சகலத்தையும் அறிந்த தேவன்
சாக்லேட் நிறம்கொண்ட என்னுடைய லாப்ராடர் நாய்க்குட்டிக்கு மூன்று மாதம் இருக்கையில், தடுப்புஊசி போடுவதற்கும் மருத்துவ பரிசோதனை செய்வதற்கும் நான் அதை ஒரு கால்நடை மருத்துவரிடம் அழைத்துசென்றேன். மருத்துவர் கவனமாக பரிசோதிக்கும்போது, அதன் இடது பாதத்திலிருந்த மென்மயிரின் மேல் சிறு வெள்ளைப் பகுதி ஒன்று காணப்பட்டது. அந்த மருத்துவர் புன்முறுத்துகொண்டு சொன்னது, “சாக்லேட்டில் உன்னை முக்கி எடுக்கும்வேளையில் தேவன் அந்த இடத்தில் உன்னை பிடித்திருப்பார்போல்” என்றார்.
அதைக்கேட்ட நானும் புன்முறுத்தேன். ஆனாலும், அவர்கள் அறியாமலேயே, தேவன் தம் ஒவ்வொரு சிருஷ்டிப்பின்மீதும் தனிப்பட்ட ஆர்வம் எடுக்கிறவராய் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்தியது.
மத்தேயு 10:30-ல் இயேசு சொல்கிறார், “உன் தலையில் உள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டுள்ளது”. தேவன் எவ்வளவு பெரியவராக இருந்தும் நம்முடைய வாழ்க்கையின் நுணுக்கமான பகுதிகளிலும் அவர் அளவில்லா ஆர்வம் காட்டுகிறார். எந்தவொரு சின்ன விஷயமாக இருந்தாலும் சரி, அது அவருடைய கவனத்திலிருந்து தப்பமுடியாது, அவர் முன் கொண்டுவர தகுதியல்லாத அற்ப பிரச்சனைதான் என்று எதுவும் இல்லை. அவர் அவ்வளவாய் அக்கறை காட்டுகிறார்!
தேவன் நம்மை சிருஷ்டித்தவர் மாத்திரமல்ல; அவர் நம்மை போஷிக்கிறவரும்கூட ஒவ்வொரு நொடியும் அவர் நம்மை காக்கிறவராய் உள்ளார். சிலவேளைகளில் நாம், “பிசாசு என் எல்லாக் காரியங்களையும் அறிந்து செயல்படுகிறான்” என்று சொல்வதுண்டு. ஆனாலும், தேவன் எல்லாவற்றிலும் இருக்கிறார், நாம் கவனிக்கத் தவறிய காரியங்களையும் அவர் கவனிக்கத் தவறுவதில்லை. சம்பூரண ஞானமும் அன்பும் கொண்ட நம் பரமபிதா நம்மை – மற்ற எல்லா சிருஷ்டிப்புகளுடன் – அவருடைய பரிவான, பலமுள்ள கரங்களில் எப்படித் தாங்குகிறார் என்பதை அறிவது எவ்வளவாய் நம்மை தேற்றுகிறது?
பகிர்ந்திட்ட ஆறுதல்
“எனக்காகவே தேவன் இன்று உங்களை அனுப்பினார்”
சிக்காகோவில் விமானம் தரையிறங்கிய பின் இந்த வார்த்தைகளை சொல்லி அந்தப் பெண் என்னிடமிருந்து விடைபெற்றாள். விமானத்தில் என்னுடன் பயணித்த அவள் அன்றைக்கு மட்டும் பல விமானங்கள் மாறி கடைசியாக தன் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தாள். “நீங்க தப்பா எடுக்கலேனா, இத்தனை விமானங்கள் மாறி வரவேண்டிய அவசியம் என்னவென்று தெரிஞ்சிக்கலாமா?” என்றேன். சற்றே யோசித்த அவள் வருத்தத்துடன், “போதைக்கு அடிமையான என் மகளை சீர்திருத்த மையத்தில் அனுமதித்துவிட்டு வருகிறேன்” என்றாள்.
தொடர்ந்து அவளுடன் பேச்சுகொடுத்த நான், என் மகனும் எப்படி ஹெராயினுக்கு அடிமையாக இருந்தான், இயேசு அவனை எப்படி விடுவித்தார் என்பதை பகிர்ந்தேன். கண்ணீர்மல்க அதனை கேட்டவளின் முகத்தில் ஒரு புன்னகை. விமானம் தரையிறங்கிய பின் இருவருமாக இணைந்து அந்த மகளின் சங்கிலிகள் அறுபடவேண்டும் என்று ஜெபித்தோம்.
