எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஜெனிபர் பென்சன் ஷுல்ட்கட்டுரைகள்

தொடர்ந்து உதவுபவர்

தண்டுவடத்தில் ஏற்பட்ட பலத்த காயத்தின் காரணமாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மார்டி, மீண்டும் கல்லூரியில் சேர்ந்து மேலாண்மை பட்டம் (MBA) பெற விரும்பினார். அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற அவன் அம்மா ஜூடி உறுதுணையாக இருந்தார். ஒவ்வொரு வகுப்பிலும், பாட கலந்துரையாடல் குழுவிலும் அவனுடனேயே இருந்து அவனுக்காக அவன் அம்மா குறிப்புகள் எடுத்தார். அவன் பட்டம் பெறும்போது மேடைக்கு ஏறுவதில்கூட உதவினார். மார்டிக்கு முடியாததாகத் தோன்றிய காரியம் அவன் அம்மா தொடர்ந்து செய்த உதவியால் சாத்தியமாயிற்று.

இந்த உலகை விட்டுப் போனபிறகு தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு இதேபோன்ற உதவி தேவை என்பதை இயேசு அறிந்திருந்தார். அவர்களை விட்டுப் பிரிவதைப் பற்றி முன்பே கூறிய அவர், பரிசுத்த ஆவியானவர்மூலமாக தேவனுடன் புதிய உறவைப் பெறுவார்கள் என்று கூறினார். இந்த ஆவியானவர் ஒவ்வொரு நொடிப்பொழுதும் உடன் இருந்து உதவுபவர். ஆசிரியரும் வழிகாட்டியுமான அவர், அவர்களோடு இருப்பது மட்டுமல்லாமல் அவர்களுக்குள்ளும் வாசம் செய்வார் (யோவா. 14: 17, 26).

நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ள இயேசுவின் சீஷர்கள் பிரிந்து சென்றபோது தங்களால் கையாள முடியாத காரியங்களை தாங்கிக்கொள்ள, பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு தேவனின் உதவியைப் பெற்றுத்தந்தார். போராட்டம் மிகுந்த தருணங்களில், இயேசு சொன்னதை ஆவியானவர் அவர்களுக்கு நினைவுபடுத்துவார் (வச. 26): உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக....நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்...நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்.

உங்கள் பெலனையும், திறனையும் மீறிய விஷயங்களை நீங்கள் எதிர்கொள்ளுகிறீர்களா? ஆவியானவரின் தொடர்ந்த உதவியை நீங்கள் சார்ந்திருக்கலாம். உங்களில் கிரியை செய்யும் பரிசுத்த ஆவியானவர் தேவனை மகிமைப்படுத்துவார்.

ஞானத்தின் ஊற்றுக்கண்

ஒரு பெண் தன்னுடைய நாயை வைத்திருப்பதாக ஒரு மனிதன் அந்தப் பெண்ணுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். நாய் அந்த மனிதனுடையதாக இருக்கமுடியாது என்றும், அதை எங்கே வாங்கினாள் என்றும் அந்தப்பெண் நீதிபதியிடம் கூறினாள். நீதிமன்ற அறையில் நீதிபதி நாயை அவிழ்த்து விட்டபோது, அதன் உண்மையான உரிமையாளர் யார் என்பது தெளிவாகத் தெரிந்தது. தன் வாலை ஆட்டியபடி, நாய் அந்த மனிதனிடம் ஓடியது!

இதேபோன்ற ஒரு பிரச்சனையை, பண்டைய இஸ்ரவேலில் நீதிபதியாக இருந்த சாலொமோன் தீர்த்துவைக்க நேர்ந்தது. ஒரு ஆண் குழந்தைக்கு தான்தான் தாய் என்று இரண்டு பெண்கள் உரிமை கோரினார்கள். இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட சாலொமோன், பிள்ளையை இரண்டாகப் பிளந்துகொடுக்க ஒரு பட்டயத்தைக் கொண்டுவரச் சொன்னார். உண்மையான தாய், தன் குழந்தை தனக்குக் கிடைக்காதபோதும், அவன் உயிரைக் காப்பாற்றும்படியாக, அவனை அடுத்த பெண்ணிடம் கொடுக்கும்படி கூறினாள். சாலொமோன் அந்தக் குழந்தையை அவளுக்கே கொடுத்தார்.

