போதிய அளவு பெரியது
என்னுடைய பேரன், பொழுது போக்கு பூங்காவில், ரோலர் கோஸ்டர் ராட்டின வரிசைக்கு வேகமாக ஓடி, அதில் ஓடுவதற்குப் போதிய அளவு உயரத்தைக் கொண்டிருக்கிறானா என்பதைக் குறிக்கும் அடையாளத்தினிடம் போய் நின்றான். அவனுடைய தலை அந்த அளவுக்கு மேலே இருந்ததால், மகிழ்ச்சியில் கத்தினான்.
நம்முடைய வாழ்விலும் போதிய அளவு என்பது அடிக்கடி தேவைப் படுகின்றதல்லவா? ஓட்டுனர் தேர்வுக்குள் நுழைவதற்கு, வாக்களிப்பதற்கு, திருமணம் செய்துகொள்ள என அநேக காரியங்களுக்கு, என்னுடைய பேரனைப் போல, வளர வேண்டும் என்ற ஏக்கத்தோடு வாழ்கின்றோம்.
புதிய ஏற்பாடு எழுதப்பட்ட காலத்தில், குழந்தைகளை நேசித்தனர், ஆயினும், அவர்கள் வயதுவந்தோருக்கான சலுகையோடு, தங்கள் வீட்டிற்கும் உதவிசெய்யவும், தேவாலயத்திற்குள் செல்லவும் “போதிய வயது வரும் வரை”, அவர்களைச் சமுதாயம் உயர்வாக மதிக்கவில்லை. அந்நாட்களில் இருந்த இந்த நிலையை, இயேசு முற்றிலும் மாற்றினார். வறியோரையும், பெலவீனரையும், குழந்தைகளையும் அவர் வரவேற்றார். பெற்றோர் தங்கள் குழந்தைகள் மீது இயேசு தம் கரங்களை வைத்து ஜெபிக்கும் படி அவரிடம் கொண்டு வருகின்றனர் என்பதை மூன்று சுவிசேஷங்களிலும் (மத், மாற், லூக்) காண்கின்றோம் (மத்.19:13; மாற்.10:16).
சீஷர்கள் அவர்களை விரட்டியடிக்கின்றனர். அதனை ஓர் இடைஞ்சலாகக் கருதினர். இதனைக் கண்ட இயேசு அவர்களைக் கடிந்து கொள்கின்றார் (மாற். 10:14), சிறு பிள்ளைகளுக்கு தன்னுடைய கரங்களை விரிக்கின்றார், அவர்களின் மதிப்பை பரலோகத்தில் உயர்த்துகின்றார், மற்றவர்களிடம் குழந்தைகளை ஒதுக்கித் தள்ளாமல், அவர்களைப் போல மாறி, இயேசுவையும் அறிந்து ஏற்றுக் கொள்ளுமாறு கூறுகின்றார் (லூக்.18:17). நாம் குழந்தையைப் போல மாறுகின்ற அளவு தான், நாம் தேவனுடைய அன்பைப் பெற்றுக்கொள்ளத் தேவையான “போதிய அளவு” ஆகும்.
ஜெபிக்கும் முட்டைகள்
எங்களது சமையல் அறைக்கு வெளியே, தாழ்வாரத்தின் அடிப்பக்கம் ஒரு புறா கூடு அமைத்தது. அது புற்களைக் கொண்டு வந்து, கட்டையின் இடைவெளியில், ஒரு பாதுகாப்பான இடத்தில் திணித்து, கூடு அமைப்பதைக் கவனிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. பின்னர் அது முட்டையிட்டு அடைகாத்தது. ஒவ்வொரு காலையும் அதன் முன்னேற்றத்தைக் கவனிப்பேன். ஆனால், ஒவ்வொரு நாளும் அதில் எந்த முன்னேற்றத்தையும் நான் காணவில்லை. அந்த புறாவின் முட்டைகள் பொரிப்பதற்கு சில வாரங்கள் ஆயின.