அன்று மாலையில் நான் 2 கொரிந்தியர் 1:3-4-ல் “நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம். தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர்” என்ற வசனத்தை நினைவுகூர்ந்தேன்.
தேவனால் வரும் ஆறுதலினால் பெலப்படவேண்டிய மக்கள் நம்மைச் சுற்றிலும் உள்ளனர். நம்மேல் அவர் கூர்ந்த அன்பை, மனதுருக்கத்துடன் நாம் மற்றவருக்கு பகிர்ந்திடவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இன்றும், அவரால் வரும் ஆறுதல் யாருக்குத் தேவையோ அவர்களிடமாய் தேவன் நம்மை அனுப்பட்டும்!
“ஜெபமாகிய வரத்தைப் பயன்படுத்தல்”
‘‘ஜெபமாகிய வரம் எத்தகையது என்று உணராதிருந்தேன். என்னுடைய சகோதரன் சுகவீனமான போது நீங்களெல்லாரும் அவனுக்காக ஜெபித்தீர்கள். உங்களுடைய ஜெபங்கள் சொல்ல முடியாத அளவு ஆறுதலைத் தந்தது”.
புற்றுநோயால் அவதியுறும் தன்னுடைய சகோதரனுக்காக, எங்கள் ஆலயத்தின் நபர்கள் ஜெபித்ததற்காக லாரா நன்றி கூறியபோது, அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. மேலும், ‘‘உங்களுடைய ஜெபம் இந்த கடினமான சூழல்களில் அவனை
பெலப்படுத்தினதோடல்லாமல், எங்கள் குடும்பத்தினரனைவரையும் ஊக்கப்படுத்துவதாக இருந்தது” என்றும் கூறினாள்.
பிறரை நேசிக்க சிறந்த வழி அவர்களுக்காக ஜெபிப்பதே. இதற்கு முழு எடுத்துக்காட்டாக இயேசு செயல்பட்டார். புதிய ஏற்பாட்டில் இயேசு பிறருக்காக ஜெபிப்பதை நாம் பல சந்தர்ப்பங்களில் பார்க்கிறோம். மேலும், அவர் நமக்காகப் பிதாவிடம் தொடர்ந்து வருவதையும் பார்க்கின்றோம். ரோமர் 8:34ல் ‘‘அவரே தேவனுடைய வலது பாரிசத்திலும் இருக்கிறவர். நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே” என சொல்லப்பட்டுள்ளது. சிலுவையில் தன்னலமற்ற ஓர் அன்பை நமக்காக வெளிப்படுத்தின பின்பு உயிரோடெழுந்து, பரலோகத்திற்கு ஏறின இயேசு கிறிஸ்து இன்னமும், இந்த நேரத்திலும் தொடர்ந்து நமக்காக ஜெபம் பண்ணிக் கொண்டு நம்மீதுள்ள அக்கறையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இயேசுவைப் பின்பற்றி நாமும் நம்மைச் சுற்றியுள்ள மக்களை நேசித்து, தேவன் அவர்களுக்கு உதவும்படியாகவும், அவர்கள் வாழ்வில் செயல்படும்படியாகவும் அவர்களுக்காக ஜெபிக்க அழைக்கப்படுகின்றோம். அவர் அப்படியே செய்வார். நம்முடைய அன்பின் தேவன் நம்மை பெலப்படுத்தி, நாம் தாராளமாக நம்முடைய வரமாகிய ஜெபத்தை அவர்களுக்குக் கொடுக்கும்படி செய்வாராக.
தேவனுக்கு விலையேறப் பெற்றவர்கள்
அவருடைய பெயர் டேவிட். ஆனால் அநேகர் அவரை தெரு வயலின்காரர் எனக் கூப்பிடுவதுண்டு. டேவிட் ஒரு வயோதிபர், எப்பொழுதும் பரட்டைத் தலையோடு எங்கள் பட்டணத்தின் பிரபல இடங்களில், வழக்கமாக தன்னுடைய வயலின் மீட்டும் திறமையினால் கடந்து செல்வோரை கவரும் ஓர் இசைக் கலைஞன். அவருடைய இசைக்குப் பதிலாக அப்பகுதியைக் கடந்து செல்வோர் ஒரு சில ருபாய்களை, நடைபாதையில் திறந்து வைக்கப்பட்டிருக்கும் அவருடைய வயலின் பெட்டியில் போடுவர். டேவிட் புன்னகையோடு தன் தலையைத் தாழ்த்தி நன்றி தெரிவித்து விட்டு, தன்னுடைய இசையைத் தொடர்வார்.
