எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஜேம்ஸ் பேங்க்ஸ்கட்டுரைகள்

ஆழ்ந்த அன்பு

எட்வின் ஸ்டான்டன் முதன் முறையாக அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லின்கனைத் தனிப்பட்ட முறையிலும், தன் பணியினிமித்தமும் சந்தித்த போது அவரிடம் தரக் குறைவாக நடந்து கொண்டார். அவரைக் குறித்து, "நீண்ட பற்கள் கொண்ட உயிரினம்" எனவும் குறிப்பிட்டார். ஆனால், லின்கன் ஸ்டான்டனின் திறமையைப் பாராட்டியதோடு அவரை மன்னிக்கவும் செய்தார். அதோடல்லாமல் ஓர் உள்நாட்டு போரின் போது, ஸ்டான்டனை முக்கிய கேபினெட் உறுப்பினராக பதவியுர்வளித்தார். பிற்பாடு ஸ்டான்டன், லின்கனை ஒரு நண்பனாக ஏற்றுக் கொண்டு அன்பு செய்தார். போர்ட் அரங்கில் ஜனாதிபதி சுடப்பட்டபோது, அன்றிரவு முழுவதும் லின்கனின் படுக்கையருகிலேயே அமர்ந்திருந்த ஸ்டான்டன், அவர் மரித்த போது கண்ணீரோடு, 'இப்பொழுது அவர் தலைமுறைகளுக்குச் சொந்தமாவார்" எனக் கூறினார்.

ஒப்புரவாதல் என்பது ஓர் அழகிய காரியம். அப்போஸ்தலனாகிய பேதுரு, இயேசுவைப் பின் பற்றுகின்றவர்களுக்கு எழுதும் போது, ''எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்" (1 பேது. 4:8) என்கின்றார். இந்த வார்த்தைகளின் மூலம், பேதுரு இயேசுகிறிஸ்துவை மறுதலித்ததையும் (லூக். 22:54-62) பின்னர் அவர் (நாமும்) சிலுவையின் வழியே இயேசுவின் மன்னிப்பைப் பெற்றுக்கொண்டதையும் நினைத்து அதிசயித்தேன்.

இயேசு தன்னுடைய மரனத்தின் மூலம் வெளிப்படுத்தின ஆழந்த அன்பு நம்மை நம்முடைய பாவங்களிலிருந்து விடுதலையளித்து, தேவனோடு ஒப்புரவாகும்படி வழியைத் திறந்து கொடுத்தது (கொலோ. 1:19-20). அவருடைய மன்னிக்கும் சிந்தை நாமும் பிறரை மன்னிக்கும்படி பெலனளிக்கின்றது. ஏனெனில் பிறரை மன்னிப்பது நம்முடைய சொந்த முயற்சியால் முடியாதகாரியம். அவரே நமக்கு மன்னிக்கும் சிந்தையைத் தரும்படி நாம் அவரிடம் கேட்க வேண்டும். நாம் பிறரை நேசிக்கின்றோம், ஏனெனில் நமது இரட்சகர் அனைவரையும் நேசிக்கின்றார். நாம் பிறரை மன்னிக்க முடிகின்றது, ஏனெனில் அவர் நம்மை மன்னிக்கின்றார். பின்னானவைகளைக் கடந்து, முன்னோக்கி அவரோடு நடந்து புதிய, அழகிய கிருபாசனத்தண்டையில் சேர தேவன் நமக்கு பெலனளிக்கின்றார்.