இத்தகைய பொறுமை எனக்கொன்றும் புதியதல்ல. நான் ஜெபத்தில் காத்திருக்கப் பழக்கப் பட்டவள். நானும் என்னுடைய கணவனும் எங்களுடைய முதல் குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளும்படி, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகக் காத்திருந்தோம். இதேப் போன்று, பல ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தாளர் கேத்தரின் மார்ஷல், “அடைகாக்கப் படும் முட்டைகள் சில நாட்களிலேயே பொரித்து விடுவதைப் போல, ஜெபத்தைற்கான பதில் உடனே வந்து விடாது” என்றார்.
ஆபகூக் தீர்க்கதரிசியும் ஜெபத்தில் காத்திருப்பதை அனுபவித்தவர். யூதாவின் தெற்கு இராஜியத்தில், பாபிலோனியரின் வன்மையான நடத்துதலைக் குறித்து, தேவன் அமைதியாக இருப்பதால், விரக்தியடைந்த ஆபகூக் தீர்க்கதரிசி, “நான் என் காவலிலே தரித்து, அரணிலே நிலைகொண்டு, அவர் எனக்கு என்ன சொல்வாரென்று………… கவனித்துப் பார்ப்பேன்” ( ஆப.2:1) என்கின்றார். குறித்த காலம் வரும் வரைக்கும் ஆபகூக் காத்திருக்க வேண்டும் என தேவன் பதிலளிக்கின்றார். அத்தோடு, தேவன், “நீ தீர்க்க தரிசனத்தை எழுதி, அதைக் கடந்தோடுகிறவன் வாசிக்கும்படிப் பலகைகளிலே தீர்க்கமாக வரை” (வ.2) என்று வழிகாட்டுகின்றார்.
பாபிலோனின் வீழ்ச்சிக்காக “குறித்த காலம்” இன்னும் அறுபது ஆண்டுகள் தள்ளி இருக்கின்றது என்பதை தேவன் குறிப்பிடவில்லை. அவருடைய வாக்குத் தத்தத்திற்கும் அதின் நிறைவேறலுக்கும் இடையே இருக்கின்ற நீண்ட இடைவெளியைப் பற்றி குறிப்பிடவில்லை. முட்டைகளைப் போன்று, ஜெபம் உடனடியாக பதில் கொண்டு வருவதில்லை, ஆனால் தேவன் இவ்வுலகிற்கும், நமக்கும் நிறைவேற்றும்படி வைத்திருக்கும் திட்டத்தினுள், நம்முடைய ஜெபங்களும் பலனைத் தரும்படி காத்திருக்கும்.
மன்னிக்கும்படி தெரிந்து கொள்ளல்
1999 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 23 ஆம் நாள், கிரகாம் ஸ்டேன்ஸ் மற்றும் அவருடைய இரண்டு மகன்களாகிய பிலிப், தீமோத்தி ஆகியோர் தங்களுடைய சொந்த ஜீப்பில் உறங்கிக் கொண்டிருந்த போது, தீயிட்டு கொழுத்தப்பட்டனர். இந்தியாவிலுள்ள ஒடிசா மாநிலத்தில், ஏழை குஷ்டரோகிகளுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்த தன்னலமற்ற சேவையைக் குறித்து, அதுவரை வெளி உலகிற்கு சிறிதளவே தெரிந்திருந்தது. இந்த விபரீதத்தின் மத்தியில், அவருடைய மனைவி கிளாடிஸ் மற்றும் மகள் எஸ்தர் ஆகியோர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்கள். அவர்கள் வெறுப்போடு அல்ல, மன்னிப்போடு செயல்படுவதைத் தெரிந்து கொண்டார்கள்.
12 ஆண்டுகள் கழித்து, அந்த வழக்கு முடிவுக்கு வந்த போது, கிளாடிஸ் அம்மையார் ஒரு செய்தியை வெளியிட்டார்கள். “நான் அந்தக் கொலையாளிகளை மன்னித்து விட்டேன், அவர்கள் மீது எனக்கு எந்த கசப்பும் கிடையாது…………..தேவன், கிறிஸ்துவின் மூலம் என்னை மன்னித்தார். அவர் தன்னுடைய சீடர்களும் அதனையே செய்யும்படி விரும்புகின்றார்” என்றார். மற்றவர்கள் நமக்கு என்ன செய்தார்கள் என்பதில் கவனம் செலுத்துவதைவிட, இயேசு நமக்கு என்ன செய்தார் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே மன்னித்தலின் முக்கிய கருத்து என்பதை தேவன் கிளாடிஸ்ஸுக்குக் காட்டினார். தன்னை துன்பப் படுத்தியவர்களுக்கு கிறிஸ்து சிலுவையில், “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” (லூக்.23:34) என்று கூறிய வார்த்தைகள், இயேசு கிறிஸ்துவின் மன்னிப்பைக் குறித்து, சகரியா ஆசாரியன் கூறிய தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றியது (லூக். 1:77).