சமீப காலத்தில் டேவிட் மரித்து விட்டார். அவருடைய இரங்கல் செய்தி அங்குள்ள நாளேட்டில் வந்திருந்தது. அதில், அவர் அநேக மொழிகளைப் பேசுபவரெனவும், ஒரு புகழ் பெற்ற பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றவரெனவும், அந்த தேச செனட்டிற்காக பல ஆண்டுகளுக்கு முன் போட்டியிட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவருடைய வெளித் தோற்றத்தை வைத்து அவரை மதிப்பிட்ட சிலர் அவருடைய சாதனைகளைக் கேட்டு, தங்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
‘‘தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார்” (ஆதி. 1:27) என வேதாகமம் சொல்லுகிறது. இது நாம் நமக்குள்ளாகவே ஒரு மதிப்பைக்கொண்டுள்ளோம் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த மதிப்பு நம்முடைய வெளிப்புற தோற்றத்தையோ, நாம் எதை அடைந்துள்ளோம் என்பதையோ, அல்லது பிறர் நம்மைக் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதையோ பொருத்ததல்ல. நாம் பாவத்தில் சிக்குண்டு தேவனை விட்டு விலகினாலும், தேவன் நம்மை மிகவும் நேசித்து, மதித்து அவருடைய ஒரே பேரான சொந்தக் குமாரனை அனுப்பி, இரட்சிப்பை பெற்றுக் கொள்ளவும், அவரோடு நித்தியத்தில் வாழவும் வழியைக் காட்டினார்.
நாம் தேவனால் நேசிக்கப்படுகிறோம். நம்மைச் சுற்றியுள்ளவர்களும் அவருக்கு விலையேறப் பெற்றவர்கள். நாம் நம்முடைய அன்பை பிறரோடு பகிர்ந்து, நாம் தேவன் மீது வைத்துள்ள அன்பைக் காட்டுவோம்.
வல்லமைக்குள் ஓடுதல்
நான் உயர்நிலைப்பள்ளியில் பயின்ற போது, வாள் சண்டை பயிற்சி எடுத்துக் கொண்டேன். என்னுடைய பயிற்சியாளர் எனக்கெதிராக வரும் அசைவுகளுக்குகந்த பாதுகாப்பு நிலையை கத்திச் சொல்வார் (பாரி). அவர் தன்னுடைய கருவியை நீட்டி அந்த தாக்குதலை எதிர்க்கும்படி கத்திச் சொல்லும்போது நான் அதனை கவனித்து உடனடியாகச் செயல்பட வேண்டும்.
இப்படி கவனித்து, உடனடியாகச் செயல்படுகின்ற மனதை, உடனடி கீழ்ப்படிதலை, வேதாகமம் பாலியல் சோதனைகள் வரும்போது பயன்படுத்தச் சொல்லுகிறது 1 கொரி. 6:18ல் பவுல் விசுவாசிகளுக்கு, வேசிகளிடமிருந்து விலகியிருக்கும்படி போதித்து வேசித்தனத்துக்கு விலகியோடுங்கள் என்று குறிப்பிடுகிறார். சில வேளைகளில் நாமும் சவால் நிறைந்த சந்தர்ப்பங்களில் “உறுதியாக நிற்கும்படி” அறிவுறுத்தப்படுகிறோம் (கலா. 5:1, எபே. 6:11). நம்மைப் பாதுகாத்துக் கொள்ள சிறந்த வழியாக, வேதாகமம் “விலகி ஓடு” என வலியுறுத்திக் கூறுகிறது.
உடனடி செயல் நம்மை சமரசம் செய்து கொள்வதிலிருந்து காத்துக் கொள்கிறது. சிறிய சமரசங்கள் பேரழிவை உண்டாக்கும் தோல்விகளுக்கு வழி வகுக்கும். ஒரு கட்டுப்படுத்த முடியாத சிந்தனை, வலைதளங்களில் தவறான இடத்திற்குச் செல்லும் பார்வை, திருமணமான பின்பும் நண்பர்களோடு சுற்றுதல் ஆகிய இவைகள் நாம் செல்லக் கூடாத வழிகளுக்கு நம்மை இழுத்துச் சென்று, நம்மை தேவனை விட்டுப் பிரிக்கின்றன.