நம்பிக்கையே உறுதியான அஸ்திபாரம்

விசுவாசத்தைக் குறித்துப் பாடங்களை நாம் எதிர்பாராத இடங்களிலிருந்தும் கற்றுக் கொள்ளலாம். சமீபத்தில் நான் எனது 110 பவுண்டு எடையுள்ள, கருப்பு நிற, “கரடி” (டீநயச) என்று நான் பெயரிட்டுள்ள, லேப்ரடார் வகை நாயிடமிருந்து ஒரு பாடம் கற்றுக் கொண்டேன். தண்ணீர் குடிக்கும் பெரிய, உலோகப் பாத்திரம் சமையலறையில் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருக்கும். எப்பொழுதெல்லாம் அது காலியாகின்றதோ அப்பொழுதெல்லாம் அது குரைப்பதோ, தன் பாதங்களால் அதைச் சுரண்டுவதோ கிடையாது. ஆனால், அதனருகில் அமைதியாகப் படுத்து, காத்திருக்கும். சில நேரங்களில் நீண்ட நேரம் வரைக் கூட காத்திருக்க நேரிடும். ஆனால், கரடி நம்பிக்கையோடிருக்கக் கற்றுக்கொண்டது. நான் எப்படியும் அந்த அறைக்குள் வருவேன், அதனை அங்கு பார்த்து, அதற்குத் தேவையானவற்றைத் தருவேன் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும். அது என் மீது வைத்துள்ள அந்த விசுவாசம், என்னையும் என்னுடைய தேவைகளுக்காக தேவன் மீது நம்பிக்கையோடு காத்திருக்கக் கற்றுக் கொடுத்தது.

“விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது" (எபி. 11:1) என வேதாகமம் நமக்குக் கற்றுத் தருகிறது. இந்த நம்பிக்கை மற்றும் உறுதியான அஸ்திபாரம் தேவனே. அவர் “தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும்" காண்கின்றோம். இயேசுவின் மூலம் தம்மிடத்தில் விசுவாசமாயிருக்கிறவர்களுக்கு, தேவன் தாம் வாக்களித்துள்ளவற்றை நிறைவேற்ற உண்மையுள்ளவராயிருக்கிறார்.

சில வேளைகளில் நாம் காணாதவைகளின் மீது விசுவாசமாயிருப்பது எளிதாகத் தோன்றாது. ஆனால். நாம் தேவனுடைய நன்மையின் மீதும் அன்பின் மீதும் அமர்ந்திருந்து, அவருடைய ஞானம் எல்லாவற்றிலும் பூரணமாய் விளங்கும் என்பதை நம்பி காத்திருக்க வேண்டும். அவர் சொன்னதை நிறைவேற்ற உண்மையுள்ளவராயிருக்கிறார். நம்முடைய அழிவில்லாத ஆன்மாவைக் காப்பாற்றவும், நம்முடைய அனைத்து தேவைகளையும் இப்பவும், எப்பவும் சந்திக்கவும் அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்.

எல்லாம் புதிதாயின

பயனற்ற பொருட்களைக் குவிக்குமிடங்களைப் பார்வையிடுவது எனக்கு மிகவும் ஆர்வமான ஒன்று. கார்களில் வேலைசெய்வதை தான் விரும்புவேன். எனவே, எங்கள் வீட்டினருகிலுள்ள அத்தகைய ஓரிடத்திற்கு அடிக்கடி செல்வதுண்டு, அது ஒரு தனிமையான இடம். அங்குள்ள கைவிடப்பட்ட கப்பல்களினூடே காற்று ஊளையிடும். ஆவை ஒரு காலத்தில், போர் காலங்களில்யாரோ ஒருவரிடமிருந்து, கடலில் பிடிக்கப்பட்டவை. சில உடைந்து போயிருந்தன, சில பழையதாயிருந்தன, சில நன்கு பயன்பட்டு, காலம் தாண்டிக் கிடந்தன. அவற்றின் வரிசையினூடே நான் நடந்து செல்லும்போது, சில வேளைகளில் ஒரு கார் என் கண்னணக் கவரும். நான் அவற்றைக் குறித்து ஆச்சரியப்பட்டு, அவை நன்கு ஓடிக்கொண்டிருந்த நாட்களில், அவை நிறைவேற்றியிருக்கும் சாதனைகளை எண்ணிப்பார்ப்பேன். பழங்காலத்தைக் காணத்திறக்கும் கதவுபோல நின்று ஒவ்வொன்றும் ஒரு கதையைத் கூறும். புதிய ரகங்களின் மீது மோகங்கொண்ட மனிதர்களைப் பற்றியும் தெரிய வருவதால், அது ஒரு நேரப் போக்கிற்கான இடம் என்றே கூறலாம்.