எது நியாமானது, எது ஒழுக்கமானது, எது சரி, எது தவறு என்று முடிவெடுக்க நமக்கு ஞானம் அவசியம். ஞானத்தின் அவசியத்தை நாம் முழுவதுமாக உணர்ந்தால், நாமும் சாலொமோனைப் போல, ஆண்டவரிடம் ஞானமுள்ள இருதயத்தைக் கேட்கலாம் (வச. 9). மற்றவர்கள் விருப்பங்களையும் கருத்தில்கொண்டு, நம்முடைய தேவைகளையும், விருப்பங்களையும் பூர்த்திசெய்ய தேவன் நமக்கு உதவுவார். நம் வாழ்க்கையில் அவரை கனப்படுத்தும்படியாக, சில சமயங்களில் குறுகியகால பலன்களையும், நீண்டகால (சில சமயங்களில் நித்திய) பலன்களையும் ஒப்பிட்டுப் பார்க்கச்செய்வார்.

நம் ஆண்டவர் ஒரு நேர்த்தியான நீதிபதி மட்டுமல்ல, அதிக ஞானத்தைத்தர ஆர்வமாக இருக்கும் தனிப்பட்ட ஆலோசகருமாவார் (யாக். 1:5).

பிடியில் இல்லாமல்

மெக்சிகோ வளைகுடாவில் கெய்ட்லின் தன் நண்பர்களுடன் நீந்திக்கொண்டிருந்தபோது, ஒரு சுறா அவள் கால்களைக் கவ்வி, உடலை இழுத்தது. தன்னை விடுவித்துக்கொள்ள, கெய்ட்லின் சுறாவின் மூக்கில் ஓங்கிக் குத்தினாள். அந்த சுறா அவளை விடுவித்து, தோல்வியைச் சந்தித்து, நீந்திச்சென்றது. அந்த சுறா கடித்ததால் நூறு தையல்களுக்கு மேல் போடும் அளவிற்கு கெய்ட்லினுக்குக் காயங்கள் ஏற்பட்டிருந்தாலும், அதனால் கெய்ட்லினை தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை.

இயேசு மரணத்தின் கூரை முறித்ததையும், தன்னைப் பின்பற்றுபவர்களை அச்சுறுத்தி, தோல்வியடையச் செய்ய மரணத்திற்கு இருந்த வல்லமையை முடிவுக்குக் கொண்டுவந்ததையும் இந்த நிகழ்ச்சி எனக்கு நினைவுபடுத்துகிறது. “அவர் (இயேசு) மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது” (அப்போஸ்தலர் 2:24) என்று பேதுரு கூறுகிறார்.

பேதுரு எருசலேமில் இருந்த ஒரு கூட்டத்தினரிடம் இந்த வார்த்தைகளைக் கூறினார். அவர்களில் பலர், இயேசுவைக் கண்டனம் செய்து, “சிலுவையில் அறையுங்கள்” என்று கூச்சலிட்டவர்களாக இருந்திருக்கலாம். அதன் விளைவாக ரோம போர்ச் சேவகர்கள் அவரை சிலுவையில் அறைந்தார்கள். அவர் மரித்துவிட்டார் என்று அவர்கள் உறுதி செய்யும்வரை அவர் அந்த சிலுவையில் தொங்கினார். இயேசுவின் உடல் ஒரு கல்லறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கடவுள் அவரை உயிரோடு எழுப்பும் வரை அவர் உடல் அந்தக் கல்லறையில் மூன்று நாட்கள் இருந்தது. அவர் உயிர்த்தெழுந்த பிறகு, பேதுருவும், மற்றவர்களும் அவரோடு பேசி, அவரோடு சாப்பிட்டு,  நாற்பது நாட்கள் கழித்து அவர் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவதைப் பார்த்தார்கள் (அப்போஸ்தலர் 1:9).

