த்து, தற்போது உலகம் ஒன்றுகூடுவதற்கு புதிய முறையை தத்தெடுத்துக்கொண்டுள்ளது.
இணையதளம் நம்மிடையே ஐக்கிய சிந்தையை ஏற்படுத்துவதில்லை. நாமெல்லாரும் தேவனுடைய சரீரத்தின் அங்கத்தினர்களாய் ஆவியில் இணைக்கப்பட்டுள்ளோம். கொலோசெயருக்கு எழுதிய நிருபத்தில் நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே பவுல் இக்கருத்தை பதிவுசெய்துள்ளார். அந்த சபை அவரால் ஸ்தாபிக்கப்படவில்லை என்றாலும், அவர்களைக் குறித்தும் அவர்களின் விசுவாசத்தைக் குறித்தும் பவுல் தன் ஆழமான அக்கறையை வெளிப்படுத்தினார். பவுல் அவர்கள் மத்தியில் இருக்கமுடியவில்லை என்றாலும், “ஆவியின்படி உங்களுடனேகூட” இருக்கிறேன் என்று அவர்களுக்கு நினைவுபடுத்துகிறார் (கொலோசெயர் 2:5).
நம்முடைய பொருளாதார, சுகாதார மற்றும் பல நடைமுறைத் தேவைகளுக்காக நாம் நேசிக்கிறவர்களோடு எல்லாவேளைகளிலும் சரீரப்பிரகாரமாய் இருக்கமுடியாது. தொழில்நுட்பம் அந்த இடைவெளியை பூர்த்திசெய்யும். கிறிஸ்துவின் சரீரத்தின் அவயங்களாய் நாம் நம்மை பார்க்கும்போது, கண்ணிற்கு புலப்படாத ஒரு ஐக்கியத்திற்கு நாம் உட்படுத்தப்படுகிறோம் (1 கொரி. 12:27). அத்தகைய தருணங்களில், நாமும் பவுலைப்போல, ஒவ்வொருவருடைய விசுவாச உறுதியினாலும், ஜெபத்தினாலும் “கிறிஸ்துவுக்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்(ள)” உற்சாகப்படுத்தப்படுகிறோம் (கொலோ. 2:2).
உம் பிரசன்னத்தில் தங்கியிருக்க!
அவர்கள் தங்களுடைய காரில் ஏறிப்போனபோது, தன் தாயாரின் கைகளிலிருந்து தன்னை விலக்கிக்கொண்டு தர்ஷன் ஆலயத்தின் கதவை நோக்கி ஓடினான். அவன் அங்கிருந்து வருவதை விரும்பவில்லை. அவனுடைய தாயார் அவன் பின்னாக ஓடி, அவனை தன் கைகளினால் அணைத்து மீண்டும் புறப்படுவதற்கு தயாரானாள். தர்ஷனை அணைத்து, அவனுடைய தாயார் அவனை வெளியே கூட்டிச்செல்லும்போது, அவன் ஆலயத்தை நோக்கி தன் கைகளை நீட்டியவாறு அடம்பிடித்துக்கொண்டே வெளியே சென்றான்.
தர்ஷன், ஆலயத்தில் தனக்கிருக்கும் நண்பர்களை விட்டுப் பிரிய மனதில்லாமல் அப்படி செய்திருக்கலாம். ஆனால் அவனுடைய அந்த ஆர்வம், தாவீது தேவனை ஆராதிக்க காண்பித்த ஆர்வத்திற்கு ஒத்திருக்கிறது. தன்னுடைய நலனுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் தன்னுடைய சத்துருக்களை அழிக்கும்படிக்கு தேவனிடத்தில் கெஞ்சினாலும், அவன் சமாதானமாயிருப்பதற்கு, “நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்” என்கிறார் (27:4). அவர்; எங்கேயிருந்தாலும் தேவ பிரசன்னத்தை அனுவித்து தேவனோடு இருப்பதையே நாடினான். இஸ்ரவேலின் சிறந்த கதாநாயகனும் படைத்தலைவனுமான தாவீது, “கர்த்தரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுவேன்” என்று தன் விருப்பத்தை பிரதிபலிக்கிறான் (வச. 6).
அவர் விசுவாசத்தினால் பரிசுத்த ஆவியானவர் மூலமாக நமக்குள் வாசம்பண்ணுகிறார் என்பதினால், நாம் அவரை எங்கு வேண்டுமானாலும் ஆராதிக்கமுடியும் (1 கொரிந்தியர் 3:16; எபேசியர் 3:17). தேவ பிரசன்னத்தில் நம்முடைய நாட்களை கழிக்கவும், மற்ற விசுவாசிகளோடு சேர்ந்து அவரை ஆராதிக்கவும் முற்படுவோம். கட்டடத்தின் சுவரில் அல்ல, தேவனில் நம்முடைய பாதுகாப்பையும் நம்முடைய அதிகப்படியான மகிழ்ச்சியையும் நாம் அடைகிறோம்.
உம் பிரசன்னத்தில் தங்கியிருக்க!