நாம் சபலங்களுக்கு விலகியோடும் போது நாம் ஓடிச் சேர, தேவன் ஓர் இடத்தைத் தருகிறார். நம்முடைய பாவங்களுக்காக இயேசு சிலுவையில் தம்மையே பலியாக்கினதின் மூலம், அவர் நமக்கு நம்பிக்கையையும், மன்னிப்பையும், புதிய துவக்கத்தையும் தருகிறார். நாம் எங்கிருந்தாலும், என்ன செய்திருந்தாலும் அவர் நம்மை ஏற்றுக் கொள்கிறார். நம் பெலவீனங்களில், நாம் இயேசுவிடம் செல்லும்போது அவர் நம்மை விடுவித்து அவருடைய பெலத்தினால் வாழ வழி வகுக்கிறார்.
மெய்யான நம்பிக்கை
சில நாட்களுக்கு முன்பு நான் எனது நண்பனோடு எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தைப் பார்வையிடச் சென்றிருந்தேன். அங்கு பார்வையிட வந்தோரின் வரிசை, குறைவாகவே காணப்பட்டது. ஆனால், அக்கட்டிடத்தின் உள்ளே சென்றபின் அந்த நுழைவு வராண்டா, படிக்கட்டு, அதன் வழியேயுள்ள மற்றொரு அறை அனைத்திலும் இருந்த நீண்ட வரிசை மக்களைக் கண்டோம். ஒவ்வொரு புதிய திருப்பமும் நாங்கள் இன்னமும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டியுள்ளது என்பதைத் தெரிவித்தது.
கவர்ச்சிகரமானவற்றிலும், கருத்து பூங்காக்களிலும் மக்கள் வரிசை சிறிதாக தோன்றும்படி கவனமாக வழியை அமைக்கின்றனர். எனினும் நாங்கள் “கட்டிடத்தின் திருப்பத்தை” அடைந்தபோது ஏமாற்றங்களையே சந்தித்தோம்.
சில வேளைகளில் வாழ்க்கையில் ஏமாற்றங்கள் மிகவும் கடுமையாக இருக்கலாம். நாம் எதிர்பார்க்கும் வேலை கைக்கூடவில்லை, நாம் நம்பிய நண்பர்கள் ஏமாற்றிவிட்டனர், நாம் ஏங்கிய வாழ்க்கைத் துணை அமையவில்லை. இத்தனை இதய நொறுங்குதலிலும் தேவனுடைய வார்த்தைகள், அவர் மீதுள்ள நம்பிக்கையைப் பற்றி ஒரு புதிய உண்மையைப் பேசுகின்றது, அப்போஸ்தலனாகிய பவுல், “உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து உபத்திரவங்களிலேயும் மேன்மை பாராட்டுகின்றோம், மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது” (ரோம. 5:3-5) என எழுதுகிறோம்.
நாம் நமது நம்பிக்கையை தேவன் மீது வைக்கும் போது, எத்தனை தடைகளை நாம் சந்தித்தாலும் அவருடைய ஆவியானவர் மூலம், நாம் அவரால் நிபந்தனையற்று நேசிக்கப்படுகிறோம், ஒரு நாள் நாமும் அவரோடு கூட வாழ்வோம் என்ற உண்மையைப் பேசுகின்றார். நமக்கு அடிக்கடி ஏமாற்றத்தையே தருகின்ற இந்த உலகில் தேவன் நமக்கு உண்மையான நம்பிக்கையைத் தந்திருக்கிறார் என்பது எத்தனை நலமானது.
கடைசியில் இருப்பது முதன்மையாகிறது
சமீப காலத்தில் நான் விமான பயணிகளின், முன் பதிவு எண் இல்லாதோரின் வரிசையில் கடைசியாக நின்றுகொண்டிருந்தேன். விமான இறக்கையின் அருகில் அமைந்த மத்திய வரிசையில் ஒரு இருக்கையை கண்டுபிடித்தேன். ஆனால், எனது கைப் பையை வைப்பதற்கு கடைசி வரிசையின் மேலுள்ள விரிவில்தான் இடம் இருந்தது. அப்படியானால் நான் அனைவரும் வெளியேறும் மட்டும் காத்திருந்து, கடைசியில் தான் எனது கைப்பையை எடுக்கமுடியும்.