சரீரப் பிரகாரமான பாடுகள், மன உளைச்சல்கள் மத்தியில், இந்த உலகத்தில் இயேசுவின் வாழ்க்கை முடிவடைந்தது. ஆனால் கடவுளின் வல்லமை சாவின் கூரை முறித்தது. இதனால், மரணமோ, வேறு எந்த விதமான போராட்டமோ, அதன் பிடியில் நம்மை நிரந்தரமாக வைத்திருக்க முடியாது. விசுவாசிகள் அனைவரும், ஒரு நாள், நித்தியமான வாழ்வையும், முழுமையையும் கடவுளின் பிரசன்னத்தில் அனுபவிப்பார்கள். இப்படிப்பட்ட எதிர்காலத்தைப்பற்றி யோசித்தால், இன்று நாம் விடுதலையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

தேவனிடம் உண்மையாய் இருத்தல்

நான் என் தலையைத் தாழ்த்தி, கண்களை மூடி, விரல்களைக் கோர்த்து, ஜெபிக்க ஆரம்பிக்கிறேன். “அன்பின் ஆண்டவரே, உமது பிள்ளையாக இன்று உம்மிடத்தில் வருகிறேன். உமது வல்லமை, உமது நன்மை ஆகியவற்றை ஏற்று, அறிக்கையிடுகிறேன்....” திடீரென்று என் கண்கள் தானாக, வேகமாகத் திறக்கின்றன. நாளை வகுப்பில் கொடுக்கவேண்டிய வரலாற்றுப் பயிற்சியை என் மகன் இன்னும் முடிக்கவில்லை என்ற நினைவு வருகிறது. வகுப்புகள் முடிந்தபிறகு, அவனுக்கு கூடைப்பந்தாட்ட பயிற்சி இருப்பது நினைவு வருகிறது. நடு இரவு வரை கண் விழித்து தன் பள்ளிக்கான பயிற்சிகளை அவன் செய்வதாகக் கற்பனை செய்கிறேன். இதனால் அவன் அதிகக் களைப்பாகி, காய்ச்சலில் படுத்து விடுவான் என்று கவலைப்படுகிறேன்.
 
ஜெபத்தின்போது ஏற்படும் கவனச் சிதறல்கள் பற்றி, சி. எஸ். லூயிஸ், த ஸ்க்ரூடேப் லெட்டர்ஸ் (The Screwtape Letters)என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார். நமது மனம் அலைபாயும்போது, மன உறுதியை பயன்படுத்தி, நமது நினைவுகளை மீண்டும் ஜெபத்தை நோக்கி ஒருமுகப்படுத்துவதாகக் குறிப்பிடுகிறார். ஆனாலும், இந்தக் கவனச்சிதறலை ஏற்றுக்கொண்டு, “நமது கவனச்சிதறலை நமது பிரச்சனையாக தேவனிடம் ஒப்படைத்து, அதையே நமது ஜெபத்தின் மையக் கருத்தாக மாற்றுமாறு” லூயிஸ் ஆலோசனை தருகிறார்.
 
தீராத கவலை அல்லது பாவகரமான சிந்தனை நம் ஜெபத்திற்குத் தடையாக இருக்கும்போது, கார்தருடானாஉரையாடலில், அதையே பிரதான கருத்தாக எடுத்துக்கொள்ளலாம். நாம் தேவனிடம்பேசும்போது, நமது கவலைகள், பயங்கள், போராட்டங்கள் பற்றி நாம் வெளிப்படையாகப் பேசுவதையே அவர் விரும்புகிறார். நாம் சொல்லும் எதைக் குறித்தும் அவர் ஆச்சரியப்படுவதில்லை. நமது நெருங்கிய நண்பர் நாம் பேசுவதை எப்படி கவனமாகக் கேட்பாரோ அதேபோல் நம்மேல் ஈடுபாடு கொண்டவராக கர்த்தர் இருக்கிறார். அதனால்தான் நம் கவலைகளை அவரிடத்தில் ஒப்புவிக்க ஊக்குவிக்கப்படுகிறோம் – ஏனென்றால் அவர் நம்மை விசாரிக்கிறவர் (1 பேதுரு 5:7).