ஆனால், நான், சிறப்பாக ஒரு பழைய வாகனத்தின் பகுதிக்கு புதுவாழ்வு கொடுப்பதில் இன்பம் காண்பவன். புறக்கணிக்கப்பட்ட ஏதோவொன்றை எடுத்து, அதை ஒரு மீட்கப்பட்ட வாகனத்தில் பொருத்தி, அதற்கு ஒரு புதிய வடிவம் கொடுத்து காலத்தின் மேலும் அழிவின் மேலும் ஒரு வெற்றியைக் கண்டதாக உணர்வேன்.

வேதாகமத்தின் கடைசிபகுதியில் இயேசு கூறிய வார்த்தைகளை நான்; சில வேளைகளில் நினைத்துக் கொள்வேன். “இதோ நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்” (வெளி. 21:5). இந்த வார்த்தைகள், தேவன் தம் படைப்புகளை புதிப்பிக்கின்றதைக் குறிக்கும். அது விசுவாசிகளையும் குறிக்கும். ஏற்கனவே இயேசுவை ஏற்றுக் கொண்ட அனைவருமே அவருக்குள் “புது சிருஷ்டிகள்” (2 கொரி. 5:17).

ஒரு நாள் நாம் நமக்கு வாக்களிக்கப்ட்டுள்ள முடிவில்லா நாட்களுக்குள் என்றும் அவரோடு வாழும்படி செல்வோம் (யோவா. 14:3) அங்கு மூப்பு, வியாதியும் யாரையும் சாவுக்குள்ளாக்க முடியாது. நாம் அங்கு நித்திய வாழ்வாகிய சாதனையைத் தொடரலாம். நாம் சொல்ல வேண்டிய கதை என்னவுள்ளது? அதுதான் நமது இரட்சகரின் விடுவிக்கும் அன்பைப் பற்றிய கதையும், என்றும் நிலைத்திருக்கும் அவருடைய உண்மையைப்பற்றிய கதையுமேயாகும்.

இத்தருணத்தின் ஆண்டவர்

சில மாதங்களுக்கு முன், மூன்று மணி நேர பயண தூரத்தில் இருக்கும் என் மகன் வீட்டில் ஒரு கட்டட வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். நினைத்ததை விட அந்த வேலை முடிய அதிக நாட்கள் ஆயிற்று. ஒவ்வொரு நாள் காலையிலும், அன்று மாலை முடித்துவிட வேண்டும் என்று ஜெபித்தேன். ஆனால், ஒவ்வொரு நாள் மாலையிலும், முடிவடையாத வேலைகள் இருந்தன.

ஏன் என்று யோசித்தேன். தாமதம் ஆவதற்கு ஏதேனும் காரணம் இருக்குமா என்று யோசித்தேன். அதற்கான விடை அடுத்த நாள் காலையில் கிடைத்தது. காலையில் வேலைக்கான உபகரணத்தை எடுக்கும்போது, என் தொலைபேசி ஒலித்தது. தெரியாத நபர் “உங்கள் மகள் ஒரு விபத்தில் அடிபட்டிருக்கிறாள். நீங்கள் உடனே வரவேண்டும்” என்றார்.

அவள் வீடு என் மகன் வீட்டுக்கு அருகிலேயே இருந்தது. அதனால் பதினான்கு நிமிடங்களில் அவள் அருகில் இருந்தேன். நான் என் வீட்டில் இருந்திருந்தால், வந்து சேர மூன்று மணி நேரம் ஆகியிருக்கும். நான் மருத்துவ ஊர்தியின் பின்னாலேயே சென்று, அறுவை சிகிச்சைக்கு முன் அவளுக்கு ஆறுதல் கூறினேன். ஆறுதலாக அவள் கையைப் பிடித்து அமர்ந்திருந்த வேளையில், அந்த கட்டட வேலை தாமதம் ஆகாதிருந்தால், என்னால் அவளோடு இருந்திருக்க முடியாது என்று உணர்ந்தேன்.

