சாக்லேட் நிறம்கொண்ட என்னுடைய லாப்ராடர் நாய்க்குட்டிக்கு மூன்று மாதம் இருக்கையில், தடுப்புஊசி போடுவதற்கும் மருத்துவ பரிசோதனை செய்வதற்கும் நான் அதை ஒரு கால்நடை மருத்துவரிடம் அழைத்துசென்றேன். மருத்துவர் கவனமாக பரிசோதிக்கும்போது, அதன் இடது பாதத்திலிருந்த மென்மயிரின் மேல் சிறு வெள்ளைப் பகுதி ஒன்று காணப்பட்டது. அந்த மருத்துவர் புன்முறுத்துகொண்டு சொன்னது, “சாக்லேட்டில் உன்னை முக்கி எடுக்கும்வேளையில் தேவன் அந்த இடத்தில் உன்னை பிடித்திருப்பார்போல்” என்றார்.

அதைக்கேட்ட நானும் புன்முறுத்தேன். ஆனாலும், அவர்கள் அறியாமலேயே, தேவன் தம் ஒவ்வொரு சிருஷ்டிப்பின்மீதும் தனிப்பட்ட ஆர்வம் எடுக்கிறவராய் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்தியது.

மத்தேயு 10:30-ல் இயேசு சொல்கிறார், “உன் தலையில் உள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டுள்ளது”. தேவன் எவ்வளவு பெரியவராக இருந்தும் நம்முடைய வாழ்க்கையின் நுணுக்கமான பகுதிகளிலும் அவர் அளவில்லா ஆர்வம் காட்டுகிறார். எந்தவொரு சின்ன விஷயமாக இருந்தாலும் சரி, அது அவருடைய கவனத்திலிருந்து தப்பமுடியாது, அவர் முன் கொண்டுவர தகுதியல்லாத அற்ப பிரச்சனைதான் என்று எதுவும் இல்லை. அவர் அவ்வளவாய் அக்கறை காட்டுகிறார்!

தேவன் நம்மை சிருஷ்டித்தவர் மாத்திரமல்ல; அவர் நம்மை போஷிக்கிறவரும்கூட ஒவ்வொரு நொடியும் அவர் நம்மை காக்கிறவராய் உள்ளார். சிலவேளைகளில் நாம், “பிசாசு என் எல்லாக் காரியங்களையும் அறிந்து செயல்படுகிறான்” என்று சொல்வதுண்டு. ஆனாலும், தேவன் எல்லாவற்றிலும் இருக்கிறார், நாம் கவனிக்கத் தவறிய காரியங்களையும் அவர் கவனிக்கத் தவறுவதில்லை. சம்பூரண ஞானமும் அன்பும் கொண்ட நம் பரமபிதா நம்மை – மற்ற எல்லா சிருஷ்டிப்புகளுடன் – அவருடைய பரிவான, பலமுள்ள கரங்களில் எப்படித் தாங்குகிறார் என்பதை அறிவது எவ்வளவாய் நம்மை தேற்றுகிறது?