தீவிர மாற்றந்தரும் அன்பு

அவளுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த திருமண தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு சாராவின் நிச்சயதார்த்தம் முறிந்து விட்டது. அவளுடைய கவலை, ஏமாற்றம் இவைகளின் மத்தியில், அவள் தன்னுடைய திருமண வைபவத்திற்காக வாங்கியிருந்த உணவு வகைகளை வீணாக்கக் கூடாது எனத் தீர்மானம் செய்து, அந்தக் கொண்டாட்டத்தை வேறு வகையில் திட்டமிட்டாள். தன்னுடைய விருந்தினர் பட்டியலை மாற்றியமைத்து, அருகிலுள்ள வீடற்றோர் காப்பகத்தில் தங்கியுள்ளவர்களை விருந்திற்கு அழைத்தாள்.

இயேசுவும் இத்தகைய உறவினர் அல்லாதோரிடம் காட்டும் கருணையை விரும்புகின்றார். அவர் பரிசேயரிடம் பேசிய போது, “நீ விருந்துபண்ணும்போது ஏழைகளையும், ஊனரையும், சப்பாணிகளையும், குருடரையும் அழைப்பாயாக. அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்” (லூக். 14:13-14) என்றார். அத்தோடு அவர்கள் உனக்கு பதில் செய்யமாட்டார்கள். ஆனால், உனக்கு தேவனிடமிருந்து ஆசீர்வாதம் வரும் என்றும் கூறினார். தங்களால் எந்த நன்கொடையும் கொடுக்க முடியாத, கவர்ச்சிகரமான உரையாடல் செய்ய முடியாத, அல்லது எந்த சமுதாயத் தொடர்பும் அற்ற மக்களுக்கு உதவுவதையே இயேசுவும் அங்கிகரிக்கின்றார்.

பரிசேயன் ஒருவன் இயேசுவை விருந்துக்கு அழைத்திருந்த போது, இயேசு இந்த வார்த்தைகளைப் பேசினார். அவருடைய செய்தி இருதயத்தை ஊடுருவுவதாகவும், ஆழமானதாயுமிருந்தது. உண்மையான அன்பு ஆழமானது. அன்பு என்பது எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் பிறரின் தேவைகளைச் சந்தித்தலாகும். இப்படியே இயேசுவும் நம் ஒவ்வொருவரையும் நேசிக்கின்றார். நம்முடைய உள்ளான ஏழ்மையை அவர் காண்கின்றார். அவருடைய வாழ்வையே நமக்காகக் கொடுத்து அவருடைய அன்பை வெளிப்படுத்தினார்.

இயேசு கிறிஸ்துவை நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொண்டோமென்பது, அவருடைய முடிவில்லாத அன்பிற்குள் பயணித்தலாகும். “கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும்  இன்னதென்று உணர்ந்து (எபே. 3:18) கண்டறிந்து கொள்ள நம்மனைவரையும் அழைக்கின்றார்.

தேவன் யாரைப் போன்றிருப்பார்?

ஒரு சிறப்பான நிகழ்ச்சியைக் கொண்டாடுவதற்காக என்னுடைய கணவன் என்னை அருகிலுள்ள கலை அரங்கத்திற்கு அழைத்துச் சென்று, அங்குள்ள வண்ணந்தீட்டப்பெற்ற படங்களில் ஏதாவது ஒன்றினை அவருடைய பரிசாக வாங்கிக்கொள்ளச் சொன்னார். ஒரு சிறிய நீரோடை காட்டினூடே ஓடுகின்ற காட்சியைக் கொண்ட படத்தினைத் தேர்ந்தெடுத்தேன். அந்த நீரோடையின் பரப்பு அந்தப் படத்தின் பெரும்பகுதியை எடுத்துக்கொண்டபடியால் வானத்தின் காட்சி இப்படத்தில் காட்டப்படவில்லை. ஆனால், அந்த நீரின் பிரதிபலிப்பில் சூரியன் இருந்த வான் பகுதியையும், மரங்களின் மேற்பகுதியையும், மங்கலான சுற்றுச் சூழலையும் காணமுடிந்தது. வானத்தைக் காட்டக்கூடிய ஒரேயிடம் அந்த நீரின் மேற்பரப்புமட்டும் தான்.