நம் தருணங்கள் தேவனுக்குச் சொந்தமானவை. எலிசாவின்மூலம் ஆண்டவர் உயிர்ப்பித்த சிறுவனின் தாயின் அனுபவமும் இதைப்போன்றதே (2 ராஜாக்கள் 4:18-37). பஞ்சத்தின் காரணமாக நாட்டை விட்டுச் சென்ற அவள், ராஜாவிடம் தன் நிலத்தைக் கேட்க, பல வருடங்களுக்குப் பிறகு திரும்பி வந்தாள். அதே நேரத்தில், தீர்க்கதரிசியின் பணியாள் கேயாசியோடு ராஜா பேசிக்கொண்டிருந்தார். “செத்துப் போனவனை (எலிசா) உயிர்ப்பித்தார் என்பதை அவன் ராஜாவுக்கு அறிவிக்கிறபோது,” எலிசா உயிர்ப்பித்த பிள்ளையின் தாய் உள்ளே வந்தாள் (8:5). அவள் வேண்டுதல் கேட்கப்பட்டது.

அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் எந்த சூழ்நிலையையும் நன்மைக்காக பயன்படுத்த கர்த்தர் வல்லவராக இருக்கிறார். கர்த்தர் இன்று நமக்கு முன்குறித்திருக்கும் வேலைகளுக்கு, அவரோடு நடக்க கிருபை செய்வாராக.

ஓட்டுவது யார்?

மோரிஸ் சென்டாக் எழுதிய காட்டுத்தனமான பொருட்கள் இருக்கும் இடத்தில் என்று பொருள்படக்கூடிய (Where the Wild Things are) குழந்தைகள் கதை புத்தகத்தில் வருவதைப்போல் “காட்டுத்தனமான பொருள்” ஒன்றை என் பக்கத்து வீட்டுக்காரர் டிம் தன் காரில் வைத்திருக்கிறார்.

ஒரு நாள் சாலையில் என் பின்னால் தன் காரில் வந்துகொண்டிருந்த டிம் திடீரென்று காரை வளைத்து ஓட்டினார். காரை விட்டு இறங்கியபோது “’காட்டுத்தனமான பொருள்’தான் வண்டி ஓட்டியதோ?” என்று கேட்டேன்.

அதற்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமை, என் பிரசங்கக் குறிப்புகளை வீட்டில் மறந்து வைத்துவிட்டேன். எனவே அதை எடுப்பதற்காக வீட்டிற்கு காரில் ‘பறந்து’ சென்றேன். வழியில் டிம்மின் கார் எதிர்திசையில் என்னைக் கடந்து சென்றது. பின்னர் நாங்கள் சந்தித்தபோது, என் வேகத்தைப் பற்றி குறிப்பிடும் விதமாக “’காட்டுத்தனமான பொருள்’தான் வண்டி ஓட்டியதோ?” என்று கிண்டல் செய்தார். நாங்கள் சிரித்தாலும், நான் வேக வரம்பை கவனிக்கவில்லை என்பதை அவர் சொன்னது எனக்கு என் தவறை உணர்த்தியது.

தேவனுடனான உறவில் நாம் வாழ்வதைப்பற்றி விவரிக்கும் வேதாகமம், “உங்கள் அவயவங்களை தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்” என்று நம் ஒவ்வொரு அம்சத்தையும் ஒப்புக்கொடுக்க ஊக்குவிக்கிறது (ரோம. 6:13). அன்போடு என்னை முழுமையாக ஒப்புக்கொடுக்கவேண்டும் என்பதால், டிம் என்னிடம் கூறியதை, வேகமாக கார் ஓட்டும் பழக்கத்தை ஒப்புக்கொடுக்க தேவன் எனக்கு நினைவுபடுத்தியதாக எடுத்துக்கொண்டேன்.