ஒடிசாவில் நடைபெற்ற, நினைத்து கூட பார்க்க முடியாத இத்தகைய சோகத்தை நாம் அனுபவிக்காவிட்டாலும், ஒவ்வொருவரும் ஏதாகிலும் ஒரு வகையில் கஷ்டங்களை சகித்துக் கொண்டுதான் இருக்கின்றோம். ஒரு கணவன் துரோகம் இழைக்கின்றான், ஒரு பிள்ளை எதிர்த்து நிற்கின்றது, வேலை செய்யும் இடத்தில் எஜமானனின் கொடுமை என பல நிந்தனைகளின் மத்தியில் நாம் எப்படி வாழ்வது? நாம் நமது இரட்சகரைப் பார்ப்போம். யாவராலும் தள்ளப்பட்டவராய், கொடுமை படுத்தப் பட்டபோதும், அவர் மன்னித்தார். இயேசுவிடம் நம் பாவங்களுக்கு மன்னிப்பை பெற்றுக் கொள்ளும் போது, நாம் இரட்சிப்பை பெற்றுக் கொள்வதோடு, பிறரை மன்னிக்கக் கூடிய பெலனையும் பெற்றுக் கொள்கின்றோம். கிளாடிஸ் ஸ்டேன்ஸைப் போன்று, நாம் நம்முடைய இருதயத்திலுள்ள கசப்பை நீக்கி விட்டு, மன்னிக்கும் படி தெரிந்து கொள்வோம்.
ஆனந்த தைலம்
ஒரு திரைப்படத்தில் இயேசுவாக நடிக்க வேண்டுமானால், அதனை எப்படிச் செய்ய முற்படுவாய்? இது தான் புரூஸ் மார்சியானோ எதிர் நோக்கிய சவால். 1993 ஆம் ஆண்டு, “மத்தேயு” என்ற வேதாகம திரைப் படத்திற்கு, அவன் இயேசுவாக நடித்தான். அவனுடைய நடிப்பின் மூலம் பல மில்லியன் பார்வையாளர்கள் இயேசுவைக் குறித்து தீர்மானிப்பார்கள் என்பதை உணர்ந்த அவனுக்குள் கிறிஸ்துவைப் பற்றி “மிகத்துல்லியமாக” தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. அவன் முழங்காலில் நின்று ஜெபித்தான், இயேசுவை நன்கு எனக்கு காட்டும் என வேண்டினான்.
புரூஸ், எபிரெயர் முதலாம் அதிகாரத்திலிருந்து ஒரு தெளிவைப் பெற்றுக் கொண்டான். நம்முடைய பிதாவாகிய தேவன், தம்முடைய குமாரனை, மற்றவர்களைப் பார்க்கிலும் “ஆனந்த தைலத்தினால் அபிஷேகம் பண்ணினார்” என்பதாக எபிரெயரை ஆக்கியோன் எழுதுகின்றார் (1:9). நாம் கொண்டாடக் கூடிய இந்த மகிழ்ச்சி, நாம் முழு மனதுடன் பிதாவோடு இணைக்கப்பட்டுள்ளதால் வரும் சந்தோஷத்தால் கிடைக்கும். இத்தகைய மகிழ்ச்சியினால் இயேசுவின் இருதயம் நிரப்பப்பட்டதாக அவருடைய வாழ் நாள் முழுவதும் இருந்தது. எபிரெயர் 12:2ல் கூறப்பட்டுள்ளபடி, “அவர் தமக்கு முன் வைத்திருந்த ச ந்தோஷத்தின் பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்”.
வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள இந்தக் காரியத்தைஎடுத்துக் கொண்ட புரூஸ், வித்தியாசமான மகிழ்ச்சி நிரம்பிய இரட்சகரின் காட்சிகளைக் கொடுத்தார். அதன் விளைவாக அவன் “புன்னகை ததும்பும் இயேசு” என்று அழைக்கப் பட்டான். நாமும் முழங்காலில் நின்று, “இயேசுவே என்னை உம்மைப் போல் மாற்றும்” என்று கேட்போமாக. அவர் நம்மை அவருடைய குணங்களினால் நிரப்புவார், நம்மைக் காணும் மக்கள் இயேசுவின் அன்பை நம்மில் காண்பர்.
இயேசுவைப் போல ஜெபித்தல்
ஒவ்வொரு நாணயத்திற்கும் இரண்டு பக்கங்கள் உள்ளன. அதன் முன் பக்கத்தை “தலை” என்கிறோம், ஏனெனில் ஆதி ரோமர் ஆட்சி காலத்திலிருந்தே நாணயத்தின் முன் பக்கம் அந்த நாட்டின் தலைமையைக் குறிக்கும். அதன் பின் பக்கம் “வால்” எனப்படும். இது ஆங்கிலேயர் காலத்தில் துவங்கியிருக்கலாம், அந்த நாணயத்தில், ஒரு சிங்கத்தின் வால் உயர்த்தப்பட்ட நிலையில் காட்டப்பட்டிருக்கும்.
ஒரு நாணயத்தைப் போன்று, கெத்செமனே தோட்டத்தில், கிறிஸ்து ஏறெடுத்த ஜெபத்திற்கும் இரு பக்கங்கள் உள்ளன. இயேசு சிலுவையில் மரிப்பதற்கு முந்தின நாள் இரவு, தன்னுடைய வாழ்வின் துயரம் மிகுந்த நேரத்தில், ஜெபித்தார். “பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக் கடவது” (லூக்.22:42) என்றார். “இந்தப் பாத்திரத்தை என்னை விட்டு எடுத்து விடும், அதையே நான் விரும்புகின்றேன்” என்று கிறிஸ்து ஜெபித்திருப்பாரேயானால் அது தான் உண்மையை வெளிப்படுத்தும் ஜெபம், அது அவருடைய தனிப்பட்ட விருப்பத்தை வெளிப்படுத்தும் ஜெபமாயிருந்திருக்கும்.
பின்னர் இயேசு நாணயத்தின் மறு பக்கத்தைத் திருப்புகின்றார், “என்னுடைய சித்தத்தின் படியல்ல” என்று ஜெபிப்பதின் மூலம் தன்னை முற்றிலுமாக ஒப்புக்கொடுக்கின்றார். “தேவனே, நீர் என்ன செய்ய விரும்புகின்றீர்?” என்று நாம் கேட்கும் போது, நம்மை அவரின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுக்க ஆரம்பிக்கின்றோம்.
இந்த இரு பக்க ஜெபம், மத்தேயு 26, மாற்கு 14 மற்றும் யோவான் 18 ல் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணலாம். இயேசு இரு பக்க ஜெபத்தை ஏறெடுத்தார்; இந்த பாத்திரத்தை என்னை விட்டு எடுத்து விடும் (தேவனே, இது நான் விரும்புவது), ஆயினும் என்னுடைய விருப்பத்தின் படியல்ல (தேவனே, நீர் என்ன விரும்புகின்றீர்?), இவ்விரண்டிற்கும் இடையே மட்டுமே அவருடைய ஜெபமிருந்தது. இயேசுவின் இரு பக்கங்கள், அவருடைய ஜெபத்தின் இரு பக்கங்கள்.