ஆவிக்குரிய கண்ணோட்டத்தில் இயேசுவும் அந்த நீரோடையைப் போன்றே, தேவன் யாரைப் போன்றிருப்பார் என்பதை நமக்கு பிரதிபலிக்கின்றார். எபிரெயரை எழுதியவர் “குமாரன் தேவனுடைய தன்மையின் சொரூபமாயிருக்கிறார்” (1:3) என எழுதுகின்றார். தேவனைக் குறித்த உண்மைகளை வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “தேவன் அன்பாயிருக்கிறார்” என்பது போன்ற சில நேரடியான கூற்றுக்கள் மூலம் தெரிந்துகொள்ள முடிந்தாலும், நாம் இவ்வுலகில் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளை தேவன் சந்திக்க நேரிட்டால் அவர் எவ்வாறு செயல்படுவார் என்று நாம் சிந்தித்தோமேயாயின் நம்முடைய புரிந்துகொள்ளல் இன்னும் சற்று ஆழமாக இருக்க முடியும். தேவன் மனிதனாக இவ்வுலகில் இருந்தால் எவ்வாறு செயல்படுவார் என்பதையே இயேசு நமக்குச் செயல்படுத்திக் காண்பித்தார்.

சோதனை நேரங்களில் இயேசு, தேவனுடைய பரிசுத்தத்தை வெளிப்படுத்தினார். ஆவியின் இருளை எதிர்நோக்கும்போது தேவனுடைய அதிகாரத்தை இயேசு காட்டினார். ஜனங்களின் பிரச்சனைகளோடு போராடும் போது தேவனுடைய ஞானத்தை நமக்குக் காட்டினார். அவருடைய மரணத்தின் மூலம் தேவனுடைய அன்பை விளக்கினார்.

தேவனைக் குறித்த அனைத்துக் காரியங்களையும் நம்மால் கிரகிக்கக் முடியாது. நம்முடைய குறுகிய சிந்தனையில் அவருடைய பரந்த எல்லையைக் காணமுடியாது. ஆனால், தேவனுடைய குணாதிசயங்களைக் கிறிஸ்துவைப் பார்க்கும் போது தெரிந்துகொள்ள முடியும்.

இவர் யார்?

ஓர் அழுக்கடைந்த சாலையில் ஒருவரையொருவர் இடிக்குமளவுக்கு நெருக்கமான ஜனக்கூட்டத்தினரிடையே நீ நின்று பார்த்துக் கொண்டிருக்கிறாய் எனக் கற்பனை செய். இக்கூட்டத்தின் பின்பக்கம் நிற்கும் பெண்கள் நுனிக் காலில் நின்று யார் வருகிறார்களென எட்டிப் பார்க்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். தூரத்தில் ஒரு மனிதன் கழுதையின் மேல் வருவது லேசாகத் தெரிகிறது. அவர் நெருங்கி வருகையில் ஜனங்கள் தங்கள் மேலாடைகளைச் சாலையில் விரிக்கின்றனர். திடீரென, உன் பின்பக்கம் ஒரு மரக்கிளை ஒடியும் சத்தம் கேட்கிறது. ஒரு மனிதன் தென்னை மர ஓலைகளை வெட்டிக் கொண்டிருக்கின்றான். ஜனங்கள் அவற்றை சாலையில் கழுதைக்கு முன்பாகப் பரப்புகின்றனர்.

இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, இயேசு எருசலேமுக்குள் நுழைந்த போது அவருடைய சீடர்கள் மிக உற்சாகமாக அவரை வரவேற்றனர். அந்த ஜனக்கூட்டம் மிக மகிழ்ச்சியோடு தேவனை மகிமைப்படுத்தினார்கள். தாங்கள் கண்ட சகல அற்புதங்களையும் குறித்து சந்தோஷப்பட்டார்கள்” (லூக். 19:37) இயேசுவின் பக்தர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு ‘‘கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர்” (வ. 38) என சத்தமிட்டனர். அவர்களுடைய உற்சாக வரவேற்பு எருசலேம் நகரத்தாரைப் பாதித்தது. கடைசியாக அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில் நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, ‘‘இவர் யார்?” என்று விசாரித்தனர். (மத். 21:10).

இன்றைக்கும் அநேக ஜனங்களிடையே யார் இந்த இயேசு என்ற கேள்வியுள்ளது. நாம் இயேசு வரும் பாதையில் மரக்கிளைகளையும், இலைகளையும் பரப்ப முடியாவிட்டாலும், இயேசுவைப் புகழ்ந்து சத்தமிட முடியாததாயினும், நாமும் அவரை கனப்படுத்த முடியும். நாம் அவர் செய்த மகத்துவமான செயல்களை விவரித்துச் சொல்ல முடியும். தேவையுள்ள ஜனங்களுக்கு உதவ முடியும்; நம்மைக் காயப்படுத்துவோரை பொறுத்துக் கொள்ள முடியும். ஒருவரையொருவர் ஆழ்ந்து நேசிக்க முடியும். அப்படிச் செய்வோமேயாயின், நாம் அந்த வேடிக்கைப் பார்க்கும் அந்தக் கூட்டத்திடம் இயேசு யாரென்று பதில் சொல்வதற்கு தயாராக இருக்கின்றோம்.

கண்களுக்கு புலப்படாத தாக்கம்

வாஷிங்டன் DCயில் உள்ள தேசீய கலைப் பொருட்களின் காட்சிக் கூடத்திற்கு நான் சென்றிருந்த பொழுது, “காற்று” என்ற தலைப்பின் கீழ் இருந்த உன்னதமான படைப்பு ஒன்றைப் பார்த்தேன். ஒரு காட்டுப் பகுதிக்குள் வீசும் புயலை அந்த ஒவியம் சித்தரித்தது. மெலிந்து வளர்ந்திருந்த மரங்கள் இடது பக்கமாக சாய்ந்திருந்தன. புதர்களும் அதே திசையில் மிக வேகமாக அசைந்திருப்பதாக சித்தரிக்கப்பட்டிருந்தன.

அந்தப் புயலைவிட மிக வல்லமையுடன் பரிசுத்த ஆவியானவர், விசுவாசிகளை தேவனுடைய சத்தியத்திற்கும், அவருடைய உண்மைத் தன்மைக்கும் நேராக அசையச் செய்கிறார். ஆவியானவர் நடத்தும் வழியிலே நாம் சென்றால், நாம் தைரியமுள்ளவர்களாகவும், அன்புள்ளவர்களாகவும் மாறுவோம் என்று எதிர்பார்க்கலாம். நம்முடைய ஆசைகளைக் கட்டுப்படுத்துவதற்கான தெளிந்த புத்தியை நாம் பெற்றுக் கொள்ளுவோம் (2 தீமோ. 1:7).

சில சூழ்நிலைகளில் நமது ஆவிக்கேற்ற வளர்ச்சியடையவும் மாற்றமடையவும் ஆவியானவர் நம்மை நெருக்கி ஏவும் பொழுது, நாம் செயல்பட மறுத்து விடுகிறோம். தொடர்ந்து நமது மனதில் ஏற்படும் உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காததை வேதாகமம் ஆவியை அவித்துப் போடல் (1தெச. 5:19) என்று கூறுகிறது. காலப்போக்கில் நாம், தவறு என்று எண்ணிய காரியங்கள், அவ்வளவு தவறாகத் தோண்றாது.