“ஓட்டுவது யார்?” என்ற கேள்வி வாழ்வின் அனைத்து அம்சங்களுக்கும் பொருந்தும். கவலை, பயம், சுய சித்தம் போன்ற பழைய “காட்டுத்தனமான பண்புகள்” நம்மை இயக்குகின்றனவா? அல்லது நாம் வளர உதவும் பரிசுத்த ஆவியின் அன்புக்கும், கிருபைக்கும் நம்மை ஒப்புக்கொடுக்கிறோமா?

தேவனிடம் ஒப்புக்கொடுப்பது நமக்கு நல்லது. தேவனின் ஞானம் நம்மை “இனிதான வழிகளிலும், சமாதானமான பாதைகளிலும்” அழைத்துச் செல்வதாக வேதாகமம் கூறுகிறது (நீதி. 3:17). அவர் வழிநடத்தும் பாதையில் செல்வதே நல்லது.

என் சித்தம் அல்ல, உம் சித்தம்

கமில், ஜோயெல் தம்பதியின் எட்டு வயது மகள் ரீமா ஒரு அரிய வகை இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்று தெரிந்தபோது அவர்கள் உள்ளம் உடைந்துபோனார்கள். இந்த புற்றுநோயின் காரணமாக, ரீமாவுக்கு மூளைக்காய்ச்சல் வந்து, பின்னர் பக்கவாதம் வந்து, இறுதியில் கோமா என்ற ஆழ்மயக்க நிலைக்குச் சென்றாள். மருத்துவமனையில் அவளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவக் குழு, அவள் பெற்றோருக்கு ஆலோசனை வழங்கி, அவள் பிழைப்பதற்கான சாத்தியம் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவு என்று சொல்லி, ரீமாவின் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்யுமாறு கூறினார்கள்.

கமிலும், ஜோயெலும் ஒரு அற்புதத்திற்காக உபவாசம் இருந்து ஜெபம் செய்தார்கள். “முடிவு எதுவாக இருந்தாலும், நாம் கடவுள்மேல் நம்பிக்கை கொள்ளவேண்டும். மேலும் ‘என் சித்தமல்ல, உம் சித்தம்’ என்று இயேசுவைப்போல ஜெபிக்கவேண்டும்” என்று கமில் சொன்னார். “ஆனால் கடவுள் அவளை சுகப்படுத்த வேண்டும் என்றே நான் மிகவும் வாஞ்சிக்கிறேன்” என்று ஜோயெல் கூறினார். “ஆம்! நாம் கேட்போம். ஆனால் இயேசு செய்ததுபோல, நம்மை முழுவதுமாக ஒப்புக்கொடுப்பது மிகவும் கடினம் என்றாலும், அப்படிச் செய்வதே கடவுளை கனம்பண்ணுவதாகும்” என்று கமில் கூறினார்.

சிலுவையில் அறையப்படும் முன், “பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படிசெய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்” (லூக்கா 22:42). “இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படிசெய்யும்” என்று ஜெபித்ததால், சிலுவையில் அறையப்பட வேண்டாம் என்றார்; ஆனால் பிதாவின்மேல் உள்ள அன்பின் காரணமாக, பிதாவின் சித்தத்துக்கு தன்னை ஒப்புவித்தார்.

நம்முடைய ஆசைகளை கடவுளிடம் ஒப்புவிப்பது எளிதல்ல. கஷ்டமான தருணங்களில், அவருடைய ஞானத்தை புரிந்துகொள்வதும் எளிதல்ல. கமில், ஜோயெல் தம்பதியின் ஜெபத்திற்கு மிகவும் விசேஷித்த வகையில் பதில் கிடைத்தது. ரீமா இன்று ஆரோக்கியமான 15 வயது பெண்ணாக இருக்கிறாள்.

கடவுள் நம்முடைய ஒவ்வொரு கஷ்டத்தையும் புரிந்துகொள்கிறார். அவருடைய வேண்டுதல் நமக்காக கேட்கப்படவில்லை என்றாலும், ஒவ்வொரு தேவையின்போதும், எப்படி கடவுள்மேல் நம்பிக்கை வைக்கவேண்டும் என்று நமக்குக் காண்பித்தார்.