நான் எனக்குள்ளாக சிரித்துக் கொண்டே என் இருக்கையில் அமர்ந்தேன். அப்பொழுது “நீ காத்திருக்க வேண்டிய நேரம் உன்னை துக்கப்படுத்தாது அது உனக்கு நன்மையே செய்யும்” என்ற தேவனுடைய வார்த்தை எனக்குள்ளே தோன்றியது. எனவே விமானம் தரையிறங்கியதும், மிஞ்சிய நேரத்தை மகிழ்ச்சியாக்கிக்கொள்ள நான் தீர்மானித்து, சக பயணிகளின் உடைமைகளை கீழே இறக்குவதற்கும், விமான பணியாளரோடு சேர்ந்து சுத்தப்படுத்தவும் ஆரம்பித்தேன். சக பயணி ஒருவர் என்னை விமான பணியாளர் என்று எண்ணியபோது நான் மறுபடியும் சிரித்து கொண்டேன். வேளை வந்தபோது என் பையை எடுத்துக் கொண்டு இறங்கினேன்.
அந்த நாளின் அநுபவம் இயேசு தன் சீடர்களிடம் கூறிய வார்த்தையை நினைவுபடுத்தியது. “எவனாகிலும் முதல்வனாயிருக்க விரும்பினால் அவன் எல்லாருக்கும் கடையானவனும், எல்லாருக்கும் ஊழியக்காரனுமாயிருக்கக்கடவன்” (மாற். 9:35).
நான் காத்திருக்க வேண்டிய அவசியமானதால் காத்திருந்தேன். ஆனால், மற்றவர்களுக்கு ஊழியம் செய்யும்படி தங்களை வலிய ஈடுபடுத்திக் கொள்ளுபவர்களுக்கு, ‘கீழானவற்றை மேலாக்கும்’ தேவனுடைய ராஜ்ஜியத்தில் கனமுள்ள ஓர் இடமுண்டு.
‘நான் தான் முதல்” என முந்திக் கொள்ளும் இந்த அவசர உலகில் “இயேசுவும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்” (மத். 20:28).
நாம் பிறருக்கு ஊழியம் செய்தலே தேவனுக்குச் செய்யும் சிறந்த ஊழியமாம். நாம் எவ்வளவு தூரம் நம்மைத் தாழ்த்துகிறோமோ அவ்வளவு தூரம் நாம் தேவனை நெருங்குகிறோம்.
ஒளிந்து பிடித்து விளையாடுதல்
“உன்னால் என்னைப் பார்க்க முடியாது!”
சிறு பிள்ளைகள் ஒளிந்து பிடித்து விளையாடும்பொழுது, தங்கள் கண்களை மூடிக்கொண்டு, தாங்கள் ஒளிந்திருப்பதாக நினைத்துக்கொள்வார்கள். அவர்களால் உங்களைக்காண முடியாததினாலே, நீங்களும் அவர்களைக் காண முடியாதென்று நினைத்துக்கொள்வார்கள்.
பெரியவர்களுக்கு, அது ஞானமற்றதாகத் தோன்றினாலும், நாமும் இதைப்போன்ற செயலையே தேவனிடமும் செய்கிறோம். தகாததொன்றைச் செய்ய நாம் விருப்பப்படும்பொழுது, நாம் தேவன் இதைப்பார்க்கமாட்டாரென்று நினைத்துக் கொண்டு, நம் விருப்பத்தை நிறைவேற்றுகிறோம்.
பாபிலோனில் அடிமைகளாக இருந்த தமது ஜனத்திற்கு சொல்லும்படி, எசேக்கியேலுக்குத் தேவன் கொடுத்த தரிசனத்திலிருந்து இந்த உண்மையை எசேக்கியேல் அறிந்து கொண்டான். “அப்பொழுது அவர் என்னை நோக்கி மனு புத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பர்கள் அந்தகாரத்தில் அவரவர் தங்கள் விக்கிரகங்களின் விசித்திரவிநோத அறைகளில் செய்கிறதை நீ கண்டாயா? கர்த்தர் எங்களைப் பார்க்கிறதில்லை; கர்த்தர் தேசத்தைக் கைவிட்டார் என்று சொல்லுகிறார்களே என்றார்” (எசே. 8:12).