தேவனுக்கும் நமக்கும் இடையே உள்ள உறவு துண்டிக்கப்பட்டு, தூரமாகச் சென்று விடுவோம். ஆவியானவர் தொடர்ந்து, நம்மை நெருக்கி ஏவுகையில் அவருடைய செயலிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நாம் இருக்கும் பொழுது இந்த நிலை ஏற்படுகிறது. இந்நிலை தொடர்ந்து நீடித்தால், பிரச்சனைக்கான அடிப்படைக் காரணத்தை நம்மால் கண்டுகொள்ள இயலாது. நமது பாவத்தை நமக்குக் காண்பிக்கும்படி தேவனிடம் மன்றாடி ஜெபிக்கலாம். தேவன் நம்மை மன்னித்து, அவரது ஆவியின் வல்லமையையும், அவரது ஆவியினால் ஏற்படும் தாக்கத்தையும் நமக்குள்ளாக புதிப்பிப்பார்.

புரிந்துகொள்ளும் ஒருவர்

டெக்ஸாஸிலுள்ள காவல்துறை மற்றும் தீயனைப்புத் துறையின் மதப் போதகர் ஜாண் ஃபப்ளர். சட்டம் ஒழுங்கை அமல்படுத்தும் அலுவலர்கள் எதிர் நோக்குகின்ற சுழல்களை நன்கு புரிந்து கொள்வதற்காக ப்பளர் தன் பணியின் போது 22 வார ஓய்வு விடுப்பில் காவல் துறையினரின் பயிற்சியில் கலந்து கொண்டார். பிற பயிற்யாளர்களோடும் தன் நேரத்தை செலவிட்டதன் மூலம் அத்துறையின் புதிய சவால்களைத் தெரிந்து கொண்டார். அவர் ஒரு புதிய பணிவையும் கரிசனையும் பெற்றுக் கொண்டார். எதிர்காலத்தில், உணர்வு சார்ந்த மன அழுத்தம், வெறுப்பு, இழப்பு ஆகியவற்றோடு போராடுகின்ற காவல் துறை அதிகாரிகளுக்கு இன்னும் பயனுள்ள ஆலோசனைகளைத் தரமுடிந்தது.

தேவன் நாம் எதிர்நோக்குகின்ற சுழல்களை நன்கு புரிந்து கொள்கிறார். ஏனெனில் அவர் நம்மை உருவாக்கியவர். நமக்கு ஏற்படுகின்ற யாவையும் அவர் நன்கு அறிவார். அவர் நம்மை நன்கு புரிந்து கொள்கிறார். ஏனெனில் அவர் தாமே பூமிக்கு வந்து மனித வாழ்வையும் அனுபவித்தவர். “அவர் மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார்” (யோவா. 1:14). இயேசுகிறிஸ்து என்ற மனிதனாக வாசம் பண்ணினார்.

இயேசு கிறிஸ்துவின் புவிவாழ்வு அதிக துன்பம் நிறைந்ததாக இருந்தது. அவர் சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்தையும், வெறும் வயிற்றின் வேதனையையும், வீடற்றோரின் நிலையையும் அனுபவித்தார். உணர்வு சார்ந்து பார்க்கும் போது, தன்னை ஏற்றுக் கொள்ளாமை, காட்டிக் கொடுக்கப்படுதலின் வேதனை, மேலும் கலவரங்கள் ஆகியவற்றையும் சகித்தார்.

இயேசு நண்பர்களின் மகிழ்ச்சியிலும் குடும்ப உறவிலும் பங்கு கொண்டார். இப்புவியில் நாம் எதிர் நோக்குகின்ற மிக மோசமான பிரச்சனைகளையும் சந்தித்தார். அவர் நம்பிக்கையைத் தருபவர். அவர் ஆலோசனைக் கர்த்தா (ஏசா. 9:6). நம் பிரச்சனைகளை பொறுமையோடும், கரிசனையோடும் கேட்டு ஆழ்ந்த கருத்தோடும் கவலையோடும் ஆலோசனைத் தருபவர் அவர் ஒருவரே. “நான் அதன் வழியே வந்திருக்கிறேன் நான் உன்னை புரிந்து கொள்கிறேன்” என்று சொல்ல முடியும்.