அவரை முதலில் நம்புங்கள்

“அப்பா, என்னை விட்டுராதீங்க!” “விட மாட்டேன். இது சத்தியம். நல்லா பிடிச்சிருக்கேன்.”

நான் தண்ணீரைப் பார்த்து அதிகம் பயப்படும் சிறுவனாக இருந்தேன். ஆனால் என் தந்தை நான் நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினார். நீச்சல் குளத்தில் என் தலைக்கு மேல் தண்ணீர் இருக்கும் அதிக ஆழமான பகுதிக்கு என்னை அழைத்துச் செல்வார். அங்கு அவர் மட்டுமே எனக்குத் துணை. அதன்பின் எனக்கு அமைதியாக ஆசுவாசப்படவும், மிதக்கவும் கற்றுக்கொடுப்பார்.

அது நீச்சல் பயிற்சி மட்டுமல்ல. அது நம்பிக்கைக்கான படிப்பினை. என் தந்தை என்னை நேசிக்கிறார், அதனால் எனக்கு எந்த ஆபத்தும் வர விடமாட்டார் என்று தெரிந்தாலும், நான் பயப்படவும் செய்தேன். எந்த ஆபத்தும் இல்லை என்று அவர் உறுதி அளிக்கும்வரை அவர் கழுத்தை இறுகப் பற்றிக்கொள்வேன். இறுதியில் அவரது பொறுமைக்கும், இரக்கத்திற்கும் பலன் கிடைத்தது. நான் நீந்த ஆரம்பித்தேன். ஆனால் நான் முதலில் அவரை நம்ப வேண்டியிருந்தது  

ஏதாவது கஷ்டம் “என் தலைக்கு மேல்” இருப்பதைப் போன்ற உணர்வு வரும்போது, அந்தத் தருணங்களை நினைத்துக்கொள்வேன். தம் ஜனத்திற்கு கடவுள் அளித்த உறுதியை நினைவில்கொள்ள அவை எனக்கு உதவுகின்றன: “உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்” (ஏசாயா 46:4).  

கடவுளின் கரம் நம்மைத் தாங்குவதை எல்லா சமயங்களிலும் உணரமுடியாமல் இருக்கலாம். ஆனால் அவர் நம்மை விட்டு விலகுவதில்லை என்று வாக்குக்கொடுத்திருக்கிறார் (எபிரேயர் 13:5). அவரது பராமரிப்பில், வாக்குறுதிகளில் நாம் நிலைத்திருக்கும்போது, அவரது விசுவாசத்தில் நம்பிக்கைகொள்ள உதவுகிறார். நமது கவலைகளுக்கு மேலாக நம்மைத் தூக்கி, அவரில் நாம் சமாதானத்தைக் கண்டுகொள்ள உதவுகிறார்.  

அன்பென்னும் மரபுரிமை

மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.
மத்தேயு 5:16

 

என் கொள்ளுப்பாட்டியின் வேதாகமத்தை நான் புரட்டிக் கொண்டிருந்தபோது, ஒரு பொக்கிஷம் எனக்குக் கிடைத்தது. ஒரு குழந்தையின் கையெழுத்தில் “ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்” (மத். 5:3-4) என்ற வசனங்கள் எழுதப்பட்ட ஒரு சிறிய காகிதம் அந்த வேதாகமத்தில் இருந்து விழுந்தது. அந்த வசனங்களுக்குப் பக்கத்தில் தடுமாற்றத்துடன் எழுதப்பட்ட என் அம்மாவின் கையெழுத்து இருந்தது. 