விட்டு விடும்படி அழைப்பு
ஓர் இளம்பெண்ணான நான், நல்ல வேலையில் அமர்வேன், திருமணம் முடித்துக் கொள்வேன் என கற்பனை செய்திருந்தேன், ஆனால் என்னுடைய முப்பதாவது வயது வரை அது நடைபெறவில்லை. என்னுடைய எதிர்காலம் வெறுமையாக என் கண் முன்னே காட்சியளித்தது. வாழ்வில் என்ன செய்வதெனத்தெரியாமல், நான் போராடிக் கொண்டிருந்தேன். கடைசியாக, பிறருக்குப் பணி செய்வதன் மூலம், தேவனுக்குப் பணிசெய்யும் படி, அவர் வழிகாட்டியதை உணர்ந்தேன், வேதாகமக் கல்லூரியில் சேர்ந்தேன். என்னில் வேர் விட்டிருந்த யாவற்றையும், நண்பர்களையும், குடும்பத்தையும் தள்ளிவிட்டு, எனக்குள்ளே உண்மை ஊடுருவ ஆரம்பித்தது. தேவனுடைய அழைப்பிற்கு செவிகொடுக்கும்படி, எல்லாவற்றையும் நான் விட வேண்டியதாகிவிட்டது.
கலிலேயா கடற்கரையோரமாக இயேசு நடந்து சென்று கொண்டிருந்த போது, பேதுருவும் அவனுடைய சகோதரனாகிய அந்திரேயாவும் தங்கள் வாழ்வினை நடத்தும்படி மீன்களைப் பிடிக்க கடலில் வலைகளை வீசிக் கொண்டிருப்பதைக் கண்டார். இயேசு அவர்களைப் பார்த்து, “என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்” (மத். 4:19) என்று அழைக்கிறார். இயேசு மேலும் இரண்டு மீனவர்கள் யாக்கோபு மற்றும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் பார்த்து, இத்தகைய ஓர் அழைப்பை அவர்களுக்கும் கொடுத்தார் (வச. 21).
இந்த சீஷர்களும் இயேசுவிடம் வந்த போது, சிலவற்றை விட்டு வந்தனர். பேதுருவும் அந்திரேயாவும் “வலைகளை விட்டு” (வச. 20) விட்டனர், யாக்கோபும் யோவானும் “படவையும் தங்கள் தகப்பனையும் விட்டு அவருக்குப் பின் சென்றார்கள்” (வச. 22). “அவர்கள் படவுகளைக் கரையிலே கொண்டுபோய் நிறுத்தி, எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின் சென்றார்கள்” என்பதாக லூக்கா எழுதுகின்றார் (லூக். 5:11).
இயேசு நம்மை அழைக்கும் போது, சிலவற்றை விட்டு வரும்படியாக நம்மையும் அழைக்கின்றார். வலைகள், படவு, தந்தை, நண்பர்கள், வீடு என்று பலவற்றை விட்டு விட்டு, நாம் அவரோடு உறவாடும்படி அழைப்பைப் பெறுகின்றோம், அவரோடு கூட பணி செய்யும்படியாக அழைக்கப்படுகின்றோம்.
நமக்காகக் குத்தப்பட்ட அன்பு
அவள் அலைபேசியில் அழைத்தாள், குறுஞ்செய்தி அனுப்பினாள். இப்பொழுது கார்லா அவளுடைய சகோதரனின் வீட்டின் முன்புறமுள்ள வாயிலின் அருகில் நின்று கொண்டிருக்கின்றாள், அவனை எழுப்ப முடியவில்லை. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, போதைக்கு அடிமையாகி, அதனை விட்டு வெளியே வரமுடியாமல் போராடிக் கொண்டிருக்கும் அவளுடைய சகோதரன், தன்னுடைய வீட்டிற்குள் தன்னை ஒளித்துக் கொண்டான். அவனுடைய தனிமைக்குள் எப்படியாவது சென்று விட வேண்டும் என்ற விடாப்பிடியான முயற்சியில், கார்லா அவனுக்குப் பிடித்தமான அ நேக தின்பண்டங்களோடும், சில உற்சாகப்படுத்தும் வேத வார்த்தைகளோடுமுள்ள தனது பையை வெளிகேட்டின் வழியாக உள்ளே இறக்கினாள்.
அவளுடைய கரத்தை விட்டு நழுவிய அந்தப் பை, கேட்டிலுள்ள ஒரு கொக்கியில் மாட்டி, கிழிந்து, அதிலுள்ள அனைத்தும் கீழே மணலில் கொட்டியது. அவள் நல்லெண்ணத்தோடும், அன்போடும் வாங்கி வந்த அனைத்தும் கொட்டப்பட்டு, வீணானது போலாகிவிட்டது. அவளுடைய சகோதரன், அவள் வாங்கி வந்த நற்கொடைகளை கவனிப்பானா? அவள் எதிர் பார்த்த நம்பிக்கையினை, அவளால் கொடுக்க முடியுமா? அவளால் நம்பிக்கையோடு ஜெபிக்கவும் அவன் விடுதலை பெறும் மட்டும் காத்திருக்கவும் தான் முடிந்தது.