ஆனால், தேவன் ஒன்றையும் கவனியாமல் விடுவதில்லை. எசேக்கியாவின் தரிசனம் இதற்கு ஓர் சிறந்த உதாரணம். அவர்கள் பாவம் செய்திருந்தாலும், பாவ அறிக்கை செய்தவர்களுக்கு ஒரு புது வாக்குத்தத்தம் கொடுத்தார். “உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிடுவேன்” என்றார் (எசே. 36:25).
நாம் பாவத்தினால் சிதைக்கப்பட்டு, அவருக்கு விரோதமாகக் கலகம் பண்ணினாலும் நமது பாவத்திற்கான தண்டனையை தமது மனதுருக்கத்தாலே, சிலுவையில் ஏற்றுக்கொண்டு, இறுதியாக விலைக்கிரயம் செய்து முடித்தார். இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நமக்கு புதுவாழ்வு தந்ததுமன்றி, நமக்குள்ளே கிரியை செய்து அவரைப் பின்பற்றும் பொழுது நமது இருதயத்தை மாற்றுகிறார். தேவன் எவ்வளவு நல்லவர் நாம் வழிவிலகி பாவத்தில் மறைந்துகிடந்தபோது, தேவன் கிறிஸ்து மூலம் தம்மண்டை நம்மை சேர்த்துக்கொண்டார். “இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்” (லூக். 19:10; ரோமர் 5:8).
நமது ஜெபமும் தேவனுடைய வேளையும்
சில வேளைகளில் நம்முடைய ஜெபங்களுக்குப் பதிலளிக்க தேவன் காலம் தாழ்த்துகிறார். அதை விளங்கிக்கொள்வது நமக்கு எப்பொழுதுமே எளிதல்ல.
அதுவே ஆசாரியனாகிய சகரியாவுக்கு ஏற்பட்டிருந்த சூழ்நிலையாகும். எருசலேம் தேவாலயத்து பலிபீடத்தினருகில் ஒருநாள் காபிரியேல் எனும் தூதன் சகரியாவிற்குக் காட்சி அளித்தார். காபிரியேல் சகரியாவை நோக்கி, “சகரியாவே பயப்படாதே; உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப்பெறுவாள் அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக” என்றான் (லூக். 1:13).
ஆனால், சகரியா ஒரு குழந்தைக்காக தேவனிடத்தில் விண்ணப்பம் செய்து பல ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்பொழுதோ, எலிசபெத்து பின்ளைபெறுகிற வயதைத் தாண்டிவிட்டாள். அதனால் சகரியா காபிரியேலின் செய்தியை நம்பமுடியாமல் குழம்பினான், கலங்கினான். ஆனாலும் தேவன் அவன் விண்ணப்பத்திற்குப் பதிலளித்தார்.
தேவனுடைய நினைவாற்றல் பரிபூரணமானது. தேவன் பல ஆண்டுகள் கடந்து மட்டுமல்ல, நமது ஆயுசு நாட்கருதி பல தலைமுறைகள் கடந்தாலும் நமது விண்ணப்பத்தை நினைவுகூர வல்லவர். அவர் நம் வேண்டுதலை நிறைவேற்ற காலம் தாழ்த்தினாலும் ஒருபோதும் அதை மறப்பதேயில்லை. சில வேளைகளில் அவருடைய பதில் ‘இல்லை’ என்றிருக்கலாம் அல்லது ‘காத்திரு’ என்றிருக்கலாம். ஆனால், எந்த பதிலும் அன்பின் அடிப்படையிலேயே இருக்கும். அவருடைய வழிகள் நமக்கு விளங்காமலிருக்கலாம்; ஆனால், அது நன்மைக்கேதுவானது என்று நாம் அதை நம்பலாம்.
சகரியா இதைக் அறிந்திருந்தான். அவர் ஒரு மகனைத்தான் கேட்டான். ஆனால் தேவன் அவன் கேட்டதற்கும் மேலானதைக் கொடுத்தார். அவனுடைய மகன் யோவான் வளர்ந்து மேசியாவின் வருகையை அறிவிக்கும் தீர்க்கதரிசியானான். சகரியாவின் அனுபவம் ஒரு முக்கிய சத்தியத்தை வலியுறுத்தி நம்மை ஜெபம் பண்ண உற்சாகப்படுத்துகிறது.
தேவனுடைய வேளை அநேகமாக நம்முடைய வேளையாயிராது; என்றாலும் அதற்குக் காத்திருப்பது நல்லது.