அவர்கள் தங்களுடைய காரில் ஏறிப்போனபோது, தன் தாயாரின் கைகளிலிருந்து தன்னை விலக்கிக்கொண்டு தர்ஷன் ஆலயத்தின் கதவை நோக்கி ஓடினான். அவன் அங்கிருந்து வருவதை விரும்பவில்லை. அவனுடைய தாயார் அவன் பின்னாக ஓடி, அவனை தன் கைகளினால் அணைத்து மீண்டும் புறப்படுவதற்கு தயாரானாள். தர்ஷனை அணைத்து, அவனுடைய தாயார் அவனை வெளியே கூட்டிச்செல்லும்போது, அவன் ஆலயத்தை நோக்கி தன் கைகளை நீட்டியவாறு அடம்பிடித்துக்கொண்டே வெளியே சென்றான்.
தர்ஷன், ஆலயத்தில் தனக்கிருக்கும் நண்பர்களை விட்டுப் பிரிய மனதில்லாமல் அப்படி செய்திருக்கலாம். ஆனால் அவனுடைய அந்த ஆர்வம், தாவீது தேவனை ஆராதிக்க காண்பித்த ஆர்வத்திற்கு ஒத்திருக்கிறது. தன்னுடைய நலனுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் தன்னுடைய சத்துருக்களை அழிக்கும்படிக்கு தேவனிடத்தில் கெஞ்சினாலும், அவன் சமாதானமாயிருப்பதற்கு, “நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்” என்கிறார் (27:4). அவர்; எங்கேயிருந்தாலும் தேவ பிரசன்னத்தை அனுவித்து தேவனோடு இருப்பதையே நாடினான். இஸ்ரவேலின் சிறந்த கதாநாயகனும் படைத்தலைவனுமான தாவீது, “கர்த்தரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுவேன்” என்று தன் விருப்பத்தை பிரதிபலிக்கிறான் (வச. 6).
அவர் விசுவாசத்தினால் பரிசுத்த ஆவியானவர் மூலமாக நமக்குள் வாசம்பண்ணுகிறார் என்பதினால், நாம் அவரை எங்கு வேண்டுமானாலும் ஆராதிக்கமுடியும் (1 கொரிந்தியர் 3:16; எபேசியர் 3:17). தேவ பிரசன்னத்தில் நம்முடைய நாட்களை கழிக்கவும், மற்ற விசுவாசிகளோடு சேர்ந்து அவரை ஆராதிக்கவும் முற்படுவோம். கட்டடத்தின் சுவரில் அல்ல, தேவனில் நம்முடைய பாதுகாப்பையும் நம்முடைய அதிகப்படியான மகிழ்ச்சியையும் நாம் அடைகிறோம்.
மணியை அடி
முப்பது முறை கதிர்வீச்சு சிகிச்சைக்குப் பின், ரீமா புற்றுநோயிலிருந்து விடுபட்டார். அந்த மருத்துவமனை வழக்கப்படி, புற்றுநோயிலிருந்து விடுபட்டவர்கள் அங்கிருக்கும் “புற்றுநோயில்லா மணி” என்ற ஒன்றை ஒலிக்கச் செய்து, தன்னுடைய சிகிச்சையின் முடிவையும், தன்னுடை பூரண சுகத்தையும் தெரிவிக்கவேண்டும். சுகம்பெற்ற ரீமா, தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்பொருட்டு மிகுந்த ஆர்வத்துடனும் அந்த மணியை தாங்கியிருந்த கயிறு அறுந்துவிழும் வரைக்கும் அந்த மணியை அடித்து தன் மிகுந்த மகிழ்ச்சியைப் பிரதிபலித்தார்.
ரீமாவின் இந்த சம்பவம் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், தேவனின் மகத்துவமான கிரியைகளை பார்க்கும்படிக்கு இஸ்ரவேலர்களுக்கு அழைப்பு விடுக்கும் சங்கீதக்காரனின் எண்ணத்தையும் பார்க்க உதவியது. தேவன் அவர்களின் சத்துருக்களை விரட்டியடித்து தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியை தன்னுடைய ஜனமாய் ஏற்றுக்கொண்டதற்காக அவர்களை, “கைகொட்டி,” “கெம்பீரசத்தமாய் ஆர்ப்பரியுங்கள்” என்று உற்சாகப்படுத்துகிறார் (சங்கீதம் 47:1,6).
நம்முடைய வாழ்க்கையில் சரீரப்பிரகாரமான, பொருளாதார அல்லது உறவு ரீதியான குழப்பங்களுக்கு தேவன் எல்லா நேரத்திலும் உடனடியாய் தீர்வு கொடுப்பதில்லை. அதுபோன்ற சூழ்நிலைகளிலும், அவர் “தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறார்” என்பதினால் அவர் துதிகளுக்கு பாத்திரரே (வச. 8). நாம் விளங்கிக்கொள்ளக் கூடிய வகையில் தேவன் நமக்கு சுகத்தைக் கொடுத்தால், அது அளவில்லாத ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அப்போது நாம் மணியை அடித்து கொண்டாடவேண்டும் என்று அவசியமில்லை; ஆனால் ரீமா கொண்டாடியதுபோல தேவன் செய்த நன்மையைக் குறித்து நம்முடைய அளவில்லாத மகிழ்ச்சியைப் பிரதிபலிக்கலாம்.