சோர்வினாலும், தனிமையினாலும் தவித்துக்கொண்டிருந்த இவ்வுலகினை தேவன் நேசித்தப் படியால், அவருடைய ஒரே நேசக் குமாரனை, அன்பு, சுகம் ஆகிய நற்கொடைகளோடு, பாவம் நிறைந்த கோட்டைக்குள் இறக்கினார் (யோவா. 3:16). இந்த அன்புச் செயலின் கிரயத்தைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசி, ஏசாயா 53:5ல் குறிப்பிடுகின்றார். இந்த நேசக் குமாரன் “நம்முடைய மீறுதல்களின் நிமித்தம்…. காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களின் நிமித்தம்…… நொறுக்கப்பட்டார்” அவருடைய காயங்கள், நாம் முழுமையான சுகத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நம்பிக்கையைத் தருகின்றது. “நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும்” அவர் தன்மேல் விழப்பண்ணினார் (வச. 6).
நம்முடைய பாவத்திற்காகவும், தேவைகளுக்காகவும் குத்தப்பட்டவராய், தேவனுடைய ஈவாகிய இயேசு நம்முடைய வாழ்வினுள் இன்று புதிய பெலத்தோடும், புதிய எண்ணத்தோடும் வருகின்றார். அவருடைய ஈவு உனக்கு என்ன அர்த்தத்தைக் கொடுக்கிறது?
சுத்தமான பாத்திரங்கள்
“பகை, தானிருக்கின்ற பாத்திரத்தை அரித்து விடும்” என்றார் முன்னாள், சட்ட மன்ற மேலவை உறுப்பினரான ஆலன் சிம்ஸ்சன். ஜியார்ஜ் புஷ்ஷின் அடக்கத்தின் போது, அவர், தன்னுடைய நண்பனின் அன்பினை நினைவு கூர்ந்தார். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நாற்பத்தி ஒன்றாம் ஜனாதிபதியான புஷ், தன்னுடைய தலைமைத்துவ பணியிலும், தனிப்பட்ட உறவுகளிலும் எந்த பகைமையையும் மனதில் வைத்துக் கொள்ளவேயில்லை, மாறாக நகைச்சுவையையும், அன்பையும் அணைத்துக் கொண்டார், என்றார்.
இந்த சட்ட மன்ற உறுப்பினரின் கருத்தை நானும் ஒத்துக் கொள்கின்றேன். உனக்கும் அப்படித்தானே? நான் பகையை எனக்குள் அடக்கிவைத்த போது, அது எவ்வளவு பாதிப்பை எனக்கு ஏற்படுத்தியது!
நாம் கோபத்தை அடக்கி வைத்தாலோ, அல்லது அதனைத் திடீரென வெளிப்படுத்தினாலோ, நமது இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது, இருதயம் வேகமாகத் துடிக்கிறது, நம்முடைய ஆவி தொய்ந்து போகிறது, நம்முடைய பாத்திரம் அரிக்கப்படுகின்றது.
“பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ சகல பாவங்களையும் மூடும்” என சாலமோன் ராஜா, நீதிமொழிகள் 10:12 ல் கூறுகின்றார். பகையினால் வரும் மோதல்கள், வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த போட்டியாளர்களிடையே, இரத்தம் சிந்தும் அளவிற்கு சண்டைகளைக் கொண்டு வருகின்றது. இந்தப் பகை, பழிவாங்கும் எண்ணத்தைத் தூண்டிவிட்டு, ஒருவரையொருவர் இகழ்ந்து பேச வைக்கின்றதேயல்லாமல், அவர்களை ஒன்று சேர்க்காது.