 

வசனங்களைப் படித்து, அவற்றை மனனம் செய்ய ஏதுவாக, தன் பேரப்பிள்ளைகளுக்கு வேதாகம வசனங்களை எழுதக் கற்றுக்கொடுப்பது என் கொள்ளுப்பாட்டியின் வழக்கமாக இருந்தது. அந்த காகிதத்தைப் பார்த்தவுடன், அதன் பின்னணி என் நினைவுக்கு வந்து, என் கண்களில் கண்ணீர் வந்தது. என் அம்மா சிறுமியாக இருந்தபோது, என் தாத்தா இறந்துவிட்டார். என் அம்மாவின் தந்தை இறந்த சில வாரங்களிலேயே அவரது தம்பியும் (என் மாமா) இறந்துபோனார். இந்த துயரமான சூழ்நிலையில் என் கொள்ளுப்பாட்டி, என் அம்மாவுக்கு இயேசு கிறிஸ்து மட்டுமே தரக்கூடிய சமாதானம் பற்றி எடுத்துக்கூறினார்.

 

“அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும், உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்,” (2 தீமோத்தேயு 1:5) என்று பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதினார். விசுவாசம் என்பது பரம்பரையாய் வரும் சொத்து அல்ல. அது பகிரப்படுவது. தீமோத்தேயுவின் பாட்டியும், அம்மாவும் தங்கள் விசுவாசத்தை அவருடன் பகிர்ந்துகொண்டார்கள். அவரும் விசுவாசித்தார்.

 

இயேசுவில் நம்பிக்கை வைக்கும்படி நமக்கு நெருக்கமானவர்களை நாம் ஊக்குவிக்கும்போது, நாம் அன்பு என்னும் பரம்பரைசொத்தை அவர்களுக்குக் கொடுக்கிறோம். என் கொள்ளுப்பாட்டி தன் இரட்சகர் மீது வைத்திருந்த அன்பின் சாட்சியாக என் அம்மாவின் சிறு காகிதக் குறிப்பு இருந்தது. நமக்குப் பின் வருபவர்களுக்கு கிறிஸ்துவைப் பற்றிக் கூறுவது எத்தனை நன்மையானது.

மாறாத அன்பு

நான் உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது, பல்கலைக்கழக டென்னிஸ் அணியில் விளையாடினேன். என் பதின்பருவத்தில், என் திறமையை மேம்படுத்துவதற்காக, எங்கள் வீட்டிலிருந்து சற்றுத் தள்ளியிருந்த காங்க்ரீட் தரை கொண்ட அரங்கில் பல மணி நேரம் பயிற்சி செய்தேன்.
 
கடைசியாக அந்த ஊருக்கு நான் சென்றபோது, நான் விளையாடிய நாட்களை நினைவுகூரவும், அங்கே விளையாடுபவர்களைப் பார்க்கவும் நினைத்து, நான் பயிற்சி செய்த அரங்கிற்குச் சென்றேன். ஆனால் எனக்குப் பரிச்சயமான அந்த பழைய அரங்கம் அங்கே இல்லை. காலி மைதானமாக இருந்த அந்த இடத்தில், காற்றில் அவ்வப்போது தலையசைத்த ஒன்றிரண்டு களைச்செடிகள் மட்டுமே தென்பட்டன.
 
நான் அங்கு சென்ற அந்த மதியப்பொழுது, நமது குறுகிய வாழ்வை நினைவுபடுத்தும் ஒரு சம்பவமாகவே எனக்கு இன்றுவரை இருக்கிறது. என் இளவயதின் ஆற்றலை செலவழித்த இடங்களில் ஒன்று,இன்று இல்லவே இல்லை. அந்த அனுபவம் “மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது; வெளியின் புஷ்பத்தைப்போல் பூக்கிறான். காற்று அதின் மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று; அது இருந்த இடமும் இனி அதை அறியாது. கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேல் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது” (சங்கீதம் 103:15-17), என்று வயதுசென்ற தாவீது கூறிய உண்மையை எனக்கு உணர்த்தியது.
 
நமக்கு வயதாகும். நம்மைச் சுற்றியிருக்கும் உலகம் மாறும். ஆனால் தேவனின்அன்பு ஒருபோதும் மாறுவதில்லை. அவரைத் தேடுபவர்களை அவர் பாதுகாக்கிறார் என்று எப்போதும் நம்பிக்கை கொள்ளலாம்.