மாறாக, தேவனுடைய அன்பு, எல்லாத் தவறுகளையும் மூடுகிறது, ஒரு திரையினால் மறைக்கிறது, மன்னிக்கிறது. அதற்காக நம் தவறுகளை கவனிக்கக் கூடாது என்பதாகவோ அல்லது தவறு செய்பவருக்குத் துணை செய்வதாகவோ அல்ல. ஒருவர் தான் செய்த தவறை உணர் ந்து, உண்மையாய் மனம் வருந்தும் போது, நாம் அந்த தவறை மனதில் வைத்துக் கொள்ளக் கூடாது. அவர், அதற்காக மனம் வருந்தவில்லையெனின், நம்முடைய உணர்வுகளை தேவனிடம் கொடுத்து விடுவோம். நம்மை அதிகமாக அன்பு செய்கிறவரை அறிந்திருக்கின்ற நாம், ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருப்போம், அன்பு திரளான பாவங்களை மூடும். (1 பேதுரு 4:8)
ஆம், ஆம்… என்னும் தொடர் சங்கிலி
ஒரு கிறிஸ்மஸ் தினத்தன்று, என்னுடைய பாட்டியம்மா எனக்கு ஒரு முத்து மாலையைக் கொடுத்தார்கள். அந்த அழகிய முத்துக்கள் என் கழுத்தில் மின்னிக் கொண்டிருந்தன. ஒரு நாள், அந்த மாலையின் கம்பி அறுந்து, அதின் முத்துக்களெல்லாம் மரத்தினாலான தரையில் சிந்தி, குதித்து, நாலாபக்கமும் சிதறின. நான் அந்த தரையில் தவழ்ந்து, ஒவ்வொரு சிறிய முத்தையும் பொறுக்கினேன். ஒவ்வொன்றும் தனித் தனியே சிறியதாக இருந்தாலும், அவையனைத்தையும் சேர்த்து கோர்த்திருந்த போது எத்தனை அழகாய் இருந்தது!
சில வேளைகளில் தேவன் கேட்கும் காரியங்களுக்கு, நான் ஆம் என்று கூறுவதும், அந்த தனி முத்தைப் போன்று முக்கியமற்றதாகக் காணப்படலாம். இயேசு கிறிஸ்துவின் தாயாராகிய மரியாளின் அற்புதமான கீழ்ப்படிதலைப் பார்க்கும் போது, நான் என்னை ஒப்பிட்டுப் பார்க்கின்றேன். மேசியாவை தன்னுடைய கருவில் சுமக்க வேண்டுமென தேவன் அழைத்த போது மரியாள், தன்னை உடனே அர்ப்பணிக்கின்றாள். “இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது” என்றாள். (லூக். 1:38). அந்நேரத்தில் அவளிடம் கேட்கப்பட்ட அனைத்தையும் அவள் புரிந்து கொண்டிருந்தாளா? மேலும் தன்னுடைய மகனை, பின்னர் சிலுவையில் அறைவதற்கும், ஒப்புக்கொடுக்கப்போவதை அறிந்திருந்தாளா ?
லூக்கா 2:19 ல் காண்கின்றோம், தேவதூதர்களும், மேய்ப்பர்களும் இயேசுவைப் பணிந்து கொண்ட பின்பு,” மரியாளோ, அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனை பண்ணினாள்.” அவள் நடந்த காரியங்களையெல்லாம் தன்னுடைய இருதயத்தில் “சேகரித்து” வைத்தாள், அத்தனையும் “ஒன்றாக இணைத்து”ப் பார்த்தாள். இதே வார்த்தைகளை லூக்கா 2:51 ல் மீண்டும் பார்க்கின்றோம். அவள் தன் வாழ்க்கையில் அநேகம் முறை, ஆம், ஆம்… என்றே பதிலளிக்கின்றாள்.
நம்முடைய தந்தை நமக்கு கொடுக்கின்ற ஒவ்வொரு அழைப்பிற்கும், நாமும் மரியாளைப்போன்று, கீழ்ப்படிதலோடு, ஆம் என்று சொல்வதை நம்முடைய நோக்கமாகக் கொள்வோம். நம் வாழ்க்கை முழுவதும் நாம் கூறுகின்ற ஆம் அத்தனையும் பொக்கிஷமாகச் சேர்த்து வைக்கப்படும்.